Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிறுமியின் சங்கிலியை அபகரித்தவர் பொதுமக்களால் மடக்கிப்பிடிப்பு - யாழில் சம்பவம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறுமியின் சங்கிலியை அபகரித்தவர் பொதுமக்களால் மடக்கிப்பிடிப்பு - யாழில் சம்பவம்

By VISHNU

22 OCT, 2022 | 07:30 PM
image

(எம்.நியூட்டன்)

பலாலி வள்ளுவர் புரத்தில் வீதியில் சென்ற சிறுமியின் சங்கிலியை அபகரித்துத் தப்பித்தவர் பொதுமக்களினால் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளார்.

இராணுவத்தில் பணியாற்றுபவரே இவ்வாறு வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் இன்று (22) சனிக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றது.

15 வயதுச் சிறுமி தனியார் கல்வி நிலையத்துக்கு சென்றுவிட்டு வீடுதிரும்ப வீதியில் நடந்து சென்றுள்ளார். மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்தவர் சங்கிலியை அபகரித்துவிட்டு சிறுமியை கீழே தள்ளிவிட்டுத் தப்பித்துள்ளார்.

சிறுமி காயத்துக்குள்ளாகிய நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் ஊரவர்கள் ஒன்றிணைந்து வழிப்பறி கொள்ளையனை மடக்கிப்பிடித்தனர்.

இராணுவத்தில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் பணியாற்றுசிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் பணியாற்றும் கொல்லங்கலட்டியை சேர்ந்தவரே இவ்வாறு மக்களினால் மடக்கிப்பிடிக்கப்பட்டு பலாலி பொலிஸ் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் சங்கிலியும் கைப்பற்றப்பட்டது.

சந்தேக நபரை பொலிஸார் அழைத்துச் சென்ற போது இராணுவத்தினர் தலையீடு செய்ததால் குழப்பநிலை ஏற்பட்டது. எனினும் மக்களின் எதிர்ப்பால் இராணுவத்தினரின் இடையூடு கைவிடப்பட்டது.

https://www.virakesari.lk/article/138217

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஏராளன் said:

இராணுவத்தில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் பணியாற்றுசிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் பணியாற்றும் கொல்லங்கலட்டியை சேர்ந்தவரே இவ்வாறு மக்களினால் மடக்கிப்பிடிக்கப்பட்டு பலாலி பொலிஸ் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் சங்கிலியும் கைப்பற்றப்பட்டது.

இராணுவத்தில் பணியாற்றும்… கொல்லங் கலட்டியை சேர்ந்தவர் என்றால்,
ஓட்டுக்குழு ஆள் போலை இருக்கு. 

டக்ளஸ் தேவானந்தா… இவர்களுக்கு கொஞ்ச புத்திமதி சொல்லிக் குடுக்கலாமே.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

இராணுவத்தில் பணியாற்றும்… கொல்லங் கலட்டியை சேர்ந்தவர் என்றால்,
ஓட்டுக்குழு ஆள் போலை இருக்கு. 

டக்ளஸ் தேவானந்தா… இவர்களுக்கு கொஞ்ச புத்திமதி சொல்லிக் குடுக்கலாமே.

எப்படி கொலை கொள்ளை செய்வது என்று? பயிற்சி நிறைவுக்கு முதல் இறங்கிவிட்டார் போலுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:
9 hours ago, தமிழ் சிறி said:

டக்ளஸ் தேவானந்தா… இவர்களுக்கு கொஞ்ச புத்திமதி சொல்லிக் குடுக்கலாமே.

 

புத்திமதி சொல்லி பயிற்சி  கொடுக்கப்பட்டும் சொதப்பி விட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, nunavilan said:

புத்திமதி சொல்லி பயிற்சி  கொடுக்கப்பட்டும் சொதப்பி விட்டார்.

பயிற்சி காணாது, இரவில சொல்லிகொடுத்திருப்பார், இது பகலிலே போய் மாட்டுப்பட்டிட்டார். இவர் தன்ர ஆளில்லை என்று அவசரமாக அறிக்கை விடுவார்.  

  • கருத்துக்கள உறவுகள்

சிறுமியின் சங்கிலியை அறுத்ததெல்லாம் மக்களைக் காப்பாற்ற வடக்கில் நிலைகொண்டிருக்கினமாம், யாரை பேய்க்காட்டுகிறார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

யாழில். வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட குற்றத்தில் இராணுவத்தில் பணியாற்றுபவர் ஊரவர்களால் மடக்கி பிடிப்பு!

யாழில். வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட குற்றத்தில் இராணுவத்தில் பணியாற்றுபவர் ஊரவர்களால் மடக்கி பிடிப்பு!

தனியார் வகுப்பிற்கு சென்று விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவியின் சங்கிலியை அறுத்த, இராணுவ சிவில் பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றுபவர் பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளார்.

மடக்கி பிடிக்கப்பட்ட நபரை இராணுவத்தினர் அழைத்து செல்ல முற்பட்டமையால் அங்கு பதட்டமான சூழல் உருவாகிய நிலையில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து அவரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

யாழ்ப்பாணம் பலாலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வள்ளுவர்புரம் பகுதியில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, “தனியார் வகுப்புக்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த சிறுமிக்கு பின்னல் மோட்டார் சைக்கிளில் வந்த நபர், சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பி ஓடியுள்ளார்.

இதனால் சிறுமி நிலைமை தடுமாறி கீழே விழுந்து காயங்களுக்கு உள்ளானார்.அதனை அவதானித்த ஊரவர்கள் ஒன்று திரண்டு வழிப்பறி கொள்ளை சந்தேக நபரை துரத்தி சென்று மடக்கி பிடித்ததுடன், சிறுமியை சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

மடக்கி பிடிக்கப்பட்டவரிடம் ஊரவர்கள் விசாரணைகளை முன்னெடுத்த வேளை, குறித்த நபர் காங்கேசன்துறை கொல்லன்கலட்டி பகுதியை சேர்ந்தவர் எனவும் இராணுவத்தினரின் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் பணிபுரிபவர் எனவும் தெரியவந்ததுடன், சிறுமியின் சங்கிலியும் அவரிடம் இருந்து மீட்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் பலாலி பொலிஸாருக்கு ஊரவர்கள் அறிவித்த நிலையில், பொலிஸாருக்கு முன்னதாக இராணுவ தரப்பினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, குறித்த நபரை மீட்டு தம்முடன் அழைத்துச் செல்ல முற்பட்டனர்.

அதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தமையால் அவ்விடத்தில் பதட்டம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் சம்பவ இடத்திற்கு வந்த பலாலி பொலிஸார் குறித்த நபரை கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

https://athavannews.com/2022/1306522

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட இராணுவ பணியாளர் : துரத்திப் பிடித்த ஊர்மக்கள்

By NANTHINI

23 OCT, 2022 | 02:08 PM
image

னியார் வகுப்புக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவியின் தங்கச் சங்கிலியை அறுத்த, இராணுவ சிவில் பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றும் நபரொருவர் பொது மக்களால் மடக்கிப் பிடித்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. 

இதன்போது குறித்த நபரை இராணுவத்தினர் மீட்டுச் செல்ல முற்பட்டமையால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 

இதனையடுத்து பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, சந்தேக நபரை மீட்டு, பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றுள்ளனர். 

அத்துடன் குறித்த நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து, மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

யாழ்ப்பாணம் பலாலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வள்ளுவர்புரம் பகுதியில் நேற்று சனிக்கிழமை (ஒக் 22) மதியம் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

தனியார் வகுப்புக்கு சென்றுவிட்டு, மதியம் வீடு திரும்பிக்கொண்டிருந்த சிறுமியின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை, சிறுமியை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த நபரொருவர் அறுத்துக்கொண்டு தப்பி ஓடியுள்ளார். 

இதனால் சிறுமி நிலை தடுமாறி கீழே விழுந்து காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். 

சிறுமியை அவதானித்த ஊரவர்கள் ஒன்று திரண்டு வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட சந்தேக நபரை துரத்திச் சென்று, மடக்கிப் பிடித்ததுடன், சிறுமியை சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். 

மேலும், பிடிப்பட்ட நபரை ஊரவர்கள் விசாரித்தபோது, அவர் காங்கேசன்துறை கொல்லன்கலட்டி பகுதியை சேர்ந்தவர் எனவும் இராணுவத்தினரின் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் பணிபுரிபவர் எனவும் தெரிய வந்துள்ளது. 

இந்நிலையில் சிறுமியிடம் அறுத்த சங்கிலியும் அவரிடம் இருந்து மீட்கப்பட்டது. 

இச்சம்பவம் தொடர்பில் ஊர் மக்கள் பலாலி பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். 

எனினும், பொலிஸாருக்கு முன்னதாக இராணுவ தரப்பினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, குறித்த நபரை மீட்டு, தம்முடன் அழைத்துச் செல்ல முற்பட்டுள்ளனர். 

அதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தமையால் அவ்விடத்தில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. 

அதன் பின்னர் சிறிது நேரத்திலேயே சம்பவ இடத்துக்கு வந்த பலாலி பொலிஸார் சந்தேக நபரை கைதுசெய்து, பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று, விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/138259

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.