Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உக்ரைன்.... வெள்ளைக் கொடியை, ஏற்றுவதன் மூலம்.... சண்டை நிறுத்தத்தை, தொடக்கிவைக்க வேண்டும்: ரஷ்யா!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரைன் வெள்ளைக் கொடியை ஏற்றுவதன் மூலம் சண்டை நிறுத்தத்தை தொடக்கிவைக்க வேண்டும்: ரஷ்யா!

உக்ரைன்.... வெள்ளைக் கொடியை, ஏற்றுவதன் மூலம்.... சண்டை நிறுத்தத்தை, தொடக்கிவைக்க வேண்டும்: ரஷ்யா!

உக்ரைனின் மரியுபோல் நகரில் தங்களால் முற்றுகையிடப்பட்டுள்ள, அஸோவ்ஸ்டல் இரும்பு ஆலையில் பதுங்கியுள்ள உக்ரைன் படையினார், வெள்ளைக் கொடியை ஏற்றுவதன் மூலம் சண்டை நிறுத்தத்தை தொடக்கிவைக்க வேண்டும் என ரஷ்யா கூறியுள்ளது.

ஆலையிலிருந்து பொதுமக்கள் வெளியேறுவதற்காக சண்டை நிறுத்தம் மேற்கொள்ளத் தயாராக இருப்பதாக கூறியுள்ள ரஷ்யா, இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளது.

இதுகுறித்து ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சக தேசியக் கட்டுப்பாட்டு மையத்தின் தலைவர் மிகயீல் மிஸின்ட்ஸெவ் கூறுகையில்,
‘முற்றுகையிடப்பட்டுள்ள அஸோவ்ஸ்டல் இரும்பு ஆலையைச் சுற்றிலும் சண்டை நிறுத்தம் மேற்கொள்ள தயாராக இருக்கிறோம். அந்த ஆலைக்குள் பதுங்கியுள்ளதாகக் கூறப்படும் பொதுமக்கள் வெளியேறுவதற்கு வசதியாக இந்த சண்டை நிறுத்ததை நாங்கள் மேற்கொள்வோம்.

ஆனால், அந்த ஆலையில் இருக்கும் உக்ரைன் படையினர் வெள்ளைக் கொடியை ஏற்றினால்தான் சண்டை நிறுத்தம் தொடங்கும். அஸோவ்ஸ்டல் ஆலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் எங்கள் பார்வைக்குத் தெரியும்படி எப்போது உக்ரைன் படையினர் வெள்ளைக் கொடி ஏற்றுகிறார்களோ, அப்போதிலிருந்து சண்டை நிறுத்தம் தொடங்கிவிடும்.

அதன்பிறகு உள்ளே இருப்பவர்கள் வெளியேறுவதற்கு வசதியாக, ரஷ்ய வீரர்களோ, ரஷ்ய ஆதரவு கிளர்ச்சிப் படையினரோ தாக்குதல் நடத்தமாட்டார்கள். மரியுபோல் நகரில் மட்டும் 1,844 உக்ரைன் வீரர்கள் எங்களிடம் சரணடைந்துள்ளனர். 1.43 லட்சம் பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டனர். அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். அவர்களுக்குத் தேவையான தரமான மருத்துவ உதவிகள் அளிக்கப்பட்டு வருகின்றன’ என கூறினார்.

மரியுபோல் நகரை முற்றுகையிட்டு பல வாரங்களாக தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யப் படையினர், நகரில் ஏறத்தாழ அனைத்து பகுதிகளையும் கைப்பற்றியுள்ள நிலையிலும், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான உக்ரைன் வீரர்களும் அவர்களுடன் இணைந்து சண்டையிட்டு வந்த சர்ச்சைக்குரிய அஸோவ் படையினரும் மரியுபோலில் உள்ள 10 கி.மீ. பரப்புடைய அஸோவ்ஸ்டல் இரும்பு ஆலைக்குள் பதுங்கி சண்டையிட்டு வருகின்றனர். அவர்களுடன் சுமார் 1,000 பொதுமக்களும் இருப்பதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, அந்த ஆலைக்குள் அதிரடியாக நுழைந்து உக்ரைன் வீரர்களைக் கைது செய்யும் திட்டத்தை கைவிடுமாறும், ஆலையைச் சுற்றிலும் முற்றுகையைக் கடுமையாக்குமாறும் தனது படைக்கு உத்திரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1278007

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, தமிழ் சிறி said:

உக்ரைன்.... வெள்ளைக் கொடியை, ஏற்றுவதன் மூலம்.... சண்டை நிறுத்தத்தை, தொடக்கிவைக்க வேண்டும்: ரஷ்யா!

முதல்ல பெரியண்ணை அமெரிக்கா ஓமெண்ட வேணுமே....😀

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, குமாரசாமி said:

முதல்ல பெரியண்ணை அமெரிக்கா ஓமெண்ட வேணுமே....😀

GIF Images of a White Flag - Surrender Beautifully, Download for Free

செலென்ஸ்கிக்கு.... புலி வாலை பிடித்த மாதிரி,
விடவும் முடியாமல், தொடவும் முடியாமல்... திரி சங்கு சொர்க்க நிலை. 😂

அந்த பெரிய மனுசன் புட்டின்... மனிதாபிமான முறையில், 
வெள்ளைக் கொடி காட்டி... போரை முடிச்சு  வைக்கிறன் எண்டாலும்,
இந்த... வெள்ளைக்காரங்கள் விடுறாங்கள் இல்லை. 🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, தமிழ் சிறி said:

செலென்ஸ்கிக்கு.... புலி வாலை பிடித்த மாதிரி,
விடவும் முடியாமல், தொடவும் முடியாமல்... திரி சங்கு சொர்க்க நிலை. 😂

Sichtlich vertraut: Kreml-Machthaber Putin (l.) und Gerhard Schröder

சிறித்தம்பி இந்த படம் ஆயிரம் அர்த்தங்கள்,கதைகள் சொல்லும்.
ஜேர்மனிய ரஷ்ய சமாச்சாரங்கள் பலருக்கு தெரிவதில்லை. ஆனால் அமெரிக்காவுக்கு நன்கு தெரியும். ஜேர்மனிய அரசியல் தெரிந்தால் உக்ரேன் யுத்த சூட்சுமங்கள் தானாக தெரிய வரும்.
ஜேர்மனியை மீறி எதுவுமே நடக்கப்போவதில்லை.
 

 Gerhard Schröder அவர்கள் New York Times சஞ்சிகைக்கு அளித்த பேட்டியை கவனித்தீர்களாயின் உக்ரேனின் உண்மைத்தன்மை தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

Sichtlich vertraut: Kreml-Machthaber Putin (l.) und Gerhard Schröder

சிறித்தம்பி இந்த படம் ஆயிரம் அர்த்தங்கள்,கதைகள் சொல்லும்.
ஜேர்மனிய ரஷ்ய சமாச்சாரங்கள் பலருக்கு தெரிவதில்லை. ஆனால் அமெரிக்காவுக்கு நன்கு தெரியும். ஜேர்மனிய அரசியல் தெரிந்தால் உக்ரேன் யுத்த சூட்சுமங்கள் தானாக தெரிய வரும்.
ஜேர்மனியை மீறி எதுவுமே நடக்கப்போவதில்லை.
 

 Gerhard Schröder அவர்கள் New York Times சஞ்சிகைக்கு அளித்த பேட்டியை கவனித்தீர்களாயின் உக்ரேனின் உண்மைத்தன்மை தெரியும்.

ரஸ்யாவின் தவிர்க்க முடியாத இந்த யுத்தத்தில் பலனடைந்தது , பலனடைவது அமெரிக்காவும் ஆயுத உற்பத்தியாளர்கள் மட்டுமே. 

மிகப்பெரிய அழிவு உக்ரேனுக்கு, நிரந்தர அழிவிலிருந்து  தப்பிப்பிழைப்பது ரஸ்யா, பாதிக்கப்படுவது முழு உலகுமே. 

உக்ரேன் எனும் நாடு உலக் வரைபடத்தில் இருந்து இல்லாமல் போவதற்குக் கூட சந்தர்பம் இருக்கிறது.

வேகமாக வளர்ந்துவரும் நாடுகள், குறிப்பாக ஆசிய ஆபிரிக்க நாடுகளின் வளர்ச்சியின் வேகம் மீண்டும் மந்தத்திற்குள்ளாகப்போகிறது. 

Anglo Saxon எனப்படும் வெள்ளையின மேலாதிக்கம் இன்னும் குறிப்பிட்ட காலத்திற்கு உலகில் தொடரப்போகிறது. 

கோவிற் -19 ன் பரவலுக்கான காரணம் தற்போதுதான் வெளித்தெரிய வருகிறது. 

Edited by Kapithan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.