Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகம் ஏன் இவ்வளவு பிளவு பட்டிருக்கிறது-பா .உதயன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்


 உலகம் ஏன் இவ்வளவு பிளவு பட்டிருக்கிறது-பா .உதயன்

ஐ நாவும் அனைத்து சமாதான இயக்கமும் இரண்டாம் உலகப் போருக்கு பின் இனி வேண்டாம் யுத்தம் உலகில் என்று தானே ஆரம்பித்தார்கள். அதன் பின் எத்தனை யுத்தம் உலகில் நடந்தன, நடக்கின்றன, எத்தனை மனிதர் இது வரை இறந்தனர், எத்தனை குழந்தைகள் வாழ்வை இழந்தனர், எத்தனை தேசங்கள் அழிக்கப்பட்டன. எத்தனை ஆக்கிரமிப்பு யுத்தங்கழும் எல்லை தாண்டிய பயங்கரவாதங்களும் உலகில் நடந்தன. 

இன்று ருசியாவுக்கும் உக்கிரேனுக்கும் இடையிலான யுத்தம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இராஜதந்திர ரீதியாக இதை தீர்க்க முடியாமல் அவர் அவர் பூகோள அரசியல் நலன் சார்ந்து பெரும் ஆயத மோதலாக வெடித்துள்ளது. இரண்டாம் உலக மகா யுத்தத்துக்கு பின் ஐரோப்பாவுக்கு பெரும் சவால் மிக்கதாகவும் அவர்கள் பொருளாதாராத்தையே அசைக்க கூடியதோர் யுத்தமாக மாறி இருக்கிறது. ரோமானிய பேரரசின் தத்துஞானி சீசரோ(Cicero) கூறியதுபோல் யுத்த காலங்களில் சட்டமும் ஒழுங்கும் அமைதியாகவே இருந்து விடுகின்றன.

இரண்டாம் உலக மகா யுத்தத்திற்கு பின் இன்று ஐரோப்பா பெரும் யுத்தம் ஒன்றை எதிர் நோக்கியுள்ளது. இன்று நாம் புதிய ஒரு பனிப் போரையும் அரசியல் பொருளாதார சித்தாந்த ரீதியாகவும் அத்தோடு ஏழை பணக்கார நாடுகளாகவும் முகாம்களாக பிரிக்கப்பட்ட உலகையும் இன்னும் ஒரு புதிய உலக ஒழுங்கை நோக்கி உலகம் பயணிப்பதையும் பார்க்கிறோம்.

Harvard University அரசியல் பேராசிரியர் Joseph nye என்ற சர்வதேச அரசியல் ஆய்வாளர் சொல்லுவது போல் உலகம் இன்று பல முகாம்களாக பிரிக்கப்பட்டு ஆயத அதிகார அரசியல் பொருளாதாரப் போட்டியாக மாறி இருக்கின்றது. இந்தப் போட்டி நிலைமையும் யுத்த நிலைமையையும் தணிக்க வேண்டுமானால் கடினமான ஒரு பாதையை (Hard power) தெரியாமல் ஒரு மென் வலு சக்தி (Soft power) ஊடக உலக மோதல்களை தணிக்க முடியும் என தான் எழுதிய (Soft power) என்னும் நூலில் விபரமாக முன் வைக்கிறார்.

ஏழை நாடுகளின் குழந்தைகள் இறந்தால் எவரும் கேட்பதற்கு இல்லை ஆனால் அதிகாரமும் பணமும் உள்ள நாடுகளின் குழந்தைகள் இறந்தால் அனைவரும் கேட்கிறார்கள். யுத்தற்திற்காகவும்  ஆயுதம் செய்வதும் விற்பதுமாகவும் எத்தனை கோடி கோடியாக பணத்தை செலவு செய்கிறார்கள்.ஆனால் இன்று உலகில் எத்தனை வறிய நாடுகள் இருக்கின்றன. எத்தனை குழந்தைகள் இன்று உலகில் உணவு இல்லாமலும் ஒரு வேளை உணவு கிடைக்காமலும் இறந்து போகிறார்கள். எல்லோருக்கும் எல்லாமே சமத்துவமாய் கிடைப்பதில்லை இன்னும் ஆயுதம் செய்வதும் விற்பதுமாக அதிகார வர்க்கத்தின் நலனோடு உருளுதே உலகம். ஐ நா வாக இருந்தால் என்ன ஆயிரம் சமாதானம் பேசும் ஸ்தாபனங்களாக இருந்தால் என்ன எல்லாமே அதிகாரமுள்ள பணபலமும் ஆயுத பலமும் கொண்ட நாடுகளில் நிகழ்ச்சி நிரலிலேயே செயல்படுகின்றன. 

புவிசார் அரசியல் என்பது இன்று பெரும் போட்டி அரசியல் களமாக மாறியுள்ளது. உலகப் பொருளாதாரமும் கூட இன்று ஓர் சவால் மிகுந்ததாகவே காணப்படுகிறது. பெரும் தனி நலன் சார்ந்து அரசியல் பொருளாதர ரீதியாக உலகம் பல முகாம்களாக பிரிக்கப் பட்டு ஒருவரை ஒருவர் மாறி மாறி எண்ணெய் ஊற்றி எரித்துக்கொண்டிருக்கிறார்கள். யுத்தற்திற்காக பெரும் கோடி பணத்தை செலவு செய்கிறார்கள் இதனால் பொருளாதார ரீதியாக பணவீக்கம் கூடி உலக மக்கள் பெரும் பொருளாதார சுமையை சுமக்கிறார்கள். ஏழை நாடுகள் மேலும் வறுமைக்கோட்டுக்குள் கீழ் தள்ளப்பட்டுள்ளன. பல கோடி ஏழை மக்கள் இன்று ஒரு வேளை உணவுக்கே திண்றாடும் நிலை தோன்றியுள்ளது. கொரோனா வருகைக்கு பின் ஏற்பட்ட உலகப் பொருளாதார சரிவின் பின் இன்றும் நிலைமை மேலும் சிக்கல் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

அதிகார நலனும் அரசியல் பொருளாதார சுயநலனும் ஆயுத விற்பனையும் தொடரும் வரையில் உலக அமைதி என்பது சாத்தியம் இல்லாத ஒன்றாகிவிட்டது. ஐ நா கூட அவர்களின் கைப் பொம்மை ஆகிவிட்டது. எல்லாமே சும்மா பேச்சுக்கு தான் மனித உரிமையும் ஜனநாயகமும் என்றாகிப் போய் விட்டது. எங்குதான் இருக்கிறது அறமும் தர்மமும். சரித்திரங்களில் இருந்து மனிதர் பாடத்தை கற்க வேண்டும் இரண்டாம் உலகப் போரில் இருந்து பாடத்தை அனுபவத்தை உலகம் இன்னும் படிக்கவில்லையானால் இன்னும் இருண்ட யுகமாகவே உலகம் இருக்கும். உலக சமாதானம் என்பது வெறும் பேச்சாகத் தான் இருக்க முடியுமே தவிர இது சாத்தியமா என்பது இன்னும் கேள்விக் குறியாகவே இருக்கிறது. யுத்தத்தை ஆரம்பிப்பதும் கடினம் இதை முடிவுக்கு கொண்டு வருவதும் கடினம்.

In times of war, the law falls silent”
-Cicero

பா .உதயன் ✍️


 

 

 

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 6/10/2022 at 18:53, uthayakumar said:

உலகம் ஏன் இவ்வளவு பிளவு பட்டிருக்கிறது-பா .உதயன்

அருமையான ஆய்வுக்கட்டுரை.👍 

இந்த யுத்தம் உனக்கொரு நியாயம் எனக்கொரு நியாயமா என்ற தொனியில் நடக்கின்றது.


நியாயம் என்பது எல்லோருக்கும் சமமானதாக இருக்க வேண்டும். இது மேற்குலக நாடுகளிடம் அறவே இல்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 8/10/2022 at 00:43, குமாரசாமி said:

அருமையான ஆய்வுக்கட்டுரை.👍 

இந்த யுத்தம் உனக்கொரு நியாயம் எனக்கொரு நியாயமா என்ற தொனியில் நடக்கின்றது.


நியாயம் என்பது எல்லோருக்கும் சமமானதாக இருக்க வேண்டும். இது மேற்குலக நாடுகளிடம் அறவே இல்லை.

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றிகள் 🌺

  • கருத்துக்கள உறவுகள்
On 6/10/2022 at 18:53, uthayakumar said:


 உலகம் ஏன் இவ்வளவு பிளவு பட்டிருக்கிறது-பா .உதயன்

ஐ நாவும் அனைத்து சமாதான இயக்கமும் இரண்டாம் உலகப் போருக்கு பின் இனி வேண்டாம் யுத்தம் உலகில் என்று தானே ஆரம்பித்தார்கள். அதன் பின் எத்தனை யுத்தம் உலகில் நடந்தன, நடக்கின்றன, எத்தனை மனிதர் இது வரை இறந்தனர், எத்தனை குழந்தைகள் வாழ்வை இழந்தனர், எத்தனை தேசங்கள் அழிக்கப்பட்டன. எத்தனை ஆக்கிரமிப்பு யுத்தங்கழும் எல்லை தாண்டிய பயங்கரவாதங்களும் உலகில் நடந்தன. 

இன்று ருசியாவுக்கும் உக்கிரேனுக்கும் இடையிலான யுத்தம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இராஜதந்திர ரீதியாக இதை தீர்க்க முடியாமல் அவர் அவர் பூகோள அரசியல் நலன் சார்ந்து பெரும் ஆயத மோதலாக வெடித்துள்ளது. இரண்டாம் உலக மகா யுத்தத்துக்கு பின் ஐரோப்பாவுக்கு பெரும் சவால் மிக்கதாகவும் அவர்கள் பொருளாதாராத்தையே அசைக்க கூடியதோர் யுத்தமாக மாறி இருக்கிறது. ரோமானிய பேரரசின் தத்துஞானி சீசரோ(Cicero) கூறியதுபோல் யுத்த காலங்களில் சட்டமும் ஒழுங்கும் அமைதியாகவே இருந்து விடுகின்றன.

இரண்டாம் உலக மகா யுத்தத்திற்கு பின் இன்று ஐரோப்பா பெரும் யுத்தம் ஒன்றை எதிர் நோக்கியுள்ளது. இன்று நாம் புதிய ஒரு பனிப் போரையும் அரசியல் பொருளாதார சித்தாந்த ரீதியாகவும் அத்தோடு ஏழை பணக்கார நாடுகளாகவும் முகாம்களாக பிரிக்கப்பட்ட உலகையும் இன்னும் ஒரு புதிய உலக ஒழுங்கை நோக்கி உலகம் பயணிப்பதையும் பார்க்கிறோம்.

Harvard University அரசியல் பேராசிரியர் Joseph nye என்ற சர்வதேச அரசியல் ஆய்வாளர் சொல்லுவது போல் உலகம் இன்று பல முகாம்களாக பிரிக்கப்பட்டு ஆயத அதிகார அரசியல் பொருளாதாரப் போட்டியாக மாறி இருக்கின்றது. இந்தப் போட்டி நிலைமையும் யுத்த நிலைமையையும் தணிக்க வேண்டுமானால் கடினமான ஒரு பாதையை (Hard power) தெரியாமல் ஒரு மென் வலு சக்தி (Soft power) ஊடக உலக மோதல்களை தணிக்க முடியும் என தான் எழுதிய (Soft power) என்னும் நூலில் விபரமாக முன் வைக்கிறார்.

ஏழை நாடுகளின் குழந்தைகள் இறந்தால் எவரும் கேட்பதற்கு இல்லை ஆனால் அதிகாரமும் பணமும் உள்ள நாடுகளின் குழந்தைகள் இறந்தால் அனைவரும் கேட்கிறார்கள். யுத்தற்திற்காகவும்  ஆயுதம் செய்வதும் விற்பதுமாகவும் எத்தனை கோடி கோடியாக பணத்தை செலவு செய்கிறார்கள்.ஆனால் இன்று உலகில் எத்தனை வறிய நாடுகள் இருக்கின்றன. எத்தனை குழந்தைகள் இன்று உலகில் உணவு இல்லாமலும் ஒரு வேளை உணவு கிடைக்காமலும் இறந்து போகிறார்கள். எல்லோருக்கும் எல்லாமே சமத்துவமாய் கிடைப்பதில்லை இன்னும் ஆயுதம் செய்வதும் விற்பதுமாக அதிகார வர்க்கத்தின் நலனோடு உருளுதே உலகம். ஐ நா வாக இருந்தால் என்ன ஆயிரம் சமாதானம் பேசும் ஸ்தாபனங்களாக இருந்தால் என்ன எல்லாமே அதிகாரமுள்ள பணபலமும் ஆயுத பலமும் கொண்ட நாடுகளில் நிகழ்ச்சி நிரலிலேயே செயல்படுகின்றன. 

புவிசார் அரசியல் என்பது இன்று பெரும் போட்டி அரசியல் களமாக மாறியுள்ளது. உலகப் பொருளாதாரமும் கூட இன்று ஓர் சவால் மிகுந்ததாகவே காணப்படுகிறது. பெரும் தனி நலன் சார்ந்து அரசியல் பொருளாதர ரீதியாக உலகம் பல முகாம்களாக பிரிக்கப் பட்டு ஒருவரை ஒருவர் மாறி மாறி எண்ணெய் ஊற்றி எரித்துக்கொண்டிருக்கிறார்கள். யுத்தற்திற்காக பெரும் கோடி பணத்தை செலவு செய்கிறார்கள் இதனால் பொருளாதார ரீதியாக பணவீக்கம் கூடி உலக மக்கள் பெரும் பொருளாதார சுமையை சுமக்கிறார்கள். ஏழை நாடுகள் மேலும் வறுமைக்கோட்டுக்குள் கீழ் தள்ளப்பட்டுள்ளன. பல கோடி ஏழை மக்கள் இன்று ஒரு வேளை உணவுக்கே திண்றாடும் நிலை தோன்றியுள்ளது. கொரோனா வருகைக்கு பின் ஏற்பட்ட உலகப் பொருளாதார சரிவின் பின் இன்றும் நிலைமை மேலும் சிக்கல் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

அதிகார நலனும் அரசியல் பொருளாதார சுயநலனும் ஆயுத விற்பனையும் தொடரும் வரையில் உலக அமைதி என்பது சாத்தியம் இல்லாத ஒன்றாகிவிட்டது. ஐ நா கூட அவர்களின் கைப் பொம்மை ஆகிவிட்டது. எல்லாமே சும்மா பேச்சுக்கு தான் மனித உரிமையும் ஜனநாயகமும் என்றாகிப் போய் விட்டது. எங்குதான் இருக்கிறது அறமும் தர்மமும். சரித்திரங்களில் இருந்து மனிதர் பாடத்தை கற்க வேண்டும் இரண்டாம் உலகப் போரில் இருந்து பாடத்தை அனுபவத்தை உலகம் இன்னும் படிக்கவில்லையானால் இன்னும் இருண்ட யுகமாகவே உலகம் இருக்கும். உலக சமாதானம் என்பது வெறும் பேச்சாகத் தான் இருக்க முடியுமே தவிர இது சாத்தியமா என்பது இன்னும் கேள்விக் குறியாகவே இருக்கிறது. யுத்தத்தை ஆரம்பிப்பதும் கடினம் இதை முடிவுக்கு கொண்டு வருவதும் கடினம்.

In times of war, the law falls silent”
-Cicero

பா .உதயன் ✍️

ஐ.நா. என்ற அமைப்பே... கேலிக்  கூத்தாகி விட்டது. 
எமது முள்ளிவாய்க்கால் அவலம் நடந்து கொண்டிருந்த போது...
அதனை நேரடி நிகழ்வாக... ஐ.நா. தனது செய்மதி மூலம் கண்காணித்துக் கொண்டிருந்ததை...
"நியூயோர்க் ரைம்ஸ்" பத்திரிகை  அம்பலப் படுத்தியது.
அப்படி இருந்தும்... இன்னும், 13 வருடமாக.. 
போர்க் குற்றங்களை ஆராய்ந்து கொண்டு இருக்கிறார்களாம், 

பாதிக்கப் பட்ட இனத்துக்கு... 
இவர்களால் நீதியை  பெற்றுக் கொடுக்க முடியவில்லை என்றால்... 
இந்த அமைப்பு தேவையற்றது.

கட்டுரைக்கு நன்றி உதயன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.