Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிரதமர் பதவியில் இருந்து... விலகத் தயார் – நாடாளுமன்றில் ரணில்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

 

பிரதமர் பதவியில் இருந்து... விலகத் தயார் – நாடாளுமன்றில் ரணில்!

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவினால் முன்வைக்கப்படும் 6 மாத வேலைத்திட்டம் வெற்றியடையும் பட்சத்தில் தனது பதவியை இராஜினாமா செய்யத் தயார் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அத்தோடு, சர்வதேச நாணய நிதியத்துடனான ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை வெற்றியடைந்துள்ளதாகவும், குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) விசேட உரையாற்றும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஆட்சியை வழங்கினால் 6 மாதங்களில் நாட்டை வழமைக்கு கொண்டுவருவதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்ததாகவும் எனினும் அது சாத்தியமில்லாத விடயமாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவ்வாறு அவரிடம் ஏதேனும் ஒரு திட்டம் இருக்குமானால், அதை தான் வரவேற்பதாகவும் அந்தத் திட்டத்தை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்குமாறும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்க விருப்பம் இல்லையென்றால் நாடாளுமன்றத்திலாவது அதனை சமர்ப்பிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும, அனுர குமார திஸாநாயக்கவிடம் உள்ள திட்டம் சாதகமாக இருக்குமானால், தான் பிரதமர் பதவியில் இருந்து உடனடியாக விலகுவதற்கும் தயார் எனவும் பிரதமர் இதன்போது தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, கோட்டா கோ ஹோம் என எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றில் தொடர்ச்சியாக கோஷமிட்டனர்.

அதனைத்தொடர்ந்து, நாடாளுமன்றத்தை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.

https://athavannews.com/2022/1289663

  • கருத்துக்கள உறவுகள்

அநுர எஸ்கேப் ஆகி விடுவார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு வேளை சாப்பிட பழகிக்கொள்ளுங்கள் எனக் கூற ஒரு பிரதமர் தேவையா? – அனுர கேள்வி

ரணில் இராஜினாமா செய்தாலும்... என்னை பிரதமராக நியமிக்க, அவருக்கு அதிகாரம் இல்லை: அனுர

பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலகினாலும் என்னை பிரதமராக நியமிப்பதற்கு அவருக்கு அதிகாரம் இல்லை என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஆறு மாதங்களுக்குள் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடிந்தால், அனுரகுமார திஸாநாயக்கவுக்கு பிரதமர் பதவியை விட்டுக்கொடுக்க தயார் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியதற்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தனது அறிக்கையின் ஒரு பகுதியை மாத்திரமே பிரதமர் எடுத்துக்கொண்டதாக தெரிவித்த அனுர, மக்களின் அடிப்படைத் தேவைகளான எரிபொருள், எரிவாயு, மருந்து போன்றவற்றை ஆறு மாதங்களுக்குள் வழங்க வேண்டும் என்றும் அதன் பின்னர் தேர்தலுக்குச் செல்ல வேண்டும் என்றே தான் கூறியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவுக்கோ அல்லது தனக்கோ பிரதமராக செயற்படுவதற்கான ஆணை இல்லை என்றும் ரணிலுக்கு நாடாளுமன்றத்தில் அமரக்கூட ஆணை இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

நான்கு தசாப்த கால தோல்வியடைந்த பொருளாதார மற்றும் அரசியல் அமைப்பினால் பாழடைந்த பொருளாதாரத்தை ஆறு மாதங்களுக்குள் புத்துயிர் பெற முடியாது என்றும் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண நிலையான மற்றும் நம்பகமான அரசாங்கம் உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பொருளாதாரம் மற்றும் அரசியல் கலாசாரத்தின் நீண்டகால தோல்வி காரணமாக நாடு கடுமையான பொருளாதார கொந்தளிப்பை எதிர்கொண்டுள்ளதாக தெரிவித்த அவர், இந்த பொருளாதார வீழ்ச்சியில் செல்வாக்கு செலுத்திய இந்த அரசியல் கலாசாரம் முதலில் மாற்றப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

ஆறு மாதங்களுக்குள் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியாது என்றும் கடன் நெருக்கடி, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி பற்றாக்குறை, உற்பத்தி சரிவு மற்றும் மாநில வருவாய் என்பனவற்றை ஆறு மாதங்களுக்குள் சரி செய்ய முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

https://athavannews.com/2022/1289758

  • கருத்துக்கள உறவுகள்

ரணிலை பதவி விலகுமாறு அமைச்சர் தம்மிக வலியுறுத்து 

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை, நிதியமைச்சர் பதவியில் இருந்து விலகுமாறு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் எம்.பியும், முதலீட்டு மேம்பாடு அமைச்சருமான தம்மிக பெரேரா வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

https://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/ரணிலை-பதவி-விலகுமாறு-அமைச்சர்-தம்மிக-வலியுறுத்து/150-299822

 

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

ரணிலை பதவி விலகுமாறு அமைச்சர் தம்மிக வலியுறுத்து 

முன்னுக்கு வந்த செவியை… பின்னுக்கு வந்த கொம்பு மறைக்குது. 🤣
கோத்தா சொல்லுறான்… தம்மிக்க “வாய்ஸ்” குடுக்கிறான். 😂

தம்மிக்க... கோத்தா, மகிந்தவின் செல்லப் பிள்ளை.
ரணிலை... அகற்றிவிட்டு, பிரதமராக... தம்மிக்கவை நியமிக்க 
திட்டம்  போடுகிறார்கள் போலுள்ளது. 😎

ஆடிக்காற்றில... அம்மியே பறக்குது. 😂
கோத்தாவின் பதவியும்... இப்பவோ, அப்பவோ... என்று இருக்கும் நிலையில்,
அவர்களின் திட்டம்  நிறைவேறுமா. பொறுத்திருந்து பார்ப்போம். 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தா ரனில் இருவரும் ஒன்றாக பதவி விலகுவார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, சுவைப்பிரியன் said:

கோத்தா ரனில் இருவரும் ஒன்றாக பதவி விலகுவார்கள்.

கோத்தா... தான், தோல்வியுற்ற ஜனாதிபதியாக பதவி விலகமாட்டேன்   என்று முன்பு கூறியவர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, தமிழ் சிறி said:

கோத்தா... தான், தோல்வியுற்ற ஜனாதிபதியாக பதவி விலகமாட்டேன்   என்று முன்பு கூறியவர்.

உந்த தினாவெட்டுத்தான் நாட்டை இந்த நிலைமைக்கு கொண்டு வந்து விட்டிருக்கு.....

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, சுவைப்பிரியன் said:

கோத்தா ரனில் இருவரும் ஒன்றாக பதவி விலகுவார்கள்.

கோத்தா ஒரு கிறுக்கர். மக்களாக கலைத்தாலும் இராணுவத்தை வைத்து தாக்குபவர். அவர் அடுத்த இரு வருடமும் விலகுவார் என நான் நினைக்கவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, nunavilan said:

கோத்தா ஒரு கிறுக்கர். மக்களாக கலைத்தாலும் இராணுவத்தை வைத்து தாக்குபவர். அவர் அடுத்த இரு வருடமும் விலகுவார் என நான் நினைக்கவில்லை. 

இல்லை நுனா.இந்த முறை இராணுவம் ஒத்துளைப்பு கொடுக்கும் என்று நான் நினைக்க வில்லை.அவர்கள் வீட்டிலும் பசி இருக்கும் தானே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, nunavilan said:

கோத்தா ஒரு கிறுக்கர். மக்களாக கலைத்தாலும் இராணுவத்தை வைத்து தாக்குபவர். அவர் அடுத்த இரு வருடமும் விலகுவார் என நான் நினைக்கவில்லை. 

கோத்தா தன்ரை கிறுக்கு புத்தியை தமிழ்ச்சனத்திட்டைதான் காட்டலாம். சிங்கள சனத்திட்டை வலு கவனமாய் இருப்பார்....   சம்பந்தன் மாதிரி ஆக்களுக்கு வாக்கு போட்டுட்டு முகட்டை பார்க்கிற தமிழ்ச்சனம் மாதிரி சிங்களச்சனத்தையும் நினைச்சிட்டியளே? 😁

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.