Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கு உக்ரேனில் 2,000 போர்நிறுத்த மீறல்கள் பதிவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு உக்ரேனில் 2,000 போர்நிறுத்த மீறல்கள் பதிவு

1945 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஐரோப்பாவில் மிகப்பெரிய போரை முன்னெடுக்க ரஷ்யா திட்டமிட்டு வருவதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன என்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் கூறியுள்ளார்.

உக்ரேன் தலைநகர் கியேவை சுற்றி வளைக்கும் படையெடுப்பை ரஷ்யா நடத்த உத்தேசித்துள்ளதாக உளவுத்துறை தெரிவிக்கிறது என்றும் அவர் கூறினார்.

இதேவேளை கிழக்கு உக்ரேனில் கிட்டத்தட்ட 2,000 போர்நிறுத்த மீறல்கள் சனிக்கிழமையன்று ஐரோப்பாவில் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்புக்கான அமைப்பின் கண்காணிப்பாளர்களால் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவையிடம் ஞாயிற்றுக்கிழமை உறுதிபடுத்தியுள்ளன.

A Ukrainian service member is seen on the front line near the village of Zaitseve in the Donetsk region, Ukraine February 19, 2022. REUTERS/Gleb Garanich

இந் நிலையில் உக்ரேனின் ஜனாதிபதி Volodymyr Zelenskyy, நாட்டின் கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில் மொஸ்கோ மீது பொருளாதாரத் தடைகளை விதிக்குமாறு மேற்கு நாடுகளை வலியுறுத்தியுள்ளார்.

சனிக்கிழமையன்று Munich பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய Zelenskyy, உக்ரைனுக்கு புதிய உத்தரவாதங்களை வழங்க ஜேர்மனி மற்றும் துருக்கியுடன் ரஷ்யாவை உள்ளடக்கிய ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர்களின் கூட்டத்தை கூட்ட விரும்புவதாக கூறினார்.

உக்ரேனிய அரசாங்கமும் பிரிவினைவாத சக்திகளும் 2014 இல் இருந்து கிழக்கு உக்ரேனில் சண்டையிட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/122756

 

  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்யாவின் ஆத்திரமூட்டம் நடவடிக்கையால் அச்சமடையவில்லை – உக்ரைன் ஜனாதிபதி

ரஷ்யாவின் ஆத்திரமூட்டம் நடவடிக்கையால் அச்சமடையவில்லை – உக்ரைன் ஜனாதிபதி

ரஷ்யாவின் ஆத்திரமூட்டம் நடவடிக்கைகளுக்கு தமது நாடு பதிலளிக்காது என உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

கிழக்குப் பிரதேசங்களில் ரஷ்ய ஆதரவுடைய கிளர்ச்சியாளர்களுடனான யுத்தம் தீவிரமடைந்துள்ள நிலையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இருப்பினும் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு எதிராக உக்ரைன் தன்னைத் தற்காத்துக் கொள்ளும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உக்ரைன் ராணுவத்திற்கும் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மூன்றாவது நாளாக நடந்த மோதலில் இரண்டு உக்ரைன் வீரர்கள் கொல்லப்பட்டனர்.

ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமிக்கும் என்று தான் நம்புவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறியுள்ள நிலையில் மொஸ்கோ இதனை தொடர்ந்தும் மறுத்து வருகின்றது.

கிழக்கு பிராந்தியங்களில் படையெடுப்பதற்கு போலியான நெருக்கடியை ஏற்படுத்த ரஷ்யா முயற்சிப்பதாக மேற்கத்திய நாடுகள் குற்றம்சாட்டியுள்ளன.

இருப்பினும் இவ்வாறான நடவடிக்கையால், உக்ரேனியர்கள் அச்சமடையவில்லை என ஜனாதிபதி ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.

https://athavannews.com/2022/1267945

  • கருத்துக்கள உறவுகள்

யுக்ரேன் - ரஷ்யா பதற்றம்: ஒரே நாளில் 1,400 வெடிப்புச் சம்பவங்கள்

3 மணி நேரங்களுக்கு முன்னர்
 

வொலோடிமிர் ஜெலன்ஸ்கி

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

முனிச்சில் உள்ள பாதுகாப்பு மாநாட்டில் யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஜெலன்ஸ்கி

உங்களுக்கு பிடித்த வீராங்கனைக்கு வாக்களிக்க CLICK HERE

யுக்ரேனில் கிழக்குப் பகுதியில் உள்ள ரஷ்ய ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், இந்தத் தூண்டுதல்களுக்கு எதிராக எந்த விதமான பதில் நடவடிக்கைகளிலும் நாங்கள் ஈடுபட மாட்டோம் என யுக்ரேனிய அதிபர் தெரிவித்திருக்கிறார்.

ஆனால் ரஷ்யப் படையெடுப்புக்கு எதிராக எங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபடுவோம் என்று அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கூறினார்.

யுக்ரேனிய அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி மியூனிக்கில் நடந்த ஒருபாதுகாப்பு மாநாட்டில் பேசுகையில், யுக்ரேனிய மக்கள் "பயப்படவில்லை, ஆனால் நாங்கள் வாழவேண்டும் என்று நினைக்கிறோம்" என்றார்.

மேற்கத்திய தலைவர்கள் ''ரஷ்யாவை மகிழ்விக்க விரும்பும் வகையிலான கொள்கையைக் கடைபிடிப்பதற்கு" எதிராகத் தன் கருத்தை பதிவு செய்தார் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி யுக்ரேனுக்கு புதிய பாதுகாப்பு உத்தரவாதங்கள் வழங்கப்பட வேண்டும் என ஜெலன்ஸ்கி குறிப்பிட்டார்.

யுக்ரேனிய அதிபரின் பாதுகாப்பு கருதி மியூனிக்கில் நடைபெற்ற மாநாட்டிற்கு செல்ல வேண்டாம் என்று அமெரிக்க அதிகாரிகள் எச்சரித்தை மீறி, இந்தப் பயணத்தை அவர் மேற்கொண்டுள்ளார்.

ரஷ்யா ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும், தங்களைத் தாங்களே குடியரசுகளாகப் பிரகடனம் செய்து கொண்ட யுக்ரேனின் கிழக்குப் பகுதிகளான டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகளில், சனிக்கிழமை அன்று 1,400 வெடிப்புச் சம்பவங்கள் நடைபெற்றன.

இந்தப் பதற்றத்தின் மூன்றாவது நாளில் இரண்டு யுக்ரேனிய படையினர் கொல்லப்பட்டனர்.

முன்னதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷ்யா யுக்ரேன் மீது தாக்குதல் நடத்தும் என குறிப்பிட்டிருந்தார். ஆனால் ரஷ்யா இதை முற்றிலும் மறுத்தது. மேற்கத்திய நாடுகள், ரஷ்யா போலியான பதற்றத்தை உருவாக்குகிறது என்றும், யுக்ரேன் மீது படையெடுப்பதற்கான காரணத்தை உருவாக்குகிறது என்றும் குற்றம் சாட்டின என்பது குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் சென்ற நேரத்தில் அதிரடித் தாக்குதல்

யுக்ரேனின் கிழக்குப் பகுதியை பார்வையிட யுக்ரேனிய உள்நாட்டு விவகாரங்களுக்கான அமைச்சர் டெனிஸ் மொனாஸ்டிர்ஸ்கை சென்றபோது தாக்குதல் நடத்தப்பட்டது. பிறகு அவர் குண்டு துளைக்க முடியாத கட்டடத்துக்கு அவசர அவசரமாக அழைத்துச் செல்லப்பட்டார்.

 

டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதி

பட மூலாதாரம்,REUTERS

கிழக்கு யுக்ரேனில் இருக்கும் டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகளில் உள்ள கிளர்ச்சியாளர்கள், போராடும் வயதுடைய அனைத்து ஆண்களையும் அணிதிரட்ட உத்தரவிட்டனர். அங்கு குடியிருக்கும் மக்களை ரஷ்யாவிற்கு செல்லுமாறு வலியுறுத்தியுள்ளனர்.

ஆனால் பெரும்பாலான மக்கள் இந்தக் கட்டளைக்கு இணங்கவில்லை. யுக்ரேன் தங்கள் பகுதியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக ஆதாரம் இல்லாத தகவலை அவர்கள் கூறியிருக்கின்றனர்.

டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகளில் யுக்ரேன் தாக்குதல் நடத்துவதாக சனிக்கிழமையன்று ரஷ்ய ஊடகங்கள் தொடர்ச்சியாக செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் யுக்ரேனிய எல்லையில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் ரஷ்யாவில் உள்ள ரோஸ்டோவ் பகுதியில் குறி வைத்துத் தாக்குவதற்கான முயற்சி நடந்துள்ளது என்றும் அதன் மீது குற்ற விசாரணை நடத்தவும் ரஷ்யா முடிவு செய்துள்ளது.

இப்படியான தொடர்ச்சியான தாக்குதலுக்கு மத்தியில் மேற்கத்திய நாடுகளான ஜெர்மன் மற்றும் பிரான்ஸ் தங்கள் குடிமக்களை யுக்ரேனை விட்டு வெளியேறுமாறு வலியுறுத்தியுள்ளன. ஜெர்மனிய விமான நிறுவனமான லுஃப்தான்சா வருகின்ற திங்கள்கிழமை முதல் ஒரு வாரத்திற்கு யுக்ரேனுக்கான விமான சேவையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

ஹைப்பர்சோனிக் ஏவுகணை ஏவிய ரஷ்யா

மியூனிக்கில் மேற்கத்திய தலைவர்கள் சந்தித்த நேரத்தில், ரஷ்யா தனது ராணுவ பலத்தை வெளிக்காட்டும் ராணுவப் பயிற்சி நடத்தி உள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தலைமையில் அணு ஆயுத பயிற்சியின் ஒரு பகுதியாக அதிநவீன ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை ஏவி சோதித்தாக ரஷ்யா தெரிவிக்கிறது.

 

map

யுக்ரேனிய எல்லைக்கு அருகில் உள்ள பெலாரூஸ் நாட்டில் ரஷ்யா ராணுவப் பயிற்சி நடத்தி வந்தது. இந்த ராணுவப் பயிற்சியின் பிறகு யுக்ரேனிய எல்லைகளில் ரஷ்ய படையினர் குவிக்கப்பட்டனர். அமெரிக்காவின் கணிப்புப்படி, கிழக்கு யுக்ரேனின் கிளர்ச்சியாளர்கள் உள்பட சுமார் 169,000 முதல் 190,000 வரையிலான ரஷ்யா படையினர் யுக்ரேன் எல்லைப் பகுதிகளில் நிறுத்தப்பட்டனர்.

இது சம்பந்தமாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் குறிப்பிடும்போது "யுக்ரேனிய எல்லையை ரஷ்ய படைகள் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்தன" என குறிப்பிட்டார்.

கமலா ஹாரிஸ் ரஷ்யாவுக்கு எச்சரிக்கை

ஒரு செய்தியாளர் சந்திப்பில் பேசிய, அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், ரஷ்யா யுக்ரேன் மீது படையெடுப்பதற்கு ஒரு போலி காரணத்தை உருவாக்க ரஷ்யா முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டினார். ரஷ்ய படையெடுப்பு நடந்தால் அதற்கான விளைவுகள் "கடுமையானதாகவும் விரைவானதாகவும்" இருக்கும் என்று எச்சரித்தார் கமலா ஹாரிஸ்.

ஒன்றுபட்ட சோவியத் ஒன்றியத்தில் யுக்ரேன் ஓர் அங்கமாக இருந்ததால் ரஷ்யாவுடன் வரலாற்று ரீதியான தொடர்பு இருந்தது. நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக இல்லாத போதியிலும் அந்த அமைப்புகளின் உறுப்பு நாடுகளுடன் நல்ல உறவுகளைக் கொண்டுள்ளது.

ரஷ்யாவைப் பொறுத்தவரையில், யுக்ரேன் ராணுவ ஒத்துழைப்புக்கான கூட்டணியாக உள்ள நேட்டோவுடன் இணையக் கூடாது என விரும்புகிறது. அப்படி இணைந்தால் அது தனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என ரஷ்யா கருதுகிறது.

https://www.bbc.com/tamil/global-60450682

  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்யா படையெடுப்பை தடுக்கும் நோக்கில் அமெரிக்க- ரஷ்ய ஜனாதிபதிகள் பேச்சுவார்த்தை!

ரஷ்யா படையெடுப்பை தடுக்கும் நோக்கில் அமெரிக்க- ரஷ்ய ஜனாதிபதிகள் பேச்சுவார்த்தை!

ரஷ்யா படையெடுப்பை தடுக்கும் நடவடிக்கை குறித்து, அமெரிக்க மற்றும் ரஷ்ய ஜனாதிபதிகள் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

உக்ரைன் சூழலால் ஐரோப்பாவில் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை குறித்து இருநாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் வேண்டுகோள் விடுத்ததையடுத்து இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

இதனை, உறுதிப்படுத்தியுள்ள வெள்ளை மாளிகை செய்தி தொடர்புத்துறை செயலாளர் ஜென்சாகி, அமெரிக்கா, ரஷ்யா ஜனாதிபதிகள் சந்திக்கும் உச்சி மாநாடு குறித்தும், அதில் விவாதிக்கப்படும் பொருள் குறித்த அறிக்கைகைளை தயாரிப்பது தொடர்பாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் மற்றும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ஆகியோர் பெப்ரவரி 24ஆம் திகதி நடைபெறும் சந்திப்பின் போது முடிவெடுக்கப்படுமென குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யா உக்ரைன் மீது படையெடுக்காது என்ற நிபந்தனையுடன் மட்டுமே இந்த மாநாட்டை நடத்த முடியும் என வெள்ளை மாளிகை மேலும் தெரிவித்துள்ளது.

நேட்டோவுடன் இணையக் கூடாது என தொடர்ந்து வலியுறுத்திவரும் ரஷ்யா, உக்ரைனிலும் அதற்கு அருகிலும் ரஷ்ய படைவீரர்கள் சுமார் 169,000-190,000பேரைக் குவிந்துள்ளது.

ஆனால், உக்ரைன் மீது படையெடுக்கும் எந்த திட்டமும் இல்லையென ரஷ்யா கூறியுள்ளது. எனினும், ரஷ்யா, உக்ரைன் மீது எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.

இதனிடையே கிழக்கு உக்ரைன் பகுதியில் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளால், மொத்தம் 1,500 போர் நிறுத்த ஒப்பந்த மீறல்கள் நடந்ததாக ஐரோப்பிய பாதுகாப்பு அமைப்பை சேர்ந்த பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதில் டொனெட்ஸ்கில் பகுதியில் 591 மீறல்களும், லுகான்ஸ்கில் 975 மீறல்களும் பதிவாகி உள்ளன. இது கடந்த எட்டு ஆண்டுகாலமாக தொடரும் இரு நாடுகளுக்கு இடையேயான மோதலில் அதிகபட்சமாக கருதப்படுகிறது.

https://athavannews.com/2022/1268137

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.