Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நுளம்புகளால் வியாபாரம்

Featured Replies

நுளம்பு ரீங்காரம் செய்து கொண்டு பறந்து வந்து உடம்பில் ரத்தத்தை சுவைத்து விட்டு பறந்து போகும் வேகம் என்னை பிரமிக்க வைத்திருக்கிறது. ஆனாலும் அது குத்தும் போது ஏற்படும் வலியால் கைகள் தானாக ஒரு அடி கொடுக்கும். அப்படி அடிக்கும் போது சரியாக அடி விழுந்தால் குடித்த ரத்தம், ஏற்கனவே இருந்த ரத்தம் எல்லாம் போய் பாவம் நசுங்கிச் செத்து விடும்.

ஆனாலும் எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது. எதுக்காக இந்த நுளம்புகள் ஒலி ஏற்படுத்துகின்றன எண்டு . இந்த ஒலியால் நாங்கள் உசாராகி விடலாம் அல்லவா? இதுக்கு எனது பாட்டி விளக்கம் சொல்வா, “தட்டினால் போறன். தடவினால் வாறன்” எண்டு நுளம்பு தனது துணைக்குச் சொல்லிக் கொண்டு வரும். அதுதான் அந்த சத்தம். பாட்டி இப்படி சொன்னதற்குப் பிறகு நுளம்பு என் இரத்தம் குடித்தாலும் அதைத் தட்டு வதில்லை. பாவம் அதன் துணை தனித்து விடும் எண்டு தடவியே அனுப்பி விடுவேன்.

நுளம்பு வராமல் தடுப்பதற்கு முன் எச்சரிக்கையாக வேப்பம் கொட்டைப் புகை, வேப்பிலைப் புகை எண்டு புகை மூட்டங்களின் நடுவே மூச்சுத் திணறிய காலங்களும் ஒரு பசுமையான நினைவுகள். இன்று ஜேர்மனியர் தங்கள் நாட்டில் நுளம்புத் தொல்லை எண்டு பதறி பயந்து ஓடும் போது, நாங்கள் அச்சமில்லாமல் நுளம்புகளுடன் போராடி வென்ற பெருமை வந்து சேர்கிறது. நுளம்புடன் போராட பல பொருட்கள் இப்போ ஜேர்மனியில் சந்தைக்கு வந்து விட்டன. நுளம்புகளால் இன்று இங்கு ஒரு வியாபாரம் ஆரம்பித்திருக்கிறது. அந்தப் பெருமையை நுளம்புக்கே தந்து விடுவோம்.

சிறிது நாட்களுக்கு முன்னால் மரங்களில் நூல் கட்டி இறங்கி வந்து மசுக்குட்டி (மயிர்க்கொட்டி) ஜேர்மனியiரை ஒரு பாட்டம் கதற வைத்தது. இன்று நுளம்பாரது வருகை. நாளை தேளா? பாம்பா? எவையானாலும் வருபவை வரட்டும். எங்களது பழையனவற்றை மீட்டிப் போகட்டும்.

Edited by aaravally

ஆனாலும் எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது. எதுக்காக இந்த நுளம்புகள் ஒலி ஏற்படுத்துகின்றன எண்டு . இந்த ஒலியால் நாங்கள் உசாராகி விடலாம் அல்லவா? இதுக்கு எனது பாட்டி விளக்கம் சொல்வா, “தட்டினால் போறன். தடவினால் வாறன்” எண்டு நுளம்பு தனது துணைக்குச் சொல்லிக் கொண்டு வரும். அதுதான் அந்த சத்தம். பாட்டி இப்படி சொன்னதற்குப் பிறகு நுளம்பு என் இரத்தம் குடித்தாலும் அதைத் தட்டு வதில்லை. பாவம் அதன் துணை தனித்து விடும் எண்டு தடவியே அனுப்பி விடுவேன்.

நுளம்பை பற்றி நல்லா ஆராய்ச்சி பண்னி இருக்கிறீங்க ஆரவல்லி அக்கா............அட என்ன ஒரு மனிதாபிமானம் நுளம்பின்ட துணை தணித்துவிடும் என்று தடவி கொடுகிறீங்க............இப்படியே கீப் அப் பண்ணிணா நுளம்பு உங்க இரத்த எல்லாவற்றையும் குடித்து விட்டு போயிடும் அக்கா கவனம்............ :P

அடுத்த முறை என்னத்தை பற்றி ஆராய போறீங்க.......... :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐரோப்பிய நாடுகளில் உவையின் ஆட்டம் கொஞ்ச நாளைக்குதான்.. குளிர் தொடங்க எல்லோரும் பரலோகம் போய்விடுவார்கள். எமது நாட்டில்தான் உவர்களுக்கு அழிவேயில்லை.. :lol:

  • தொடங்கியவர்

இப்படியே கீப் அப் பண்ணிணா நுளம்பு உங்க இரத்த எல்லாவற்றையும் குடித்து விட்டு போயிடும் அக்கா கவனம்............ :P

என் ரத்தத்தைக் குடிச்சு உயிர் வாழ்வதா? சாத்தியமில்லை Jamuna என் ரத்தமும் விசமும் ஏறக்குறைய ஒண்ணுதான்.

  • தொடங்கியவர்

ஐரோப்பிய நாடுகளில் உவையின் ஆட்டம் கொஞ்ச நாளைக்குதான்.. குளிர் தொடங்க எல்லோரும் பரலோகம் போய்விடுவார்கள். எமது நாட்டில்தான் உவர்களுக்கு அழிவேயில்லை.. :D

நீங்க சொல்லுறது சரிதான் Kishaan.ஆனால் குளிர் காலத்திலை குளிர் காத்து வந்து உடம்பெல்லாம் ஊசி போல குத்துமே. .கோடையிலை நுளம்பு குத்துது. மாரியிலை குளிர்காத்து வந்து குத்துது.நினைக்கவே நடுங்குதப்பா

  • கருத்துக்கள உறவுகள்

உங்களைத் தவிர வேறு யாரும் நுளம்புமீது இவளவு காருண்யம் காட்டியதாக எனக்குத் தெரியவில்லை! எதற்கும் ஜமுனானந்த சுவாமி அவர்கள் அகநானூறு, புறஐநூறு எல்லாவற்றையும் புரட்டி உருட்டிப் பார்த்து விளக்கம் தருவார் என நம்புகிறோம். :lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்க சொல்லுறது சரிதான் Kishaan.ஆனால் குளிர் காலத்திலை குளிர் காத்து வந்து உடம்பெல்லாம் ஊசி போல குத்துமே. .கோடையிலை நுளம்பு குத்துது. மாரியிலை குளிர்காத்து வந்து குத்துது.நினைக்கவே நடுங்குதப்பா

அதெண்டால் உண்மைதான்.. அங்க நுளம்புகளின் குத்துகளையும் போதாததுக்கு சிங்களவனின் குத்துகளையும் வாங்குறதோடை ஒப்பிடக்குள்ள இது பரவாயில்லைதானே.. இல்லையா?

என் ரத்தத்தைக் குடிச்சு உயிர் வாழ்வதா? சாத்தியமில்லை Jamuna என் ரத்தமும் விசமும் ஏறக்குறைய ஒண்ணுதான்.

அது தானே பார்தேன்..........அப்படியாவது நுளம்பு அழியட்டும் என்ற உங்கள் தன்னலமற்ற சேவை என்னை வியக்க வைக்குது........... :P

உங்களைத் தவிர வேறு யாரும் நுளம்புமீது இவளவு காருண்யம் காட்டியதாக எனக்குத் தெரியவில்லை! எதற்கும் ஜமுனானந்த சுவாமி அவர்கள் அகநானூறு, புறஐநூறு எல்லாவற்றையும் புரட்டி உருட்டிப் பார்த்து விளக்கம் தருவார் என நம்புகிறோம். :lol::lol:

இல்லை பெரியப்பா அது தானே அந்த அக்கா சொல்லிட்டா தன்ட இரத்தம் விசம் மாதிரி என்று பிறகு குடிகிற நுளம்பின் கதி யோசிக்கவே முடியாது................அந்த அக்காவின் சேவை பாராட்டதக்க விடயம் அத்தோட எனக்கு நுளம்பு கடித்தாலும் பரவாயில்லை........அது எழுப்பும் சத்தத்தை கேட்டா சினம் தான் வரும்........... :angry: .அகநானூறு,புறநானூறு என்றால் என்ன பெரியப்பா................ :P

  • தொடங்கியவர்

எதற்கும் ஜமுனானந்த சுவாமி அவர்கள் அகநானூறு, புறஐநூறு எல்லாவற்றையும் புரட்டி உருட்டிப் பார்த்து விளக்கம் தருவார் என நம்புகிறோம். :rolleyes::rolleyes:

சுவாமி சமீபத்தில் தரிசனம் தருவாரா?

சுவாமி சமீபத்தில் தரிசனம் தருவாரா?

சுவாமி ஞாயிற்றுகிழமை வருவார் ஏதாவது கேள்வி கேட்க வேண்டும் என்றா நான் அவரிட்ட கேட்கிறேன்.............சுவி பெரியப்பா உது எப்படி இருக்கு............. :rolleyes: :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.