Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முதலீட்ட அபிவிருத்தி அமைச்சர் நவீன் திஸநாயக்கா - ராகுல் காந்தியுடன் பேச்சு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சனி 28-07-2007 14:42 மணி தமிழீழம் [மோகன்]

முதலீட்ட அபிவிருத்தி அமைச்சர் நவீன் திஸநாயக்கா - ராகுல் காந்தியுடன் பேச்சு

ஸ்ரீலங்காவின் முதலீட்ட அபிவிருத்தி அமைச்சர் நவீன் திஸநாயக்கா இந்திய ஆளும் காங்கிரஸ் கட்சியின் எதிர்கால தலைவராக கருதப்படும் ராகுல் காந்தியுடன் பேச்சு நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏழு நாள் அரசு முறை பயணம் ஒன்றை மேற்கொண்டு இந்தியா செல்லவுள்ள நவீன் திஸநாயக்கா இந்தியாவின் முக்கிய அரசியல் தலைவர்களையும் சந்தித்து பேசவுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மகனான ராகுல் காந்தி இந்திய அரசாங்கத்தில் செல்வாக்கு செலுத்தும் முக்கிய நபர் என்ற வகையில் அவர் மூலமாக இலங்கையின் இனப்பிரச்சினையில் ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு சார்பாக இந்திய மத்திய அரசாங்கத்தை செயல்பட வைப்பதற்கு நவீன் திஸநாயக்க முயற்ச்சிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னர் திட்டமிட்டது போல் அமைச்சர் மிலிந்த மொரொகொட மற்றும் ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்ச ஆகியோர் இந்தியாவிற்கு மேற்கொள்ளவிருந்த விஜயங்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் நவீன் திஸநாயக்காவின் ஊடாக புதிய நகர்வினை மகிந்த ராஜபக்ச ஆரம்பித்துள்ளதாக அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

ஐக்கிய தேசிய கட்யின் முன்னாள் தலைவரான காமினி திஸநாயக்கா இந்தியாவின் காங்கிரஸ் கட்சியுடன் குறிப்பாக ராஜீவ் காந்தியுடன் நெருக்கமான உறவுகளை கொண்டிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் தற்போது ராகுல் காந்திக்கும் நவீன் திஸநாயக்காவிற்கும் இடையில் நெருக்கமான தொடர்புகள் இருப்பதாகவும் அதன் காரணமாகவே இந்தியாவை தமக்கு சாதகமானதாக்கும் முயற்ச்சியில் நவீன் திஸநாயக்காவை மகிந்த ராஜபக்ச ஈடுபடுத்தியுள்ளதாகவும் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

pathivu

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு தனி மனிதர்கள் நட்பாக இருந்துகொண்டு 100 கோடிப் பேர்கொண்ட இந்தியாவையும், 6 கோடிப் பேர்கொண்ட தமிழ்நாட்டின் உணர்வுகளையும், ஐம்பது லட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கைச் சிறுபான்மை மக்களின் நலன்களையும் இந்து சமுத்திரப் பிராந்திய நலன்களையும் உலகத்தின் வரலாற்றுப் போக்கையும் கட்டுப்படுத்த முடியுமோ தெரியாது. தெற்காசியாவில அதுவும் இந்தியாவுல இப்படியான கூத்துக்கள் அரங்கேறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. குடும்பச் செல்வாக்கும் தனிநபர் செல்வாக்கும் எவ்வளவு காலத்துக்குச் செல்லுமெண்டிறதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேணும்.

இருவரும் என்னதான் பேசியிருப்பார்கள்?

நவீன் திஸநாயக்கா: உங்க அப்பா எவ்வளவு நல்லவரு.

ராகுல் காந்தி: அப்பவோட நீங்க போட்ட ஒப்பந்தத்த கிழிச்சு போட்டுடிங்களாமே?

நவீன் திஸநாயக்கா: முழுசா இன்னும் கிழிக்கல. 87ம் ஆண்டு அவர் சேத்து வச்ச வடக்கையும் கிழக்கையும் பிரிச்சுட்டோம். இப்ப கிழக்கு நம்ம கையில. இது எப்படியிருக்கு? அத விடுவம். இப்ப அதவிட முக்கியமான விஷயம். வடக்கையும் பிடிக்க ரொம்ப ரொம்ப ஆசை. கொஞ்சம் உதவி செஞ்சீங்கன்னா......

ராகுல் காந்தி: ஆ.... என்ன? மறுபடியும் பொறிக் கிடங்கா?

நவீன் திஸநாயக்கா: பதறாதயுங்கோ. நீங்க உதவி செய்யிற மாதிரி சும்மா ஷோக்காட்டினா சரி. நம்ம பசங்க மிச்சம் மிகுதி பாத்திடுவாங்க.

ராகுல் காந்தி: உங்க பசங்களா? அதான் உலகறிஞ்ச விஷயமாச்சே!

நவீன் திஸநாயக்கா: அப்பிடியா? ரொம்பப் புகழாதாயுங்க.

ராகுல் காந்தி: முந்தியும் ஷோக்காட்ட கொழும்புக்கு கூப்பிட்டுப்போட்டு, ஷொட்கன் பிடியால அப்பாவுக்கு தோள்மாட்டில அடிச்சத மறக்கேலுமா? இல்ல, உங்களுக்குன்னு உதவி செய்ய வந்தவங்கள உதைஞ்சு அனுப்பினத மறக்கேலுமா?

நவீன் திஸநாயக்கா: அதில்ல....

ராகுல் காந்தி: எதுவானாலும் அம்மாவோடயும் சிங் அங்கிளோடயும் போய் பேசுங்கோ. இப்ப ஆள விடுங்க.

நவீன் திஸநாயக்கா தலயில துண்டோட அடுத்த படி ஏறியிறங்க தயாராகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய பாதுகாப்பு ஆலோசகருடன் சிறிலங்கா முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் நவீன் சந்திக்கவுள்ளார்

ஏழு நாள் பயணத்தை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் நவீன் திஸாநாயக்க, இந்திய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே நாராயணனையும், அகில இந்திய கொங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராகுல் காந்தியியையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

இடம்பெறவுள்ள இந்தச் சந்திப்பின்போது, சிறிலங்காவின் பாதுகாப்பு நிலவரம் மற்றும் உதவிகள் முடக்கம் குறித்து அமெரிக்க மூதவையினர் (Senate) முன்வைத்துள்ள பிரேரணை தொடர்பாகவும் பேசவுள்ளதாக புதுடில்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சிறிலங்காவில்; தொடர்ந்த அதிகரித்து காணப்படும் மனித உரிமை மீறல்களைச் சுட்டிக்காட்டி, இந்த உதவிகள் முடக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அந்த சட்ட முன்வரைபில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தேச சட்ட முன்வரைபின் 690 ஆம் பிரிவில் இது சிறப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், சிறிலங்காவுக்கு ஆயுதங்களை விற்பனை செய்வதற்குரிய ஏற்றுமதி அனுமதி, இராணுவ தளபாடங்கள் மற்றும் தொழில்நுட்ப விற்பனை அல்லது பரிமாறுதல், உட்பட அனைத்தும் இரத்துச் செய்யப்படவும் இந்த உத்தேச சட்ட முன்வரைபு வழிவகை செய்யும் என்றும் 690ஆம் பிரிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் மனித உரிமை மீறல்கள், நீதிக்குப் புறம்பான படுகொலைகளில் ஈடுபடுதல் மற்றும் சிறார்களை படையணிகளில் சேர்த்தல் ஆகியவற்றில் ஈடுபடும் இராணுவத்தினரை நீதியின் முன் நிறுத்தும் போது அரசாங்க செயலாளர் அனுமதித்தால் விதிவிலக்கு அளிக்கலாம் என்றும் இதில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்க மூதவைச் சபையில் உள்ள பெருந்தொகையான கொங்கிரஸார், சிறிலங்காவின் மனித உரிமை மீறல்கள் குறித்த கவலையை தொடர்ந்து வெளிப்படுத்திய நிலையில் இத்தகைய கடும் போக்கை அமெரிக்கா மேற்கொண்டிருப்பதாக தெரிகிறது.

எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் அமெரிக்க மூதவை சபையில் இது எடுத்துக் கொள்ளப்படக்கூடும் என்று தெரிகிறது.

-தமிழ்க் கனேடியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.