Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வாட்டும் வறுமை...தாயகம் திரும்பத் துடிக்கும் இலங்கை அகதிகள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வாட்டும் வறுமை...தாயகம் திரும்பத் துடிக்கும் இலங்கை அகதிகள்!

தஞ்சம் தேடி வந்த தமிழகத்தில் வறுமையும், நிம்மதியின்மையுமே கிடைத்ததால் மீண்டும் தாயகம் திரும்பும் மன நிலைக்கு இலங்கை அகதிகள் வந்துள்ளனர்.

இலங்கையில் கடும் போர் மூண்டதையடுத்து ஆயிரக்கணக்கான தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வந்தனர்.

தமிழ்நாட்டில் 25 மாவட்டங்களில் 117 அகதிகள் முகாம்களில் அகதிகளாக வந்த ஈழத் தமிழர்கள் வசித்து வருகின்றனர்.

இம் முகாம்களில் மட்டும் 19,478 குடும்பங்களைச் சேர்ந்த 74,072 பேர் வசிக்கின்றனர்.

இவர்கல் தவிர தனியாகவும் 7,785 குடும்பங்களை சேர்ந்த 22,089 பேர் இலங்கை அகதிகள் தங்கியுள்ளனர்.

மொத்தம் 96,162 அகதிகள் தமிழகத்தில் தங்கியுள்ளனர். இதில் நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகேயுள்ள போகநல்லூரில் உள்ள அகதிகள் முகாமில் 157 குடும்பங்களை சேர்ந்த 593 பேர் வசிக்கின்றனர்.

இங்கு போதிய அடிப்படை வசதி, வேலைவாய்ப்பு இல்லாததால் வறுமையோடு இவர்கள் போராடி வருகின்றனர். இதில் 7 குடும்பங்களை சேர்ந்த 28 பேர் தமிழக அரசிடம் சொந்த நாட்டிற்கு செல்ல அனுமதி கோரி விண்ணபித்தனர்.

தற்போது இலங்கையில் விடுதலை புலிகளுக்கும்-இலங்கை ராணுவத்திற்கும் மோதல் முற்றி பெரும் உயிரிழப்பு ஏற்பட்டு வரும் நிலையில், சொந்த நாட்டிற்கு திரும்ப விரும்பி அனுமதி கோரி அகதிகள் கோரியிருப்பது அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இருப்பினும் 28 அகதிகளும் சொந்த நாட்டிற்கு செல்ல தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இவர்கள் சங்கர் என்பவர் தலைமையில் வரும் 30-ந் தேதி இலங்கைக்கு புறப்பட்டு செல்கின்றனர்.

இது போன்று இன்னும் ஏராளமான அகதிகளும் சொந்த நாட்டிற்கு செல்ல இம்முகாமில் இருந்து மனுச் செய்துள்ளனர். இது குறித்து அகதிகள் தரப்பில் சங்கர் என்பவர் கூறியதாவது,

எங்களுக்கு இலங்கையில் நிலம், வீடு அனைத்தும் உள்ளது. மேலும் வேலை வாய்ப்பும் உள்ளது. இங்கு வறுமையோடு பேராாட முடியவில்லை. இதனால் தான் உயிரைப் பணயம் வைத்தாலும் பரவாயில்லை, இலங்கைக்குச் சென்றுவிடுவது என்று தீர்மானித்து விட்டோம் என்றார்.

- தட்ஸ் தமிழ்

கவலைதரும் செய்தி.. :lol:

பசி வந்தால் பத்தும் பறந்துபோகும் என்று சொல்வார்கள்...

இவர்கள் வயிற்றுப் பசிபோக்க உயிரை பணயம் வைத்து சிறீ லங்கா திரும்ப தயாராகி விட்டார்கள்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டில் தஞ்சமடைந்த ஐவர் தலைமறைவு – தமிழ்நாடு காவல்துறை

சிறீலங்காப் படையினரின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் காரணமாக நேற்று தமிழ்நாட்டில் தஞ்சமடைந்த ஐந்து பேர் தலைமறைவாகியுள்ளதாக, தமிழ்நாடு காவல்துறையினர் இன்று அறிவித்துள்ளனர்.

மண்டபம் அகதி முகாமிற்கு அருகில் நேற்று தரையிறங்கிய இவர்கள், அங்குள்ள காவல்துறையினரிம் தமது வரவு பற்றிய பதிவுகளை மேற்கொள்ளவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.

தலைமறைவாகியுள்ளவர்கள் தொடர்பாக “கியூ” பிரிவு காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நாட்டில் தஞ்சம்கோரும் ஈழத் தமிழர்கள் மீது அங்குள்ள காவல்துறையினர் மேற்கொள்ளும் கெடுபிடிகள் காரணமாக, மக்கள் பதிவுகளை மேற்கொள்ள விரும்பாது தலைமறைவாகி வருவதாகத் தெரிய வருகின்றது.

-பதிவு

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் ஏதிலகளாப் பல நாடுகளில் அலைந்தாலும், தாயகத்திலும் இந்தியாவிலும்தான் மிகவும் கொடுமையான வாழ்வுக்குள் அல்லல் படுகின்றார்கள்.. இவர்கள் நம் உறவுகள் என்பதை மறந்துதான் புலத்தில் நாம் வாழுகின்றோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.