Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தளர்த்தப்பட்டது ரிஷாத்தின் வெளிநாட்டு பயணத் தடை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தளர்த்தப்பட்டது ரிஷாத்தின் வெளிநாட்டு பயணத் தடை

(எம்.எப்.எம்.பஸீர்)

உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் மற்றும், வேலைக்கு அமர்த்தப்பட்ட ஹிஷாலினி  உடலில் தீ பரவி உயிரிழந்த சம்பவங்கள் குறித்த விசாரணைகளில், முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத் தடைகள் தளர்த்தப்பட்டுள்ளன.

spacer.png

கொழும்பு மற்றும் கோட்டை நீதிமன்றங்களால், இன்றும், நேற்றும் இதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.

ஹிஷாலினி விவகாரம் :

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் வீட்டில், வீட்டு வேலைக்கு அமர்த்தப்பட்ட ஹிஷாலினி உடலில் தீ பரவி உயிரிழந்த சம்பவம் குறித்த வழக்கு விசாரணைகள் நேற்று ( 24) கொழும்பு மேலதிக நீதிவான்  ரஜீந்ரா ஜயசூரிய முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.  

இதன்போது அவ்விவகாரத்தில் சந்தேக நபர்களின் பெயர்களாக அடையாளப்படுத்தப்பட்டு பிணையில் உள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், அவரது மனைவி  உள்லிட்ட அனைவரும் மன்றில் ஆஜராகினர்.

இதன்போது முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்காக ஆஜராகிய சிரேஷ்ட சட்டத்தரணி என்.எம். சஹீட்,  ரிஷாத் பதியுதீனுக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பயணத் தடையை தலர்த்த கோரினார்.

 தனது சேவை பெறுநர் சம்பவம் இடம்பெறும் போது, விளக்கமறியலில் இருந்ததாகவும், அவருக்கு எதிராக குற்ரம் சுமத்த சாட்சியங்கள் இல்லாத நிலையில், தொடர்ச்சியாக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யாது விசாரணைகளை இழுத்து செல்வது நியாயமற்றது எனவும் சாட்சி இன்றேல்  சந்தேக நபர்களை விடுவிக்க வேண்டும் எனவும் அவர் வாதங்களை முன் வைத்தார்.

 இந் நிலையில்,, சந்தேக நபர்களுக்கு எதிராக  குற்ற்ச்சாட்டுக்களை முன் வைப்பதா  என்பது தொடர்பில் சட்ட மா அதிபருடன் கலந்துரையாடி, அனைத்து விடயங்களையும் மன்றுக்கு அறிவிக்குமாறு  பொலிசாருக்கு உத்தர்விட்ட நீதிவான், ரிஷாத் பதியுதீனின் வெளிநாட்டு பயணத் தடையையும் நீக்கி உத்தரவிட்டார்.

இவ்வழக்கு எதிர்வரும் செப்டம்பர் 20 ஆம் திகதி  மீண்டும்  விசாரணைக்கு வரவுள்ளது.

 உயிர்த்த ஞாயிறு தின  தாக்குதல் சம்பவம்  :

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளுக்கு என, கடந்த 2021  ஏப்ரல் 24 ஆம் திகதி கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர்  ரிஷாத் பதியுதீன், 2021 ஒக்டோபர் 14 ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.  

50 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்ட ரிஷாத் பதியுதீன் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டது. 

இந் நிலையில் இன்று ( 25) அவ்வழக்கு கோட்டை நீதிவான் நீதிமன்றம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதன்போது ரிஷாத்தின் சட்டத்தரணிகள் முன் வைத்த கோரிக்கைக்கு அமைய அவரது வெளிநாட்டு பயணத் தடை அடுத்த தவணை வரை தளர்த்தப்பட்டு உத்தரவிடப்பட்டது. 

 

https://www.virakesari.lk/article/128202

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்

ரிசாட்டின் காசு கனடாவுக்கு பாய்ந்து வழிந்தோடும் என்கிறீர்கள்  😉

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

ரிசாட்டின் காசு கனடாவுக்கு பாய்ந்து வழிந்தோடும் என்கிறீர்கள்  😉

ஆளே அடுத்த  எலச்சனில் கனடாவில் கேட்பார்....நம்ம சங்கரி இனி அவுட்...காசென்றால் நம்ம சனமும் பின்னாலை போகும்😄

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, alvayan said:

ஆளே அடுத்த  எலச்சனில் கனடாவில் கேட்பார்....நம்ம சங்கரி இனி அவுட்...காசென்றால் நம்ம சனமும் பின்னாலை போகும்😄

ஏற்கனவே கனடாவுக்கு காசுள்ள இலங்கை முஸ்லிம்கள் படையெடுக்கத் தொடங்கிவிட்டார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம் நாடுகளை வளைத்துப்போட இந்த தடை தளர்வு, விடுதலைகள் பயன்படுமோ? நஸீர் சொல்லியிருப்பாரோ?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

ஏற்கனவே கனடாவுக்கு காசுள்ள இலங்கை முஸ்லிம்கள் படையெடுக்கத் தொடங்கிவிட்டார்கள். 

அப்ப காத்தான்குடி சாரத்தை கனடாரோட்டில் காணலாம்..

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, satan said:

முஸ்லீம் நாடுகளை வளைத்துப்போட இந்த தடை தளர்வு, விடுதலைகள் பயன்படுமோ? நஸீர் சொல்லியிருப்பாரோ?

 

சிங்களவனுக்கு…. இப்ப டொலர் தேவை.
அது, எந்த ரூபத்தில் வந்தாலும் சம்மதமே.

இந்தக் கயவனால்….அதிகம் பாதிக்கப் பட்டது தமிழர் தானே…
பாவம்…. அவர் வீட்டில் வேலை செய்த சிறுமியின் கொலைக்கும்,
18 வயதிற்கு உட்பட்டவரை வேலைக்கு அமர்த்திய குற்றத்திற்கும்.
அந்தச் சிறுமி மீது மேற்கொண்ட பாலியல் கொடுமைக்கும்,
எந்த ஒரு தமிழ் அரசியல் வாதியாலும், தமிழ் சட்டத்தரணிகளாலும்….
இந்த மனித. மிருகத்துக்கு… தண்டனை வாங்கிக் கொடுக்க முடியவில்லை. 😡

ரிஷாத் பதியுதீன் மீது.... மேலே கூறப்பட்டுள்ள, மூன்று குற்றங்களிலும்...
ஏதாவது ஒன்றில் சம்பந்தப் பட்டு இருந்தால் கூட,
மேலைநாடுகளில் சம்பந்தப் பட்ட  நபர், வெளி உலகத்தை பார்க்காமலே..
வாழ்நாள் முழுக்க சிறையிலோ, தலை துண்டிக்பட்டோ,
சந்தியில் வைத்து... சவுக்கடி கொடுத்தோ இருப்பார்கள்.  

  • கருத்துக்கள உறவுகள்

நம் நாட்டு அரசியல்வாதிகளில் பாதிப்பேருக்குமேல்   இப்படிப்பட்ட குற்றங்களில் நேரடியாகவோ மறைமுகமாகவோ சம்பந்தப்பட்டவர்களே. வெளிநாட்டுத் தூதுவர்களாக இருந்த பல இராணுவ அதிகாரிகள் அப்பட்டமாக இந்தக்குற்றங்களில் ஈடுபட்டவர்கள். அதற்காக அவர்கள் வெட்கமோ, துக்கமோ படவில்லை மாறாக பெருமையும், பதவிகளும் அடைகிறார்கள், போற்றவும்படுகிறார்கள்.  

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, alvayan said:

அப்ப காத்தான்குடி சாரத்தை கனடாரோட்டில் காணலாம்..

அதிங்தாங், அதிங்தாங். 

ஈஸ்ரர் குண்டுவெடிப்புடன் தொடர்புபட்டவர்களும் (நேரடித் தொடர்பல்ல) இங்கே சரண்டர். இன்னும் பலர் இங்கே வந்து இறங்குவினம். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.