Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உக்ரைனின்... எல்லையோர மாகாணத்திலுள்ள மழலையர் பாடசாலையின் மீது குண்டுவீச்சு: போருக்கு வழிவகுக்குமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரைனின் எல்லையோர மாகாணத்திலுள்ள மழலையர் பாடசாலையின் மீது குண்டுவீச்சு: போருக்கு வழிவகுக்குமா?

உக்ரைனின்... எல்லையோர மாகாணத்திலுள்ள மழலையர் பாடசாலையின் மீது குண்டுவீச்சு: போருக்கு வழிவகுக்குமா?

உக்ரைனின் எல்லையோர மாகாணமான டான்பஸ் மாகாணத்தில் மழலையர் பாடசாலையின் மீது குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உக்ரைன் கட்டுப்பாட்டில் உள்ள ஸ்டைனிஸ்டியா லுகன்ஸ்கா என்ற நகரில் அமைந்துள்ள மழலையர் பாடசாலையின் மீதே நேற்று (வியாழக்கிழமை) இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலின் போது, ஒரு ஆசிரியரும், காவலாளியும் காயம் அடைந்தனர். 32 குண்டுகள் நகரின் மீது விழுந்ததாகவும், ஒரு ராணுவ வீரர் காயமடைந்ததாகவும், மின்சார விநியோகம் தடைபட்டதாகவும் உக்ரைன் இராணுவம் கூறியது.

அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு உக்ரேனிய கிராமமான ஸ்டானிட்சியா-லுகன்ஸ்காவில் 20 குழந்தைகள் மற்றும் 18 பணியாளர்கள் உள்ள இரண்டு மாடி கட்டடத்தின் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலை யார் நடத்தியது என்று இன்னும் முழுமையான தகவல் வெளியாகவில்லை. ஆனால், ரஷ்யாவே இந்த தாக்குதலை நடத்தியதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.

எனினும், அதேவேளை ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் இந்த குண்டு வீச்சு தாக்குதலை நடத்தினரா? அல்லது உண்மையிலேயே ரஷ்யா தான் இந்த குண்டு வீச்சு தாக்குதலை நடத்தியதா? அல்லது வேறு யாரேனும் இந்த தாக்குதலை இந்த குண்டு வீச்சு தாக்குதலை நடத்தினரா? என பல்வேறு கேள்விகள் நிலவுகின்றன.

இந்த மாகாணத்தில் ஒரு பகுதி உக்ரைனின் கட்டுப்பாட்டிலும், மற்றொரு பகுதி ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1267586

  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்ய சார்பு கிளர்ச்சியாளர்கள் உக்ரைன் நகரின் மீது எறிகணை தாக்குதல்- பதற்ற நிலை அதிகரிப்பு

 

 

 
உக்ரைனின் கிழக்கு பகுதியில் நிலை கொண்டுள்ள ரஷ்ய சார்பு கிளர்ச்சியாளர்கள் உக்ரைனின் எல்லைப் பகுதியை நோக்கி எறிகணை தாக்குதலை மேற்கொண்டதை தொடர்ந்து பதற்ற நிலை மேலும் அதிகரித்துள்ளது.
2022-02-17T172019Z_901583748_RC2SLS9FRL8 russia-bomb-school-210_hpMain_20220217-1 FLyJtacWQAMg0Bl-300x225.jpg
கிளர்ச்சியாளர்களின் எறிகணைத் தாக்குதல் காரணமாக ஆரம்ப பாடசாலையொன்று சேதமடைந்துள்ளது மூவர் காயமடைந்துள்ளனர்.
டொன்பஸ் பிராந்தியத்தின் முன்னரங்குகளில் பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக ஐரோப்பிய பாதுகாப்பு ஒத்துழைப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
நகரின் மீது இடம்பெற்ற எறிகணை தாக்குதல் காரணமாக ஆரம்பபாடசாலையொன்று சேதமடைந்துள்ளது பாடசாலை ஆரம்பித்த சில நிமிடங்களில் இந்த எறிகணை தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
எறிகணை தாக்குதல் காரணமாக ஏற்பட்டசிதைவுகளை வீடியோக்கள் காண்பித்துள்ளன.
சிறுவர்கள் உணவருந்திக்கொண்டிருந்த வேளை எறிகணை தாக்குதல் இடம்பெற்றது. அது உடற்பயிற்சி கூடத்தை தாக்கியது-உணவுண்ட பின்னர் சிறுவர்கள் உடற்பயிற்சி கூடத்திற்கு செல்வது வழமை 15 நிமிடம் தாமதமாக தாக்குதல் இடம்பெற்றிருந்தால் நிலைமை மோசமானதாக இருந்திருக்கும் என ஆசிரியை ஒருவர் ஏஎவ்பிக்கு தெரிவித்துள்ளார்.
உடைகளை சுத்தம் செய்யும் பகுதியில் நான் பணியாற்றிக்கொண்டிருந்தேன்-எறிகணைகள் வெடித்ததால் நான் தூக்கி எறியப்பட்டேன் ஜன்னல்கள் உடைந்தன, புகையும் புழுதியும் எழுந்தது-என நட்டேலியா ஸ்லேசரேவா தெரிவித்துள்ளார்.
இதன்போது ஆசிரியர்ஒருவரும் பாதுகாப்பு உத்தியோகத்தரும் பாதிக்கப்பட்டுள்ளனர்,நகரில் 32 எறிகணைகள் விழுந்து வெடித்தன எனத் தெரிவித்துள்ள உக்ரைன் படையினர் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
இரண்டாவது எறிகணை சிறுவர்கள் விளையாடும் பகுதியில் பாரிய குழியை ஏற்படுத்தியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

https://thinakkural.lk/article/166513

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.