புதிய அமைச்சரவை.. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில், இன்று காலை பதவியேற்றுள்ளது.
By
தமிழ் சிறி
in ஊர்ப் புதினம்
-
Tell a friend
-
Topics
-
0
தமிழ் சிறி · தொடங்கப்பட்டது
-
4
கிருபன் · தொடங்கப்பட்டது
-
Posts
-
By தமிழ் சிறி · Posted
போன கிழமை தானே... மாவை, ரணிலுக்கு ஆதரவு தெரிவித்து இருந்தார். அதற்குள் மனம் மாறி... தமிழ் பொது வேட்பாளர் அறியநேத்திரனுக்கு ஆதரவு தெரிவிப்பது வரவேற்கக் கூடிய விடயம். 💪 ஆக... இப்போ, சுமந்திரன் தனியத் தான் ... சஜித்துடன் பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றார் போலுள்ளது. 😂 தமிழரசு கட்சியில் இருந்து.... வேறு ஒருவரும் சுமந்திரனுடன், சஜித்துக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் பிரச்சாரம் செய்யப் போகாமல் இருப்பதை பார்க்க... இது சுமந்திரனின் தான்தோன்றித்தனமான முட்டாள் தனமான செயலாக உள்ளதை மக்களே அறிந்து கொள்வார்கள். -
By தமிழ் சிறி · பதியப்பட்டது
ஒன்றிணைந்த நாட்டிற்குள் அதிகாரப் பகிர்வு – யாழில் உறுதியளித்தாா் சஜித்! ஒன்றிணைந்த நாட்டிற்குள் தமிழர்களுக்கான அதிகார பகிர்வினை குறுகிய காலத்திற்குள் மாகாண சபை ஊடக வழங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச யாழில் மீண்டும் வாக்குறுதி வழங்கியுள்ளார். அண்மைக்காலமாக இலங்கை தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பாட்டிருந்த முரண்பாடுகள் மேலும் தீவிரமடைந்து வருகின்ற நிலையில் நேற்றைய கூட்டத்தில் முதன்முறையாக எம்.ஏ.சுமந்திரன் சஜித்தின் பிரசார மேடையில் பிரசன்னமாகியிருந்தார். ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் பரப்புரை கூட்டம் நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இதில் இலங்கை தமிழரசுக் கட்சியின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் உத்தியோக பூர்வமாக தேர்தல் மேடையில் ஏறி ஆதரவினை உறுதிப்படுத்தியிருந்தார். இலங்கை தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்களான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், மற்றும் வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் ஆகியோர் மேடை ஏறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. சஜித் பிரேமதாச கலந்து கொண்ட தேர்தல் பரப்புரை கூட்டமானது நேற்று யாழ்ப்பாணம் – மானிப்பாய் செல்லமுத்து விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன், நாடாளுமன்ற உறுப்பினர்களான இராதா கிருஸ்ணன், பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், ஐக்கிய மக்கள் சக்தியின் வட மாகாண பிரதான அமைப்பாளர் உமாச்சந்திரா பிரகாஷ், ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்டத்தில் உள்ள தொகுதிகளின் அமைப்பாளர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது எம்.ஏ.சுமந்திரனால் வெளியிடப்பட்ட சுமந்திரம் பத்திரிகை எதிர்க்கட்சித் தலைவரிடம் நேற்று மேடையில் வைத்து கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கருத்துத் தொிவித்த சஜித் பிரேமதாச, ஒன்றிணைந்த நாட்டிற்குள் அதிகார பகிர்வுக்காக குறுகிய காலத்திற்குள் மாகாண சபை தேர்தலை நடாத்துவோம். மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை மத்திய அரசு எடுத்துக்கொள்ளக் கூடாது. அத்தோடு வடகிழக்கு மக்களுக்காக நன்கொடையாளர்கள் மாநாட்டை நடத்தவுள்ளோம். வடகிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக அர்ப்பணிப்புடன் செயல்படுவோம். மதுபான சாலைக்கான அனுமதி பத்திரத்தை பெற்றுக் கொண்டவர்கள் எம்மிடம் இல்லை. விசேட வரங்களையும் வரப்பிரசாதங்களையும் பெற்றுக் கொண்டவர்கள் எம்மோடு இல்லை. இன, மத, குல, கட்சி பேதங்களின்றி நாட்டை கட்டியெழுப்புவதற்காக இணைந்து கொண்டவர்களே எம்மோடு இருக்கின்றார்கள் வடகிழக்கு பிரதேசத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்த மக்களுக்கு தீர்வினை பெற்றுக் கொடுப்போம். நல்லிணக்க செயற்பாடுகளின் ஊடாகவே பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வர முடியும். தொடர்ந்தும் அலறிக் கொண்டிருக்கின்ற பிரச்சினையை தீர்க்காமல் வைத்திருக்க முடியாது. அது நாட்டின் ஐக்கியத்தை பாதிக்கின்றமையால் நல்லிணக்கத்தை மையப்படுத்தி இளைஞர்களை வலுப்படுத்தும் வேலை திட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம்” என ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச மேலும் தொிவித்தாா். https://athavannews.com/2024/1399540 -
By தமிழ் சிறி · பதியப்பட்டது
ஒரே நாளில் 1, 000 தடவை அழைப்பை ஏற்படுத்திய காதலிக்கு சிறை! பிரித்தானியாவில், முன்னாள் காதலனைத் தொடர்ச்சியாகத் தொல்லை செய்து வந்த பெண்ணுக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சோபி கால்வில் [Sophie Colwill] என்ற 30 வயதுடைய பெண்ணை டேவிட் பாக்லீரோ [David Pagliero] என்ற நபர் காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், அண்மையில் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட மனக் கசப்பு காரணமாகக் குறித்த பெண் மன வருத்தத்தில் இருந்துள்ளார். காதலனை இழக்க விரும்பாத அவர், டேவிட்டிற்கு 1,000 முறை தொலைபேசியில் அழைப்பை ஏற்படுத்தியுள்ளார். ஆனால் டேவிட் அவருடைய அழைப்பைத் தவிர்த்துள்ளார். மேலும் டேவிட்டை கண்காணித்து வந்த அவர், டேவிட்டின் வீட்டிற்குள்ளும் அத்துமீறி நுழைந்துள்ளார். சோபியின் இந்த செயற்பாடுகளால் தான் பாதுகாப்பின்றி உணர்வதாகவும் தனக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் டேவிட் காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார். இந்நிலையில் சோபிக்கு 1 வருடச் சிறைத் தண்டனை விதித்து பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. https://athavannews.com/2024/1399493 -
By தமிழ் சிறி · Posted
ட்ரம்ப் மீது மீண்டும் துப்பாக்கிச் சூடு! அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி டொனாலட் ட்ரம்ப் மீது, மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள நிலையில், குடியரசுக் கட்சி சார்பாக வேட்பாளராக களமிறங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், நேற்று, புளோரிடா மாநிலம், மேற்கு பாம் பீச் பகுதியில் அமைந்துள்ள டிரம்ப் சர்வதேச கோல்ப் கிளப்புக்கு சென்று, கோல்ப் விளையாடி கொண்டு இருந்துள்ளார். இதன்போது அவரை இலக்குவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. எனினும், இதனால் அவருக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தையடுத்து சந்தேக நபரான 53 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் அவரிடமிருந்து ஏ.கே. 47 துப்பாக்கி, ஒரு கோ ப்ரோ கமெரா உள்ளிட்ட சில பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பாம் பீச் பொலிஸார் தெரிவித்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் மீதான கொலை முயற்சி என சந்தேகிக்கப்படும் இந்த துப்பாக்கி சூடு குறித்து மத்திய சட்ட அமலாக்கப் பிரிவினர் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரிடம் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் ட்ரம்ப் மற்றும் அவரைச் சூழவுள்ளனர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு சட்ட அமலாக்கப் பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். ஏற்கனவே, கடந்த ஜுலை மாதம் பென்சில்வேனியாவின் பட்லர் பகுதியில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் பரப்புரையில் பங்கேற்றிருந்த ட்ரம்ப் மீது, துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதன்போது துப்பாக்கி குண்டு அவருடைய வலது காதின் மேல் பகுதியை துளைத்து சென்றதோடு, இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அங்கு ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையிலேயே மீண்டும் ட்ரம்ப்பை இலக்குவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இவ்வாறான சம்பவங்கள் அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர்களின் பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பாக கேள்வியை எழுப்புவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. https://athavannews.com/2024/1399550
-
Our picks
-
"சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"
kandiah Thillaivinayagalingam posted a topic in மெய்யெனப் படுவது,
"சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"
தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!
“ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
-
- 1 reply
Picked By
மோகன், -
-
வேதத்தில் சாதி இருக்கிறதா?
narathar posted a topic in மெய்யெனப் படுவது,
இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.
ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.-
- 1 reply
Picked By
மோகன், -
-
மனவலி யாத்திரை.....!
shanthy posted a topic in கதை கதையாம்,
மனவலி யாத்திரை.....!
(19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)
அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.-
- 1 reply
Picked By
மோகன், -
-
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை
mooki posted a topic in சமூகச் சாளரம்,
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்
Friday, 16 February 2007
காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.-
- 20 replies
Picked By
மோகன், -
-
ஒரு சித்தர் பாடல்
பண்டிதர் posted a topic in மெய்யெனப் படுவது,
எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)
நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?
பொருள்:
சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.-
- 7 replies
Picked By
மோகன், -
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.