Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்க இலினோஸ் மாநிலத்தில் சுதந்திர நாள் கொண்டாட்டத்தில் துப்பாக்கி சூடு,6 பேர் பலி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இல்லினாய்ஸில் உள்ள ஹைலேண்ட் பூங்காவில் நடந்த அணிவகுப்பில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டதாக லேக் கவுண்டி பிரேத பரிசோதனை அதிகாரி ஜெனிபர் பானெக் தெரிவித்தார். அவர்களில் ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர் மற்றும் ஒருவர் மருத்துவமனையில் இறந்தார் என்று Banek தெரிவித்துள்ளது.

அணிவகுப்பு நடந்த இடத்தில் இறந்த ஐந்து பேரும் பெரியவர்கள் என்று அவர் கூறினார். ஆறாவது பாதிக்கப்பட்டவரின் வயது குறித்த தகவல் அவளிடம் இல்லை.

"உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ஒருவர் மருத்துவமனையில் இறந்தார். பாதிக்கப்பட்டவர் குறித்த கூடுதல் தகவல்கள் என்னிடம் இல்லை," என்று அவர் கூறினார்.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஈழப்பிரியன் said:
இல்லினாய்ஸில் உள்ள ஹைலேண்ட் பூங்காவில் நடந்த அணிவகுப்பில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டதாக லேக் கவுண்டி பிரேத பரிசோதனை அதிகாரி ஜெனிபர் பானெக் தெரிவித்தார். அவர்களில் ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர் மற்றும் ஒருவர் மருத்துவமனையில் இறந்தார் என்று Banek தெரிவித்துள்ளது.

அணிவகுப்பு நடந்த இடத்தில் இறந்த ஐந்து பேரும் பெரியவர்கள் என்று அவர் கூறினார். ஆறாவது பாதிக்கப்பட்டவரின் வயது குறித்த தகவல் அவளிடம் இல்லை.

"உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ஒருவர் மருத்துவமனையில் இறந்தார். பாதிக்கப்பட்டவர் குறித்த கூடுதல் தகவல்கள் என்னிடம் இல்லை," என்று அவர் கூறினார்.

 

அமெரிக்காவில்... ஒவ்வொரு மாதமும் நடக்கும் சம்பிரதாயமான நிகழ்வு இது.
இரண்டு நாள்... பத்திரிகை செய்தியாக இருக்கும். பிறகு மறந்து விடுவார்கள்.
அடுத்த மாத ஆரம்பித்தில்... மீண்டும் சூடு நடக்கும்.
அமெரிக்கன்ஸ்... இப்படியே, சுட்டு, சுட்டு விளையாடிக் கொண்டிருப்பார்கள்.
வெறி ஃபணி (Very Funny)

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, தமிழ் சிறி said:

அமெரிக்காவில்... ஒவ்வொரு மாதமும் நடக்கும் சம்பிரதாயமான நிகழ்வு இது.
இரண்டு நாள்... பத்திரிகை செய்தியாக இருக்கும். பிறகு மறந்து விடுவார்கள்.
அடுத்த மாத ஆரம்பித்தில்... மீண்டும் சூடு நடக்கும்.
அமெரிக்கன்ஸ்... இப்படியே, சுட்டு, சுட்டு விளையாடிக் கொண்டிருப்பார்கள்.
வெறி ஃபணி (Very Funny)

 

தாத்திரி உவர் போட்ட செய்தியை வாசிச்சனான். பாவம் மனிசனை சும்மா கடுப்பேத்தக்கூடாது எண்டுட்டு ஒண்டும் எழுதேல்லை. நீங்கள் எழுதினாப்பிறகு நான் இப்ப நல்ல ஹப்பி.😂

  • கருத்துக்கள உறவுகள்

துப்பாக்கிதாரி கைது செய்பப்பட்டுள்ளார்.
காயனடைந்தவகள் 8ல் இருந்து 80 வரை அடங்குவர். காயமடைந்தவர்களில் ஐவர் சிறுவர் என கூறப்படுகிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

அமெரிக்காவில்... ஒவ்வொரு மாதமும் நடக்கும் சம்பிரதாயமான நிகழ்வு இது.
இரண்டு நாள்... பத்திரிகை செய்தியாக இருக்கும். பிறகு மறந்து விடுவார்கள்.
அடுத்த மாத ஆரம்பித்தில்... மீண்டும் சூடு நடக்கும்.
அமெரிக்கன்ஸ்... இப்படியே, சுட்டு, சுட்டு விளையாடிக் கொண்டிருப்பார்கள்.
வெறி ஃபணி (Very Funny)

 

சுட்டுசுட்டு விளையாடிக் கொண்டிருக்க அப்பாவிகள் பெண்கள் குழந்தைகள் என எல்லோருமே பாதிக்கப்படுகிறார்கள்.

அப்பவாவது அரசியலில் உள்ளவர்கள் இதுக்குள் மாட்டுப்பட்டது கிடையாது.

இப்போது கூட துப்பாக்கி பாவிக்கும் வயதெல்லையை மட்டுமே கூட்ட முயற்சிக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஈழப்பிரியன் said:

இப்போது கூட துப்பாக்கி பாவிக்கும் வயதெல்லையை மட்டுமே கூட்ட முயற்சிக்கிறார்கள்.

உண்மைதான்.. 

சில செனட்டர்களினதும் சில பொது மக்களது கருத்தையும் பார்க்கும் பொழுது 🤦🏽‍♀️🤦🏽‍♀️🤦🏽‍♀️

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

NRA என்றது பணம் கொட்டும் மரம்.அதுவும் குடியரசு கட்சிகளுக்கு பெரும் தொகையாக கொட்டப்படுகிறது.அதை மீறி செயல்பட அவர்களால் முடிவதில்லை.

7 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

உண்மைதான்.. 

சில செனட்டர்களினதும் சில பொது மக்களது கருத்தையும் பார்க்கும் பொழுது 🤦🏽‍♀️🤦🏽‍♀️🤦🏽‍♀️

 

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ஈழப்பிரியன் said:

NRA என்றது பணம் கொட்டும் மரம்.அதுவும் குடியரசு கட்சிகளுக்கு பெரும் தொகையாக கொட்டப்படுகிறது.அதை மீறி செயல்பட அவர்களால் முடிவதில்லை.

 

NRA பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். யாழிலும் ஒரு பதிவு உள்ளது. இந்த செய்தியில் NRA பற்றி நீண்ட கட்டுரை ஒன்று உள்ளது.

 

  • கருத்துக்கள உறவுகள்

துப்பாக்கிச்சூட்டில் பெற்றோரை இழந்து தனியே தவழ்ந்து திரிந்த குழந்தை

 

 

05.jpg

அமெரிக்காவின் சுதந்திர தினமான ஜூலை 4ஆம் திகதி (திங்கட்கிழமை) நடந்த கொடி அணிவகுப்பு கொண்டாட்டம் அந்நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நடத்தப்பட்டது.

அந்த வகையில் இல்லினாய் மாநிலத்தின் சிகாகோ நகரின் புறநகர்ப் பகுதியான ஹைலேண்ட் பார்க்கில் நேற்று நடந்த அணிவகுப்பில் கலந்துகொண்ட மக்கள் மீது, அருகில் இருந்த கட்டிடத்தின் மாடியிலிருந்து ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கின்றனர். காயமடைந்தவர்களில் மேலும் ஒருவர் மரணமடைந்ததைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்திருக்கிறது.
சுதந்திர தினத்தன்று நடந்த இந்தக் கொடூரச் சம்பவம் அமெரிக்க மக்களைத் துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

கொலையாளியின் கொடூர குணம்
இந்தச் சம்பவம் தொடர்பாக ராபர்ட் கிரிமோ எனும் 22 வயது வெள்ளையின இளைஞரைப் பொலிஸார் பிடித்து விசாரித்துவந்தனர். முதலில் அவரை ‘பெர்சன் ஆப் இன்டெரஸ்ட்’ எனும் அடிப்படையில் பிடித்துவைத்திருந்த பொலிஸார், பின்னர் அவரைக் கைதுசெய்தனர். அவர் மீது ஏழு கொலைக் குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன.

ராபர்ட் கிரிமோ தொடர்பாக வெளியாகும் செய்திகள் அவர் எந்த அளவுக்கு வன்முறை குணம் கொண்டவர் என்பதைக் காட்டுகின்றன. யூடியூப், ஸ்பாட்டிபை போன்ற சமூகவலைதளங்களில் அவர் வெளியிட்டிருந்த காணொலி மற்றும் ஒலிப் பதிவுகள் தற்போது நீக்கப்பட்டுவிட்டன. இணையத்தில் அதிகம் கவனம் ஈர்க்கும் நோக்கத்துடன் அவர் செயல்பட்டிருக்கிறார். பொதுமக்களை அவர் சுட்டுக்கொல்வது போலவும், அவரைப் பொலிஸார் சுட்டுக்கொல்வது போலவும் அனிமேஷன் முறையில் தயாரிக்கப்பட்ட காணொலிகளை அவர் பகிர்ந்திருந்தார். முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு ஆதரவாக நடந்த பேரணிகளில் அவர் பங்கேற்றிருந்ததும் தற்போது தெரியவந்திருக்கிறது.

இதற்கு முன்பும் பொலிஸாரின் கண்காணிப்புக்குள்ளானவர் ராபர்ட் கிரிமோ. 2019-ல் தற்கொலை முயற்சி செய்தபோது அவரைப் போலீஸார் காப்பாற்றி எச்சரித்து சென்றனர். அவரிடம் இருந்த கத்திகளைப் பறிமுதல் செய்ய பொலிஸார் சென்றிருந்தபோது அனைவரையும் கொலை செய்துவிடுவதாக அவர் மிரட்டல் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பெற்றோரை இழந்த குழந்தை
ஹைலேண்ட் பார்க் படுகொலை சம்பவத்தில் பல துயரக் காட்சிகள் நிகழ்ந்ததைக் காணொலிப் பதிவுகள் பதிவுசெய்திருக்கின்றன. அந்த வகையில், அந்தச் சம்பவத்தில் தாய், தந்தை இருவரையும் இழந்த 2 வயதுக் குழந்தை ஏய்டனுக்கு நேர்ந்த துயரம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

அந்தப் பாலகனின் பெற்றோர் கெவின் மெக்கார்த்தி மற்றும் இரினா மெக்கார்த்தி இருவரும் ராபர்ட் கிரிமோவின் துப்பாக்கிச்சூட்டில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். வெறி பிடித்த நபரின் கொலைவெறிக்குப் பெற்றோர் இருவரையும் பறிகொடுத்த அந்தக் குழந்தை தன்னந்தனியாகத் தவழ்ந்து சென்ற காட்சி சமூகவலைதளங்களில் வைரலானது. சற்று நேரத்தில் அங்கிருந்தவர்கள் அந்தக் குழந்தையைப் பத்திரமாகத் தூக்கிச் சென்று பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் பொலிஸார் அக்குழந்தையின் தாத்தா – பாட்டியிடம் ஒப்படைத்தனர்.

தந்தையும் தாயும் இறந்துவிட்டதை அறியாத அந்தக் குழந்தையின் நிலை பலரையும் கலங்கச் செய்துவிட்டது. “அப்பாவும் அம்மாவும் சீக்கிரம் வருவார்கள்” என மழலை மொழியில் தனது தாத்தா – பாட்டியிடம் அந்தக் குழந்தை கூறியதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

ஏய்டனின் எதிர்காலத்துக்கு உதவ, மனிதாபிமானம் கொண்ட சிலர் நிதி திரட்டத் தொடங்கியிருக்கின்றனர். பல்வேறு காரணங்களை முன்னிட்டு நிதி திரட்டும் ’கோ பண்ட் மீ’ (GoFundMe) இணையதளத்தில் அந்தக் குழந்தைக்காக நிதி திரட்ட பிரத்யேகப் பக்கம் தொடங்கப்பட்டிருக்கிறது.

https://thinakkural.lk/article/189850

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.