Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

11 இல் இடம்பெறவிருந்த... சர்வதேச நாணய நிதியத்துடனான, கலந்துரையாடல் ஒத்திவைப்பு !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார நிலைமையை கண்காணித்து வரும் சர்வதேச நாணய நிதியம்!

11 இல் இடம்பெறவிருந்த... சர்வதேச நாணய நிதியத்துடனான, கலந்துரையாடல் ஒத்திவைப்பு !

இலங்கைக்கு உதவி வழங்குவது குறித்து ஆராய சர்வதேச நாணய நிதியம் எதிர்வரும் 11 ஆம் திகதி வொஷிங்டனில் நடத்தவிருந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதனை மத்திய வங்கியின் புதிய ஆளுநர் நந்தலால் வீரசிங்கவிடம் சர்வதேச நாணய நிதியம் நேற்று அறிவித்துள்ளது.

இந்நிலையில் நிதி அமைச்சர் அலி சப்ரி தலைமையில் எதிர்வரும் 18 ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு திட்டடமிடப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்துடனான சந்திப்பில் கலந்துகொள்ளும் பிரதிநிதிகள் குழு இன்னும் அறிவிக்கப்படவில்லை என நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

அந்நிய செலாவணி நெருக்கடிக்குத் தீர்வாக, சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெறுமாறு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1275964

  • கருத்துக்கள உறவுகள்

புதுவருடப் பொதி குடுக்க காசில்லை...புது புலிக்கதை விட்டாச்சு...சனத்துக்கு நாமம் இட்டாச்சு...போராட்டம் இனி நடக்காது....கோட்டாதான் இனி தலீவரு...

  • கருத்துக்கள உறவுகள்

 

 

imf.jpg

  • கருத்துக்கள உறவுகள்

IMF உடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு தேவையான அடித்தளம் இடப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளூநர் தெரிவிப்பு 

 
 
IMF உடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு தேவையான அடித்தளம் இடப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளூநர் தெரிவிப்பு
 

சர்வதேச நாணய நிதியத்து (IMF)டன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு தேவையான அடித்தளம் இடப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் புதிய ஆளூநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இதன் அடிப்படையில் முதல் சுற்றுபேச்சுவார்த்தையை நாளை முன்னெடுப்பதற்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு சிறிது காலம் செல்லலாம். பொருளாதாரத்தை மீண்டும் ஸ்திரத்தன்மைக்கு கொண்டுவரும் வரையில் மக்கள் அமைதியான முறையில் செயற்பட வேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டார்;.

பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு சில மாதங்கள் செல்லக்கூடும் 

புதிய ஆளுநர் தனது பதவியை நேற்று (08) பொறுப்பேற்ற பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேலும் தெரிவிக்கையில்,
நாட்டின் பொருளாதாரத்தை சிறந்த முறையில் முன்னெடுப்பதற்கான ஆற்றல் இலங்கை மத்திய வங்கியிடம் உண்டு. எதிர்வரும் சில மாதங்களில் சிறந்த மாற்றங்களை ஏற்படுத்த முடியும். இதற்கு அரசியல் மற்றும் சமூக ஸ்திரத்தன்மை அவசியம் என்றும் தெரிவித்தார்

அரசியல் தலையீடுகளுக்கு அப்பால் தான் சுயாதீனமான முறையில் தமது பதவியில் பணிகளை முன்னெடுக்க உள்ளதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் கூறினார்.

பெரும் தொகையில் நாணயத்தாள்கள் அச்சிட்டப்பட்டதாக சில ஊடகங்களில் வெளியான செய்திகள்

பல் வேறு நிறுவனங்கள் மற்றும் நாட்டின் பல பகுதிகளில் பெரும் தொகையில் நாணயத்தாள்கள் அச்சிட்டப்பட்டதாக சில ஊடகங்களில் வெளியான செய்திகள் தொடர்பிலும் இதன் போது பதிலளித்தார்.

அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச நிறுவனங்கள் ஊடாக மாத்திரம் இவை அச்சிடப்படுகின்றன.வேறு எந்த நிறுவனங்களிலும் இவை அச்சிடப்படுவதில்லை என்று ஆளூநர் பதிலளித்தார்.

பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருக்கும் மக்களுக்கு நாட்டின் தற்போதைய நிலையை வெளிப்படையாக தெரிவிப்பது முதல் பணி என மத்திய வங்கியின் புதிய ஆளுரான கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

மக்களை ஏமாற்ற முடியாது

எந்தவொரு பொருளாதார நெருக்கடியும் இல்லையென்று கூறி மக்களை ஏமாற்ற முடியாது. நாட்டின் பொருளாதாரம் தற்போது மிகுந்த சவால்மிக்கதாக உள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கு  தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும்.

நாட்டின் ஸ்திரத்தன்மையைப் பொறுத்தே பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கான காலம் தீர்மானிக்கப்படும். நாட்டின் கடனை செலுத்துவது பற்றியும் அவர் தெளிவுபடுத்தினார். பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு ஏற்றுமதி பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதே மிகவும் பொருத்தமானது என்றும் புதிய ஆளூநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.

 

 

 
 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.