Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போராட்டக்காரர்களை வடக்கிற்கு அழையுங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kapithan said:

தமிழர் சிங்களவர் பிரச்சனை எத்தனை நூற்றாண்டு காலத்தினை வரலாறாகக் கொண்டது என்பது உங்களுக்குத் தெரியும். அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட நம்பிக்கையீனமே இன்றைய இனப்பிரச்சனைக்கான அடிப்படை.  ஒரிரவில் இதனைத் தீர்க்க முடியுமா ? அப்படி ஒரு தீர்வை முன்வைத்தாலும் அது நின்று நிலைக்குமா ? 

இத்தனை அழிவுகள் ஆகுதிகளைக் கண்ட பின்னரும் இந்தப் பிரச்சனையை இத்தனை இலகுவாகக் கையாளலாம் என சிந்திக்கும் வஞ்சகத்தனத்தை என்ன சொல்வது ? 

யாராவது குணா கவியழகனுக்குச் " உந்த ஆர்ப்பாட்டக்காறரை ஒருக்க யாழ்ப்பாணப் பக்கம் கொண்டுவந்த என்ன ? " என்று சொல்லியிருப்பினம். அதைக் கேட்டுவிட்டு ஒரு வீடியோ போட்டிருக்கிறார் என்று நினைக்கிறேன். 

உங்கள் ஊட்டத்தில் உள்ள உண்மைகளை வரவேற்கும் அதேநேரம், கவியழகன் மேலுள்ள காழ்ப்புணர்ச்சியை வரவேற்க முடியவில்லை. அவருடைய கூற்றில் உண்மைகளும் இருப்பதினால்தான் யாழ்கள உறவுகளும் அவருடைய பல கருத்துக்களுக்கு 'லைக்' போட்டு வரவேற்றுள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Paanch said:

உங்கள் ஊட்டத்தில் உள்ள உண்மைகளை வரவேற்கும் அதேநேரம், கவியழகன் மேலுள்ள காழ்ப்புணர்ச்சியை வரவேற்க முடியவில்லை. அவருடைய கூற்றில் உண்மைகளும் இருப்பதினால்தான் யாழ்கள உறவுகளும் அவருடைய பல கருத்துக்களுக்கு 'லைக்' போட்டு வரவேற்றுள்ளனர்.

கவியலகன் மீது எனக்கு எந்தகாழ்ப்புணர்ச்சியும் இல்லை. அவரை தனிப்பட்ட ரீதியில் எனக்குத் தெரியாது. 

அவர்மீதும் அவர் போன்றவர்கள் மீது எனக்கிருப்பது கோபம் மட்டுமே.  ஏனென்றால் இவர் போன்றவர்கள் ஏற்படுத்தும் சேதம் அப்படி. 

1) இவர்கள் மக்களை பிழையாக வழிநடாத்துகிறார்கள்

2) தற்பெருமைக்காகவும், பணத்திற்காகவும் தங்கள் எசமானாருக்கு விசுவாசமாக இருந்துகொண்டு எங்களுக்கு எங்கள் எல்லோரையும் முட்டாள்களாக நினைப்பது. 

 

(மேலே கடுமையாக எழுதும்போது யோசிக்காமல் எழுதினேன் என்று நினைக்கிறீர்களா?  நிச்சயமாக இல்லை.  எங்கள் எல்லோரையும் இத்தனை இலகுவாக முட்டாளாக்கலாம் என நினைக்Kறார்களே என்பதை நினைக்கும்போது கோபம் வருகிறது. அவ்வளவே) 

  • கருத்துக்கள உறவுகள்

குணாவுக்கு யாழில் அவ்வளவாக வரவேற்பில்லை என்பது புரிகிறது. இதற்கு, அவரும் ஒரு காரணம்.

அவர் யாருக்காக வேலை செய்கிறார் அல்லது அவரது எஜமானர்கள் யாரென்று யாராவது இங்கு கூறினால் ஏனையவர்களுக்குப் புரிந்துகொள்வது இலகுவாக இருக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Paanch said:

உங்கள் ஊட்டத்தில் உள்ள உண்மைகளை வரவேற்கும் அதேநேரம், கவியழகன் மேலுள்ள காழ்ப்புணர்ச்சியை வரவேற்க முடியவில்லை. அவருடைய கூற்றில் உண்மைகளும் இருப்பதினால்தான் யாழ்கள உறவுகளும் அவருடைய பல கருத்துக்களுக்கு 'லைக்' போட்டு வரவேற்றுள்ளனர்.

ஐயா,

நீங்கள் உங்களை போலவே எல்லாரையும் வெளுத்ததெல்லாம் பால் என நம்புகிறீர்கள்.

40 minutes ago, ரஞ்சித் said:

அவர் யாருக்காக வேலை செய்கிறார் அல்லது அவரது எஜமானர்கள் யாரென்று யாராவது இங்கு கூறினால் ஏனையவர்களுக்குப் புரிந்துகொள்வது இலகுவாக இருக்கும். 

இதை கேட்கப்போய் எனக்கு காழ்புணர்ச்சி, என்னால் யுடியூப் வீடியோ போடமுடியாத வெம்பாரத்தில் எழுதுகிறேன் என்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரஞ்சித் said:

குணாவுக்கு யாழில் அவ்வளவாக வரவேற்பில்லை என்பது புரிகிறது. இதற்கு, அவரும் ஒரு காரணம்.

அவர் யாருக்காக வேலை செய்கிறார் அல்லது அவரது எஜமானர்கள் யாரென்று யாராவது இங்கு கூறினால் ஏனையவர்களுக்குப் புரிந்துகொள்வது இலகுவாக இருக்கும். 

போராட்டத்திலீடுபடுபவர்களை வடக்கிற்கு அழைத்து கல்லெறிய வைப்பதனூடாக,  தமிழரை இராணுவத்தினருடனும் சிங்களவர்களுடனும் சிண்டு முடித்துவிடும் தேவை யாருக்கு இருக்கிறதோ அவர்களுக்கே இவர் சேவகம் செய்கிறார். 

வடக்கு கிழக்கில் கலவரத்தை ஏற்படுத்தினால் அதனால் இலாபம் இந்தியாவுக்குத்தான். 

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Kapithan said:

போராட்டத்திலீடுபடுபவர்களை வடக்கிற்கு அழைத்து கல்லெறிய வைப்பதனூடாக,  தமிழரை இராணுவத்தினருடனும் சிங்களவர்களுடனும் சிண்டு முடித்துவிடும் தேவை யாருக்கு இருக்கிறதோ அவர்களுக்கே இவர் சேவகம் செய்கிறார். 

வடக்கு கிழக்கில் கலவரத்தை ஏற்படுத்தினால் அதனால் இலாபம் இந்தியாவுக்குத்தான். 

ஆர்ப்பாட்டாக்காரர்கள் வடக்கிற்கு வரும்போது தமிழர்கள் அவர்கள் மீது கல்லெறியவேண்டிய தேவை இல்லையே? அவர்கள் வரவழைக்கப்படுவதே தமிழர்களுக்காகத்தான் என்றால், ஏன் நாம் கல்லெறியவேண்டும்?

அடுத்தது, ஆர்ப்பாட்டக்காரர்கள் போர்வெற்றிச் சின்னங்களை உடைக்கும்போது, அது அவர்களுக்கும் ராணுவத்திற்குமிடையிலான பிரச்சினையாக அல்லவா மாறும், தமிழர்கள் இதில் பாதிக்கப்படுவதற்கான சாத்தியம் இல்லையே? 

குணாவின் இந்தியச் சார்பு நிலைப்பாடு நான் அறியாதது. ஆனால், அவரின் ஒரு சில காணொளிகளில் இந்தியா மீதும் விமர்சனங்களை முன்வைத்திருந்ததாக நினைவு. இதற்காக அவர் இந்தியாவுக்கு எதிரானவர் என்று சொல்ல வரவில்லை.

அவர் இந்தியாவுக்குச் சார்பானவராக  இருக்கலாம், இனி அவதானித்தால் போயிற்று !

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, ரஞ்சித் said:

ஆர்ப்பாட்டாக்காரர்கள் வடக்கிற்கு வரும்போது தமிழர்கள் அவர்கள் மீது கல்லெறியவேண்டிய தேவை இல்லையே? அவர்கள் வரவழைக்கப்படுவதே தமிழர்களுக்காகத்தான் என்றால், ஏன் நாம் கல்லெறியவேண்டும்?

அடுத்தது, ஆர்ப்பாட்டக்காரர்கள் போர்வெற்றிச் சின்னங்களை உடைக்கும்போது, அது அவர்களுக்கும் ராணுவத்திற்குமிடையிலான பிரச்சினையாக அல்லவா மாறும், தமிழர்கள் இதில் பாதிக்கப்படுவதற்கான சாத்தியம் இல்லையே? 

குணாவின் இந்தியச் சார்பு நிலைப்பாடு நான் அறியாதது. ஆனால், அவரின் ஒரு சில காணொளிகளில் இந்தியா மீதும் விமர்சனங்களை முன்வைத்திருந்ததாக நினைவு. இதற்காக அவர் இந்தியாவுக்கு எதிரானவர் என்று சொல்ல வரவில்லை.

அவர் இந்தியாவுக்குச் சார்பானவராக  இருக்கலாம், இனி அவதானித்தால் போயிற்று !

(நான்  கூறியவை தொடர்பாக ) உங்கள்  புரிதலில் தவறு இருப்பதாக நினைக்கிறேன். 

ஆர்ப்பாட்டக்காறர்கள் வடக்கிற்கு வந்துதான் இராணுவ சின்னங்களை உடைக்க வேண்டிமென்பதில்லையே. அவர்கள் இலங்கையின் தற்போதைக்கான பிரச்சனைக்கான அடிப்படையைப் புரிந்துகொண்டார்களென்றால் அவர்கள் முதலில் தூக்கியெறிய வேண்டியது மகாநாயக்கர்களைத்தான். அதன் பின்னர்தான் இராணுவச் சின்னங்களை நோக்கிப் போக வேண்டும். 

இன்றுவரை, எந்த ஒரு சந்தர்ப்பத்திலும், ஆர்ப்பாட்டக்காறர்களோ அல்லது பத்திரிகையாளர்களில் ஒருவர்கூட  இலங்கையின் இன்றைய பிரச்சனைக்கான அடிப்படை இனப்பிரச்சனைதான் என எங்குமே கூறவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும்.

அரசியல்வாதிகள் நாட்டை குட்டிச்சுவராக்கி விட்டார்கள் என்று கூறவில்லை. மாறாக ராசபக்ஸ குடும்பம் நாட்டைக் கொள்ளையடித்துவிட்டார்கள் என்றுதான் கூறுகிறார்கள்.

"""நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்திற்குச் சென்ற 25  ஆர்ப்பாட்டக்காறர்களில் ஒரு முஸ்லிமைத் தவிர மிகுதி 24 பேரும் சிங்களவர்கள். """"

நிலைமை இப்படி இருக்கையில் தழிழரை திரும்பவும் சிங்களத்தில் நம்பிக்கை வைக்கச் சொல்வதின் பின்னால் உள்ள காரணம்  என்ன ? 

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

இன்றுவரை, எந்த ஒரு சந்தர்ப்பத்திலும், ஆர்ப்பாட்டக்காறர்களோ அல்லது பத்திரிகையாளர்களில் ஒருவர்கூட  இலங்கையின் இன்றைய பிரச்சனைக்கான அடிப்படை இனப்பிரச்சனைதான் என எங்குமே கூறவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும்.

இது உண்மைதான்.

1 hour ago, Kapithan said:

அரசியல்வாதிகள் நாட்டை குட்டிச்சுவராக்கி விட்டார்கள் என்று கூறவில்லை. மாறாக ராசபக்ஸ குடும்பம் நாட்டைக் கொள்ளையடித்துவிட்டார்கள் என்றுதான் கூறுகிறார்கள்.

பெரும்பாலான சிங்களவர்கள் ராஜபக்ஷேக்கள்தான் காரணம் என்று கூறுகிறார்கள். ஆனால், கடந்த 74 வருடகால அரசியல்வாதிகளே இதற்குக் காரணம் என்று கூறுவோரும் இருக்கிறார்கள். ஆனால், சிறிய பகுதியினரே. 

 

1 hour ago, Kapithan said:

"""நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்திற்குச் சென்ற 25  ஆர்ப்பாட்டக்காறர்களில் ஒரு முஸ்லிமைத் தவிர மிகுதி 24 பேரும் சிங்களவர்கள். """"

இதற்குக் பெரும்பாலான தமிழர்கள் ஆர்ப்பாட்டத்திலிருந்து தம்மை விலத்தியிருந்ததும் காரணமாக இருக்கலாம். ஆர்ப்பாட்டங்களில் நாம் பங்கெடுக்கத் தேவையில்லை என்பதுதானே நமது நிலைப்பாடு. அப்படியிருக்கையில், அவர்கள் எம்மையும் அழைத்துப் போகக் காரணம் இருக்காதென்று நினைக்கிறேன். 

 

1 hour ago, Kapithan said:

நிலைமை இப்படி இருக்கையில் தழிழரை திரும்பவும் சிங்களத்தில் நம்பிக்கை வைக்கச் சொல்வதின் பின்னால் உள்ள காரணம்  என்ன ? 

கடந்த காலத்தை வைத்துப் பார்த்தால் அவர்களை நம்பமுடியாது. இனிமேலும் அது மாறும் என்றுச் சொல்ல முடியாது. சிலவேளை, புதிய தலைமுறைச் சிங்களவர்கள் புதிதாக யோசிக்கலாம் என்கிற நப்பாசைதான். இதுகூட, நடப்பதற்கான சாத்தியப்பாடு மிக மிகக் குறைவுதான். 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

ஐயா,

நீங்கள் உங்களை போலவே எல்லாரையும் வெளுத்ததெல்லாம் பால் என நம்புகிறீர்கள்.

உண்மைதான் தம்பி, குடும்பத்தில் நான் கடைக்குட்டி, எனக்குப்பிறகு தம்பி தங்கைகள் யாரும் இல்லை. அதனால் நான் நீண்டகாலம் அம்மாவிடம் பால் குடித்ததாக அண்ணன் அக்காமார் சொல்வார்கள். அதனால்தான் என்னவோ பாலில் எனக்கொரு நம்பிக்கை.😋

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Paanch said:

உண்மைதான் தம்பி, குடும்பத்தில் நான் கடைக்குட்டி, எனக்குப்பிறகு தம்பி தங்கைகள் யாரும் இல்லை. அதனால் நான் நீண்டகாலம் அம்மாவிடம் பால் குடித்ததாக அண்ணன் அக்காமார் சொல்வார்கள். அதனால்தான் என்னவோ பாலில் எனக்கொரு நம்பிக்கை.😋

ஆண்பாலில் நம்பிக்கையா, பெண்பாலில் நம்பிக்கையா என்பதையும் ஒருக்காச் சொல்லிட்டுப் போறது...😉

7 hours ago, ரஞ்சித் said:

இது உண்மைதான்.

பெரும்பாலான சிங்களவர்கள் ராஜபக்ஷேக்கள்தான் காரணம் என்று கூறுகிறார்கள். ஆனால், கடந்த 74 வருடகால அரசியல்வாதிகளே இதற்குக் காரணம் என்று கூறுவோரும் இருக்கிறார்கள். ஆனால், சிறிய பகுதியினரே. 

 

இதற்குக் பெரும்பாலான தமிழர்கள் ஆர்ப்பாட்டத்திலிருந்து தம்மை விலத்தியிருந்ததும் காரணமாக இருக்கலாம். ஆர்ப்பாட்டங்களில் நாம் பங்கெடுக்கத் தேவையில்லை என்பதுதானே நமது நிலைப்பாடு. அப்படியிருக்கையில், அவர்கள் எம்மையும் அழைத்துப் போகக் காரணம் இருக்காதென்று நினைக்கிறேன். 

 

கடந்த காலத்தை வைத்துப் பார்த்தால் அவர்களை நம்பமுடியாது. இனிமேலும் அது மாறும் என்றுச் சொல்ல முடியாது. சிலவேளை, புதிய தலைமுறைச் சிங்களவர்கள் புதிதாக யோசிக்கலாம் என்கிற நப்பாசைதான். இதுகூட, நடப்பதற்கான சாத்தியப்பாடு மிக மிகக் குறைவுதான். 

நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் செயற்பாட்டை அவர்கள்தான் ஆரம்பிக்க வேண்டும். 

நாம் அவசரப்பட முடியாது. 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kapithan said:

ஆண்பாலில் நம்பிக்கையா, பெண்பாலில் நம்பிக்கையா என்பதையும் ஒருக்காச் சொல்லிட்டுப் போறது...😉

என் நம்பிக்கைப் பால் ஒன்று இரண்டல்ல அவை பலது தம்பி.

ஆண்பால்

பெண்பால்

பலர்பால் 

ஒன்றன்பால்

பலவின்பால் 

பசுவின்பால்

ஆட்டுப்பால்

தேங்காய்ப்பால்

மேற்சொன்ன பால்கள் அனைத்திலும் நம்பிக்கை உண்டு, இந்தக் கள்ளிப்பாலில் மட்டும்தான் நம்பிக்கை இல்லை, அதனை யாருக்காவது கொடுத்துப் பரீட்சிக்கலாம் என்று எண்ணியுள்ளேன். உங்கள் உதவி கீடைத்தால் நன்று. இப்படி நான் எழுதியதும்....! நீங்களே பரீட்சித்துப் பாருங்கள்  என்று சொல்லுவீர்கள் என்பதும் எனக்குத் தெரியும்.!!

 

Edited by Paanch

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, Paanch said:

என் நம்பிக்கைப் பால் ஒன்று இரண்டல்ல அவை பலது தம்பி.

ஆண்பால்

பெண்பால்

பலர்பால் 

ஒன்றன்பால்

பலவின்பால் 

பசுவின்பால்

ஆட்டுப்பால்

தேங்காய்ப்பால்

மேற்சொன்ன பால்கள் அனைத்திலும் நம்பிக்கை உண்டு, இந்தக் கள்ளிப்பாலில் மட்டும்தான் நம்பிக்கை இல்லை, அதனை யாருக்காவது கொடுத்துப் பரீட்சிக்கலாம் என்று எண்ணியுள்ளேன். உங்கள் உதவி கீடைத்தால் நன்று. இப்படி நான் எழுதியதும்....! நீங்களே பரீட்சித்துப் பாருங்கள்  என்று சொல்லுவீர்கள் என்பதும் எனக்குத் தெரியும்.!!

 

"அடி கள்ளி" ப்பாலைக் கூறவில்லைத்தானே  ? 😉

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.