Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மட்டக்களப்பில் - உயிரிழந்தவருக்கு அஞ்சலி செலுத்திய குரங்கு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பில் - உயிரிழந்தவருக்கு அஞ்சலி செலுத்திய குரங்கு

Vhg அக்டோபர் 19, 2022
Photo_1666157380534.jpg

மட்டக்களப்பு தாளங்குடா பிரதேசத்தில் குரங்கு ஒன்று ஏஜமான் உயிரிழந்ததையடுத்து அவரின் சடலத்தில் ஏறி அவரை கட்டியணைத்து அழுது புலம்பியதுடன் அவரின் இறுதிகிரிகை நடந்த மயானத்திற்கு சென்று அவருக்கு அஞ்சலி செலுத்திய சம்பவம் நேற்று(18) செவ்வாய்க்கிழமை அனைவரையும் கண்கலங்கவைத்ததுடன் பெரும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

தாளங்குடா பிரதேசத்தினைச் சேர்ந்த 56 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையான பீதாம்பரம் ராஜன் காட்டில் இருந்து வந்த குரங்கு ஒன்றிற்கு உணவு வழங்கிவந்துள்ளார் குறித்த குரங்கும் தினமும் அவரது வீட்டிற்கு வந்ததும் அவர் அதற்கு பிஸ்கற்களை வழங்குவது வழக்கம்.

 

இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை இரவு சுகயீனம் காரணமாக அவர் உயிரிழந்துதையடுத்து அவரின் வீட்டில் இறுதிகிரிகைகள் நேற்று செவ்வாய்க்கிழமை செய்வதற்கு உறவினர்கள் சடலத்தை வைத்தியசாலையில் இருந்து கொண்டுவந்து வைத்தபோது அங்கு வந்த குரங்கு அவர் சடலமாக படுத்திருப்பதை பார்த்து அவரின் பக்கம் சென்று அவருக்கு மூச்சு உள்ளதா என சோதித்து அவரின் கழுத்து சட்டையை பிடித்து இழுத்து பல முயற்சிகளை செய்தது ஆனால் அவர் படுக்கையில் இருந்து எழும்பாததையடுத்து குரங்கு கண்ணீர் விட்டு அழுததுடன் அவரின் காலை தொட்டு கும்பிட்டு அவரின் அருகில் தொடர்ந்து அமர்ந்தமை பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்தியுள்ளது.

 

அதேவேளை சடலத்தை புதைப்பதற்காக மயானத்துக்கு கொண்டு சென்ற நிலையில் குரங்கு அங்கு சென்று தனக்கு உணவு தந்தவர் இல்லேயே உணவு தந்தவுருக்கு நன்றி உணர்வுடன் தனது அஞ்சலியை செலுத்தியுள்ளது.
Photo_1666157380835.jpg
 
  • கருத்துக்கள உறவுகள்

குரங்கு, யானை, நாய்… போன்ற சில உயிரினங்கள் மனிதனுடன் பழகி விட்டால், இலேசில் விட்டுப் பிரிய மாட்டுது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

குரங்கு, யானை, நாய்… போன்ற சில உயிரினங்கள் மனிதனுடன் பழகி விட்டால், இலேசில் விட்டுப் பிரிய மாட்டுது.

உண்மைதான்........!  

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மட்டக்களப்பில் உணவு வழங்கிய எஜமான் உயிரிழந்ததையடுத்து அஞ்சலி செலுத்திய குரங்கு

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

மட்டக்களப்பில் உணவு வழங்கிய எஜமான் உயிரிழந்ததையடுத்து அஞ்சலி செலுத்திய குரங்கு

செத்த வீட்டில், பாட்டுப் போடும் பழக்கம் எப்ப இருந்து வந்தது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.