Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“கோட்டா கோ கம“ போராட்டம் – பொலிஸாரின் கோரிக்கையினை நிராகரித்தது நீதிமன்றம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

“கோட்டா கோ கம“ போராட்டம் – பொலிஸாரின் கோரிக்கையினை நிராகரித்தது நீதிமன்றம்!

“கோட்டா கோ கம“ போராட்டம் – பொலிஸாரின் கோரிக்கையினை நிராகரித்தது நீதிமன்றம்!

காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளவர்கள் வன்முறையில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் உத்தரவிடுமாறு பொலிஸார் முன்வைத்த கோரிக்கையை கொழும்பு மேலதிக நீதவான் எம்.ஏ.பிரபாகரன் நிராகரித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக அதிகளவானவர்கள் காலி முகத்திடலில் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்காரணமாக பொதுமக்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதுடன், பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக தெரிவித்து 16 பேரின் பெயர்களைக் குறிப்பிட்டு கொழும்பு – கோட்டை பொலிஸார் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தனர்.

இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு எதிரானவர்கள் மற்றும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு இடையில் ஏதேனும் முறுகல் நிலை ஏற்படும் சாத்தியமுள்ளதாக மன்றில் சுட்டிக்காட்டிய கோட்டை பொலிஸார், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் 16 பேருக்கும் ஏற்ற உத்தரவை பிறப்பிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.

வன்முறையோ, பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்படுத்தும் சம்பவங்களோ இடம்பெறுவதற்கு முன்னர், உத்தரவு பிறப்பிப்பதற்கான இயலுமை இல்லையென தெரிவித்த மேலதிக நீதவான், சட்டவிரோதமான நடவடிக்கைகள் ஏதேனும் இடம்பெற்றால், பொலிஸ் கட்டளைச் சட்டத்திற்கமைய உரிய நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் பொலிஸாருக்கு உள்ளது எனவும் தெரிவித்திருந்தார்.

https://athavannews.com/2022/1278084

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

வன்முறையோ, பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்படுத்தும் சம்பவங்களோ இடம்பெறுவதற்கு முன்னர், உத்தரவு பிறப்பிப்பதற்கான இயலுமை இல்லையென …

அப்படியாயின் வடக்கு,கிழக்குப் பிரதேசங்களில் மாவீர்ர் தினங்கள் வருவதற்கு முன்னரே அதில் பங்கு கொள்ளக்கூடாதென முன்தடை வழங்கும் உத்தரவுகள் வழங்கப்படுகின்றனவே ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, நந்தி said:

அப்படியாயின் வடக்கு,கிழக்குப் பிரதேசங்களில் மாவீர்ர் தினங்கள் வருவதற்கு முன்னரே அதில் பங்கு கொள்ளக்கூடாதென முன்தடை வழங்கும் உத்தரவுகள் வழங்கப்படுகின்றனவே ?

ஒரு நாடு... இரு சட்டங்கள்.
அவனுக்கு வந்தால் இரத்தம், எமக்கு வந்தால்... தக்காளி சட்னி.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நந்தி said:

அப்படியாயின் வடக்கு,கிழக்குப் பிரதேசங்களில் மாவீர்ர் தினங்கள் வருவதற்கு முன்னரே அதில் பங்கு கொள்ளக்கூடாதென முன்தடை வழங்கும் உத்தரவுகள் வழங்கப்படுகின்றனவே ?

அது வேறு நாடு இது வேறு நாடுங்கோ!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.