Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆயிஷாவைக் கொலை செய்ததாக... சந்தேகநபர், வாக்குமூலம் – சிறுமியின் பிரேத பரிசோதனையும் வெளியானது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிஷாவைக் கொலை செய்ததாக சந்தேகநபர் வாக்குமூலம் – சிறுமியின் பிரேத பரிசோதனையும் வெளியானது!

ஆயிஷாவைக் கொலை செய்ததாக... சந்தேகநபர், வாக்குமூலம் – சிறுமியின் பிரேத பரிசோதனையும் வெளியானது!

பண்டாரகம – அதுலுகம பிரதேசத்தைச் சேர்ந்த 9 வயது சிறுமியின்மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 29 வயதுடைய சந்தேகநபர் கொலையை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதனையடுத்து, அவரை இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுமியின் மரணம் தொடர்பாக பல வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, சிறுமியின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை விசாரணைகள் பாணந்துறை வைத்தியசாலையில் இன்று இடம்பெற்றன.

இந்தப் பரிசோதனையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பண்டாரகம – அட்டலுகம பகுதியைச் சேர்ந்த 9 வயதுடைய பாத்திமா ஆயிஷா கடந்த வெள்ளிக்கிழமை காணாமல்போயிருந்த நிலையில் நேற்று முன்தினம் (28) சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1284606

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அட்டாலுகம சிறுமி மரணம் – சிஐடி விசாரணை ஆரம்பம்

ஒன்பது வயது சிறுமி படுகொலை: உண்மையை வெளிப்படுத்திய கொத்துரொட்டி தயாரிப்பாளர் !

பண்டாரகம, அட்டுலுகமவில் ஒன்பது வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கொட்டு ரொட்டி தயாரிக்கும் நபர் ஒருவர் உண்மையை வெளிப்படுத்தியுள்ளார்.

ஒன்பது வயதுடைய பாத்திமா ஆயிஷாவின் கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபராக கொத்து ரொட்டி தயாரிப்பாளர் கைது செய்யப்பட்டதாக சி.ஐ.டி. அறிவித்தது.

28 வயதான பிரதான சந்தேகநபர் அதேபகுதியில் முஸ்லிம் காலனியில் வசிப்பவராவார் என்றும் அவர் போதைப்பொருள் (ஐஸ்) க்கு அடிமையானவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமி காணாமல் போவதற்கு முன்னர் கோழி இறைச்சி வாங்குவதற்காக இறைச்சிக் கடைக்கு சென்றுள்ளார்.

முதற்கட்ட விசாரணையில் சந்தேக நபர் சிறுமிக்கு முன்னதாக கடையை விட்டு வெளியேறி புதருக்கு பின்னால் மறைந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் கையில் இறைச்சியுடன் தனது வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தபோது, சந்தேக நபர் சிறுமியை பிடித்து அருகிலுள்ள புதர் காட்டுக்குள் இழுத்துச் சென்றுள்ளார்.

சந்தேக நபரின் பிடியில் இருந்து தப்பிக்கும் முயற்சியில் சிறுமி கூக்குரலிட்ட போதும் சிறுமியை அருகில் உள்ள சதுப்பு நிலத்தில் சில மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் சென்றுள்ளார்.

அதற்கு முன்னதாக சிறுமியின் வாயில் துணி ஒன்று திணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் சிறுமியின் முகத்தை சேற்று நீரில் தள்ளி, அவரது முதுகில் முழங்களால் அழுத்தியுள்ளதால் சிறுமி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2022/1284644

  • கருத்துக்கள உறவுகள்

“ ஆயிஷாவை ஸ்பரிசம் செய்தேன் துடித்தாள் சகதியில் அமிழ்த்திவிட்டேன்”

அவள் வீடு திரும்புவதற்கு முன்னரே, வீட்டுக்குச் செல்லும் வழியில் ஓடி மறைந்திருந்தேன். கோழி இறைச்சியை வாங்கிக்கொண்டு வந்துகொண்டிருந்த போது அலாக்காக தூக்கிச்சென்று, உடல் முழுவதும் ஸ்பரிசம் செய்தேன், முரண்டுபிடித்தாள் அதனால், சகதியில் அமிழ்த்தினேன் என அட்டுலுகம சிறுமி பாத்திமா ஆயிஷாவின் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்டவர் வாக்குமூலமளித்துள்ளார்.

எனது இச்சையை தீர்த்துக்கொள்ளவே தூக்கிச்சென்றேன். எனினும், முரண்டுபிடித்தால், வன்புணர்வதற்கு எடுத்த முயற்சி கைகூடவில்லை. முகத்தில் துணியொன்றினால் மூடி, தூக்கிச்சென்றேன். ஸ்பரிசம் செய்தேன். இதனை யாரிடமாவது சொல்லிவிடுவாளோ என்ற பயத்தில்,   சதுப்பு நில சேற்றில் முகத்தை அமிழ்த்தி சிறுமியின் உடலின் முதுகுப்பகுதியில் தன் முழங்காலினால் ஊன்றி உயிர்போகும் வரையிலும் அமிழ்த்திகொண்டிருந்தேன்

சிறுமி பாத்திமா ஆயிஷாவின் படுகொலைத் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரான ‘பல்லி குட்டி' என்றழைக்கப்படும் சிறுமியின் தாய் வழி உறவுக்காரரான மூன்று பிள்ளைகளின் தந்தையொருவரே இவ்வாறு வாக்குமூலமளித்துள்ளார்.

28 வயதான அவர், அங்குள்ள ஹோட்டலில் கொத்து ரொட்டி தயாரிக்கும் கொத்துபாஸ், ஐஸ் எனும் போதைப்பொருளுக்கும் அடிமையானவர்.

சிறுமியின் ஜனாஸா, இன, மத, மொழி, பேதங்களை கடந்து, ஆயிரக்கணக்கானோரின்  கண்ணீருக்கு மத்தியில் நேற்றிரவு (30) நல்லடக்கம் செய்யப்பட்டது.

 சிறுமியின் மரணத்துக்கு வாய்,மூக்கு வழியே சேற்றுடன் கலந்த நீர்  உட்சென்று நுரையீரல் மற்றும் உடல் உள்ளுறுப்புக்களில் கலந்தமை பிரதான காரணம் என சட்ட வைத்திய அதிகாரிகள் குழாம் தீர்மானித்துள்ளது.   

பிரதான சந்தேக நபரை 48 மணிநேர தடுப்பு காவலில் வைத்து விசாரணைகளை முன்னெடுக்க பாணந்துறை நீதிவான் நீதிமன்றம் நேற்று (30) அனுமதியளித்திருந்தது.     

தனது வீட்டிலிருந்து கோழி இறைச்சி கொள்வனவு செய்வதற்காக சுமார் 200 மீற்றர் தூரத்திலுள்ள இறைச்சி கடைக்கு கடந்த 27ஆம் திகதி சென்றிருந்த போது பாத்திமா ஆய்ஷா எனும் சிறுமி காணாமல் போயிருந்தார்.

       24 மணிநேரத்தை கடந்த நிலையில் கடந்த 28 ஆம் திகதி மாலை வேளையில்  சதுப்பு நில பகுதியில் இருந்து சிறுமி சடலமாக மீட்கப்பட்டார்.   

 பல கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. சிறுமி கொலை செய்யப்பட்டதாக நம்பப்படும் இடத்தில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடந்துகொண்ட சிறுமியின் உறவினர் ஒருவர் தொடர்பில் களுத்துறை மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் அவதானம் செலுத்தி அவரை கைது செய்து மேற்கொண்ட விசாரணைகளின் போதே மேற்கண்ட விவரம் அம்பலமானது.  

 

https://www.tamilmirror.lk/மேல்-மாகாணம்/ஆயிஷாவை-ஸ்பரிசம்-செய்-தேன்-துடித்தாள்-சகதியில்-அமிழ்த்திவிட்டேன்/95-297557

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

சிறுமி பாத்திமா ஆயிஷாவின் படுகொலைத் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரான ‘பல்லி குட்டி' என்றழைக்கப்படும் சிறுமியின் தாய் வழி உறவுக்காரரான மூன்று பிள்ளைகளின் தந்தையொருவரே இவ்வாறு வாக்குமூலமளித்துள்ளார்.

‘பல்லி குட்டி'ஆயிஷாவின் தாய்வழி உறவினர் என்றால்....
பல்லி குட்டியின்... முஸ்லீம் பெயரையும் வெளியிடுவது தானே...

அதிலும் அந்த கயவனுக்கு, தமிழ்ப் பெயரை சூட்டி...  
முஸ்லீம் இனத்துக்கு, ஊடகங்கள்... வெள்ளை அடிக்கிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

அதிலும் அந்த கயவனுக்கு, தமிழ்ப் பெயரை சூட்டி...  
முஸ்லீம் இனத்துக்கு, ஊடகங்கள்... வெள்ளை அடிக்கிறார்கள். 

இப்ப எல்லாவிடையத்திலும் இவர்கள் நிலைப்பாடு இப்படியே போகிறது..அதாவது ஆட்சிகட்டில் ஏறும் அரசுடன் ..இணைய ..ஐசு வைக்கினம் சிங்களத்துக்கு..

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆயிஷா கொலை வழக்கில் வாக்குமூலம் வழங்க அனுமதிக்குமாறு சந்தேகநபர் கோரிக்கை – நீதிமன்றம் அனுமதி!

ஆயிஷா கொலை வழக்கில்... வாக்குமூலம் வழங்க அனுமதிக்குமாறு, சந்தேகநபர் கோரிக்கை – நீதிமன்றம் அனுமதி!

பண்டாரகம – அட்டுலுகம பகுதியில் 9 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர், இன்று (புதன்கிழமை) நீதிமன்றில் வாக்குமூலம் வழங்கவுள்ளார்.

பாணந்துறை பிரதான நீதவான் ஜயருவன் திஸாநாயக்க முன்னிலையில் சந்தேகநபரை நேற்றைய தினம் பிரசன்னப்படுத்திய பொலிஸார், விசாரணைகளுக்காக அவரை எதிர்வரும் 9ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

அதேநேரம், சந்தேகநபர் வாக்குமூலம் வழங்க அனுமதி கோரியதற்கமைய மொழிப்பெயர்ப்பாளரின் உதவியுடன் இன்றைய தினம் வாக்குமூலத்தை வழங்க நீதவான் அனுமதி வழங்கியுள்ளார்.

இதற்கமைய, சந்தேகநபரை இன்றைய தினம் வரை விளக்கமறியலில் வைக்க பாணந்துறை பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சந்தேகநபர் சார்பில், சட்டத்தரணிகள் எவரும் மன்றில் முன்னிலையாகவில்லை.

மேலும் வழக்குப் பொருளாக, குறித்த சிறுமி கொலைசெய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் அணிந்திருந்த ஆடை, காவல்துறையினரால் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

பண்டாரகம – அட்டலுகம பகுதியைச் சேர்ந்த 9 வயதுடைய பாத்திமா ஆயிஷா கடந்த 27ஆம் திகதி காணாமல்போயிருந்த நிலையில் 28ஆம் திகதி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1284804

  • கருத்துக்கள உறவுகள்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.