Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தி.மு.க. தலைவா் தேர்தலில் போட்டியிட முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று வேட்புமனு தாக்கல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார் ஸ்டாலின்!

தி.மு.க. தலைவா் தேர்தலில் போட்டியிட முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று வேட்புமனு தாக்கல்

திமுக தலைவா் தோ்தலில் போட்டியிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை) தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

இதேபோன்று, பொதுச் செயலாளா் பதவிக்கு அமைச்சர் துரைமுருகனும் பொருளாளா் பதவிக்கு தி.மு.க. நாடாளுமன்ற குழுத் தலைவா் டி.ஆா்.பாலுவும் வேட்புமனுவை தாக்கல் செய்கின்றனர்.

தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை முதல் மாலை வரையில் மனுக்கள் பெறப்படவுள்ளன.

இதைத் தொடா்ந்து, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையன்று சென்னையில் தி.மு.க பொதுக்குழுவில் இது தொடர்பான தோ்தல்கள் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

https://athavannews.com/2022/1303318

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஸ்டாலின் தலைமையில் அனைத்து சட்டமன்ற கட்சி கூட்டம்!

தி.மு.க.வின் தலைவர் பதவிக்கு 2ஆவது முறையாக மு.க.ஸ்டாலின் போட்டியின்றி தேர்வு

தி.மு.க.வின் தலைவர் பதவிக்கு 2ஆவது முறையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்டியின்றி தேர்வாகவுள்ளார்.

கட்சியின் தலைவர் பதவிக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) காலை முதலமைச்சர் வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில், அப்பதவிக்கு வேறு யாரும் மனு தாக்கல் செய்யாததால் அவர் போட்டியின்றி தெரிவு செய்யப்படவுள்ளார்.

இந்த நிலையில், எதிர்வரும் 9ஆம் திகதியன்று நடைபெறவுள்ள தி.மு.க.வின் பொதுக்குழுக் கூட்டத்தில், அதிகாரப்பூர்வமாக கட்சியின் தலைவராக மு.க.ஸ்டாலின் அறிவிக்கப்படவுள்ளார்.

https://athavannews.com/2022/1303530

  • கருத்துக்கள உறவுகள்

மு.க. ஸ்டாலின் மீண்டும் திமுக தலைவராக தேர்வு; துணை பொதுச் செயலாளராகிறார் கனிமொழி

3 மணி நேரங்களுக்கு முன்னர்
 

இந்திய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து அக்டோபர் 6ஆம் தேதி மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றிருந்தார் கனிமொழி.

பட மூலாதாரம்,@KANIMOZHIDMK TWITTER

 

படக்குறிப்பு,

இந்திய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து அக்டோபர் 6ஆம் தேதி மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றிருந்தார் கனிமொழி.

திமுக தலைவராக மு.க. ஸ்டாலின் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அக்கட்சியின் பொதுச் செயலாளராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர். பாலு ஆகியோரும் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் இன்று அக்கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுகவின் ஐந்து துணை பொதுச் செயலாளர்களில் ஒருவராக கனிமொழி நியமிக்கப்பட்டுள்ளார் என்று அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

2018 ஆம் ஆண்டு மு. கருணாநிதி மறைந்த பிறகு, தி.மு.கவின் தலைவராக மு.க. ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். 2017 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து அவர் கட்சியின் செயல் தலைவராகவும் பதவி வகித்தார்.

திமுகவின் மற்ற நிர்வாகிகள்

தற்போது சென்னையில் நடந்துவரும் திமுக பொதுக்குழு கூட்டத்தில் திமுகவின் மற்ற நிர்வாகிகளும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

 

க.பொன்முடி, ஆ. ராசா, ஐ. பெரியசாமி, அந்தியூர் செல்வராஜ் ஆகியோரும் துணை பொதுச் செயலாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். கே.என். நேரு திமுகவின் முதன்மைச் செயலாளராக மீண்டும் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 

சிவப்புக் கோடு

 

சிவப்புக் கோடு

திமுகவின் 15வது உள்கட்சித் தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் தலைவர், பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகிய பதவிகளுக்கு, ஏற்கனவே அப்பதவிகளில் இருந்த மு.க. ஸ்டாலின், துரைமுருகன் மற்றும் டி.ஆர். பாலு ஆகியோர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இதனால் இவர்கள் மூவருமே போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

டி.ஆர். பாலு திமுகவின் நாடாளுமன்ற குழுவின் தலைவராகவும் உள்ளார்.

துணை பொதுச் செயலாளரான கனிமொழி

திமுகவின் ஐந்து துணைப் பொதுச்செயலாளர்களில் ஒருவராக இருந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் சமீபத்தில் அப்பதவியில் இருந்தும், கட்சியில் இருந்தும் விலகினார்.

துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்த ஒரே பெண்ணான சுப்புலட்சுமி ஜெகதீசன் விலகிய நிலையில், அப்பதவிக்கு கனிமொழி நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இது இப்போது உறுதியாகியுள்ளது.

 

கனிமொழி

பட மூலாதாரம்,@KANIMOZHIDMK/TWITTER

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள கனிமொழி சமீபத்தில்தான் இந்திய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

முன்னதாக ரசாயனம் மற்றும் உரத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவராக அவர் ஓராண்டு காலம் இருந்தார். கனிமொழி திமுகவின் மகளிரணிச் செயலாளர் பொறுப்பில் இருந்து வருகிறார்.

https://www.bbc.com/tamil/india-63190253

  • கருத்துக்கள உறவுகள்

தலைவராக மீண்டும் தெரிவான முதல்வர் ஸ்ராலின், சில அமைச்சர்கள் குறித்து பொரிந்து தள்ளுவார் என்று பார்த்தால், புலம்பித் தள்ளிவிட்டார். மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் அடி.... காலையில எழும்பும் போது, யாரு என்ன பண்ணியிருப்பாங்களோ என்ற கலக்கத்துடன் எழுவதாகவு்ம்  இதனால், உடம்பே இளைத்து விட்டதாகவும், பார்த்து நடங்க என்று புலம்பினார்.

அதனைக் கேட்டுக் கொண்டிருந்த அமைச்சர் பொன்மொடி, சிரித்துக் கொண்டிருந்தார். ரி ஆர் பாலுவின் செருப்பை, வேறு ஒருவர் எடுத்து வந்து மேடையில் கொடுத்தார்.

இரண்டும் வைரலாகி, முதல்வர் தூக்கத்தை அடுத்த நாள் கெடுத்திருக்கும்.

கலைஞர் வேறு ஆளுமை, அவரது மகன் வேறு ஆளுமை.

ஜெயலலிதாவிடம், அமைச்சர்கள் பெட்டிப் பாம்பாக அடங்கியிருந்தார்கள்.

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, Nathamuni said:

ஜெயலலிதாவிடம், அமைச்சர்கள் பெட்டிப் பாம்பாக அடங்கியிருந்தார்கள்.

ஜெயலலிதா அமைச்சர்களுக்கு அடியும் கொடுத்து, வீடியோவும் எடுத்து வைத்திருப்பாராம்.
ஜெயலலிதாவுக்கு வாரிசு இல்லை. அவர் அமைச்சர்களை வெருட்டி வைக்கலாம்.

ஸ்ராலின்…. உதயநிதியை தனக்கு அடுத்த நிலைக்கு கொண்டு வரும் மட்டும் 
மூத்த அமைச்சர்கள் என்ன செய்தாலும், புலம்பிக் கொண்டிருக்கத்தான் முடியும்.
அமைச்சர்களை  வெருட்டினால்…. உதயநிதி சினிமாப் படம் நடிக்க போக வேண்டியதுதான். 😁

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.