Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை, தவறாகப் பயன்படுத்த வேண்டாம் – பொலிஸாருக்கு ஜனாதிபதி பணிப்புரை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அதிகளவு செயற்கை உரத்தைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை – ஜனாதிபதி

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை, தவறாகப் பயன்படுத்த வேண்டாம் – பொலிஸாருக்கு ஜனாதிபதி பணிப்புரை.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்த வேண்டாம் என்றும் பயங்கரவாதத்துடன் தெளிவான தொடர்புகள் இருந்தால் மாத்திரம் பயன்படுத்துமாறும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்தார்.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் விசாரணைகளை கைவிடுவதற்கு பயங்கரவாத தடைச்சட்டத்தை தவறாக பயன்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி பொலிஸாரிடம் கூறியதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பாக பொறுப்பற்ற பயன்பாடு நிறுத்தப்பட வேண்டும் என்று அரசாங்கம் தெளிவான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாகவும் அது நடக்கிறதா இல்லையா என்று ஒரு வாய்ப்பு கொடுத்துப் பார்ப்போம் என்றும் வெளிவிவகார அமைச்சர் கூறினார்.

வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற உள்ளூர் சிவில் சமூகம் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் (NGO) பிரதிநிதிகளுடனான சந்திப்பில் பீரிஸ் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

இதன்போது, சிவில் சமூகம் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனப் பிரதிநிதிகள் பொலிஸார் பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்துவது குறித்து வலுவான எதிர்ப்புகளை வெளிப்படுத்தினர்.

அத்தோடு, பயங்கரவாத தடைச் சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்களை வெளிவிவகார அமைச்சர் வலுவாக ஆதரித்தார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தில் திருத்தங்கள் ஒன்றும் புதிதல்ல என்று சிலர் எடுத்துள்ள நிலைப்பாட்டை அவர் நிராகரித்தார்.

சட்டமா அதிபர் ஹெஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு பிணை வழங்குவதற்கு ஆட்சேபனை தெரிவிக்காத போதிலும், சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை விடுதலை செய்வதற்கான முயற்சிகளை பயங்கரவாதத் தடைச் சட்டம் தடுத்ததாக ஜி.எல்.பீரிஸ் கூறினார்.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஹிஸ்புல்லாவுக்கு பிணை வழங்குவதற்கு சட்டத்தரணிகள் கடுமையாகப் போராட வேண்டியிருந்தது எனவும் அவர் குறிப்பிட்டார்.

https://athavannews.com/2022/1267424

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்த வேண்டாம் என்றும் பயங்கரவாதத்துடன் தெளிவான தொடர்புகள் இருந்தால் மாத்திரம் பயன்படுத்துமாறும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்தார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்த வேண்டாம் என்று ஒரு படு பயங்கரவாதியின்  பணிப்புரை

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, தமிழ் சிறி said:

பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பாக பொறுப்பற்ற பயன்பாடு நிறுத்தப்பட வேண்டும் என்று அரசாங்கம் தெளிவான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாகவும் அது நடக்கிறதா இல்லையா என்று ஒரு வாய்ப்பு கொடுத்துப் பார்ப்போம் என்றும் வெளிவிவகார அமைச்சர் கூறினார்.

பயங்கரவாத தடைச்சட்டம் உயிரோடுதான் இருக்கப்போகிறது. இந்தப் போலீசுக்காரர்தான் தவறாக பயன்படுத்துகிறார்கள்.

யாருக்கு? சொல்லுற ஆளை பாருங்கோ. இனவாதிகளின் ஓட்ஸிசன் இந்த பயங்கரவாத சட்டம். ஒருவரை  அடைக்கிறது பிறகு கதை சோடிக்க இந்தச் சட்டம் எவ்வளவு உதவி செய்கிறது. அடித்து கொன்றாலும் கேள்வியில்லை. ராஜபக்ச குடும்பம் இந்தச் சட்டத்தால் தண்டிக்கப்படும்வரை இது இருக்கட்டும் என்பது எனது ஆசை. ஆனால் அதற்குள் தமிழ் இனத்தில் இருக்கிற மிச்ச மீதியையும்  இது திண்டிடும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.