Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சீதுவை விகாராதிபதியின் கொலை : டுபாய் செல்ல முயன்ற இளம் பிக்கு விமான நிலையத்தில் வைத்து கைது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சீதுவை விகாராதிபதியின் கொலை : டுபாய் செல்ல முயன்ற இளம் பிக்கு விமான நிலையத்தில் வைத்து கைது

By T YUWARAJ

15 SEP, 2022 | 06:25 PM
image

 

( எம்.எப்.எம்.பஸீர்)

 

 சீதுவை பகுதியின் விகாரை ஒன்றிலிருந்து,  விகாராதிபதி தேரர் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அதே விகாரையில் தங்கியிருந்த 19 வயதான பிக்கு ஒருவரே, டுபாய் நோக்கி செல்ல முற்பட்ட போது, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான ஈ.கே. 649 எனும் விமானத்தில் டுபாய் நோக்கி செல்ல, கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்த போது இன்று ( 15) அதிகாலை 1.00 மணியளவில்  ஏக்கல சுதந்த ஸ்ரீ எனும் குறித்த இளம் பிக்கு கைது செய்யப்பட்டுள்ளார்.

 சீதுவ பொலிஸார் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு நேற்று அறிவிறுத்தியிருந்த நிலையில், சந்தேக நபர் விமான நிலையம் வந்த போது அவரை குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் கைது செய்து சீதுவை பொலிசாரிடம் இன்று முற்பகல் ஒப்படைத்தனர்.

சீதுவை - வேத்தேவ, ரந்தொலுவ ஸ்ரீ  நத்தாராம  விகாரையின்  விகாராதிபதி  நெடகமுவே  மஹானாம தேரரே ( 50)  நேற்று ( 14) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். விகாரையின் விகாராதிபதி தங்குமிடத்தில் கட்டில் ஒன்றின் மேல் முகம் துணியால் கட்டப்பட்டு  வாய்க்குள்  துணி தினிக்கப்பட்டிருந்த நிலையில்   சடலம் மீட்கப்பட்டதாக பொலிசார் கூறினர். இதன்போது போர்வை ஒன்றால் சடலம் போர்த்தப்பட்டிருந்துள்ளது.

  குறித்த தேரர் கழுத்து நெறித்து கொலைச் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

 விகாரையிலிருந்து துர் நாற்றம் வீசுவதாக பொலிசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

 குறித்த விகாரையில், 18 வயதான இளம்  பிக்கு ஒருவரும் தங்கியிருந்துள்ளதுடன்,  அவர் தொடர்பில் எந்த தகவலும் இல்லாத நிலையில், பொலிஸாரின் கவனம் குறித்த பிக்கு மீது திரும்பிய நிலையில் விசாரணைகள் தீவிரப்ப்டுத்தப்பட்டிருந்தன.

நேற்று இரவு எட்டு மணி அளவில் சம்பவ இடத்துகு நீர்கொழும்பு பதில் நீதவான் நெல்சன் குமார நாயக்க சென்று நீதிவான் நீதிமன்ற விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டிருந்தார்.

 இந் நிலையில் சீதுவ பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளில், விகாரையில் இருந்த டிபண்டர் ரக வாகனம் ஒன்றும் வெகன் ஆர் கார் ஒன்றும் காணாமல் போயுள்ளமை தெரியவந்த நிலையில், அதன் ஊடாகவும் விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இவ்வாறான பின்னணியிலேயே சந்தேகத்தின் பேரில் இளம் பிக்கு கைது செய்யப்பட்டுள்ளார்.

 இதுவரை முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகளின் பிரகாரம்,  விகாரையிலிருந்த டிபண்டர் வண்டி மற்றும் வெகன் ஆர் கார் ஆகியவற்றின் புத்தகங்களைப் பெற்றுக்கொள்வதற்காக விகாராதிபதி கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

 கடந்த 12 ஆம் திகதி பிற்பகல் 3.00 மணியளவில் இந்த கொலை நடந்துள்ளதாக தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதன் பின்னரும்  சந்தேக நபரான இளம் பிக்கு விகாரையில் தங்கியிருந்து இரு வாகனங்களை விற்பனை செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். 

அதன் பின்னர் இரு வாகனங்களையும் 2 கோடி ரூபாவுக்கு விற்றுள்ள பிக்கு,  விகாரையிலிருந்து நேற்று சென்றுள்ளார். அதன் பின்னரேயே விகாரையில் ஒருவரும் இல்லாமை, விகாராதிபதியின் தங்குமிடத்திலிருந்து வந்த துர் நாற்றம் ஆகியவையால் சந்தேகமடைந்த மக்கள் பொலிசாருக்கு தகவளித்துள்ளனர்.

 சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் சீதுவ பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.  கைது செய்யப்பட்ட  பிக்குவை நீர் கொழும்பு நீதிவான் நீதிமன்றில் முன்னிலைபப்டுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

https://www.virakesari.lk/article/135736

  • கருத்துக்கள உறவுகள்

அட, பெரிய பிக்குவை…. கொலையும் செய்து, கொள்ளையும் அடித்து, அதை 2 கோடி ரூபாய்க்கு விற்று…
வெளி நாட்டுக்கு தப்பி ஓடுகிற கடைசி நிமிடத்தில் பிடித்து விட்டார்கள்.
இந்தப் பிக்குகள் செய்யாத, கிரிமினல் வேலைகளே இல்லைப் போலுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, தமிழ் சிறி said:

அட, பெரிய பிக்குவை…. கொலையும் செய்து, கொள்ளையும் அடித்து, அதை 2 கோடி ரூபாய்க்கு விற்று…
வெளி நாட்டுக்கு தப்பி ஓடுகிற கடைசி நிமிடத்தில் பிடித்து விட்டார்கள்.
இந்தப் பிக்குகள் செய்யாத, கிரிமினல் வேலைகளே இல்லைப் போலுள்ளது.

தலை தொடக்கம் தறுதலை பிக்குவரை ..ரத்தத்தில் ஊறினது...

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல வேளை, இந்தக்காலகடடத்தில் விடுதலைப்புலிகள் இல்லை, இருந்திருந்தால் அவர்கள் தலையில் பழியைப்போட்டு பொடிப்பிக்கு தப்பியிருக்கும். பாராளுமன்றம் கொலைகாரரால் நிரம்பியிருக்கு, விகாரைகள் கொலைகாரராலும் காம வெறியராலும்  நிரம்புது, நாடே கொலையால் நிரம்பி வழியுது. இலங்கையை ஏன்  சிங்கள பவுத்த நாடு என்று அழைக்கிறீர்கள்  என்று யாராவது  கேட்டால்; அங்கு கொலையும், கொள்ளையும்,  பாலியல் வல்லுறவும் நிறைந்திருப்பதால் அது சிங்கள பவுத்த நாடு என்று அழைக்கப்படுவதாக   சொல்லுங்கள். இந்த லட்ஷணத்தில சரத் வீரசேகராவின் வீரப்பேச்சுக்கு ஒன்றும் குறைச்சலில்லை. முதலில் இறந்த பிக்கு பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டாரா என்று பரிசோதிக்க வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

சீதுவை விகாராதிபதி கொலை : இளம் பிக்குவின் காதலி, முதலாளியை கைது செய்ய சிறப்பு அறிவித்தல்

By T Yuwaraj

19 Sep, 2022 | 09:57 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

சீதுவை பகுதியின் விகாரை ஒன்றிலிருந்து, விகாராதிபதி தேரர் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபரான  அதே விகாரையில் தங்கியிருந்த 19 வயதான பிக்குவின், காதலி மற்றும் காதலியின் முதலாளி ஆகியோரைக்  கைது செய்ய விசாரணையாளர்கள் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

டுபாய் நோக்கி செல்ல முற்பட்ட போது, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கடந்த 15 ஆம் திகதி  இளம் பிக்கு கைது செய்யப்பட்ட நிலையில்  தற்போது அவர்  எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந் நிலையில் முன்னெடுக்கப்பட்டுள்ள மேலதிக விசாரணைகளில்,  சந்தேக நபரான  இளம் பிக்குவின் டுபாயில் வேலை செய்யும்  காதலி,  அக்காதலிக்கு அங்கு தொழில் வழங்கியுள்ள முதலாளி ( இலங்கையர்) ஆகியோருக்கும் கொலையுடன் தொடர்பிருப்பது தெரியவந்துள்ளது.

அதன்படி அது குறித்து நீதிமன்றம் ஊடாக திறந்த பிடியாணை பெற்று, சிவப்பு அறிவித்தல் ஊடாக அவர்களை நாடு கடத்தி அழைத்து வருவதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக விசாரணைகளுக்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான ஈ.கே. 649 எனும் விமானத்தில் டுபாய் நோக்கி செல்ல, கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்த போது  கடந்த 15 ஆம் திகதி  அதிகாலை 1.00 மணியளவில்  ஏக்கல சுதந்த ஸ்ரீ எனும்  பிரதான சந்தேக நபரான  இளம் பிக்கு கைது செய்யப்பட்டிருந்தார். அப்போதும் அவர் காவி உடையிலேயே இருந்திருந்தார். அவர் கைது செய்யப்பட்டது அவரது 19 ஆவது பிறந்த தினத்தின் போதாகும் என்பதும் விஷேட அம்சமாகும்.

சீதுவ பொலிஸார் கட்டுநாயக்க விமான நிலையத்தை அறிவிறுத்தியிருந்த நிலையில், சந்தேக நபர் விமான நிலையம் வந்த போது அவரை குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் கைது செய்து சீதுவை பொலிசாரிடம்  ஒப்படைத்தனர்.இதனையடுத்து விசாரணைகள் நடாத்தப்பட்டன.

சீதுவை - வேத்தேவ, ரந்தொலுவ ஸ்ரீ  நத்தாராம  விகாரையின்  விகாராதிபதி  நெடகமுவே  மஹானாம தேரரே ( 50)   கடந்த 14 ஆம் திகதி   சடலமாக மீட்கப்பட்டுள்ளார். விகாரையின் விகாராதிபதி தங்குமிடத்தில் கட்டில் ஒன்றின் மேல் முகம் துணியால் கட்டப்பட்டு  வாய்க்குள்  துணி தினிக்கப்பட்டிருந்த நிலையில்   சடலம் மீட்கப்பட்டதாக பொலிசார் கூறினர். இதன்போது போர்வை ஒன்றால் சடலம் போர்த்தப்பட்டிருந்துள்ளது.

விகாரையிலிருந்து துர் நாற்றம் வீசுவதாக பொலிசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த விகாரையில், 19 வயதான இளம்  பிக்கு ஒருவரும் தங்கியிருந்துள்ளதுடன்,  அவர் தொடர்பில் எந்த தகவலும் இல்லாத நிலையில், பொலிஸாரின் கவனம் குறித்த பிக்கு மீது திரும்பிய நிலையில் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டு அவர் முதலில் கைது செய்யப்பட்டார்.

இந் நிலையில் சீதுவ பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளில், விகாரையில் இருந்த டிபெண்டர் ரக வாகனம் ஒன்றும் வெகன் ஆர் கார் ஒன்றும் காணாமல் போயுள்ளமை தெரியவந்த நிலையில், அதன் ஊடாகவும் விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இதுவரை முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகளின் பிரகாரம்,  விகாரையிலிருந்த டிபண்டர் வண்டி மற்றும் வெகன் ஆர் கார் ஆகியவற்றின் புத்தகங்களைப் பெற்றுக்கொள்வதற்காக விகாராதிபதி கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

டிபண்டர் வண்டியானது போலி ஆவணங்கள் ஊடாக மினுவாங்கொடை பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு விற்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அவ்வாகனம் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.  157 இலட்சம் ரூபாவுக்கு  அந்த வண்டி விற்கப்பட்டுள்ள நிலையில், குறித்த பணம், அரசியல் மற்றும் பாதாள உலக தொடர்புகளை கொண்ட வத்தளை பகுதியைச் சேர்ந்த ஒருவரின்  வங்கிக் கணக்கில் வைப்புச் செய்யப்ப்ட்டுள்ளது. அந்த நபரையும் பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.  அவர் வாகன விற்பனை தரகராக செயற்பட்டுள்ளமை தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும் தற்போது அந்த வாகன விற்பனை பணமானது சந்தேக நபரான பிக்குவின் டுபாயிலுள்ள காதலியின் முதலாளிக்கு உண்டியல் முறை ஊடாக அனுப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல்களை வெளிப்படுத்திக் கொண்டுள்ளனர்.

வெகனார் காரானது, சந்தேக நபரான பிக்குவின் பெயரிலேயே இருந்துள்ளதுடன் அது 52 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அந்த பணத்தின் ஒரு பகுதியை சந்தேக நபரான பிக்கு டுபாய் தப்பிச் செல்ல  உடன் வைத்திருந்துள்ள நிலையில்,  மற்றொரு பகுதி, கொலையுடன் தொடர்புபட்டதாக தேடப்பட்டு வரும், டுபாயில் உள்ள காதலியின் பெற்றோர் என முன்னிலையான தம்பதிக்கு பிக்குவால் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த தம்பதியில் பெண், டுபாயிலுள்ள காதலியின் தாய் எனவும் தந்தையாக முன்னிலையான நபர்  அப்பெண்ணின் கள்ளக் காதலன் எனவும் தற்போது தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவர்களைக் கைது செய்ய விசாரணைகள் தீவிரபப்டுத்தப்பட்டுள்ளன.  அவர்களைக் கைது செய்ய 3 பொலிஸ்  குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

கடந்த 12 ஆம் திகதி பிற்பகல் 3.00 மணியளவில் இந்த கொலை நடந்துள்ளதாக தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதன் பின்னரும்  சந்தேக நபரான இளம் பிக்கு விகாரையில் தங்கியிருந்து இரு வாகனங்களை விற்பனை செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். அதன் பின்னரே விகாரையில் ஒருவரும் இல்லாமை, விகாராதிபதியின் தங்குமிடத்திலிருந்து வந்த துர் நாற்றம் ஆகியவையால் சந்தேகமடைந்த மக்கள் பொலிசாருக்கு தகவளித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள்   நீர் கொழும்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சமன் சிகேராவின்  மேற்பார்வையில், உதவி பொலிஸ் அத்தியட்சர் எரிக் பெரேராவின் ஆலோசனைக்கு அமைய சீதுவை  பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். 

 

https://www.virakesari.lk/article/135970

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

157 இலட்சம் ரூபாவுக்கு  அந்த வண்டி விற்கப்பட்டுள்ள நிலையில்,

 

3 hours ago, கிருபன் said:

அது 52 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

ஒரு பிக்குவுக்கு இவ்வளவு தொகை எங்கிருந்து வந்தது? இத்தனை வாகனத்தை வைத்து என்ன செய்தார்? ம்ம் ... ஒரு பிக்கு மாணவன், அவனுக்கு ஒரு காதலி, பிக்குவோடு மகளை சேர்த்து பணம் பிடுங்க ஒரு அம்மா, அவவுக்கு ஒரு காதலன், பவுத்தம் தழைக்கும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.