Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

குடாநாட்டிலிருந்து படையினர் செறிவான பல்குழல் வெடிகணைத் தாக்குதல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குடாநாட்டிலிருந்து படையினர் செறிவான பல்குழல் வெடிகணைத் தாக்குதல்

யாழ்ப்பாணக் குடாநாட்டிலிருந்து இன்று காலை முதல் சிறிலங்காப் படையினர் செறிவான பல்குழல் வெடிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இன்று செவ்வாய்க்கிழமை காலை படையினர் அவசர, அவசரமாக பல்குழல் வெடிகணை செலுத்திகளை யாழ். முற்றவெளி விளையாட்டு மைதானத்துக்கு நகர்த்தி இந்த செறிவான வெடிகணைத் தாக்குதல்களை நடத்தினர்.

பலாலியிலிருந்து இன்று காலை இரண்டு பல்குழல் வெடிகணை செலுத்திகள் யாழ். முற்றவெளியில் பொது மைதானத்துக்கு படையினரால் கொண்டு செல்லப்பட்டன. அங்கு வைத்து வெடிகணைத் தாக்குதலை படையினர் நடத்தியுள்ளனர்.

வெடிகணைத் தாக்குதலை படையினர் நடத்திவிட்டு உடனடியாக அங்கிருந்து அதனைப் பின்னகர்த்துவதும் அதன் பின்னர் முன்னகர்த்தி தாக்குதல் நடத்துவதுமாக பல மணி நேரம் வெடிகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது

இதனால் யாழ். போதனா மருத்துவமனை அமைந்துள்ள பகுதியும், யாழ். நகரமும் அதிர்ந்த வண்ணமிருந்தது.

தொடர்ச்சியான தாக்குதலை படையினர் கடற்பகுதி மற்றும் யாழிலிருந்து தென்கிழக்குப் பகுதி நோக்கி நடத்தினர்.

அதேவேளை நகரை அண்டிய பகுதியிலிருந்தும் கோப்பாய் வெளிப்பகுதியிலிருந்து படையினர் முகமாலைப் பகுதியை நோக்கியும் எறிகணைத் தாக்குதல் மற்றும் பல்குழல் வெடிகணைத் தாக்குதலையும் நடத்தியுள்ளனர். இதனால் யாழ். முழுவதும் அதிர்ந்துள்ளது.

இதனிடையே யாழ். தீவகத்துக்கான போக்குவரத்து இன்று காலை முதல் படையினரால் தடை செய்யப்பட்டுள்ளது.

யாழ். நகரிலிருந்து தீவகத்துக்குச் செல்லும் பண்ணை நுழைவாசல் பாதை படையினரால் மூடப்பட்டுள்ளது.

தீவகத்துக்கான போக்குவரத்து இன்று படையினாரால் முற்றாக தடைசெய்யப்பட்டு பண்ணை மற்றும் முற்றவெளிப்பகுதியில் படையினரின் தொலைவீச்சு பல்குழல் வெடிகணை செலுத்திகள் நிறுத்தப்பட்டு வெடிகணைத் தாக்குதல்கள் படையினரால் நடத்தப்பட்டதால் பாதை தடை செய்யப்பட்டது.

-புதினம்

வெடிகணைக்கும் எறிகணைக்கும் என்ன வித்தியாசம் என்று யாருக்கும் தெரியுமோ? :(

இது புதுசா சிறீலங்கா இராணுவம் அறிமுகப்படுத்திய ஆயுதமா அல்லது புதினம் அறிமுகப்படுத்தியதா?

  • கருத்துக்கள உறவுகள்

"புதினம்" அறிமுகப்படுத்திய "வெடிகணையாகத்" தான் இருக்க வேண்டும்.

வெடிகணைக்கும் எறிகணைக்கும் என்ன வித்தியாசம் என்று யாருக்கும் தெரியுமோ? :(

இது புதுசா சிறீலங்கா இராணுவம் அறிமுகப்படுத்திய ஆயுதமா அல்லது புதினம் அறிமுகப்படுத்தியதா?

பிச்சை எடுத்ததாம் பெருமாளு.... அதை பறிச்சுதாம் அனுமாரு..... :angry:

  • கருத்துக்கள உறவுகள்

பல்குழல் வெடிகணை என்பது மல்ரிபரல் றொக்கட்டினைத்தான் குறிப்பிடுகின்றார்கள் என நினைக்கின்றேன்.

வெடிகணை என்றே புலிகளின் குரலின் செய்திகளிலும் பாவித்து வருகின்றனர்.

ஆகவே இது புதினத்தின் கண்டுபிடிப்பு என்று கூறுவதற்கில்லை. ஏலவே வழக்கத்தில் உள்ள சொற்பிரயோகத்தினைத்தான் அவர்களும் பாவிக்கின்றார்கள் என்று நம்புகின்றேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தொடர் ய­ல் சத்தங்களால் குடாநாடு முழுவதிலும் மக்கள் நேற்று ஒரு மணிநேரம் பீதியில் உறைந்தனர்!

யாழ்.நகரப் பகுதி உட்பட யாழ்.குடாநாடு முழுவதும் நேற்றுக்காலை சுமார் 45 நிமிட நேரமாக ஷெல் சத்தங்களினால் அதிர்ந்தது. திடீரெனத் தொடர்ச்சியாகக் கேட்ட தாங்கமுடியாத கர்ண கொடூரமான சத்தங்களால் மக்கள் பதற்றமடைந்தனர். என்னவோ ஏதோ, போர் தொடங்கிவிட்டதோ என்ற பதற்றத்துடன் பீதியில் உறைந்தனர்.

யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் காலை சுமார் 8.30 மணியளவில் வழமையான பல்குழல் ஷெல் வீச்சுச் சத்தம் கேட்டது. ஆனால் நிமிடங்கள் செல்லச் செல்ல கடும் ஓசைகள் காதைப் பிளந்து மக்களின் நெஞ்சைப் பதற வைத்தது.

சுமார் 8.45 மணி தொடக்கம் 9.35 மணிவரை மிக அருகில் இருந்து பல்குழல் வீச்சுச் சத்தங்கள் கதறிக்கொண்டு சென்றதால் நடந்தது என்ன என்று தெரியாது மக்கள் அச்சம் அடைந்தனர். கதி கலங்கினர்.

கடும் ஷெல் வீச்சு நடந்த வேளையில் நகரில் வாகனங்களில் பயணம் செய்தவர்களும் சைக்கிள்களில் சென்றவர்களும் வீதிகளில் சென்ற பாதசாரிகளும் வீதிகளில் படுத்தும் விரைந்து ஓடியும் பாதுகாப்புத் தேடி அல்லோலகல்லோலப்பட்டனர். மக்கள் மத்தியில் பெரும் அச்சநிலை பரவியது.

நகரில் நின்ற பஸ்களும் நகருக்கு அப்பால் சென்றன. சில இடங்களில் வர்த்தக நிறுவனங்களை மூடவும் ஊழியர்கள் தயா ராகினர்.

கோட்டைப் பகுதியில் வைத்து பல்குழல் பீரங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதால், யாழ்.நகரம் அசைந்து நடுங்கியது.

நேற்றைய தாக்குதலால் தீவுப் பகுதிக்கான போக்குவரத்துக்கள் சுமார் 2 மணிநேரம் தடைப்பட்டிருந்தன.

தென்மராட்சி, சாவகச்சேரிக்கான பஸ் சேவைகள் யாவும் யாழ்.ஆஸ்பத்திரி வீதி ஊடாகவே மேற்கொள்ளப்பட்டன.

யாழ். நகரத்தின் நிலை இப்படியிருக்க

குடாநாட்டின் ஏனைய பிரதேசங்களிலும் மக்கள் அச்சமடையும் அளவுக்கு ஷெல் வீச்சுகள் தொடர்ச்சியாகவும் கனதியாகவும் இடம்பெற்றன. அவை சமகாலத்தில் பிரதேச மட்ட இராணுவ முகாம்களில் இருந்து மேற்கொள்ளப்பட்டதால் சகல பிரதேசங்களிலும் மக்கள் பீதி அடைந்தனர். மொத்தத்தில் சுமார் ஒரு மணிநேரம் குடாநாடு தழுவிய ரீதியில் மக்கள் மத்தியில் பதற்றமும் பீதியும் நிலவின.

எனினும் ஒரு மணி நேரத்தில் யாவும் அடங்கி, பதற்றம் நீங்கி மக்கள் தத்தமது நாளாந்த அலுவல்களில் ஈடுபட்டனர்.

இதேவேளை

குடாக்கடலில் தொழிலுக்கு சென்ற மீனவர்கள் ஷெல் தாக்குதல் காரணமாக இடை நடுவில் கரை திரும்பினர்.

- உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.