Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா என்ன அர்த்தமுள்ள வரிகள்..அனுபவித்து எழுதியமாதிரியுள்ளது...ஆனால் நீங்கள்??????????????

காதல் மனதைத் தொடும் கலை..

உடலைத் தொட அலைவது கொலை

காமம் தாம்பத்யத்தை ஸ்திரப்படுத்த...

காதலைப் பலவீனப்படுத்த அல்ல

--------------------------------------------------

அழகான வரிகள். வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்குதான் கற்றாய் நீ பொய்..

இளமை சொல்கிறதா...

ஆசை சொல்லத் தூண்டுகிறதா..

இதுவரை இல்லாமல்.. இப்போது..

பொருத்தம் இல்லாமல்..

பொய்சொல்கிறாயே..

நீ உரைப்பதை நம்பிவிடும்..

முட்டாளா நான் மாறிவிட்டேன் என்று

எண்ணிவிட்டாயா..முட்டாள்க் காதலனே...

நீ நிற்பது கடல் நடுவில்..

நான் நிற்பது கரைமணலில்..

நீதான் இங்கு வரவேண்டும் நானல்ல..

காதல் மனதைத் தொடும் கலை..

உடலைத் தொட அலைவது கொலை

காமம் தாம்பத்யத்தை ஸ்திரப்படுத்த...

காதலைப் பலவீனப்படுத்த அல்ல<<<

பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் மனசை மிக நன்றாக வெளிப்படுத்தி இருக்கின்றீர்கள் தம்பி கவி :lol:!

'பொய்"கள் என்பது சில நேரங்களில் 'பொய்" என்று தெரிந்துமே மனசை மகிழ்ச்சிப்படுத்தும் ஆனால் அந்தப் பொய்களில் மயங்கிவிடும் போதுதான் காதலை காமம் விஞ்சி விடுகின்றது.

நான் அறிந்த மிக மோசமான கதை ஒன்று உண்டு. பள்ளிக்காதலை தொலைத்த பெண் ஒருத்தி பிறகு ஒரு கயவனால் 'காதல்' என்ற பெயரில் ஏமாற்றப்படுகின்றாள். அவள் கதறிக் கதறி வடித்த வரிகள். தன் இளமைத் திமிரில் தான் ஏற்காத அந்த பள்ளிக்காதலைப் பார்த்து...

என் உடல் தொட நினைத்த பலரில்

என் உள்ளம் தொட்டவன் முதல் முதல்

நீதான்! நான் தவிர்த்த வார்த்தைகள்

உனை தவிக்க வைத்தததோ? உனை

தவிர்க்கிறேன் என நினைக்க வைத்ததோ?"

கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் எதற்கு?! பெண்கள் இந்த விடயத்தில் பலவீனமாகத்தான் இருக்கின்றார்கள். வீண் வார்த்தைகளில் நம்பி வீணாய்ப்போவது எத்தனை கொடுமை? பிறகு புலம்பித்தான் இலாபம் என்ன?!!..

நீ நேசிப்பது என்னையென்றால்..

நான் என் இதயத்தை என்று எடுத்துக் கொண்டேன்..

நீ உடலை என்பதைக் காட்டிச்சென்றாய்..

உன் வேலையாகவில்லை என்று எரிகிறாய்..<<

பரவாயில்லையே! இங்கு பெண் புரிந்துகொண்டாளே!. " காதலுக்கு மரியாதையோடு பழகுவது!!காதலுக்கும் நல்லது காதலிக்கும் நல்லது!. உணர்ச்சி வேகத்தில் உடலை எரித்துவிட்டு பிறகு ஒப்பாரி வைக்கக்கூடாது!

>>என் காதலன் கண்ணியத்தை எண்ணி நான் அழுகிறேன்..

பரிபூரண இதயத்தைக் கொண்ட முழுமதியை

அழுக்காக்கி அமாவாசை நிலவாய்

ஒளித்து வைப்பதில் உனக்கேன் ஆசை..

என் காதல் வெள்ளை நிறச்சேலை

நீ தெளிந்த நீராய் உன் நினைவில் என்னை நீராட விடு..

காதலை சந்தேகப்படும்.. பாதகியாய்.. என்னை மாற்றாதே..

பொய்யை பொருந்தக்கூட என்னிடம் சொல்லாதே..<<

ஆழமாய் தீவிரமாய் இருக்குமொரு பெண்ணின் உணர்ச்சியை கவிவரிகளாக்கிய தம்பி கவிக்கு என் வாழ்த்துக்கள். 'காதல் என்ற பெயரில் பெண்களை ஏமாற்றுகின்ற கயவர்களுக்கு ஒரு சூடு கொடுத்ததற்காக நன்றிகளும் கூட!!...

  • தொடங்கியவர்

நன்றி..வல்லைமைந்தன்..நான் ஆண்தான்..சந்தெகம் வேண்டாம்..வேடம் போடவேண்டியதுமில்லை..

நன்றி சஜீவன்..

நன்றி சுகன்..

நன்றி ஒளவையாரக்கா.. :mellow:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி..வல்லைமைந்தன்..நான் ஆண்தான்..சந்தெகம் வேண்டாம்..வேடம் போடவேண்டியதுமில்லை..

நன்றி சஜீவன்..

நன்றி சுகன்..

நன்றி ஒளவையாரக்கா.. :lol:

தம்பி கவி! அதுதானே ' ஏன் வேடம் போட வேண்டும்?! ஆனால்...'சந்தேகம்"....தான் வேண்டாம் என்று சொல்ல வேண்டும்! சந்தெகம்!.. என்ற ஒரு சொல் தமிழில் இல்லைப் பாருங்கோ! ;)

ஔவையாரக்கா என்று சொல்லிப்போட்டியள் அப்ப பிழை திருத்தத்தானே வேணும் தம்பி :mellow::huh:

  • தொடங்கியவர்

தம்பி கவி! அதுதானே ' ஏன் வேடம் போட வேண்டும்?! ஆனால்...'சந்தேகம்"....தான் வேண்டாம் என்று சொல்ல வேண்டும்! சந்தெகம்!.. என்ற ஒரு சொல் தமிழில் இல்லைப் பாருங்கோ! ;)

ஔவையாரக்கா என்று சொல்லிப்போட்டியள் அப்ப பிழை திருத்தத்தானே வேணும் தம்பி :mellow::huh:

ஓ... இந்த வள்ளுவர்தான் பிழையா சொல்லித்தந்திட்டார் அக்கா..

சந்தேகம் நெடில் பெரிய சந்தேகம்..

குறில் சின்ன சந்தேகம்..

வல்வை மைந்தனோடது குறில் எண்டு நினைச்சிட்டேன்..

இனித்திருந்திக் கொள்கிறேன் அக்கா

Edited by vikadakavi

  • கருத்துக்கள உறவுகள்

ம் விகடம் நிறைந்த கவி அவர்களே! உங்கள் விகடமான பதில்கள் பிரமாதம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓ... இந்த வள்ளுவர்தான் பிழையா சொல்லித்தந்திட்டார் அக்கா..

சந்தேகம் நெடில் பெரிய சந்தேகம்..

குறில் சின்ன சந்தேகம்..

வல்வை மைந்தனோடது குறில் எண்டு நினைச்சிட்டேன்..

இனித்திருந்திக் கொள்கிறேன் அக்கா

<<<<

தம்பி கவி, வீட்டில் 'தாழிக்கும் பொறுப்பு தங்களுடையதோ?!! இல்லை சமாளிப்பு 'ஆஹா!!!ன்னு வாயைப்பிளக்க வைக்குது ! :D இல்லையா பின்ன?! அப்துல் ஹமீட்டைப்போய் 'வள்ளுவர்" என்று சொல்லுறீங்கள்! விகடம்!! அருமையா வருது உங்களுக்கு!. :)

விகடகவி அண்ணா பொய்க் கவிதை ரொம்ப நன்னாருக்கு..... பாராட்டுக்கள்...! :D

  • கருத்துக்கள உறவுகள்

காதலுக்கு கவிதையும் பொய்

கவிதைக்கு காதலும் பொய்

ஆனால் உங்கள் கவிதைக்கு

சொற்கள் தரும் அழகே அழகு .

  • தொடங்கியவர்

நன்றி அனி...கபி

ஒளவையாரக்கா.. உங்களைச் சமாளிக்க நினைக்கவில்லை.. நகைச்சுவைக்காக சொன்னேன்.

தட்டச்சு காலை வாரும் சிலசமயங்களில் இது அறியாமை என்பதைவிட நேரத்தட்டுப்பாடு என்பதே சரி.. :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி அனி...கபி

ஒளவையாரக்கா.. உங்களைச் சமாளிக்க நினைக்கவில்லை.. நகைச்சுவைக்காக சொன்னேன்.

தட்டச்சு காலை வாரும் சிலசமயங்களில் இது அறியாமை என்பதைவிட நேரத்தட்டுப்பாடு என்பதே சரி.. :lol:

அது எனக்கும் தெரிந்தது தம்பி கவி! :D!! நீங்கள் இப்படியான எழுத்துப்பிழைகள் விடுபவர் இல்லை என்பது நான் அறிந்ததே!! என்னை நீங்கள் வாரும் போது நானும் சொல்ல இப்படி ஒரு சந்தர்ப்பம் அமைஞ்சுது! அவ்வளவுதான்! அதை நான் நகைச்சுவையாகவே எடுத்துக்கொண்டேன் :D

  • தொடங்கியவர்

அக்காக்கு எப்பவுமே காமடிதான் போங்கோ....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.