Jump to content

புதிய அமைச்சரவை.. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில், இன்று காலை பதவியேற்றுள்ளது. 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Breaking News GIFs | Tenor

புதிய அமைச்சரவை.. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில், இன்று காலை பதவியேற்றுள்ளது. 

17 பேர் கொண்ட புதிய அமைச்சரவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று காலை பதவியேற்றுள்ளது.

இளைஞர்கள் மற்றும் மூத்த உறுப்பினர்கள் அடங்கிய கலப்பு அமைச்சரவையில் டக்ளஸ் தேவானந்தாவிற்கு மீண்டும் மீன்பிடி அமைச்சு வழங்கப்பட்டுள்ளது.

சமல் ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ மற்றும் ஷசீந்திர ராஜபக்ஷ ஆகியோருக்கு புதிய அமைச்சரவையில் நியமனங்கள் வழங்கப்படவில்லை.

சரத் வீரசேகர, ஜோன்ஸ்டன், டலஸ், பந்துல, காமினி லொக்குகே, மஹிந்தானந்த, ரோஹித உள்ளிட்டோருக்கு புதிய அமைச்சரவையில் நியமனம் வழங்கடவில்லை

இருப்பினும் மிகவும் சர்ச்சைக்குரிய உறுப்பினரான காஞ்சன விஜேசேகரவிற்கு மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை முஸ்லீம் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் உறுப்பினரான நாசீர் அஹமட் சுற்றாடல் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

  1. தினேஷ் குணவர்தன – பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி
  2. ரமேஷ் பத்திரன – கல்வி மற்றும் பெருந்தோட்டம்
  3. நாசீர் அஹமட் – சுற்றாடல்
  4. டக்ளஸ் தேவானந்தா – மீன்பிடி
  5. கனக ஹேரத் – நெடுஞ்சாலை
  6. நாலக கொடஹேவா – ஊடகத்துறை
  7. காஞ்சனா விஜேசேகர – மின்சாரம் மற்றும் எரிசக்தி
  8. சன்ன ஜயசுமண – சுகாதாரம்
  9. பிரசன்ன ரணதுங்க – பொது பாதுகாப்பு, சுற்றுலா
  10. திலும் அமுனுகம – போக்குவரத்து, கைத்தொழில்
  11. விதுர விக்கிரமநாயக்க – தொழிற்துறை
  12. ஜனக வக்கும்புர – விவசாயம் மற்றும் நீர்ப்பாசனம்
  13. ஷெஹான் சேமசிங்க – வர்த்தகம் மற்றும் சமுர்த்தி
  14. மொஹான் பிரியதர்ஷன டி சில்வா – நீர் வழங்கல்
  15. விமலவீர திஸாநாயக்க – வனவிலங்கு மற்றும் வன வள பாதுகாப்பு
  16. தேனுக விதானகமகே -விளையாட்டு, இளைஞர் விவகாரம்
  17. பிரமித பண்டார தென்னகோன் – துறைமுகங்கள் மற்றும் கப்பல்

https://athavannews.com/2022/1277083

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னரான முதலாவது அமைச்சரவைக் கூட்டம் நாளை!

புதிய அமைச்சரவையில் சீனியர்கள் இல்லை… ஜோன்ஸ்டன், டலஸ், பந்துல, லொக்குகே, மஹிந்தானந்த, ரோஹித அவுட் …!

சரத் வீரசேகர, ஜோன்ஸ்டன், டலஸ், பந்துல, காமினி லொக்குகே, மஹிந்தானந்த, ரோஹித, ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் புதிய அமைச்சரவையில் அங்கம் வகிக்க மாட்டார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த முக்கிய நபர்கள் இல்லாத நிலையில், பொதுமக்களை சமாதானப்படுத்தும் முயற்சியில், பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு, அறிமுகமில்லாத சில முகங்கள் அமைச்சர் பதவிகளை பெற உள்ளனர்.

நேற்றைய தினம் முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும, முன்னாள் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன மற்றும் முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவும் அமைச்சு பதவியை பெற்றுக்கொள்ளப்போவதில்லை என அறிவித்துள்ளனர்.

இராஜாங்க அமைச்சர்களின் தற்போதைய பதவிகள் அப்படியே இருக்கும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ள அதேவேளை ஜீவன் தொண்டமான் எந்தவொரு அமைச்சரவை பதவிகளையும் பொறுப்பேற்கப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை ஏற்கனவே இராஜினாமா செய்துள்ள நிலையில், 15க்கும் குறையாத இளம், படித்த, திறமையான அமைச்சர்களைக் கொண்ட புதிய அமைச்சரவையை நியமிக்குமாறும் ஸ்ரீலங்கா பொதுஜன பெறமுண சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

அதன்படி, நேற்று நடைபெற்ற கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் குழுவும் குறித்த யோசனையை ஏற்றுக்கொண்ட அதேவேளை அரசாங்கத்தின் திட்டத்திற்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாகவும் உறுதியளித்துள்ளனர்.

https://athavannews.com/2022/1277052

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை நெருக்கடி: ராஜபக்ஷ குடும்பம் இல்லாத புதிய அமைச்சரவை பிரச்னையை தீர்க்குமா?

14 நிமிடங்களுக்கு முன்னர்
 

இலங்கை - புதிய அமைச்சரவை பதவியேற்பு

பட மூலாதாரம்,PRESIDENT MEDIA DIVISION

ராஜபக்ஷ குடும்பத்தினர் இல்லாத புதிய அமைச்சரவை இன்று இலங்கையில் பதவியேற்றுள்ளது. ராஜபக்ஷ குடும்பத்திற்கு எதிராக எழுந்துள்ள எதிர்ப்புகளை சமாளிக்கும் வகையிலேயே இந்த அமைச்சர்கள் நியமனம் இடம்பெற்றுள்ளது.

கொழும்பு - கோட்டை பகுதியிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் 17 புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர்.

இதன்படி, பொது நிர்வாகம், உள் விவகாரங்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சராக தினேஷ் குணவர்தனவும், கடற்றொழில் அமைச்சராக டக்ளஸ் தேவானந்தாவும் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர்.

கல்வி மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சராக ரமேஷ் பத்திரண பதவிப் பிரமாணம் செய்துகொண்டதுடன், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராக பிரசன்ன ரணதுங்க பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். இதற்கிடையே, இந்த புதிய அமைச்சரவை நாட்டின் பிரச்னையை தீர்க்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

போக்குவரத்து மற்றும் கைத்தொழில் அமைச்சராக திலும் அமுனுகமவும், நெடுஞ்சாலைகள் அமைச்சராக கனக ஹேரத்தும் பதவி பிரமாணம் செய்துகொண்டனர்.

அத்துடன், தொழில் அமைச்சராக விதுர விக்ரமநாயக்க பதவி பிரமாணம் செய்துகொண்டதுடன், விவசாயம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சராக ஜனக்க வக்கும்புர பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

வர்த்தகம் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி அமைச்சராக ஷெஹான் சேமசிங்கவும், நீர் வழங்கல் அமைச்சராக மொஹான் பிரியதர்ஷன டி சில்வாவும் பதவி பிரமாணம் செய்துகொண்டனர்.

 

இலங்கை - புதிய அமைச்சரவை பதவியேற்பு

பட மூலாதாரம்,PRESIDENT MEDIA DIVISION

விமலவீர திஸாநாயக்க வனவிலங்குகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்ட அதேவேளை, எரிசக்தி மற்றும் வலுசக்தி அமைச்சராக காஞ்சன விஜேசேகர பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சராக தேனுக விதானகமனே பதவியேற்றதுடன், ஊடகத்துறை அமைச்சராக நாலக்க கொடஹேவா பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

சுகாதார அமைச்சராக பேராசிரியர் ஷன்ன ஜயசுமன்ன பதவியேற்றதுடன், சுற்றுச்சூழல் அமைச்சராக நஷிர் அஹமட் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சராக பிரமித்த பண்டார தென்னக்கோன் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

 

இலங்கை - புதிய அமைச்சரவை பதவியேற்பு

பட மூலாதாரம்,PRESIDENT MEDIA DIVISION

துறை சாராதவர்கள்

மக்கள் எதிர்ப்புக்கு மத்தியில், இலங்கையில் இன்று நியமிக்கப்பட்ட அமைச்சரவையானது, சர்வதேசத்தையும், கடன் வழங்கும் நிறுவனங்களையும் சமாளிக்கும் வகையிலேயே நியமிக்கப்பட்டுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கையில் நிலையான அமைச்சரவை ஒன்று காணப்படுகின்றது என்பதை வெளிப்படுத்தும் வகையிலேயே இந்த அமைச்சரவை நியமிக்கப்பட்டுள்ளது.

இன்று நியமிக்கப்பட்ட 17 அமைச்சர்களில் ஒரு சிலரே துறைசார்ந்தவர்கள் என்பதுடன், ஏனைய பெரும்பாலானோர் துறை சாராதவர்கள் என கூறப்படுகிறது.

அதேவேளை, ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த எவரும் இந்த புதிய அமைச்சரவையில் இடம்பிடிக்கவில்லை.

 

கோட்டாபய ராஜபக்ஷ

பட மூலாதாரம்,PRESIDENT MEDIA DIVISION

நாமல் ராஜபக்ஷ, சமல் ராஜபக்ஷ, ஷசிந்திர ராஜபக்ஷ, பஷில் ராஜபக்ஷ ஆகியோர் அமைச்சரவையிலிருந்து முழுமையாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ராஜபக்ஷ குடும்பத்திற்கு எதிராக எழுந்துள்ள எதிர்ப்புகளை சமாளிக்கும் வகையிலேயே இந்த அமைச்சர் நியமனம் இடம்பெற்றுள்ளது.

ராஜபக்ஷ குடும்பத்தில் தற்போது அமைச்சர்களாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் மாத்திரமே பதவி வகித்து வருகின்றனர்.

எவ்வாறாயினும், புதிய அமைச்சரவையானது, இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்கு எந்தவகையிலும் தீர்வை பெற்றுக்கொடுக்காது என அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

https://www.bbc.com/tamil/sri-lanka-61139679

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புதிய இராஜாங்க அமைச்சர்கள் இன்று மாலையில் பதவிப்பிரமாணம்?

புதிய இராஜாங்க அமைச்சர்கள் இன்று மாலையில் பதவிப்பிரமாணம்?

ஜனாதிபதி மாளிகையில் இன்று (திங்கட்கிழமை) மாலை இரண்டு புதிய இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்கவுள்ளதாக அறியமுடிகின்றது.

இதுவரை எந்த அமைச்சு பதவியையும் வகிக்காத புதியவர்கள் இந்த பதவிகளை ஏற்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

17 பேர் கொண்ட புதிய அமைச்சரவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று காலை பதவியேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1277153

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தெரிய வரும் விசயம் என்னவெண்டால், கோத்தா, ராஜினாமா செய்தால், பிரதமர் மகிந்தா ஜனாதிபதி ஆக வேண்டும் என்பதே சட்டம்.

ஆனால், அவர் மூன்றாவது முறையாக வர முடியாது என்பதும் சட்டம்.

ஆகவே, மகிந்தா இடத்துக்கு, பிரதமராக நாமல் வந்தபின்னர், கோத்தா ராஜினாமா செய்தால், நாமல் ஜனாதிபதி ஆகலாம் என்று, திருமதி மகிந்தா நோனா ஐடியா. அதாவது இளைஞர் கையில் நாடு போகவேண்டும் என்பதே போராட்ட காரர் கோரிக்கை. ஆகவே நாமல் ஜனாதிபதி ஆவதே சரியாக இருக்கும் என்பது, அம்மணி முடிவு.

இதுக்கு கோத்தா ஒத்துக்கொள்ளவில்லை. அதெல்லாம் பிறகு பார்க்கலாம். இப்போது செய்ய கூடாது என்று சொல்ல, மகிந்தவின், வீட்டுக்கார அம்மாவுக்கு பெரும் கொதி வந்துட்டுதாம்.  அதனால், மகிந்தா இன்று அமைச்சரவை நியமனத்துக்கு போகவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புதிய இராஜாங்க அமைச்சர்கள் இன்று மாலையில் பதவிப்பிரமாணம்?

21 இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்பு : ஜி.எல்.பீரிஸ்க்கு பாதுகாப்பு அமைச்சு

21 இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் இன்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

ஏற்கனவே வெளிவிவகார அமைச்சு பதவியை கொண்டுள்ள ஜி.எல்.பீரிஸ் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
  1. ஜி.எல்.பீரிஸ் – பாதுகாப்பு
  2. ரோஹன திஸாநாயக்க – உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள்
  3. அருந்திக பெர்னாண்டோ- பெருந்தோட்டம்
  4. லொஹான் ரத்வத்த – நகர அபிவிருத்தி
  5. தாரக பாலசூரிய – வெளிநாட்டு விவகாரங்கள்
  6. இந்திக்க அனுருத்த – வீடமைப்பு
  7. சனத் நிஷாந்த – நீர் வழங்கல்
  8. சிறிபால கம்லத் – மஹாவலி
  9. அனுராதா ஜயரத்ன – நீர்ப்பாசனம்
  10. சிசிர ஜெயக்கொடி – சுதேச மருத்துவம்
  11. பிரசன்ன ரணவீர – தொழில்துறை
  12. டி.வி.சானக – சுற்றுலா, மீன்பிடி
  13. டிபி ஹேரத் – கால்நடை
  14. அரவிந்த் குமார் – பொருந்தோட்டத்துறை
  15. கீதா குமாரசிங்க – கலாச்சார, கலைநிகழ்ச்சிகள்
  16. குணபால ரத்னசேகர – கூட்டுறவு, நுகர்வோர் பாதுகாப்பு
  17. கபில நுவான் – சிறு பயிர்த் தோட்டம்
  18. கயாஷான் நவனந்த – சுகாதாரம்
  19. சுரேன் ராகவன் – கல்வி
  20. காதர் மஸ்தான் – கிராமிய பொருளாதார அபிவிருத்தி
  21. அசோக பிரியந்த – வர்த்தகம்

https://athavannews.com/2022/1277182

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

தெரிய வரும் விசயம் என்னவெண்டால், கோத்தா, ராஜினாமா செய்தால், பிரதமர் மகிந்தா ஜனாதிபதி ஆக வேண்டும் என்பதே சட்டம்.

ஆனால், அவர் மூன்றாவது முறையாக வர முடியாது என்பதும் சட்டம்.

ஆகவே, மகிந்தா இடத்துக்கு, பிரதமராக நாமல் வந்தபின்னர், கோத்தா ராஜினாமா செய்தால், நாமல் ஜனாதிபதி ஆகலாம் என்று, திருமதி மகிந்தா நோனா ஐடியா. அதாவது இளைஞர் கையில் நாடு போகவேண்டும் என்பதே போராட்ட காரர் கோரிக்கை. ஆகவே நாமல் ஜனாதிபதி ஆவதே சரியாக இருக்கும் என்பது, அம்மணி முடிவு.

இதுக்கு கோத்தா ஒத்துக்கொள்ளவில்லை. அதெல்லாம் பிறகு பார்க்கலாம். இப்போது செய்ய கூடாது என்று சொல்ல, மகிந்தவின், வீட்டுக்கார அம்மாவுக்கு பெரும் கொதி வந்துட்டுதாம்.  அதனால், மகிந்தா இன்று அமைச்சரவை நியமனத்துக்கு போகவில்லை. 

நாமல் ராஜபக்ச ஜனாதிபதியாக வந்தால்...
உலகின்  முதலாவது... இளைய ஜனாதிபதி என்ற பெயரை 
ஸ்ரீலங்கா பெற்றுக்  கொள்ளும். 

ஏற்கெனவே... உலகின் முதலாவது பெண்  பிரதமர் 
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா  என்ற சாதனையுடன்... 
நாமல் ராஜபக்சவும்... ஜனாதிபதியாக  சேர்ந்து கொள்வார். 😂

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • R ரணில், A அனுர, S சஜித்.
    • போன கிழமை தானே... மாவை, ரணிலுக்கு  ஆதரவு தெரிவித்து இருந்தார். அதற்குள் மனம் மாறி... தமிழ் பொது வேட்பாளர் அறியநேத்திரனுக்கு ஆதரவு தெரிவிப்பது வரவேற்கக் கூடிய விடயம். 💪 ஆக... இப்போ, சுமந்திரன் தனியத் தான் ... சஜித்துடன் பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றார் போலுள்ளது. 😂 தமிழரசு கட்சியில் இருந்து.... வேறு ஒருவரும் சுமந்திரனுடன், சஜித்துக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் பிரச்சாரம் செய்யப் போகாமல் இருப்பதை பார்க்க... இது சுமந்திரனின் தான்தோன்றித்தனமான முட்டாள் தனமான செயலாக உள்ளதை மக்களே அறிந்து கொள்வார்கள்.
    • ஒன்றிணைந்த நாட்டிற்குள் அதிகாரப் பகிர்வு – யாழில் உறுதியளித்தாா் சஜித்! ஒன்றிணைந்த நாட்டிற்குள் தமிழர்களுக்கான அதிகார பகிர்வினை குறுகிய காலத்திற்குள் மாகாண சபை ஊடக வழங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச யாழில் மீண்டும் வாக்குறுதி வழங்கியுள்ளார். அண்மைக்காலமாக இலங்கை தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பாட்டிருந்த முரண்பாடுகள் மேலும் தீவிரமடைந்து வருகின்ற நிலையில் நேற்றைய கூட்டத்தில் முதன்முறையாக எம்.ஏ.சுமந்திரன் சஜித்தின் பிரசார மேடையில் பிரசன்னமாகியிருந்தார். ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் பரப்புரை கூட்டம் நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இதில் இலங்கை தமிழரசுக் கட்சியின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் உத்தியோக பூர்வமாக தேர்தல் மேடையில் ஏறி ஆதரவினை உறுதிப்படுத்தியிருந்தார். இலங்கை தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்களான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், மற்றும் வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் ஆகியோர் மேடை ஏறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. சஜித் பிரேமதாச கலந்து கொண்ட தேர்தல் பரப்புரை கூட்டமானது நேற்று யாழ்ப்பாணம் – மானிப்பாய் செல்லமுத்து விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன், நாடாளுமன்ற உறுப்பினர்களான இராதா கிருஸ்ணன், பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், ஐக்கிய மக்கள் சக்தியின் வட மாகாண பிரதான அமைப்பாளர் உமாச்சந்திரா பிரகாஷ், ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்டத்தில் உள்ள தொகுதிகளின் அமைப்பாளர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது எம்.ஏ.சுமந்திரனால் வெளியிடப்பட்ட சுமந்திரம் பத்திரிகை எதிர்க்கட்சித் தலைவரிடம் நேற்று மேடையில் வைத்து கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கருத்துத் தொிவித்த சஜித் பிரேமதாச, ஒன்றிணைந்த நாட்டிற்குள் அதிகார பகிர்வுக்காக குறுகிய காலத்திற்குள் மாகாண சபை தேர்தலை நடாத்துவோம். மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை மத்திய அரசு எடுத்துக்கொள்ளக் கூடாது. அத்தோடு வடகிழக்கு மக்களுக்காக நன்கொடையாளர்கள் மாநாட்டை நடத்தவுள்ளோம். வடகிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக அர்ப்பணிப்புடன் செயல்படுவோம். மதுபான சாலைக்கான அனுமதி பத்திரத்தை பெற்றுக் கொண்டவர்கள் எம்மிடம் இல்லை. விசேட வரங்களையும் வரப்பிரசாதங்களையும் பெற்றுக் கொண்டவர்கள் எம்மோடு இல்லை. இன, மத, குல, கட்சி பேதங்களின்றி நாட்டை கட்டியெழுப்புவதற்காக இணைந்து கொண்டவர்களே எம்மோடு இருக்கின்றார்கள் வடகிழக்கு பிரதேசத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்த மக்களுக்கு தீர்வினை பெற்றுக் கொடுப்போம். நல்லிணக்க செயற்பாடுகளின் ஊடாகவே பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வர முடியும். தொடர்ந்தும் அலறிக் கொண்டிருக்கின்ற பிரச்சினையை தீர்க்காமல் வைத்திருக்க முடியாது. அது நாட்டின் ஐக்கியத்தை பாதிக்கின்றமையால் நல்லிணக்கத்தை மையப்படுத்தி இளைஞர்களை வலுப்படுத்தும் வேலை திட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம்” என ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச மேலும் தொிவித்தாா். https://athavannews.com/2024/1399540
    • ஒரே நாளில் 1, 000 தடவை அழைப்பை ஏற்படுத்திய காதலிக்கு சிறை! பிரித்தானியாவில், முன்னாள் காதலனைத் தொடர்ச்சியாகத் தொல்லை செய்து வந்த பெண்ணுக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சோபி கால்வில் [Sophie Colwill] என்ற 30 வயதுடைய பெண்ணை டேவிட் பாக்லீரோ [David Pagliero] என்ற நபர் காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், அண்மையில் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட மனக் கசப்பு காரணமாகக் குறித்த பெண் மன வருத்தத்தில் இருந்துள்ளார்.  காதலனை இழக்க விரும்பாத அவர், டேவிட்டிற்கு 1,000 முறை தொலைபேசியில் அழைப்பை ஏற்படுத்தியுள்ளார். ஆனால் டேவிட் அவருடைய  அழைப்பைத் தவிர்த்துள்ளார். மேலும் டேவிட்டை கண்காணித்து வந்த அவர், டேவிட்டின் வீட்டிற்குள்ளும் அத்துமீறி நுழைந்துள்ளார். சோபியின் இந்த செயற்பாடுகளால் தான் பாதுகாப்பின்றி உணர்வதாகவும் தனக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் டேவிட் காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார். இந்நிலையில் சோபிக்கு 1 வருடச் சிறைத் தண்டனை விதித்து பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. https://athavannews.com/2024/1399493
    • ட்ரம்ப் மீது மீண்டும் துப்பாக்கிச் சூடு! அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி டொனாலட் ட்ரம்ப் மீது, மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள நிலையில், குடியரசுக் கட்சி சார்பாக வேட்பாளராக களமிறங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், நேற்று, புளோரிடா மாநிலம், மேற்கு பாம் பீச் பகுதியில் அமைந்துள்ள டிரம்ப் சர்வதேச கோல்ப் கிளப்புக்கு சென்று, கோல்ப் விளையாடி கொண்டு இருந்துள்ளார். இதன்போது அவரை இலக்குவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. எனினும், இதனால் அவருக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தையடுத்து சந்தேக நபரான 53 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் அவரிடமிருந்து ஏ.கே. 47 துப்பாக்கி, ஒரு கோ ப்ரோ கமெரா உள்ளிட்ட சில பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பாம் பீச் பொலிஸார் தெரிவித்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதி  டிரம்ப் மீதான கொலை முயற்சி என சந்தேகிக்கப்படும் இந்த துப்பாக்கி சூடு குறித்து மத்திய சட்ட அமலாக்கப் பிரிவினர் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரிடம் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் ட்ரம்ப் மற்றும் அவரைச் சூழவுள்ளனர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு சட்ட அமலாக்கப் பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். ஏற்கனவே, கடந்த ஜுலை மாதம் பென்சில்வேனியாவின் பட்லர் பகுதியில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் பரப்புரையில் பங்கேற்றிருந்த ட்ரம்ப் மீது, துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதன்போது துப்பாக்கி குண்டு அவருடைய வலது காதின் மேல் பகுதியை துளைத்து சென்றதோடு, இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அங்கு ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையிலேயே மீண்டும் ட்ரம்ப்பை இலக்குவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இவ்வாறான சம்பவங்கள் அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர்களின் பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பாக கேள்வியை எழுப்புவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. https://athavannews.com/2024/1399550
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.