Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்க சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கி சூட்டில் 10 பேர் பலி - என்ன நடந்தது?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கி சூட்டில் 10 பேர் பலி - என்ன நடந்தது?

15 மே 2022, 03:59 GMT
புதுப்பிக்கப்பட்டது 37 நிமிடங்களுக்கு முன்னர்
 

அமெரிக்க துப்பாக்கி சூடு

பட மூலாதாரம்,REUTERS

 

படக்குறிப்பு,

தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர் - கருப்பினத்தவர்கள் அதிகம் வசிக்கும் பஃப்பலோ பகுதியை அடைய மணிக்கணக்கில் வாகனம் ஓட்டியதாக நம்பப்படுகிறது.

அமெரிக்காவின்  நியூயார்க்  மாகாணத்தில் உள்ள பஃப்பலோ நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அங்கு சம்பவ இடத்தில் இருந்த 18 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது  பெயரை போலீசார் வெளியிடவில்லை.

இது இனவெறி நோக்குடன் தூண்டப்பட்ட வெறுப்புணர்வுக் குற்றமாக போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த துப்பாக்கிச் சூட்டை "வன்முறையான பயங்கரவாத செயல்" என்று  அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ அழைக்கிறது.

இந்த சம்பவத்திற்கு காரணமாக சந்தேகிக்கப்படும் நபர், துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன்னர் சனிக்கிழமை பிற்பகல் சூப்பர் மார்க்கெட்டிற்குள்  நுழைந்தார். இந்த தாக்குதலை அவர் இணையத்தில் லைவ் ஸ்ட்ரீம் செய்ய ஒரு கேமராவை பயன்படுத்தியதாக போலீசார் தெரிவித்தனர்.

"இந்தச் சம்பவத்தை வெறுப்புணர்வு குற்றமாகவும், இன ரீதியாக தூண்டப்பட்ட வன்முறை தீவிரவாதமாகவும் கருதி  நாங்கள் விசாரித்து வருகிறோம்" என்று அமெரிக்க புலனாய்வு அமைப்பின் பஃப்பலோ அலுவலகத்தின் பொறுப்பு அதிகாரியான ஸ்டீபன் பெலோங்கியா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கருப்பின மக்கள் அதிகம் வசிக்கும் இந்தப் பகுதியை அடைய, சந்தேக நபர் பல மணி நேரம் பயணம் செய்து வந்ததாக நம்பப்படுகிறது.  இந்த சம்பவத்தில் 13 பேர் சுடப்பட்டனர். பலியானவர்களில் பெரும்பாலானோர் கருப்பினத்தவர்கள் என்று பஃப்பலோ நகர காவல்துறை ஆணையர்  ஜோசப் கிராமக்லியா தெரிவித்தார்.

கவச ஆடையுடன் புகுந்த சந்தேக நபர்

 

நியூயார்க்  துப்பாக்கிச்சூடு

பட மூலாதாரம்,GETTY IMAGES

காயமடைந்தவர்களில், மூன்று பேர் சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரிபவர்கள். உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் காயங்கள் அவர்களுக்கு எதுவும் ஏற்படவில்லை.

சூப்பர் மார்க்கெட்டில் பாதுகாவலராக பணிபுரிந்து ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி ஒருவர்,  சந்தேக்கிப்படும்  நபரை சுட முயற்சித்தார்.  ஆனால், அங்கு நடந்த துப்பாக்கி சண்டையில் அவரும் கொல்லப்பட்டார். 

 

நியூயார்க் துப்பாக்கிச்சூடு

பட மூலாதாரம்,EPA

சந்தேக நபர் அதிநவீன துப்பாக்கியை வைத்திருந்ததாகவும், கவச ஆடை, தலைக்கவசம் போன்றவற்றை அணிந்திருந்ததாகவும்  காவல்துறையினர்  தெரிவித்தனர். 

அந்த நபர் மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்று எரி பகுதி மாவட்ட அரசு வழக்கறிஞர் ஜான் ஃபிளின் கூறினார்.  சந்தேக நபர் மீது மேலும் சில  குற்றச்சாட்டுகள் சேர்க்கப்படலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

நேரில் பார்த்தது என்ன?

இந்த சம்பவத்தை நேரில் பார்த்த  க்ராடி லிவீஸ் என்பவர், "ஒருவர் ராணுவ உடையில், வந்து மக்களை நோக்கி சுடுவதை பார்த்தேன்" என்றார். 

 

Map

இந்த தாக்குதல் நடந்த சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரிந்து கொண்டிருந்த  ஷோன்னில்  ஹாரிஸ், தான்  பின் கதவு வழியாக தப்பி செல்லும் போது,  கிட்டத்தட்ட 70  முறை துப்பாக்கிச் சூடும் சத்ததை கேட்டாதாக தெரிவித்தார். 

"வார இறுதி நாள் என்பதால் கடையில் கூட்டம் அதிகம் இருந்தது. ஒரு கெட்ட கனவாக உணர்ந்தேன்", என்றார். 

முழக்கமிட்ட சந்தேக நபர்

சிபிஎஸ்ஸிடம் பேசிய ஒரு போலீஸ் வட்டாரம், தாக்குதலின் போது அந்த நபர் இனத்தை அவதூறாகப் பேசியதாகக் குற்றம் சாட்டினார்.

"எந்தவொரு சமூகமும் எதிர்கொள்ள முடியாத மிகவும் மோசமான நாளாக இது உள்ளது. நாங்கள் மிகவும் காயப்பட்டுள்ளோம்," என்று பஃப்பலோ நகர மேயர் பைரன் பிரெள செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இத்தகைய வெறுக்கத்தக்க நபரை எமது சமூகத்தையோ எமது நாட்டையோ பிளவுபடுத்துவதற்கு நாம் அனுமதிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.இதற்கிடையே, துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

"அதிபரும் அவரது மனைவியும் உறவுகளை இழந்தவர்களின் குடும்பங்களுக்காகப் பிரார்த்திக்கிறார்கள்," என்று வெள்ளை மாளிகை செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளது.

https://www.bbc.com/tamil/global-61453717

Edited by ஏராளன்
heading mistake

  • ஏராளன் changed the title to அமெரிக்க சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கி சூட்டில் 10 பேர் பலி - என்ன நடந்தது?
  • கருத்துக்கள உறவுகள்

நியூயோர்க் பிராந்தியத்தில் நேற்று நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழப்பு

நியூயோர்க் பிராந்தியத்தில் நேற்று நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவின் நியூயோர்க் பிராந்தியத்தில் நேற்று நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் கொல்லப்பட்டதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் 18 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவரது பெயர் விபரங்கள் பொலிஸாரினால் வெளிப்படுத்தப்படவில்லை.

வர்த்தகம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் சந்தேகநபர் அங்கு நுழைந்து துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு அதனை நேரலையாக வெளியிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் எஃப்.பி.ஐ விசாரணைகளை ஆரம்பித்துள்ள அதேநேரம் துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இனவாத வெறிச் செயலாக இதனை கருதுவதாக அந்த நாட்டு பாதுகாப்பு தரப்பினர் அறிவித்துள்ளனர்.

தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தமது இரங்கலை தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2022/1281913

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, ஏராளன் said:

அமெரிக்க சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கி சூட்டில் 10 பேர் பலி - என்ன நடந்தது?

3 hours ago, தமிழ் சிறி said:

நியூயோர்க் பிராந்தியத்தில் நேற்று நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழப்பு

 

சொந்த நாட்டிலையே ஆயுத கலாச்சாரம் எண்டால் உலகத்தை சும்மா விடுவானுகளா?
ஆரெண்டாலும் அடி தூள் சாம்பல் தான்......😎

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.