Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முன்னாள் போராளி இளைஞர்களின் தாக்குதலில் மரணம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கையடக்க தொலைபேசியை திருடியதாக,  இளைஞர்களினால் தாக்குதலுக்குள்ளான முன்னாள் போராளி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கங்குவேலி பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே பகுதியில் வசித்து வந்த ஒரு பிள்ளையின் தந்தையான சிவபாலன் சத்தியபவான் (44வயது) என்ற முன்னாள் போராளியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

குறித்த நபர் தனது சித்தியுடன் கங்குவேலி பகுதியில் வசித்து வருகின்ற நிலையில் மதுவுக்கு அடிமையானவர் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், அந்த பகுதியில் உள்ள இளைஞர் ஒருவரின் கையடக்கத் தொலைபேசியை திருடி அதனை விற்பனை செய்து மது வாங்குவதாக குறித்த இளைஞனுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற இளைஞர் அந்த நபரை தாக்கியுள்ளார். தாக்குதலுக்கு உள்ளான நபர் வீடு திரும்பிய நிலையில், தனக்கு மயக்க நிலை ஏற்பட்டுள்ளதுடன், தலைப்பகுதியில் விரைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இந்நிலையில், வழமை போன்று குறித்த நபர் உறங்கியுள்ளார், நேற்று மாலை சென்று பார்த்தபோது அவர் மயக்க நிலையில் இருந்ததை அடுத்து வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் மூதூர் தள வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் சட்ட வைத்திய நிபுணரின் சோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்த்துள்ளனர்.

குறித்த மரணம் தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.  

https://tamilwin.com/article/death-by-ex-combatant-attack-1646674667

  • கருத்துக்கள உறவுகள்

செய்தியை வாசிக்கும் போது… மனதை மிகவும் கலங்க வைத்தது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, தமிழ் சிறி said:

செய்தியை வாசிக்கும் போது… மனதை மிகவும் கலங்க வைத்தது.

அடித்து கொலை செய்த இளைஜர் வெளியாலை சுதந்திரமாக நடமாடுவதை பார்க்க இலங்கை உளவுத்துறையால் திட்டமிட்டு  செய்து முடிக்கப்பட்ட கொலை போல் உள்ளது .

அல்லது அந்த களவு கொடுக்கப்பட்ட போனில் எதோ சமாசாரம் இருந்து உள்ளது ஒரு போன் கொலை செய்யுமளவுக்கு கொலைவெறி உருவாக்காது .

இப்பவெல்லாம் ஜாதக பொருத்தம் பார்ப்பதை விட மாப்பிளை பொம்பிளையின் இருவரின் போனை வாங்கி பார்த்தாலே காணும் மணவாழ்க்கை நீடிக்குமா நீடிக்காதா என்று .

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

கையடக்க தொலைபேசியை திருடியதாக,  இளைஞர்களினால் தாக்குதலுக்குள்ளான முன்னாள் போராளி

காலம் செய்த சதி. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Just now, satan said:

காலம் செய்த சதி. 

எனக்கு சந்தேகமாக உள்ளது சாத்தான் .

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பெருமாள் said:

எனக்கு சந்தேகமாக உள்ளது சாத்தான் .

 

1 hour ago, பெருமாள் said:

சம்பவ இடத்துக்குச் சென்ற இளைஞர் அந்த நபரை தாக்கியுள்ளார்.

சந்தேகிப்பதற்கு என்ன இருக்கிறது பெருமாள்?  "நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் உன் நிழலுங்கூட மிதிக்கும்." முன்னாள் போராளிகளை சமுதாயத்திலிருந்து ஒதுக்கி வைப்பது, கையாலாகாதவர்களாக்குவது, அவர்களை சமூகத்திலிருந்து அந்நியப்படுத்துவது, சமூக சீர்கேடுகளோடு தொடர்புபடுத்தி கைது செய்து சிறையிலடைப்பது,  மர்மக்கொலை இப்படி பல. அதாவது வருகின்ற இளைய சமுதாயத்தை அச்சுறுத்தி, அடிமைப்படுத்தும் உளவியல் போர்.

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, பெருமாள் said:

அடித்து கொலை செய்த இளைஜர் வெளியாலை சுதந்திரமாக நடமாடுவதை பார்க்க இலங்கை உளவுத்துறையால் திட்டமிட்டு  செய்து முடிக்கப்பட்ட கொலை போல் உள்ளது .

அல்லது அந்த களவு கொடுக்கப்பட்ட போனில் எதோ சமாசாரம் இருந்து உள்ளது ஒரு போன் கொலை செய்யுமளவுக்கு கொலைவெறி உருவாக்காது .

இப்பவெல்லாம் ஜாதக பொருத்தம் பார்ப்பதை விட மாப்பிளை பொம்பிளையின் இருவரின் போனை வாங்கி பார்த்தாலே காணும் மணவாழ்க்கை நீடிக்குமா நீடிக்காதா என்று .

 

2 minutes ago, satan said:

 

சந்தேகிப்பதற்கு என்ன இருக்கிறது பெருமாள்?  "நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் உன் நிழலுங்கூட மிதிக்கும்." முன்னாள் போராளிகளை சமுதாயத்திலிருந்து ஒதுக்கி வைப்பது, கையாலாகாதவர்களாக்குவது, அவர்களை சமூகத்திலிருந்து அந்நியப்படுத்துவது, சமூக சீர்கேடுகளோடு தொடர்புபடுத்தி கைது செய்து சிறையிலடைப்பது,  மர்மக்கொலை இப்படி பல. அதாவது வருகின்ற இளைய சமுதாயத்தை அச்சுறுத்தி, அடிமைப்படுத்தும் உளவியல் போர்.

பாவம்…. இறந்த போராளி, ஒரு பிள்ளையின் தகப்பன்.
திருட்டு பட்டம் சூட்டி, கொலை செய்து விட்டார்கள்.
உண்மையில் நடந்தது என்ன என்பதை…
அந்தப் போராளியின் தரப்பில் சொல்லக் கூட, சந்தர்ப்பம் கொடுக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தமிழ் சிறி said:

 

பாவம்…. இறந்த போராளி, ஒரு பிள்ளையின் தகப்பன்.
திருட்டு பட்டம் சூட்டி, கொலை செய்து விட்டார்கள்.
உண்மையில் நடந்தது என்ன என்பதை…
அந்தப் போராளியின் தரப்பில் சொல்லக் கூட, சந்தர்ப்பம் கொடுக்கவில்லை.

என்ன நடந்தது எனக் கூற சந்தர்ப்பம் கொடுத்தாலும் அவரின் பக்கத்தை கேட்ப்பதற்கு, ஏற்றுக்கொள்வதற்கு எத்தனைபேருக்கு மனமிருக்கு? நேரமிருக்கு? உண்மையிலேயே திருடி இருந்தாலும் அதற்கு பரிகாரம் செய்ய விடுவோமா? அவரை கைதூக்கி விட எத்தனைபேர் முன்வந்திருப்பார்கள்? இறந்தவர் இளைஞனாக இருந்தபோது தனது குடும்பத்தை பிரிந்து, இளமையை துறந்து விடுதலைக்காய் போனார். இன்றைய இளைஞன் விழுந்த அவரது கையை பிடித்து தூக்கிவிட முன்வரவில்லையே? சாகும்போது என்ன நினைத்திருப்பார்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாதியற்ற இனமும் நாதியற்ற மக்களும்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.