Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாலிபக்காதல்

Featured Replies

http://youtube.com/watch?v=eMhkqXHS6YY

இந்த கதையில் எனக்கு உடன்பாடு கொஞ்சமும் இல்லை

Edited by ஈழவன்85

quespv1tt0.jpg

இந்தப் படத்தில் கேள்விக்குரிய பல விடயங்களில் படத்தில் இறுதியாகக் காட்டப்பட்ட மேலுள்ள இந்தப் பகுதியும் எனது கவனத்தை ஈர்த்தது!

முதலாவது கேள்வி காதல் என்பது குலம், கோத்திரம், சாதி, மதம், இனம், பதவி, படிப்பு, பட்டம், பணம் இவை பார்த்தா தோன்றுகின்றது? அவ்வாறாயின், இவ்வாறான மனநிலையை உடையவர்கள் காதலிக்க நினைத்ததே முதல் தப்பு! காதல் என்கின்ற எண்ணம் இவர்களின் உள்ளத்திலேயே வந்திருக்க கூடாது!!

ஏனென்றால், காதலிப்பதற்கும், திருமணம் செய்வதற்கும் மதம் பார்ப்பவர்கள் எப்படியும், மதம் பார்த்து காதலித்தால் கூட அல்லது திருமணம் செய்தால் கூட அதனுள்ளும் குலம், கோத்திரம், பதவி, படிப்பு, பட்டம், பணம் என்பவற்றை பார்க்கத்தானே போகின்றார்கள்? எனவே இப்படியான மத அங்கீகாரம் பெற்ற காதலை அல்லது திருமணத்தை இறைவனே ஆசீர்வாதம் செய்யமாட்டார். :lol:

அடுத்த விடயம், இந்து சமயத்திலும் ஆறுமுகநாலவலர் என்ற ஒருவரின் புத்தகத்தை முன்பு ஒருமுறை வாசித்தபோது சமய தீட்சை பெற்றவர்களே சைவர்கள் என்று கூறப்படுகின்றது. ஆனால், எமது குடும்பத்தில் ஒருவருமே சமய தீட்சை எடுக்கவில்லை. அவ்வாறாயின் நாங்கள் கோயிலிக்கு போய் கும்பிடுவது எல்லாம் பயனற்றதா? தீட்சை எடுக்காத எங்களை கடவுள் கண்டுகொள்ள மாட்டாரா?

அதாவது, இங்கு ஞானஸ்தானம் பெற்றவர்கள் ஏதோ புனிதர்கள் மாதிரியும், மற்றவர்கள் பாவிகள் மாதிரியும் காட்டப்படுகின்றது. கடவுள் சொல்லி இருக்கின்றாரா இப்படி என்று? அதாவது நீ ஞானஸ்தானம் பெற்றால் புனிதன் ஆகிவிடுவாய் என்று??

கடவுளின் பெயரில் யாவாரம் செய்பவர்கள் மக்களை ஏய்க்க எப்படி எப்படியெல்லாம் கூத்து ஆடுகின்றார்கள் என்பதை அழகாக கோடிட்டு காட்ட இந்தப்படம் நல்ல ஒரு உதாரணம்.

இந்தப்படத்தின் சாரம்சம் மதம் விட்டு காதலோ அல்லது கலியாணமோ செய்யாதே என்று கூறுவது போல் உள்ளது.

மேலும், இந்தப்படத்தில் காட்டப்படும் காதல்ஜோடி உண்மையில் காதல் செய்யவில்லை என்பது அடுத்தபிரச்சனை. ஏனென்றால் இவர்களது உரையாடலை பார்க்கும்போது யாரோ இரண்டு அந்நியர்கள் தமக்குள் வேண்டா வெறுப்பாக பேசிக்கொள்வது போல் உள்ளது. இரு காதலர்கள் தம்மிடையே உரையாடுவது போல தெரியவில்லை. இருவரும் ஒருவரையொருவர் உண்மையில் காதலித்து இருந்தால் இப்படி ஒரு முக்கியமான விடயத்தை பற்றி பேசும் போது பொறுமையில்லாமல், மற்றவரை புரிந்துகொள்ளாது, மற்றவரின் முகத்தை நேரில் பார்க்க சகிக்காது தூக்கி எறிந்து பேசி இருக்கமாட்டார்கள்.

எனவே, இந்தக்கதையில் காட்டப்படும் ஜோடி காதலிப்பதற்கோ அல்லது கலியாணம் செய்வதற்கோ தகுதி அற்றது.

ஆனால்,

சொதப்பலான ஒரு கதையை கூறி அதற்கு வாலிபக்காதல் என்று ஒரு பெயரையும் வைத்துவிட்டு, இறுதியில் அறிவுரை என்ற பெயரில் மதவெறி தூபம் பூசி வீசப்படுகின்றது..

நான் அறிந்த அளவில் பல கிறிஸ்தவர்கள் பல இந்துக்களை காதலித்து திருமணம் செய்து உள்ளார்கள். மிகவும் சந்தோசமாகவும் வாழ்கின்றார்கள். அவர்கள் இங்கு படத்தில் காட்டப்படுவது போல் இறைவனின் சாபத்திற்கு ஆளாகி வாழ்க்கையில் கஸ்டப்படுவதாக தெரியவில்லை..

சிலர் பைபிளை தூக்கிவிட்டால் தாம் புனிதர்கள் என்று கற்பனை பண்ணிக்கொள்கின்றார்கள். அடிப்படை வாழ்கை தத்துவங்களை புரிந்துகொள்ளாதவரை பைபிளை தூக்கினால் என்ன ஞானஸ்தானம் பெற்றால் என்ன, காசிக்கு போனால் என்ன, மக்காவிற்கு போனால் என்ன, அது கிறிஸ்தவர்களாக இருந்தாலும் சரி, இந்துக்களாக இருந்தாலும் சரி, முஸ்லீம்களாக இருந்தாலும் சரி இந்த மதவாத முட்டாள்கள் வாழ்க்கையில் ஒருபோதும் தெளிவைப் பெறப்போவதில்லை. :lol::lol::lol:

படம் சிறியதாக்கி இணைக்கப்பட்டுள்ளது.-யாழ்பிரியா

Edited by yarlpriya

  • தொடங்கியவர்

அருமையான கருத்துகள் மாப்பு இதுதான் என் கருத்தும்

ஈழவன் அண்ணா இணைப்புக்கு நன்றி...............என்னாலும் இந்த படத்தில் வரும் கருத்துகளை ஏற்று கொள்ளவே முடியாது............. :lol:

குரு அருமையான விளக்கம் கொடுத்திருகிறார்...........குருவே எப்படி உங்களாள மட்டும் இப்படி எல்லாம் முடியுது............. :P

காதலிற்கு ஒன்றும் தேவையில்லை ஒரு ஆண் மற்றது பெண் இரண்டு பேருக்கும் பிடித்து இருந்தா சந்தோசமாக வாழுறது.............யாரும் சொல்லி காதலிக்க வேண்டாம்..........யாரும் இவாவை காதலிக்க கூடாது என்று சொன்னா கேட்காம உங்களுக்கு பிடித்து இருந்தா செய்யுங்கோ...........வாழ்கையில முன்னுக்கு வந்தா எல்லாரும் மதம் எல்லாவற்றையும் விட்டு போட்டு உங்களிட்ட வருவீனம்.......... :P

அப்ப நான் வரட்டா....... :P

கலைஞன் உங்கள் கருத்துக்கள் நன்றாக உள்ளது.

மனிதர்களுக்கு இடையேயான காதலை மதத்தின் மீதான காதல் நிராகரிக்கின்றது என்பதையே இப்படம் உணர்த்துகின்றது. ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தை காட்டு என்ற யேசுவின் அன்பும், அன்பே சிவம் என்ற கூற்றும் எங்கே? அவன் பைபிளை தொட விட மாட்டன் என்கின்றான் இவள் யேசுதான் முக்கியம் என்கின்றாள் இதுக்கு வாலிபகாதல் என்றொரு தலைப்பில் படம் வேற. அன்புக்கு உண்டோ அடைக்கும் தாழ் என்று கேட்பார்கள். இருக்கிறது என்கின்றது இப்படம்.

ஈழவன் இணைத்த இணைப்பு வேலை செய்யவில்லையே. ஏனுங்க?

எனக்கு வேலை செய்கின்றது...

  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவிகளா இப்படியும் ஒரு பிரச்சாரமா.. ஜீசஸ்..! :D

உஷ்ஷ்ஷ்ஷ்ஷ்....

சும்மா சும்மா ஜீசஸை கூப்பிடக்கூடாது. இவ்வாறு கூப்பிடுவதற்கு நீங்கள் ஞானஸ்தானத்தை முதலில் எடுக்க வேண்டும். ஓகே?

நாம அவிசுவாசிகள் கடவுளை அழைத்தால் பிறகு விசுவாசிகள் பாவம் என்ன செய்வார்கள்??

:D :D :D

பி/கு: யாழ்களம் அந்நிய நுகமாகக் கொள்ளப்பட முடியுமா?? :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.