Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்தியாவிடமிருந்து நிதி உதவியை பெற்றுக்கொண்ட பின்னர் சீனாவின் உதவியை நாடியுள்ளது இலங்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவிடமிருந்து நிதி உதவியை பெற்றுக்கொண்ட பின்னர் சீனாவின் உதவியை நாடியுள்ளது இலங்கை

இந்தியாவிடமிருந்து நிதி உதவியை பெற்றுக்கொண்ட பின்னர் இலங்கை சீனாவின் உதவியை நாடியுள்ளதாக தகவல்கள்வெளியாகியுள்ளன.
china-embassy1.jpg
கடன்களை செலுத்துவதை ஒத்திவைப்பது தொடர்பிலும்,அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மூலப்பொருட்கள் இறக்குமதிக்கான கடன் உதவி குறித்தும் இலங்கை சீனாவின் உதவியை நாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த வருடம் சீன வங்கிககளிற்கு இலங்கை 100 மில்லியன் அமெரிக்கா டொலர்களை கடனாக செலுத்தவேண்டும்.
நாடு தற்போதைய நெருக்கடியிலிருந்து மீளும் வரை இந்த கடன்களை செலுத்துவதை ஒத்திவைக்கவேண்டும் என இலங்கை வேண்டுகோள் விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் இலங்கையின் உள்ளுர் தொழில்துறை தொடர்ந்து இயங்குவதற்கு அவசியமான மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அவசியமாக கடன் உதவியை சீனாவிடமிருந்து இலங்கை கோரியுள்ளது.
இலங்கை மேலதிக நிதிஉதவியை கோரியுள்ளது இரு தரப்பும் இது குறித்து ஆராய்கின்றன என்பதை உறுதி செய்ய முடியும் என சீன தூதரக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

 

https://thinakkural.lk/article/170409

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவும், சீனாவும்.... பகை உணர்வு கொண்ட தேசங்கள்.
ஆனால், அவர்களிடமே...  ஒரு கிழமைக்குள் 
மாறி, மாறி கடன் வாங்கும் திறமை,  ஸ்ரீலங்கவிற்கே உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

இந்தியாவிடமிருந்து நிதி உதவியை பெற்றுக்கொண்ட பின்னர் இலங்கை சீனாவின் உதவியை நாடியுள்ளதாக தகவல்கள்வெளியாகியுள்ளன.

இது இவர்களின் முழுநேர தொழில் போலுள்ளதே! மாறி மாறி கடன் வாங்குவதும்  வாங்கிய கடனை திருப்பி கேட்டால்கையை விரிப்பதும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

இந்தியாவும், சீனாவும்.... பகை உணர்வு கொண்ட தேசங்கள்.
ஆனால், அவர்களிடமே...  ஒரு கிழமைக்குள் 
மாறி, மாறி கடன் வாங்கும் திறமை,  ஸ்ரீலங்கவிற்கே உண்டு.

சிறீலங்காச் சிங்கள அரசு குளிகை நேரம்பார்த்துக் கடன் வாங்குவதால் அது மாறி மாறிக் கடன்வாங்கும் திறமையை அந்தக் குளிகை நேரம் அளித்து உதவிவருகிறது.

நல்ல நேரம், கெட்ட நேரம், ராகு காலம், எமகண்டம் போன்றவற்றின் மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் நிச்சயம் நீங்கள் குளிகை நேரம் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள்.

சரிகுளிகை நேரம் என்றால் என்ன? யார் அந்த குளிகன். குளிகை நேரத்தில் நாம் எதை செய்யலாம் எதை செய்ய கூடாது. என்ற தகவல்களை இங்கு பார்ப்போம் வாருங்கள்.

சனீசுவரன்-யேசுடாதேவி தம்பதியினருக்கு மகனாய் பிறந்தவர் தான் குளிகன் என்று புராணங்கள் கூறுகிறது. இவருக்கு மாந்தன் என்ற பெயரும் உண்டு. அதேபோல மாந்தி என்றொரு தங்கையும் இவருக்கு உண்டு. குளிகனின் தாயான யேசுடாதேவியே மூதேவி என்று அழைக்கப்படுகிறார்.

ராகு காலம், எமகண்டம் போன்ற நேரங்களில் சாத்திரத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் எந்த நல்ல காரியங்களையும் செய்யமாட்டார்கள். அப்படி செய்தால் அந்த செயலில் ஏதாவது தடை வரும் என்பது அவர்களது நம்பிக்கை. அதே போல குளிகை நேரத்திற்கும் சில தனி சிறப்புகள் உண்டு. ஒருவர் எந்த ஒரு செயலையும் குளிகை நேரத்தில் துவங்கினால் அந்த செயலை அவர் திரும்ப திரும்ப செய்வார் என்பது நம்பிக்கை.

உதாரணத்திற்கு ஒரு குளிகை நேரத்தில் நகை வாங்குகிறார் என்றால், மீண்டும் மீண்டும் நகை வாங்குவதற்கான வாய்ப்பு அவருக்கு கிடைக்கும். அதே போல ஒருவர் குளிகை நேரத்தில் நகையை அடகு வைத்தால் மீண்டும் மீண்டும் நகையை அடகு வைக்க நேரிடும், கடன் கொடுத்தால் மீண்டும் மீண்டும் கொடுக்க நேரிடும், கடன் வாங்கினால் மீண்டும் மீண்டும் வாங்க நேரிடும், என்பது நம்பிக்கை.

இதனை எப்படியோ அறிந்துகொண்ட சிங்கள அரசுகள் குளிகை நேரத்தில் கடன்வாங்கி அசத்தி வருகிறது.🤔😜

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.