Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மனித உரிமை விவகாரங்களிற்கு தீர்வு காண்பதில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றங்கள் குறித்து இந்தியாவும் சர்வதேச சமூகமும் கருத்தில்கொள்ளவேண்டும்- டைம்ஸ் ஒவ் இந்தியா பேட்டியில் ஜிஎல்பீரீஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மனித உரிமை விவகாரங்களிற்கு தீர்வு காண்பதில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றங்கள் குறித்து இந்தியாவும் சர்வதேச சமூகமும் கருத்தில் கொள்ளவேண்டும்- டைம்ஸ் ஒவ் இந்தியா பேட்டியில் ஜிஎல்பீரீஸ்

இருதரப்பு உறவுகளை மேலும் ஏற்படுத்துவதற்கான முயற்சிகளின் மத்தியில் இந்தியாவின் மூலோபாயரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த அயல்நாடு இந்தியாவின் பாதுகாப்பிற்கும் நலனிற்கும் எதிராகஎந்த நாடும் தனது நாட்டை பயன்படுத்துவதற்கு அனுமதிக்காது என இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜிஎல்பீரிஸ் டைம்ஸ் ஒவ் இந்தியாவிற்கு தனது இந்திய விஜயத்தின்போது தெரிவித்துள்ளார்.
இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடி காரணமாக அதன் சொத்துக்களை சீனாவிற்கோ அல்லது வேறு நாட்டிற்கோ வழங்கும் ஆபத்து இல்லை எனவும் அவர் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
gl-hindu-300x244.jpg
எனினும் புதிய பட்டுப்பாதை திட்டத்தின் மூலம் இலங்கை பயனடைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியா இலங்கையில் குறிப்பாக் சீனாவின் நடவடிக்கைகள் குறித்து கரிசனை அடைந்துள்ளது – குறிப்பாக சீனா வடபகுதி மீனவர்களை நெருங்குவது குறித்து கரிசனை கொண்டுள்ளது.
எனினும் இந்த அச்சங்கள் தேவையற்றவை என தெரிவித்துள்ள ஜிஎல்பீரிஸ் திருகோணமலை எண்ணெய் குத அபிவிருத்தி தொடர்பான உடன்படிக்கைகள் மற்றும் அடானி குழுமம் கொழும்புதுறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையத்தை பெற்றுக்கொண்டுள்ளமை காரணமாக இரு நாட்டு உறவுகளும் மூலோபாய உறவுகள் என்ற அடிப்படையில் உயர்த்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
கட்டுப்பாடுகள் உள்ளபோதிலும் மனித உரிமை விவகாரங்களிற்கு தீர்வு காண்பதில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றங்கள் குறித்து இந்தியாவும் சர்வதேச சமூகமும் கருத்தில்கொள்ளவேண்டும் தெரிவிக்கவேண்டும் என ஜிஎல்பீரிஸ் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இந்த மாதம் ஆரம்பமாகவுள்ள மனித உரிமை பேரவையின் அமர்வில் இந்த விவகாரம் இடம்பெறவுள்ளது.
தவறான அனுமானங்களின் அடிப்படையில் சீனா குறித்த கேள்விகள் எழுகின்றன என தெரிவித்துள்ள இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் சீனாவின் திட்டங்கள் காணப்படுகின்றது என்றால் இந்தியாவின் உதவியுடன் முன்னெடுக்கப்படும் திட்டங்களும் காணப்படுகின்றன என தெரிவித்துள்ளார்.
புதிய பட்டுப்பாதை திட்டத்தினால் இலங்கை பயனடைந்துள்ளது ஆனால் அதனால் யாருக்கும் பாதிப்பு ஏற்படாதவண்ணம் அதனை கையாண்டுள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடன்பொறி என்பது உருவாக்கப்பட்ட ஒரு புனைகதை சீனாவிடமிருந்தோ அல்லது வேறு எந்த நாட்டிடமிருந்தோ நாங்கள் கடன்களை பெறும்போது திருப்பி செலுத்துவது குறித்த சிறந்த யோசனையுடனேயே அதனை பெறுகின்றோம் என தெரிவித்துள்ளார்.
2015 இல் அரசாங்கம் மாறியவேளை நாங்கள் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கான மூன்றில் ஒரு வீத கடனை செலுத்தியிருந்தோம் என தெரிவித்துள்ள இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் இலங்கை கடனிலிருந்து மீளமுடியாத- அதன் சொத்துக்கள் இன்னொரு நாட்டிற்கு செல்லக்கூடிய ஆபத்து ஒருபோதும் காணப்பட்டதில்லை என தெரிவித்துள்ளார்.
சுற்றுலாத்துறை வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களின் வருமானம் போன்றவற்றில் மீள முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் இலங்கையின் பொருளாதார நிலைமையில் முன்னேற்றம் ஏற்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஒவ்வொரு துறையிலும் குறிப்பிடத்தக்க அளவிற்கு இலங்கையின் காலடித்தடம் உள்ளது,ஏனைய நாடுகள் இந்தியாவை முந்திவிட்டன மறைத்து விட்டன என எப்படி தெரிவிக்க முடியும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
எந்த நாட்டின் பாதுகாப்பு நன்மைக்கு எதிராகவும் எங்கள் நாட்டை பயன்படுத்த அனுமதிக்கமாட்டோம் என குறிப்பிட்டுள்ள அவர் குறிப்பாக இந்தியாவிற்கு நலன்களிற்கு எதிராக எங்கள் நாட்டை பயன்படுத்த அனுமதிக்கமாட்டோம் எனவும் தெரிவித்துள்ளார்.
சீனா இலங்கையின் வடபகுதியில் காலடி எடுத்துவைக்க முயல்வது குறித்து கருத்து வெளியிட்டுள்ள இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் சீனாவின் தூதுவரின் வடபகுதி விஜயம் சிவில் சமூகத்தினரை சந்தித்தது மீனவர்களை சந்தித்தது போன்றவற்றை இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கையாக கருதக்கூடாது என தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/165634

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nunavilan said:

மனித உரிமை விவகாரங்களிற்கு தீர்வு காண்பதில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றங்கள் குறித்து இந்தியாவும் சர்வதேச சமூகமும் கருத்தில் கொள்ளவேண்டும்- டைம்ஸ் ஒவ் இந்தியா பேட்டியில் ஜிஎல்பீரீஸ்

இந்தியாவை வாய் மூட பண்ண ஒரேவழி 

மனித உரிமை விவகாரம்.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, nunavilan said:

இந்தியா இலங்கையில் குறிப்பாக் சீனாவின் நடவடிக்கைகள் குறித்து கரிசனை அடைந்துள்ளது

ஏதோ சீனா இலங்கையில் தலையீடு பற்றி இந்தியாவுக்கு ஒன்றும் பயமில்லை என்று யாரோ சொன்னார்கள். பயமில்லை என்று ஒருவர் வெளிப்படையாக சொல்கிறார் என்றால், பயந்து செத்துக்கொண்டிருக்கிறார் அதன் வெளிப்பாடு எனக்கொன்றும் பயமில்லை என்று வாய் புலம்பும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.