Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொற்காலமா அல்லது கறுப்பு ஜூலையா ?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பொற்காலமா அல்லது கறுப்பு ஜூலையா ?

 

 

 

கறுப்பு ஜூலை இலங்கை அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய தருணம், இது தீவில் உள்ள அரசியல் கலாசாரமான தண்டனை விலக்கீட்டின் அடையாளம். வன்முறையைப் பயன்படுத்துவதன் மூலம், தமிழர் வாழ்வை அழித்த மற்றும் சிங்கள-பௌத்த பெரும்பான்மையினரின் வாழ்வாதாரத்தை உயர்த்திய சட்டத்துக்கு புறம்பான நடவடிக்கைகளின் பல அத்தியாயங்கள் இதில் உள்ளன.

”பசியும் வெறும் வயிறும் பொறுத்துக்கொள்ள முடியாததாக மாறும்போது “அவர்கள்” , “எங்களையும்” ஏமாற்றியுள்ளனர் என்ற புரிதல் ஏற்படுகிறது”

தமிழ் ஆனந்தவிநாயகன்

இந்த மாதம் ஜூலை 9 அன்றுதான் இலங்கை தனது மக்கள் புரட்சியைத் தேர்ந்தெடுத்திருந்தது . எதிர்பார்ப்பு (மற்றும் கோபம்) மூலம் அதன் உணர்வில் கொண்டு செல்லப்பட்ட மக்கள் புரட்சியைத் தொடர்ந்து விரைவில் ஏமாற்றத்தைக் கொண்டு வந்தது. ரணில் விக்கிரமசிங்க ஜூலை 21 அன்று இலங்கையின் எட்டாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜே.ஆர் . ஜெயவர்த்தனாவின் நெருங்கிய உறவினர் . உண்மையில் அதே ஜே.ஆர்.ஜெயவர்தனா இலங்கையின் இருண்ட நாட்களான 1983 கறுப்பு ஜூலைக்குத் தலைமை தாங்கினார். 1983 முதல் 2009 வரை 26 வருடங்கள் நீடித்த கொடூரமான உள்நாட்டுப் போரின் தொடக்கப் புள்ளியாக பரவலாகக் கருதப்படும் இதனை 39 ஆவது முறையாக நாம் நினைவுகூருகிறோம். இறுதியில், இந்தப் போர், மேட்டுக்குடி மேலாதிக்கத்தில் வேரூன்றிய சிங்கள அரசியலமைப்பின் சூழல் சார்ந்த பொதுக்கொள்கை மற்றும் தீர்மானமெடுத்தல் தொடர்பான ஓர் அரசியல் பயிற்சியே தவிர வேறொன்றுமில்லை. இன வன்முறை என்பது அரசை உயரடுக்கினர் கைப்பற்றுவதற்கான உண்மையான நோக்கத்துக்கான போர்வையாக இருந்தது.

black-july-1200x550-1-1024x469.jpg
கறுப்பு ஜூலை

கறுப்பு ஜூலை என்றால் என்ன? துல்லியமாகக் கூறுவதானால், அது சகலவற்றினதும் முடிவையும் குறித்தது. பன்முகக் கலாசாரத்தின் எந்த அறிகுறியும் எஞ்சியிருந்தால், அது கறுப்பு ஜூலையின் போது மூச்சை திணறச் செய்தது. அது கலாசார பன்மைத்துவத்தின் முடிவாக அமைந்தது . அத்துடன் இன நல்லிணக்கத்தின் முடிவு ம் மத சகவாழ்வின் முடிவுமாகும். கறுப்பு ஜூலையானது, சிங்கள அரசியல் உயரடுக்கின் அதிகாரத்தை அடிக்கோடிட்டுக் காட்டுவதற்காக கும்பலைப் பயன்படுத்துவதை கொடூரமான முறையில் சித்திரித்தது. கறுப்பு ஜூலையின் கொடூரங்களில் தமிழர்கள் மீது இயக்கப்பட்ட வெறித்தனமான வன்முறையின் களியாட்டமும் அடங்கும். இது புலிகள் வடக்கில் இராணுவத்தின் மீது பதுங்கியிருந்து 13 படையினரைக் கொன்ற பின்னர் தொடங்கியது. இது நாடாளாவிய ரீதியில் படுகொலைக்கு வழிவகுத்தது. இதன் விளைவாக ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் படைகளின் உதவியுடன் ஒழுங்கமைக்கப்பட்ட குண்டர்கள் மற்றும் குற்றவாளிக் கும்பல்களைப் பயன்படுத்தி அரச முகவர்கள் வெலிக்கடையில் தமிழ்க் கைதிகள் படுகொலைகள் மற்றும் ஏனைய பாரிய படுகொலைகள்,வல்லுறவு மற்றும் பாலியல் காட்டுமிராண்டித்தனத்தின் பின்னணியில் இருந்தனர். தமிழர்கள் இனவாத பயங்கரவாதத்தை அனுபவிப்பது இது முதல் முறை அல்ல. திகிலூட்டும் ஜூலை 1983 நிகழ்வுகள், அவற்றின் பரிமாணம், தீவிரம், அடுக்கடுக்கான கிளைகள் மற்றும் பரவலான விளைவுகள் கவனத்தை ஈர்க்கின்றன . இது குறிப்பிடத்தக்க அரசியல் மாற்றத்தைத் தூண்டியதுடன் கிட்டத்தட்ட 26 ஆண்டு கால உள்நாட்டுப் போர் மற்றும் தமிழர்களின் புலம்பெயர்வு உட்பட நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தியது. இலங்கை ஒரு பிளவுபட்ட நாடாக இருந்தது. ஆனால் கறுப்பு ஜூலைக்குப் பிறகு அது சீர்செய்ய முடியாததாக மாறியது. இது இலங்கை அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய தருணம், இது தீவில் உள்ள அரசியல் கலாசாரமான தண்டனை விலக்கீட்டின் அடையாளமாகும். வன்முறையைப் பயன்படுத்துவதன் மூலம், தமிழர் வாழ்வை அழித்த மற்றும் சிங்கள-பௌத்த பெரும்பான்மையினரின் வாழ்வாதாரத்தை உயர்த்திய சட்டத்துக்குப் புறம்பான நடவடிக்கைகளின் பல அத்தியாயங்கள் உள்ளன.

கலாநிதி அசங்க வெலிகல பின்வருமாறு எழுதுகிறார். “1983 கறுப்பு ஜூலையானது இலங்கையின் சமகால வரலாற்றின் இருண்ட தருணத்தை சந்தேகத்துக்கு இடமின்றி எடுத்துக்காட்டுகிறது. இந்தக் கலவரத்தின் பேச முடியாத துன்பியல் , ஒரு வகையான சமூக மயக்கம் சில நாட்களாக எமது சமூகத்தைப் பாதித்தது, அதில் நாங்கள் எமது உணர்வுகள் மற்றும் ஒழுக்கம் ஆகிய இரண்டையும் விட்டுவிட்டோம், மறுபரிசீலனை செய்ய வேண்டியதில்லை. இது எமது சமூகத்தை மாற்றியமைத்தது. மேலும் அதன் வரலாற்றுப் பரிணாமப் பாதையை பல ஆண்டுகளாக சீழ் பிடிப்பதை உறுதிப்படுத்துவதும் மற்றும் உறுதியளிப்பதுமான பாதையில் மாற்றியது.”

1983 ஆம் ஆண்டு ஜூலை மாத இன வன்முறையானது, இலங்கை எவ்வாறு தனது நிர்வாகத்துக்கும் பொதுமக்களுக்குமான அரசியலின் ஓரங்கமாக மரணத்தின் மீதான தனது கட்டுப்பாட்டைப் பயன்படுத்தி, இனத்தின் அடிப்படையில் நிறுவப்பட்ட சிங்கள பௌத்த இனவாத உயரடுக்கின் அரச ஒழுங்கைப் பாதுகாக்கும் போது அது நிர்வகித்த அல்லது பேணிப்பாதுகாத்த இனத்தை அல்லது இனத்தைப் பாதுகாப்பதற்கு ஓர் எடுத்துக்காட்டாகும். உரிமைகள் மற்றும் தேசியவாத சொல்லாடல்களை , அரசை இன ஆத்திரமூட்டல் ஆக மாற்றுகிறது. சிங்கள பௌத்தர்களின் தயவில் தமிழர்கள் இருந்தனர். அரசாங்கம் இந்தப் படுகொலைகள் மற்றும் கலவரங்களில் தலையிடாமல் அமர்ந்திருந்தது.

அன்றும் இன்றும் இன நீதி பற்றியதாகவுள்ளது . உயரடுக்கினர் அடையாள அட்டையைப் பயன்படுத்தி மக்களை போதையில் திசை திருப்பவும், அதிகாரத்தை தக்க வைக்கவும் பயன்படுத்தினர். இன ரீதியா ன அநீதி முஸ்லிம்களுக்கு எதிரான மத அநீதியாக உருவெடுத்துள்ளது. அது இப்போது மேலும் பொருளாதார அநீதியாக உருவெடுத்துள்ளது. இந்தப் பின்னணியில், சட்டத்தையும் ஒழுங்கையும் சகல வழிகளிலும் மீட்டெடுக்க இராணுவத்தினருக்கு அழைப்பு விடுக்கும் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வார்த்தைகள் மிகுந்த எச்சரிக்கையுடன் எடுக்கப்பட வேண்டியவை. அரச வன்முறை மீண்டும் வெடித்து மற்றொரு கறுப்பு ஜூலையாக மாற வாய்ப்பு உள்ளதா? அரச இயந்திரம் இராணுவ மயமாக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையைத் தக்கவைக்க அது எதையும் செய்யக்கூடியதாக இருக்கும்.

மூன்றாம் உலக உயரடுக்குவாதம் , பின் காலனித்துவம் மற்றும் இனமயமாக்கப்பட்ட ஆளுகை

உயரடுக்கு, ஆதரவு மற்றும் ஜனநாயகக் கலாசாரம் இல்லாமை பற்றிய ஒரு கருத்து, அடையாளங்களை உருவாக்குவதை மையமாகக் கொண்ட பூர்வீக அதிகாரத்தை நிறுவியதன் மூலம் கொண்டு வரப்பட்டது. ஹர்ஷன் குமாரசிங்கம் விளக்கமளிக்கையில், “இலங்கையின் உயரடுக்கு பிரித்தானிய நிறுவனங்களை பதினெட்டாம் நூற்றாண்டு காலத்துக்கு முரணான முறையில் இயக்கியது. அதாவது கூட்டு மனப்பான்மைகள் அல்லது விழுமியங்கள் அல்லாமல் அதன் பிரதமர் தலைவர்/போஷகர் ஆதிக்கம் செலுத்தும் ஆதரவை அடிப்படையாகக் கொண்ட அமைச்சரவையைக் கொண்டிருந்தது. கட்சி நிறுவனமயமாக்கலின் பலவீனம் மற்றும் அரசியலமைப்பு ஏற்பாடுகளிலுள்ள தெளிவின்மை ஆகியவை எதிர்கால அரசியல் மோதலுக்கும் சமூகத்தின் பிரிவுகளை ஓரங்கட்டுவதற்கும் அடித்தளமாக அமைந்தன.
இலங்கையின் உயரடுக்குகள், வாடிக்கையாளர் அரசியலின் வசதியான சூழலை உருவாக்க, அதிகாரத்தின் மீதான தங்கள் பிடியைத் தக்கவைக்க அடையாள அரசியலைப் பயன்படுத்தி வருகின்றனர். அது டி.எஸ்.சேனாநாயக்க, எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க, ஜே.ஆர்.ஜெயவர்தன அல்லது மஹிந்த மற்றும் கோத்தாபய ராஜபக்ஷவென யாராக இருந்தாலும் அவர்கள் வரலாற்றின் தவறுகள் அல்ல. அவர்களின் விசுவாசம் உலக நிதி மூலதனத்துடன் உள்ளது. அவை சர்வதேச சட்டத்தை கையாளுதல் மற்றும் மேலாதிக்கத்தை நிலைநிறுத்துதல் ஆகியவற்றின் ஒரு பகுதியாகும். மேலாதிக்க எதிர்ப்பைக் கட்டியெழுப்ப, நாட்டிலுள்ள வேறுபாடுகளை ஒரு பின் காலனித்துவ சமூகத்தின் நவதாராளவாத முன்னுதாரணத்துக்காகப் பயன்படுத்திய உயரடுக்கின் கைகளில் பொதுவான துன்பங்களில் எமது எதிர்ப்பு வேரூன்றியுள்ளது என்பதை மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். இந்த நவதாராளவாத முன்னுதாரணமானது மேற்கத்திய நிறுவனங்கள் மற்றும் சர்வதேச சட்டங்களுக்கு அடிபணியக்கூடிய விதத்தில் உலகப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப உதவியது.

அரசியல் மறுசீரமைப்புக்காகப் போராடுவதற்குப் பதிலாக, இலங்கையின் உயரடுக்குகள், குறிப்பாக சிங்கள உயரடுக்குகள், பிரித்தானியர்கள் முன்பு ஆதிக்கம் செலுத்திய நிர்வாகம் மற்றும் அதிகாரத்துவத்தை அணுகுவதில் அதிக ஆர்வம் காட்டினர். ஒரு வெகுஜன இயக்கம் இருக்கும்போது தேசியத் தலைமைக்கு ஆதரவு கோரி பகிரங்க அழைப்பு விடுக்க வேண்டிய அவசியமில்லை. இருப்பினும், இனம் மற்றும் மதம் தொடர்பான விடயங்களில் அடிக்கடி தொடர்புடைய ஏனைய காரணங்களுக்கு ஆதரவாக குறிப்பிடத்தக்க அணிதிரட்டல் இருந்தது. இலங்கையிலுள்ள உயரடுக்கினருக்கு துறைகள் மற்றும் வகைப்பாடுகளுக்கு இடையேயான வலையமைப்புகள் இருப்பது அவர்களின் தனித்துவமான பண்புகளில் ஒன்றாகும். சமூக மற்றும் குடும்ப வலைப்பின்னல்கள் மூலம், அரசியல் அதிகாரமும் தனியார் மூலதனமும் வலுவாக தொடர்புபடுத்தப்பட்டுள்ளன. பொருளாதார விரிவாக்கம், குறிப்பாக தனியார் துறையில், பெரும்பாலும் செல்வந்த மேல் மாகாணம் மற்றும் குறிப்பாக கொழும்பு பகுதியில் மட்டுப்படுத்தப்பட்டிருப்பது நிலைமையை இன்னும் மோசமாக்குகிறது.

ரணில் விக்கிரமசிங்க , இறுதியில், பெரும்பான்மையை ஒழுங்கமைத்த ராஜபக்ஷ குலத்தின் ஆதரவில் தங்கியிருக்க முடியும். இதையொட்டி அவர் அவர்களை விசாரணைகளிலிருந்து பாதுகாக்க முடியும். ராஜபக்ஷ குடும்பத்தின் கூட்டாளியை அவர் புதிய பிரதமராக நியமித்துள்ளார். உயரடுக்கினர் தங்கள் செல்வத்தைப் பாதுகாப்பதற்காக ஒருவருக்கொருவர் துரோகம் செய்வதில்லை. இந்தப் போர் பல்வேறு வடிவங்களைக் கொண்டிருந்தாலும் சிங்கள மக்களின் அடையாளத்தையும் சுயநலப் பணியையும் நிலைநாட்டுவதே அதன் முக்கிய நோக்கமாக இருந்தது. அடையாள அரசியல் என்பது மூன்றாம் உலக உயரடுக்கினரின் கவனத்தைத் திசை திருப்பவும், முன்னேற்றத்தைத் தடுக்கவும் மற்றும் தாங்கள் இலாபம் ஈட்டவும் ஒரு சூழ்ச்சியாகச் செயற்பட்டது. படிமுறையான ஒருவகை அரசியல் ஊழல் என்பது இலங்கையில் மட்டும் நிகழாத ஒரு நிகழ்வுஅல்ல . ஏனைய மூன்றாம் உலக நாடுகளில் உள்ள அரசாங்கங்கள் இலங்கையின் சரியான அச்சுப் பிரதிகளாக இருக்கின்றன . ஆனால் பசி மற்றும் வெறும் வயிறு சகிக்க முடியாததாக மாறும்போது “அவர்கள்” “எங்களையும்” ஏமாற்றியுள்ளனர் என்ற புரிதல் ஏற்படுகிறது . தற்போதைய குழப்பம் விமர்சன ரீதியான எழுச்சியை ஏற்படுத்துமா?

போருக்குப் பின்னர் பொது இடத்தை இராணுவமயமாக்குவது – உள்ளூர் சிங்கள நபரொருவருக்கு இன மேலாதிக்கத்தைக் காண்பிப்பது மற்றும் கடுமையான இன அளவுருக்களுக்குள் மேலாதிக்கத்தை நிரூபிப்பது என்ற நோக்கத்துக்கு உதவுகிறது. ஆனால் உண்மையில் அவை ஒரு திரையரங்கமாக மட்டுமே இருந்திருக்கின்றன.

அதன் பின்னால் உயரடுக்கு அதிகாரம் தன்னை வளப்படுத்திக் கொண்டது. இது இனவாதம், மத அடிப்படைவாதம், மேலாதிக்க நுட்பங்கள் மற்றும் இராணுவவாதம் ஆகியவற்றின் நச்சு மண்ணில் கட்டப்பட்ட ஊழல் கட்டமைப்பை உருவாக்கியது. நீதிக்கான தேடல் ஒன்றோடொன்று தொடர்புடையது. பொருளாதார நீதி இல்லாமல் இன நீதி இருக்க முடியாது. முதலாளித்துவம் ஏற்றத்தாழ்வுகளில் தங்கியுள்ளது.

இனவாதம் அதை மறைக்கிறது. அனைத்து மக்களும் எதிராக ஒருவருக்கொருவர் போட்டியிட்டு, மக்களுக்குச் சேவை செய்யாமல், தமக்கு மட்டுமே சேவை செய்யும் ஊழல் நிறைந்த மூன்றாம் உலக உயரடுக்கின் மேலாதிக்கத்தை சவால் செய்ய, எதிர்க்க மற்றும் வெல்ல வேண்டிய தருணம் வந்துவிட்டது.

கிரவுண்ட் வியூஸ்

https://thinakkural.lk/article/195115

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.