Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தொடரும் போராட்டம்: கொழும்பில் மாணவர்கள் மீது மீண்டும் கண்ணீர்ப் புகைக்குண்டு வீச்சு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தொடரும் போராட்டம்: கொழும்பில் மாணவர்கள் மீது மீண்டும் கண்ணீர்ப் புகைக்குண்டு வீச்சு

சிறிலங்கா தலைநகர் கொழும்பில் இன்று தடைகளை மீறி அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் இல்லத்தை நோக்கிச் சென்ற சிறிலங்காவின் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் மீது காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசினர்.

கொழும்பு "லிப்டன்" சுற்றுவட்டத்தில் இன்று புதன்கிழமை பிற்பகல் 12:30 மணியளவில் கூடிய 2,000-க்கும் அதிகமான அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் அங்கிருந்து "லிப்டன்" சுற்று வட்டத்தின் ஊடாக மகிந்தவின் உத்தியோகபூர்வ இல்லமான அலரி மாளிகை நோக்கி பேரணியாக நகர்ந்தனர்.

பேரணியில் கலந்துகொண்ட பல்கலைக்கழக மாணவர்கள் மகிந்த அரசாங்கத்தின் புதிய கல்வி நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்ததுடன் பல்கலைக்கழகங்களுக்கு போதிய வசதிகளை ஏற்படுத்தித் தருமாறும் முழக்கங்களை எழுப்பினர்.

அலரி மாளிகையை மாணவர்கள் நெருங்குவதற்கு முன்பாகவே கொள்ளுப்பிட்டிச் சந்தியில் முட்கம்பிகளையும் இரும்புக்கேடர்களையும் போட்டு வீதித்தடைகளை ஏற்படுத்திய சிறிலங்கா இராணுவத்தினரும், காவல்துறையினரும் மாணவர்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு எச்சரித்தனர்.

ஆனால், பிற்பகல் 1:45 மணியளவில் பாதுகாப்பு தரப்பினர் போட்ட வீதித்தடைகளை உடைத்துக்கொண்டு அலரி மாளிகை நோக்கி பல்கலைக்கழக மாணவர்கள் செல்ல முற்பட்ட போது இருதரப்புக்கும் இடையே கடும் முறுகல் ஏற்பட்டது.

திடீரென பல்கலைக்கழக மாணவர்களை நோக்கி காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசினர். அழுக்கு நீரையும் பாய்ச்சினர்.

பதிலுக்கு இராணுவத்தினர் வீசிய கண்ணீர்ப் புகைக்குண்டுகளை பொறுக்கி எடுத்து அவற்றை பாதுகாப்புத் தரப்பினர் மீது மாணவர்கள் வீசினர்.

எனினும், மாணவர்களை நோக்கி சரமாரியான கண்ணீர்ப் புகைக்குண்டுகள் வீசப்பட்டதால் மாணவர்கள் "லிபர்ட்டி" பிளாசா கட்டம் அமைந்துள்ள பகுதியை நோக்கி நகர்ந்தனர்.

அப்பகுதியில் நின்றவாறு முழக்கங்களை எழுப்பி கொள்ளுப்பிட்டிச் சந்தியில் காலி வீதிக்கு குறுக்காக வீதியில் அமர்ந்திருந்தவாறு ஆர்ப்பாட்டத்தில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 2,000 மாணவர்கள் கலந்து கொண்டிருப்பதால் காலி வீதியுடான போக்குவரத்து தடைப்பட்டு பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டம் குறித்து அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் பீடத் தலைவர் டுமிந்த நாமக் கூறுகையில்,

"பல்கலைக்கழகங்களுக்குரிய வசதிகளை ஏற்படுத்தி தருவதாக மகிந்த அரசாங்கம் உறுதியளித்திருந்தது. ஆனால் இன்னமும் வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை. மேலும் மகிந்த அரசாங்கத்தின் புதிய கல்வி நடைமுறைகளால் முதலாம் ஆண்டு மாணவர்கள் மிகவும் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது. இந்த விடயங்களை அலரி மாளிகைக்கு சென்று மகிந்தவிடம் வலியுறுத்தவே இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டுள்ளோம்" என்றார் அவர்.

கொழும்பில் அண்மைக்காலமாக மகிந்த அரசாங்கத்துக்கு எதிராக மாணவர்கள் தொடர்ச்சியாகப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தென்னிலங்கை மாணவர்களின் இந்தப் போராட்டத்தை ஒடுக்க சிறிலங்கா பாதுகாப்புத் தரப்பினர் கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசியும் அழுக்கு நீரைப் பாய்ச்சியும் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

- புதினம்

"பல்கலைக்கழகங்களுக்குரிய வசதிகளை ஏற்படுத்தி தருவதாக மகிந்த அரசாங்கம் உறுதியளித்திருந்தது.

ஆனால் இன்னமும் வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை.

தமிழர் பகுதிகளில் மாணவர்களின் வாழ்க்கையுடன் இராணுவம் விளையாட, தெற்கில் மாணவர்கள் வசதிக்காகப் போராடுகிறார்கள்.

இனி கொஞ்சம் சிங்கள பல்கலை கழக மானவர்களும் இறப்பார்கள்

பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்ட கல்வீச்சில் 5 பொலிஸார் காயமடைந்தனர் - பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஹான் தெரிவிப்பு

[யாழ் வாணன்]

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் சங்கத்தின் ஆர்ப்பாட்டப் பேரணி சட்டம், ஒழுங்கை மீறியமையினாலேயே, அதனை கலைக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. மாணவர்கள் மேற்கொண்ட கல்வீச்சுக்கு இலக்காகி ஐந்து பொலிஸார் காயமடைந்துள்ளனர். அதியுயர் பாதுகாப்பு வலயத்தினுள் நுழைய முற்பட்டபோதே கண்ணீர் புகை பிரயோகம் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டது என்று கொழும்பு பிராந்தியத்திற்கான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஹான் அபேவர்த்தன தெரிவித்தார்.

பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டப் பேரணியை நாம் தடுக்கவில்லை. அதியுயர் பாதுகாப்பு வலயத்தினுள் அவர்கள் அத்துமீறி நுழைய முற்பட்டமையினாலேயே கலைக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதன்போது மாணவர்கள் பொலிஸார் மீது கற்களால் வீசினர். இதனை பொருட்படுத்தாது, அவர்களுக்கு கூட்டம் நடத்தவும் நாம் அனுமதியளித்தோம் என்றும் அவர் கூறினார்.

கொழும்பிலுள்ள தேசிய பாதுகாப்புக்கான ஊடக நிலையத்தில் நேற்றுமாலை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் இங்கு மேலும் கூறுகையில், பல்கலைக்கழக மாணவர்களின் கல்வீச்சுக்கு இலக்காகி காயமடைந்த சிறிபால, அமரசிங்க, தம்மிக்க, விஜயநாயக்க, அத்தநாயக்க ஆகியோர் நாரஹேன்பிட்டியிலுள்ள பொலிஸ் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். கொழும்பு7 இலுள்ள கண் வைத்தியசாலைக்கு முன்பாக ஆரம்பமான ஆர்ப்பாட்டப் பேரணி கொள்ளுப்பிட்டி சந்திவரை வந்தது. அதுவரை நாங்கள் எந்த இடையூறும் செய்யவில்லை. மாணவர்கள் வந்த வேகத்திலேயே வீதித் தடையை உடைத்து அதியுயர் பாதுகாப்பு வலயத்திற்குள் நுழைய முற்பட்டனர். இதன்போதே நாம் சட்டப்படி நடவடிக்கை எடுத்தோம்.

இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக போக்குவரத்து தடை ஏற்பட்டது. பொதுமக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கினர். ஆர்ப்பாட்டம் செய்த மாணவர்கள் மகஜர் கையளிக்கவும் தயாராக இருக்கவில்லை என்றார்.

இந்த ஊடகவிலயாளர் சந்திப்பில் பொலிஸ் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருமான ஜயந்த விக்கிரமரட்னவும் கலந்துகொண்டார்.

-- நன்றி : தமிழ்வின் --

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.