Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நாடாளுமன்றுக்கு, ஜனாதிபதி இரகசியமாக வரவில்லை – அவர் பதவி விலக மாட்டார்: காஞ்சன

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாடாளுமன்றுக்கு ஜனாதிபதி இரகசியமாக வரவில்லை – அவர் பதவி விலக மாட்டார்: காஞ்சன

நாடாளுமன்றுக்கு, ஜனாதிபதி இரகசியமாக வரவில்லை – அவர் பதவி விலக மாட்டார்: காஞ்சன

இந்த வீர வசனத்தை முடிந்தால் எரிபொருள் வரிசையில் நிற்பவர்களிடம் கூறுங்கள் - எதிர்க்கட்சி!

நாடாளுமன்றுக்கு ஜனாதிபதி இரகசியமாக வந்துவிட்டுச் செல்லவில்லை என்றும் மாறாக எதிர்க்கட்சிகளே ஜனாதிபதி வருவதை முன்னிட்டு ஒழிந்தார்கள் என்றும் இராஜாங்க அமைச்சரான காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அத்தோடு, அரசமைப்புக்கு இணங்க ஜனாதிபதி விலக மாட்டார் என்றும் அவர் எதற்காக பதவியிலிருந்து இராஜினாமா செய்ய வேண்டும் என்றும் கேள்வியெழுப்பினார்.

மேலும், ஜனாதிபதியும் பிரதமரும் எதிர்க்கட்சிகளுக்கு சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளார்கள் என்றும் அதற்கிணங்க விருப்பமான அமைச்சரவையொன்றை ஸ்தாபித்துக்கொள்ளுங்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், இதற்கு பதில் வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருணா, ஜனாதிபதி நேற்று முன்தினம் நாடாளுமன்றுக்கு வருகைத் தந்ததாகவும் ஆனால் சபைக்கு வரவில்லை என்றும் தெரிவித்தார்.

மேலும் ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் தற்போது கூறிய இந்த வீர வசனத்தை, முடிந்தால் எரிபொருள் வரிசையில் நிற்கும் நபர்களிடம் சென்று கூறுமாறு தெரிவித்தார்.

எரிவாயு வரிசையில் நிற்போரிடம் சென்று கூறுங்கள் பார்க்கலாம் என்றும் நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினை இன்றும் அவ்வாறேதான் காணப்படுகின்றது என்றும் நிலைமை இன்னும் தீவிரமடைந்துள்ளது என்றும் தெரிவித்தார்.

அத்தோடு, நாளைய தினம் கொழும்பை முற்றுகையிட மக்களே தீர்மானித்துள்ளார்கள் என்றும் இதனை அரசாங்கம் புரிந்து செயற்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

https://athavannews.com/2022/1275831

  • கருத்துக்கள உறவுகள்

ராணுவத்தை வைத்து மக்களை அடக்கலாம் என்று நினைத்து  பதவி விலகாமல் உள்ளார்கள் போல உள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, nunavilan said:

ராணுவத்தை வைத்து மக்களை அடக்கலாம் என்று நினைத்து  பதவி விலகாமல் உள்ளார்கள் போல உள்ளது.

சில வேளை... கொள்ளையடித்த பணம், நகை போன்றவற்றை... 
பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லும் மட்டும்,
பதவி விலகாமல்  இருகலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, தமிழ் சிறி said:

சில வேளை... கொள்ளையடித்த பணம், நகை போன்றவற்றை... 
பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லும் மட்டும்,
பதவி விலகாமல்  இருகலாம்.

நிச்சயமாக. அதற்கு  நேரம் தேவை. வேறு நாடுகளில் சென்று இராஜபோக வாழ்க்கையை சுதந்திரமாக இவர்களால் வாழ முடியுமா தெரியவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.