Jump to content

மாபெரும் தாய் – வாசிப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மாபெரும் தாய் – வாசிப்பு

EditorOctober 23, 2022
மாபெரும் தாய் – வாசிப்பு

“My Poetry has obviously more in common with distinguished contemporaries in America than with anything written in England”- T.S.Eliot

புலம் பெயர்வைப் பேசக்கூடிய இலக்கியம் உலகில் நிறைய இருக்கின்றன. ஒன்று, தனிப்பட்ட அரசியல் காரணங்களால் நடப்பது. இன்னொன்று, போர்ச் சூழலால் நிகழ்வது. அதிலும் ஒரே மொழியைச் சேர்ந்த (பழைமான மொழி என்கிற பெருமையைக் கொண்ட) இனத்தின் ஒரு நிலம் செல்வாக்கோடும் செழிப்போடும் ஆட்சியில் கோலோச்சியிருக்கிறபோது பிறிதொரு நிலம் அடிமையில் நசுக்கப்ட்டும் விரட்டப்படுவதுமான முரணான தன்மையில் நிலம் மீள போராடும் விதியைக் கொண்டிருப்பது தமிழ் ஈழம் மட்டும்தான். இதுமாதிரியான புவியியல் அமைவின் பின்னணியில் இலக்கியங்களைப் படைத்த மொழிகள் மிகவும் குறைவு.

எந்த பின்புலத்தில் வைத்து நாம் ஈழ இலக்கியங்களை வாசிக்கிறோம் என்பதை நினைவூட்டிக்கொள்ள வேண்டி இருக்கிறது. பொதுவாக ஈழ இலக்கியத்தை நாம் தமிழுக்கு வெளியே நிறுத்திதான் பேச ஆரம்பிக்கிறோம் (அதன் அரசியலையும்). தமிழ் நிலம் சார்ந்தஇலக்கியங்களுக்கு பேர் போனவை.  சங்க இலக்கியங்களில் நிலத்திணைகளாக அவை பாடப்பட்டிருக்கின்றன.ஒவ்வொரு திணைகளும் ஒவ்வொரு பாடுபொருள்களைக்  கொண்டிருக்கிறது. அகநானூறு, புறநானூறு, கலித்தொகை, கலிங்கத்துபரணி, மலைபடுகடாம் அத்தனையும் வெவ்வேறு நிலங்களையும் அதன் வாழ்க்கை முறைகளையும் நமக்கு சொல்கின்றன.இத்தகைப் பொருளோடுதான் ஈழ இலக்கியத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். ஈழம் என்பது ஒரு நிலமாகக் கொண்டால் அதன் அரசியல், பண்பாடு, வாழ்வு, போராட்டங்கள் நமக்கு திணைகள் பாடிய இலக்கியமாக விளங்கும். பல்வேறு திணைகளை பாடிய பாடல்களை வாசிக்கையில் நாம் அந்த நிலத்தைப் புரிந்துகொள்கிறோம். அதன் அரசியல் சூழலையும் பண்பாட்டையும் அறிகிறோம். ஈழம் நவீன காலத்தின் திணைகளைப் பாடியதன் நீட்சி.

இரண்டாவது, ஈழ இலக்கியங்களை வாசிக்குமுன் நாம் ஒருவிதமான கழிவிரக்கத்தை உருவாக்கிக்கொள்கிறோம். அதன் கதைகளின் எல்லையை போர் மற்றும் போராட்டம் என்பதாக நாடகீய தீர்மானத்துக்குள் வைக்க முற்படுகிறோம். அக்கதாபாத்திரங்கள்மீது பச்சாதாபத்தை ஏற்படுத்திக்கொள்கிறோம். எண்பதுகளிலிருந்து இரண்டாயிரம்வரை அங்கு உருவான போர் இலக்கியங்கள் நமக்கு அளித்த அனைத்தையும் ஒருவித இரக்கப் பாடலாகத்தான் நாம் வாசித்திருக்கிறோம். ஏனெனில் நமக்கு அப்படிபட்ட போர் இலக்கிய பின்னணி கிடையாது. நமது இலக்கியங்களும் ஒரு போர் நிலத்தின் கதைகளை எப்படி வாசிக்க வேண்டும் என்று கற்றுத்தரவில்லை. ஒன்று, அதன்மீது ஏற்படும் உடனடி கழிவிரக்க மனோபாவ இயல்பு. இரண்டாவது, அதற்கு இணை சேர்ப்பது போலவே அதன் கதைகளின் தன்மை (ஷோபா சக்தி இதில் விதிவிலக்கு).  இங்கு இரண்டு தரப்பையும் குற்றச்சாட்டில் வைக்கத்தான் வேண்டும். இவை அனைத்தும் அரசியல் புரியாமைனாலும் அந்த நிலத்தை நாம் வாழும் நிலத்திற்கு வெளியே நிறுத்தி உணர்வதாலும் உருவாகின்ற போதாமை. இந்தப் போதாமையால்தான் ஈழத்தின் கதைகளில் நாம் கதைகளை வாசிக்காமல் (நம்முடைய கண்ணாடியை கழட்டாமல்) முன்தீர்மானத்தில் அலகுகளால் அதை வாசித்துக்கொண்டிருக்கிறோம்.

IMG-20221022-WA0049-300x150.jpg

மேலே குறிப்பிட்டதில் ஷோபா சக்தி அந்நிலத்தின் கதை மரபை மாற்றியதில் முதன்மையானவர். அதனால் மட்டும் அந்நிலத்தை வாசிக்கும் அலகுகளை நாம் கற்றுக்கொண்டுவிட்டோம் என்றுஅர்த்தம் இல்லை. ஏற்கெனவே அதன்மீது விழுந்த மனப்பதிவுகளை நீக்கும் காரணிகளில் அதுவும் ஒன்று. இந்த மனப்பதிவை மாற்றும் காரணிகளில் அகரமுதல்வனின் கதைகளும் இந்தத் தொகுப்பில் சேர்ந்திருக்கின்றன.  இத்தொகுப்பில் இயங்குகின்ற பொது குணங்களின் அடிப்படையில் கீழ்கண்டவாறு வகைப்படுத்தலாம்

இராணுவம் – இயக்கம் துரோகம்– மன்னிப்பு

1. அகரமுதல்வனின் கதைகளில் கதாபாத்திரங்கள் அதிகம். ஒரு நாவலுக்குரிய விரிவான தனித்தன்மைகொண்டவை. குறைவான கதாபாத்திரங்கள் என்றால் எம்பவாய், புகல் போன்ற கதைகள். அதிகமான கதாபாத்திரங்கள் கதைக்குள் வெறுமனே பெயர்களாக வருவதில்லை.  உதாரணத்திற்கு, குறைந்த கதைபாத்திரங்கள் வருகிற ”மன்னிப்பின் ஊடுருவல்” கதையில் பூனைச்சுமதி, திருச்செல்வம் தவிர கதைக்குள் யாழ்பாணியைத் தவிர அந்தக் கதையின் முதன்மை போராட்டத்தைச் தொட்டுச் செல்கிற இன்னொரு குணம்(வெறுப்பு) ஜீவகாந்தன் என்கிற பாத்திரம் வருகிறார். ஜீவகாந்தன் அக்கதையில் (தியாகம்- துரோகம்- வெறுப்பு) என்கிற குணம்.அகரமுதல்வனின் கதைகளில் வருகிற நிறைய பாத்திரங்கள் இப்படி வெவ்வேறு குணங்களைப்பிரதிபலிப்பதாக உள்ளன. வெறும் உரையாடல் நிமித்தமாக அவை இடம் பெறுவதில்லை.

2மாபெரும் தாய் தொகுப்பிலுள்ள கதைகளை வாசித்து முடிக்கிறபோது கதைசொல்லி நமக்கு, நாம் ஏற்கெனவே பழகிய எங்கோ கேட்ட குரலை நினைவூட்டுகிறார். கதைகள் வெவ்வேறு மனநிலைகளிலும் வெவ்வேறு களங்களிலும் பயணித்தாலும் கதைசொல்லியின் குரல் ஒன்றுபோலத் தோன்றுகிறது. நாட்டார் தன்மையிலான அதன் த்வனி நமக்கு நூறு வயதுடைய தந்தை அல்லது தாயின் குரலை நினைவுபடுத்துகிறது. இதுமாதிரியான கதைசொல்லியை நாம் கவிதைகளில்தான் கண்டுபிடிக்கிறோம். ஆனால் இங்கு கதைப்பிரதியில் அப்படியான ஒரு தொனி இழையோடுவதைஉணரலாம்.

3. இந்தத் தொகுப்பிலுள்ள கதைகளை மூன்று வகைகளாகப் பிரித்துக்கொள்ளலாம் 

, முன்பு சொன்ன இயக்கம்- துரோம்- மன்னிப்பு. 

ஆ, நிலத்தை மீபொருண்மை தன்மையிலாக மாற்ற முயலும் அலகுகள்.. (பாலன், நெடுநிலத்துள், )        

இ, மாய யதார்த்தத்தன்மையில் (அதன் சில கூறுகளைக்கொண்ட) கதைகள்- பதி, பிலாக்கணம் பூக்கும் தாழி, மாபெரும்தாய்

இயக்கம்- துரோகம்- மன்னிப்பு

முதலில் இந்தச் சங்கிலித்தொடர் இணைவைப் பார்க்கலாம். நமது அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் துரோகத்திற்கும் போர்ச்சூழலின் போராட்டத்தில் இடம் பெறும் துரோகத்திற்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது. முன்னது வாழ்வின் போக்கின் ஒரு பகுதி என்றால் (அனுபவம்),பின்னது ஒரு நிலத்தின் மாபெரும் பகுதி. முதல் துரோகம் அனுபவம் சார்ந்த சந்திப்பாக பின்னாளில் மாறுகிறது. இரண்டாவது துரோகம் பெரும் நம்பிக்கையின் இழப்பை ஏற்படுத்தும் மீளா துயரமாக மாறுகிறது. பொதுவாக முதல் துரோகம் மன்னிக்கப்படுகிறது, இரண்டாவது துரோகம் மன்னிக்கிற இடத்தை, மன்னிக்கிற உரிமையை யாரிடம் அல்லது, மன்னிக்கும் மனிதம் யாராகஇருக்கிறது என்று தெரியாமல் அலைகழிகிறது. அதனால்தான் இரண்டாவது துரோகம் சாபவிமோசனம் அடையாமல் அப்படியே கிடக்கிறது. முதல் துரோகத்திலிருந்து அதன் விடுதலையை (மன்னிப்பை) காலம் கையில் எடுத்துக்கொள்கிறது. அது யாரோ ஒருவரால் தீர்மானிக்கப்படுகிறது. உதாணரத்திற்கு, நமது நண்பர் ஒருவரால் நாம் ஏமாற்றப்படுகிறோம் என்றால் காலப்போக்கில் அவர்மீது விழுந்த வெஞ்சனம் குறையத் துவங்குவது மனித இயல்பு இல்லையா? ஒரு கட்டத்தில் அவரை பழி தீர்க்க நாம் வைத்திருந்த கோபம் முழுக்க கரைந்துபோய்விடும். ஆனால் போர் நிலம் அப்படி அல்ல.போர்ச்சூழலில் நடக்கும் துரோகத்தைப் பற்றிய பல கதைகள் நமக்குத் தெரியும்.அவ்வகையான துரோகம் காலத்திற்கும் மீளா பெயருடன் அலையும். இரண்டாவது துரோகம் யாரால் மன்னிக்கப்படும்?

அகரமுதல்வனின் கதையில் இந்த மன்னிப்பு தலைகீழாகிறது. முதல் துரோகத்தைப்போல இரண்டாவது துரோகத்திற்கான மன்னிப்பின் பொறுப்பை அவர் யதார்த்த உலகிற்குள் கொண்டு வருகிறார். அதே சமயம் இந்த மன்னிப்பு பல்வேறு வடிவங்களில் அளிக்கப்படுகிறது. முதல் துரோகத்தின் மன்னிப்பைப்போல அது பிறிதொருவரால் “மன்னிப்புக்கு” தயாராக நிற்கிறது. தாவீது பிபிசியை மன்னிக்கிறானா? பவானிடம் அவன் கேட்டுக்கொண்டே இருக்கிறான். மன்னிக்க முடியாமல் போனதன் குற்றவுணர்வுக்கு தாவீது ஆகிறான். அதாவது, மன்னிக்கக்கூடிய இடத்தை பிபிசி தாவீதுக்குக்கொடுத்தும் தாவீது அதை நிறைவேற்றாத துரோகத்திற்கு ஆளாகிறான்.“மன்னிப்பை பெறாதது – மன்னிக்க மறுத்தது” இந்தக் கதையில் மன்னிப்பு நடக்காவிட்டாலும் மன்னக்கக்கூடிய நபரை துரோகம் தேர்ந்தெடுக்கிறது.

பிரிவுக்குறிப்பு கதையில் வான்மலரின் கடிதத்தைப் படிக்காமலேயே வைத்திருக்கும் நாயகன்.இறுதியில் அவள் இத்தனை காலம் துரோக நடவடிக்கையில் செயல்பட்டிருக்கிறாள் என்பதும்அவனையும் “பாதுகாப்பான” இடத்திற்கு அழைக்கும் கடிதத்தைதான் அவள் எழுதியிருக்கிறாள் என்பதுமாக கதை முடிகிறது. கதையைக் கேட்டவனுக்கு அது அதிர்ச்சி தரும் விதமாக இருந்தாலும் நாயகன் அதை மறுபடியும் திறந்து படிக்கிறான். முதலில் சொன்ன மன்னிப்பு போல இது. நாயகனுக்கு அவளது காதலி எழுதிய கடிதம்- இறுதியில் அவள் துரோகி – மன்னிக்கப்பட்ட அக்கடிதம் (இயக்கம் –துரோகம்- மன்னிப்பு) என்பதாக கதை முடிந்தாலும் அவன் கடிதத்தைப் பிரிக்காததுதான் துரோகமாக வாசகனை நம்ப வைக்கிறது.

மன்னிப்பின் ஊடுருவல் என்கிற கதை நேரடியான மன்னிப்பைப் பற்றி பேசுகிறது (பூனைச்சுமதி- திருச்செல்வம்). மன்னிப்பு இங்கு உறவை உருவாக்குவதால் அளிக்கப்படுகிறது

மீபொருண்மை

மீபொருண்மை என்பதை பௌதீகத்திற்கு அப்பாற்பட்டதை புரிந்து கொள்கிற அல்லது தொன்ம படிமமாக மாற்ற முயல்கிற தன்மையில் இங்கு நான் பொருள் கொள்கிறேன்.  நிலத்தின்மீதான பாடலாக, அதன் பௌதீக இருப்பிலிருந்து வெளியேறி நம்பிக்கை வெளியின் கற்பனை உலகிற்குள் கொண்டு செல்லக்கூடியதாக பாலன் , நெடுநிலத்துள் கதைகள்  வருகின்றன. இதில் பாலன் கதை விவிலியக் கதையை மீளுருவாக்கம் செய்கிறது. பாலகன் பிறப்பை நாம் ஏற்கெனவே கேட்ட விவிலிய சுவிசேங்களாக மாற்றுகின்றன. நெடுநிலத்துள் விவிலிய பாணி கிடையாது என்றாலும் நிலத்தைப் பற்றிய நம்பிக்கையை மீபொருண்மை ஆக்குகிறது.

மாய யதார்த்தத் தன்மையாக மாறாதவை

பதி, பிலாக்கணம் பூக்கும் தாழி, மாபெரும்தாய் கதைகளின் Narration மாய யதார்த்தத் தன்மையைக்கொண்டவை.  மாய யதார்த்தப் போக்கை நிறுத்தக்கூடிய ஆசிரியரின் தன்னிலை கதைசொல்லியின் நெருக்குவதை தனியாக விவாதிக்க வேண்டும். சுருக்கமாக, மாய யதார்த்தத்தின் கூறுகளில் முக்கியமானது யதார்த்தத்தில் நிகழ்கிற நம்பிக்கை அல்லது நிகழ்வை அல்லது மாயத்தை அந்தச் சூழல் நம்பும்படியான நிர்பந்தத்தை கதை உருவாக்கும்.  பதி, பிலாக்கணம் கதைகளில் அதை மிகச் சரியாக நிகழ்த்துகிற சாத்தியங்கள் கொண்டிருக்கின்றன.உதாரணத்திற்கு பதி கதையில் வரும் பேயாடி மணியன் – கவண் கல்- விடுதலை, பிலாக்கணம் கதையில் பிலா இலை ஆச்சி –  நிலத்தின்  மீதான ஆசை – முளைவிடும் புதிய செடி

இந்தக் கதைகளை கூர்ந்து கவனித்தால் கதைகளின் ஆதாரமான , யதார்த்தை மாயத்தன்மையாக மாற்றுகிற கரு அல்லது சாரத்தை அதன் மௌனப் புள்ளியிலிருந்து ஆசிரியரின் மொழி வெளியே எடுத்துக் காட்டுவதை கவனிக்கலாம். இது ஒருவகையில் மாபெரும் தொகுப்பில் நிறைய இடங்களில் தென்படும் குறை. கதை முடிந்த பிறகு படைப்பாளியின் பிரக்ஞை அதை அறிவிக்கும் தொனியாக அவை எழுகிறது. அதாவது கதையைச் சொல்லும் படைப்பாளியின் பிரக்ஞை படைப்பூக்க நிலையில் தன்னை முன்னிறுத்திக் கொண்டு அக்கதையை முடித்து வைக்கிறது.

இரண்டாவது,  அகரமுதல்வனின் கதைமொழி அவ்வளவு இலகுவாக, அழகாக இருக்கிறதென்றால் கதைக்குள் தன்னை ஸ்திரமாக நிறுத்திக் கொள்ள முடியவில்லை. அதாவது, இந்த மொழிக்கு இந்தக் கதை போதவில்லை. நாவல் மாதிரியான பெரிய நிலத்துக்குள் நுழையக்கூடியது அகரமுதல்வனின் மொழி. கதைசொல்லலின் அது இயங்கும் தளம் ஒடுங்குவதாக நான் உணர்கிறேன். அதனாலேயே அழகாக தெரிகிறது. 

மூன்றாவது, சமீபகாலப் படைப்புகளில் (இக்கட்டுரையாளரும் விதிவிலக்கு அல்ல) வெளிப்படும் திரைப்படக்காட்சியின் பாணியிலான கதை விவரணை அகரமுதல்வனின் இந்த மாபெரும் தாய் தொகுப்பில் மிகக் குறைவு. எப்படியென்றால், பொதுவாக கலையில் எல்லா வகைகளும் அது எந்த வடிவமாக இருந்தாலும் இலக்கியத்தில் செயல்படுவதை நாம் அனுமதிக்கிறோம். இசை என்பது மௌனமாக இலக்கியத்தினுள் வெளிப்படும். ஓவியங்கள் அதன் புறவயத்தன்மையில் புனைவுகளில் நுழைவதில்லை, அதன் உருவெளி காட்சிகளாக மாற்றம் பெறுகின்றன. இந்த இடத்தில் திரைப்படங்களும் கலையின் இன்னொரு அம்சம்தான் என்றாலும் (அதை குறைத்து மதிப்பிடவில்லை) அதன் மொழி வேறு. திரைப்பட கதையாடல் வேறு. திரைப்படம் காட்சிமொழியை அடிப்படையாக வைத்து இயங்குகிறது. கூடவே அதனோடு இசை, நடனம், நாடகம், தொழில்நுட்பம் எங்கள் என அனைத்தையும் உள்வாங்கிக்கொள்கிறது. (யதார்த்தத்தை தொழில்நுட்பத்தால் பதிவு செய்கிறது திரைப்படம்– வால்டர் பெஞ்சமின்). திரைப்படத்தின் மொழி இந்த இத்தியாதிகளால் உருவாவது. இலக்கியப்படைப்பு இதற்கு முற்றிலும் எதிர் திசையில் இருக்கிறது. கதைகளில், கவிதைகளில் காட்சி சித்தரிப்பு என்பது எப்போதாவது நிர்பந்தத்தால் நிகழ்கிறது (கதையின் demand). 

ஏனெனில் புனைவு படைப்பாற்றலின் மொழி என்பது சிக்கலானது. கதை மொழியால் இயங்குகிறது. மொழியின் தன்மை மண் குழைத்த ஈரத்தைப் போல் கைவரக் கூடிய சாத்தியத்தை படைப்பாளி பெறுகிறான். அது எந்த இடத்தில் கெட்டிபட வேண்டும், எங்கு இழைய வேண்டும், எப்போது உருவமாகும் என்தெல்லாம் அவனுடைய வித்தையைப் பொறுத்தது. இங்கு உணர்ச்சிகளின் வெளிப்பாடு மொழியால் நிகழ்கிறது. ஒரு கதாப்பத்திரத்தின் மொத்த குணங்களும் உங்களுக்கு ஒரே பத்தியில் விளக்குவதில்லை. பக்கங்களில் கதையின் பி்ன்னலோடு அது விரியும். கிளாஸிக் படைப்புகள் எதையும் நீங்கள் இதற்கு உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். அதனால்தான் ஒரு நாவலை திரைப்படமாக்க அந்தத் தொழில்நுட்பம் திணறுகிறது. கவனிக்க வேண்டும், திணறல் என்பது அந்தத் திரைப்பட இயக்குநரை அல்ல. அவரால் அதன் மொழிக்கு பிரதியை மாற்றுகிற சிக்கல்களை. 

நம்முடைய படைப்பின் மொழியில் இந்தத் திரைப்பட மொழியின் தாக்கம் உருவானதன் பின்னணியை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். நம்மைச் சுற்றி திரண்டிருக்கும் திரைப்படங்களினாலான பார்வை அது. (நிறைய சினிமா பார்ப்பது அல்ல இங்கு குறிப்பிடுவது). அது வேறு என்னவாக இருக்கலாம் என்று ஆய்வு செய்யத்தான் வேண்டும். எனது பதில், நாம் பார்க்கின்ற யதார்த்தத்தைக் காட்சி்களாகச் சேமிக்கிறோம் என்பதாக இப்போதைக்கு இங்கு சொல்லிக் கொள்வோம். இது மிக நீண்ட விவாதத்திற்குரியது. சுருக்கமாக இங்கு திரைப்படக்காட்சி மொழி என்று குறிப்பிட வேண்டும்.

இந்தத் தாக்கம் அகரமுதல்வனின் மாபெரும்தாயில் மிகவும் குறைவு. பி.பி.சி எப்படி இருப்பான் என்று அவர் சித்தரிக்கவில்லை, மூன்றிலுப்பை கிராமத்தை விவரிக்கவில்லை, நளாயினின் உலகம் எப்படி பட்டதெனக் காட்டவில்லை, வான்மலரின் கடிதம் எப்படி இருந்தது என்றோ அதை அவன் எப்படி வைத்திருந்தான் என்றோ ஒரு  இடத்தில்கூட சொல்லப்படவில்லை, பேயாடி மணியன் முகம் எப்படி இருக்கிறது என்று தெரியாது, பிலா இலை ஆச்சியின் குரல் உச்சரிப்பை கொடுக்கவில்லை.பூனைச்சுமதியின் வீடும் குழந்தைகளும் நமக்கு தெரிகிறது, சிவகலையின் தாளாத அலைக்கழிப்பு வழியே அவளின் உருவத்தை காண்கிறோம், கடைசி கதையில் வதைமுகாம் பற்றிய பெரிய விவரணை கூட இல்லை ஆனால் உங்களால் அதன் பயங்கரத்தை உணர முடிகிறது.புனைவிலக்கியத்தின் மொழி என்பது இதுதான். உணர்ச்சிகளாலும் உரையாடல்களாலும் சில சமயத்தில் அதற்கு வெறும் ஒரு சொல் போதும். இந்தத் தொகுப்பில் நான் கற்றுக்கொண்டது காட்சிமொழியின் தாக்கமற்ற கதைசொல்லலை.

***

-தூயன்
 

 

https://vanemmagazine.com/மாபெரும்-தாய்-வாசிப்பு/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கருத்தை பார்த்து விட்டு அவரின் அடிப்பொடிகள் பிரஷர் குளுசையை போட்டு விட்டு படிக்க தொடங்குவது நல்லது 😀  ஸ்டாரட்  மியூசிக் .....   இவர் தமிழ்  அரசியலுக்கு வந்து தமிழர்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை மாறாக சிங்களத்தையும் சிங்கள போர்க்குற்ற படைகளையும் விசாரணையில் இருந்து விடுவித்து அதில் வேறை பெருமை கொண்டாடியவர் . தமிழர்களின் அரசியலை சின்னாபின்னமாக்கி தள்ளியவர் இனி இவர் லண்டன் பக்கம் வெள்ளை கொடியுடன் தான் வரணும் .
    • Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 10:28 AM   குரங்குகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை பேராதனை பல்கலைக்கழகத்தில் உள்ள கால்நடை மருத்துவ பீடம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கருவி பெண் குரங்களின் கருப்பையில் கருவுறுவதை தடுக்கும் என தெரிவித்துள்ளது. கருவியை ஒருமுறை குட்டி ஈன்ற ஒன்றரை வயது பெண் குரங்கிற்கு சோதனைக்காக பயன்படுத்தப்பட்டது. சோதனையின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட கதிரியக்க பரிசோதனையில், கருப்பையில் பொருத்தப்பட்ட கருவி வெற்றிகரமாக செயல்பட்டுள்ளதை அவதானித்ததாக பேராதனை பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவ பீடத்தைச் சேர்ந்த சிரேஷ்ட பேராசிரியர் அசோக தங்கொல்ல தெரிவித்தார். பெண்களுக்கு கர்ப்பம் தரிப்பதை தடுக்கும் நடைமுறையிலுள்ள சாதாரண அளவிலான கருவியை பயன்படுத்திய போது அது தோல்லி அடைந்தது. அதனால் சிறிய அளவிலான வளையத்தை உருவாக்க முடிவு செய்தோம் என தெரிவித்துள்ளார்.  பேராதனை போதனா வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் நரம்பியல் திணைக்களத்தின் வைத்தியர்களும் பேராதனையிலுள்ள பல் வைத்திய பீடத்தினரும் இந்த முயற்சிக்கு தமது ஒத்துழைப்பை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். “இந்த கருவியை பொறுத்த விலங்கை அமைதிப்படுத்த அரை மணி நேரம் எடுக்கும், அதைத் தொடர்ந்து அறுவை சிகிச்சைக்கு மற்றொரு அரை மணி நேரம் எடுக்கும். இந்த முறை நாட்டில் குரங்குகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது." என தெரிவித்துள்ளார். இந்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை உற்பத்தி செய்ய 2000 ரூபாய் செலவாகும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181987
    • 25 APR, 2024 | 07:33 PM   (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) சிரேஷ்ட பிரஜைகளுக்கான வட்டியை 15 வீதமாக வழங்க வேண்டுமானால் அரசாங்கம் மேலும்  40 பில்லியன் ரூபாவை அதற்காகச் செலுத்த நேரிடும். அரசாங்கத்தின் தற்போதைய நிதி நிலைமையைக் கவனத்தில் கொண்டு அது தொடர்பில் உரியக் கவனம் செலுத்தப்படும்  என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய  தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் தமது கேள்வியின் போது வங்கி வட்டி வீதங்கள் குறைக்கப்பட்டுள்ள நிலையில் சிரேஷ்ட பிரஜைகளுக்கான வங்கி வைப்புக்கான வட்டி வீதமும் குறைக்கப்பட்டுள்ளது. அதனை நம்பி வாழும் அவர்களின் வட்டி வீதத்தை அதிகரித்து வழங்க அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அது தொடர்பில்  இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இக் காலங்களில் வங்கி வட்டி வீதம் தொடர்பில் பிரச்சினைகள் எழுந்துள்ளன. கடனுக்கான வட்டி அதிகரிக்கப்பட்டு வங்கி வைப்புக்கான வட்டியை 16 வீதத்திலிருந்து தற்போது தனி இலக்கத்திற்குக் கொண்டு வந்துள்ளோம். வைப்புக்களுக்கான வட்டியைக் குறைப்பது இயல்பாக இடம்பெறுகின்ற ஒன்று. அது தொடர்பில் சிரேஷ்ட பிரஜைகளும் சில பாதிப்புகளை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது. அதேவேளை, சிரேஷ்ட பிரஜைகள் முகம் கொடுக்கும் மற்றுமொரு பிரச்சினை ஒரு லட்சம் ரூபாவுக்கு குறைவாகப் பணத்தை வைப்புச் செய்வது. அவ்வாறான பிரச்சினைகளுக்கு நாம் நடவடிக்கை ஒன்றை எடுத்தோம். எனினும் அது சாத்தியப்படவில்லை. சிரேஷ்ட பிரஜைகளின் வங்கி வைப்புகளுக்கு வட்டி அதிகரிக்க வேண்டியது அவசியம். எனினும் அதற்கான நிதியை அரசாங்கமே ஒதுக்க வேண்டியுள்ளது. இவ்வாறான விடயங்களுக்காக ஏற்கனவே வங்கிக்கு அரசாங்கம் வழங்க வேண்டிய நிலுவை இன்னும் தொடர்கிறது.  நீண்ட காலமாக இவ்வாறு சிரேஷ்ட பிரஜைகளுக்கு அதிக வட்டியை வழங்குவதற்கு அரசாங்கமே வங்கிகளுக்கு நிதி வழங்கி வந்துள்ளது.  நூற்றுக்கு 15 வீதமாக அதனை வழங்க வேண்டுமானால் சுமார் 40 பில்லியன் ரூபாவை அரசாங்கம் அதற்காக ஒதுக்க வேண்டியுள்ளது. முன்னரை விட அதிகமான நிதியை இப்போது ஒதுக்க நேர்ந்துள்ளது. அந்த வகையில்  நாட்டின் தற்போதைய நிலையையும் கவனத்திற் கொண்டு எவ்வாறு இந்த நிலைமையைச் சரி செய்வது என்பது தொடர்பில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருகிறது என்றார். https://www.virakesari.lk/article/181967
    • அரைச்சதம் அடித்து வென்றபோதும் விமர்சிக்கப்படும் கோலி; ஆர்சிபி கேப்டன் கூறியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES 26 ஏப்ரல் 2024, 03:06 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கடந்த 6 போட்டிகள் முடிந்தபோதெல்லாம் ஆர்சிபி வீரர்கள் முகத்தில் சோகம், விரக்தி, நம்பிக்கையின்மை, டக்அவுட்டுக்கும் கவலையோடு சென்றனர், ஆர்சிபி ரசிகர்களும் சோகத்தோடு வீட்டுக்குப் புறப்பட்டனர். ஆனால், நிலைமை நேற்று தலைகீழாக மாறியது. ஆர்சிபி வீரர்கள், ரசிகர்கள் முகம் நிறைய மகிழ்ச்சி, புன்னகை மிதந்தது, வீரர்கள் ஒவ்வொருவரும் கட்டிஅணைத்து மிகழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். காரணம், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றி. ஒவ்வொரு ஆட்டத்தின் முடிவிலும் ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் போட்டி முடிந்தபின் பேட்டியளிப்பது வழக்கம். ஆனால், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றியால், கொண்டாட்டமனநிலையில் கேப்டன் டூப்பிளசிஸ் பேட்டியளிக்கவே மறந்துவிட்டார். சக வீரர்களுடன் வெற்றிக் கொண்டாட்டத்தை முடித்தபின்புதான் டூப்பிளசிஸ் சேனல்களைச் சந்தித்தார். ஹைதராபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 41-ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 35 ரன்களில் வீழ்த்தி ஒரு மாதத்துக்குப்பின் ஆர்சிபி அணி வெற்றியை ருசித்தது. முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 7 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் சேர்த்தது. 207 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்து 35 ரன்களில் தோல்வி அடைந்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபிக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு இன்னும் இருக்கிறதா? ஆர்சிபி அணி தொடர்ந்து 6 தோல்விகளைச் சந்தித்த நிலையில் இந்த வெற்றி அந்த அணிக்கு பெரிய ஊக்கமாகவும், நம்பிக்கையையும் அளித்துள்ளது. இந்த வெற்றியால் புள்ளிப்பட்டியலில் பெரிதாக மாற்றத்தை ஆர்சிபி ஏற்படுத்தவில்லை என்றபோதிலும், வீரர்களின் அணுகுமுறை, நம்பிக்கை, உற்சாகம் ஆகியவை அதிகரிக்கும். ஆர்சிபி அணி 9 போட்டிகளில் 2 வெற்றி, 7 தோல்விகள் என 4 புள்ளிகளுடன் 10-வது இடத்திலேயே நீடிக்கிறது. நிகர ரன்ரேட்டில் மைனஸ் 0.721 என்ற ரீதியில் இருக்கிறது. இந்த வெற்றியால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துள்ளது. அடுத்துவரும் 5 போட்டிகளிலும் ஆர்சிபி அணி தொடர் வெற்றிகள் பெறும்பட்சத்தில் , பிற அணிகளின் தோல்விகளும் சாதகமாக இருந்தால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும். அதேசமயம், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதுவரை 8 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்விகள் என 10 புள்ளிகளுடன் 3 - ஆவது இடத்திலேயே நீடிக்கிறது, நிகர ரன்ரேட்டில் 0.577 என்ற நிலையில் இருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபியின் வெற்றிக்குக் காரணம் என்ன? ஆர்சிபி அணிக்கு நேற்று கிடைத்த வெற்றி ஒரு தனிநபர் உழைப்பால் கிடைத்ததாகக் கூறமுடியாது. தொடக்கத்தில் ஆர்சிபி அணிக்கு கிடைத்த வாய்ப்பை நழுவவிடாமல் கடைசிவரை சன்ரைசர்ஸ் அணிக்கு கொடுத்த நெருக்கடியால் வெற்றி வசமானது. இதில் ஏதேனும் ஒரு கட்டத்தில் கேப்டன்ஷிப்பில் சுணக்கம் ஏற்பட்டிருந்தாலோ அல்லது, வீரர்களிடையே உற்சாகக் குறைவு ஏற்பட்டிருந்தாலோ ஆட்டம் கைமாறி இருக்கும். ஆர்சிபி அணி தங்களுக்கு கிடைத்த தருணத்தை தவறவிடாமல் கடைசிவரை எடுத்துச் சென்றதே வெற்றிக்கு முக்கியக் காரணம், பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங்கில் ஒவ்வொரு வீரர்களும் தங்களின் அதிகபட்ச பங்களிப்பை அளித்தனர். அதில் குறிப்பாக மெதுவான விக்கெட்டைக் கொண்ட மைதானத்தில் 19 பந்துகளில் அரைசதம் அடித்து ஆட்டமிழந்த ரஜத் பட்டிதார் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரின் கணக்கில் 2 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் அடங்கும். அதிலும் மயங்க் மார்க்கண்டே வீசிய 11வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை பட்டிதார் பறக்கவிட்டு அரைசத்ததை நிறைவு செய்தார். பட்டிதாரின் ஸ்ட்ரைக் ரேட் 250 ஆக இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பொறுமையாக ஆடிய கோலி விராட் கோலியும் அரைசதம் அடித்தார். ஆனாலும் அவர் மீது சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. கோலி ஆட்டமிழந்தபோது 43 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்திருந்தார். இதில் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரி, ஸ்ட்ரைக் ரேட் 118.60 ஆக இருந்தது. விராட் கோலி தனது இருப்பை ஆட்டம்முழுவதும் வைத்திருக்கும் நோக்கில் டி20 போட்டி என்பதையே மறந்துவிட்டு பேட் செய்கிறாரா என்று ரசிகர்கள் விமர்சித்தனர். விராட் கோலி பவுண்டரி, சிக்ஸர் அடிக்க வேண்டிய பந்துகளில் கூட ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்கிறேன் எனக் கூறிக்கொண்டு ஒரு ரன், 2 ரன்கள் எடுத்தார் என ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் விராட் கோலி வீணாக்கிய பந்துகளால் ஆர்சிபி அணியின் ஸ்கோர் 20 முதல் 30 ரன்கள் குறைந்துவிட்டது என்றும் விமர்சிக்கப்படுகிறது. இந்த ஆட்டத்தில் ஆர்சிபி அணியில் அரைசதம் அடித்திருந்தபோதிலும் ஸ்ட்ரைக் ரேட் குறைவாக வைத்திருந்த ஒரே பேட்டர் கோலி மட்டும்தான். கேப்டன் டூப்பிளசிஸ் தொடக்கத்தில் சிறிய கேமியோ ஆடி 12 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்து 250 ஸ்ட்ரைக் ரேட்டில் பேட் செய்து ஆட்டமிழந்தார். கேமரூன் க்ரீன் 20 பந்துகளில் 37 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் ஸ்ட்ரைக் ரேட் 185 ஆக இருந்தது. கடைசி வரிசையில் களமிறங்கிய மகிபால் லாம்ரோர், தினேஷ் கார்த்திக், ஸ்வப்னில் சிங் ஆகிய 3 பேரின் ஸ்ட்ரைக் ரேட்டும் 175க்கு அதிகமாகவே இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பந்துவீச்சில் பொறுப்புணர்வு ஆர்சிபி அணி பந்துவீச்சாளர்கள் நேற்றைய ஆட்டத்தில் கட்டுக்கோப்பாகப் பந்துவீசினர். முகமது சிராஜ் வழக்கமாக ரன்களை வாரி வழங்கும் நிலையில் 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள்தான் கொடுத்தார். யாஷ் தயால் 3 ஓவர்கள் வீசி 18 ரன்கள் ஒருவிக்கெட், கரன் ஷர்மா 4 ஓவர்கள் வீசி 29 ரன்கள் கொடுத்து 2 விக்கெட், கேமரூன் க்ரீன் 2 ஓவர்கள் வீசி 12 ரன்களுடன் 2 விக்கெட் என 6 ரன்ரேட்டுக்குள் கட்டுக்கோப்பாக பந்துவீசினர். ஸ்வப்னில் சிங், பெர்குஷன், ஜேக்ஸ் மட்டுமே இரட்டை இலக்க ரன்ரேட் வைத்திருந்தனர். மற்ற பந்துவீச்சாளர்கள் கட்டுக்கோப்புடன் பந்துவீசியது வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. வெற்றி கிடைக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்? ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் கூறுகையில் “ ஒவ்வொரு போட்டி முடிந்தபின்பும் பேட்டியளிப்பேன் ஆனால் இன்று மறந்துவிட்டேன். காரணம் 6 போட்டிகள் தோல்விக்குப்பின் கிடைத்த வெற்றிதான். கடந்த போட்டிகளில் எல்லாம் நாங்கள் வெற்றிக்கு அருகே வந்துதான் அதை அடையமுடியாமல் தோற்றோம். கொல்கத்தா அணியுடன் ஒரு ரன்னில் வெற்றியை இழந்தோம். எங்களால் வெற்றி பெற முடியும் கடைசி நேரத்தில் ஏதோ தவறு நடக்கிறது என்பதை புரிந்துகொண்டோம். இதுபோன்ற நெருக்கடியான நேரத்தில் கிடைக்கும் வெற்றிதான் வீரர்களுக்கு நம்பிக்கையளிக்கும். இந்த வெற்றி எங்களுக்கு மகத்தானது.” “இந்தவெற்றி கிடைக்காவிட்டால் வீரர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பார்கள், நம்பிக்கையை ஒட்டுமொத்தமாக குலைத்திருக்கும். நம்பிக்கையை பற்றி ஓய்வறைக்குள் பேசவே முடியாது, போலியான நம்பிக்கையை வீரர்களிடம் செலுத்த முடியாது. களத்தில் நமது செயல்பாடுதான் நம்பிக்கையை ஏற்படுத்தும். போட்டித்தொடரின் முதல்பாதியில் நம்முடைய முழுதிறமைக்கும் விளையாடவில்லை என்று நினைத்தோம். 50சதவீதம் முதல் 60 சதவீதத்தை வெளிப்படுத்தனால், உங்களால் நம்பிக்கையைப் பெற முடியாது. கடந்த வாரம் முழுவதும் நாங்கள் அனைவரும் கடினமாக பயிற்சி செய்தோம், உழைத்தோம், சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த திட்டமிட்டோம்.” “ரஜத் பட்டிதார் தொடர்ந்து இரு அரைசதங்களை விளாசியுள்ளார். கிரீன் தேவையான கேமியோ ஆடினார். சின்னசாமி அரங்கு எங்களுக்கு மிகப்பெரிய மனவேதனையை அளித்தது. அதுபோன்ற சிறிய மைதானத்தில் பந்துவீசுவது பந்துவீச்சாளர்களுக்கு கடினமான பணி. கரன் சர்மா அவரின் திறமையை வெளிப்படுத்த ஒரு தளம் தேவைப்பட்டது, அதற்கு இந்தப் போட்டி உதவியது. எங்களிடம் தற்போது லெக் ஸ்பின்னரும் இருக்கிறார்” எனத் தெரிவித்தார் பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் பலவீனத்தை அம்பலமாக்கிய ஆர்சிபி சன்ரைசர்ஸ் அணி இந்த சீசனில் இதற்கு முன் பெற்ற வெற்றிகள் அனைத்தும் முதலில் பேட் செய்து மிகப்பெரிய ஸ்கோரை எட்டி, எதிரணியை திக்குமுக்காடச் செய்து பெற்றவையாகும். சேஸிங் செய்து சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது குறைவுதான். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் 207 ரன்கள் இலக்கு வைத்து சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்ய அழைத்தபோது அந்த அணியின் பலவீனத்தை ஆர்சிபி அணி வெளிப்படுத்திவிட்டது. அதாவது மிகப்பெரிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டால், சன்ரைசர்ஸ் பேட்டர்களும் பதற்றத்தில் சொதப்புகிறார்கள் என்பதை வெளிப்படுத்திவிட்டது. ஹைதராபாத் ஆடுகளம் சன்ரைசர்ஸ் அணிக்கு சொந்த மைதானம். பேட்டிங்கிற்கு சொர்க்கபுரியான இந்த மைதானத்தில்தான் சன்ரைசர்ஸ் அணி மிகப்பெரிய ஸ்கோரையும் எட்டியுள்ளது. அப்படி இருந்தும் நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி தோற்றதற்கு சேஸிங்கை கையில் எடுத்ததுதான் என்று ஆர்சிபி வெளிப்படுத்தியுள்ளது. அடுத்துவரும் ஆட்டங்களில் சன்ரைசர்ஸ் அணி ஒருவேளை டாஸில் தோற்றால், எதிரணிகள் பேட்டிங் செய்து, சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்யவைத்து நெருக்கடி கொடுக்கும் வியூகத்தை கையில் எடுக்கலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் பேட்டர்களை எவ்வாறு சுருட்டுவது என கேப்டன் டூப்பிளசிஸ் பல உத்திகளைப் பயன்படுத்தினார். முதல் ஓவரிலேயே ஜேக்ஸை பந்துவீசச் செய்து டிராவிஸ் ஹெட் விக்கெட் வீழ்த்தப்பட்டது, அடுத்து ஸ்வப்னில் சிங் மூலம் ஒரே ஓவரில் கிளாசன், மார்க்ரம் என இரு ஆபத்தான பேட்டர்கள் பெவிலியனுக்கு அனுப்பப்பட்டனர். கிளாசன் இமாலய சிக்ஸர் அடித்த நிலையில் அடுத்த பந்தில் விக்கெட்டை இழந்தார். மார்க்ரம் ஃபுல்டாஸ் பந்தில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். அபிஷேக் சர்மா விக்கெட்டை யாஷ் தயாலும், நிதிஷ் ரெட்டி விக்கெட்டை கரண் சர்மாவும் எடுக்கவே சன்ரைசர்ஸ் பேட்டிங் வரிசை ஆட்டம் கண்டது. பவர்ப்ளே ஓவருக்குள் சன்ரைசர்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்தது, 10 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை சன்ரைசர்ஸ் இழந்து தடுமாறியது. பாட்கம்மின்ஸ் கேமியோ ஆடி 31 ரன்கள் சேர்த்து க்ரீன் பந்துவீச்சிலும், புவனேஷ்வர் குமார் 13 ரன்னில் க்ரீன் பந்துவீச்சிலும் ஆட்டமிழந்தனர். ஷாபாஸ் அகமது மட்டும் 40 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அடுத்தடுத்து விக்கெட் சரிவு, பெரிய இலக்கு ஆகியவை சன்ரைசர்ஸ் அணியை மேலும் நெருக்கடிக்குள் தள்ளி, தோல்வியடையச் செய்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES பட்டிதார் அளித்த உத்வேகம் ஆர்சிபி அணி பெரிய ஸ்கோரை எட்டுவோம் என்ற நோக்கத்தில் ஆட்டத்தைத் தொடங்கியது, புவனேஷ்வர், கம்மின்ஸ் வீசிய ஓவர்களை அதிரடியாக அடித்த கேப்டன் டூப்பிளசிஸ் பவுண்டரி, சிக்ஸர் விளாசினார். 3ஓவர்களில் 43 ரன்கள் என பெரிய ஸ்கோர் சென்றது. ஆனால், நடராஜன் பந்துவீச்சில் டூப்பிளசிஸ் 25 ரன்களில் ஆட்டமிழந்தவுடன் ரன்ரேட் குறையத் தொடங்கியது. ஷாபாஸ் சுழற்பந்துவீச்சில் கோலி வழக்கம்போல் மெதுவாக ஆடத் தொடங்கினார். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் ஆர்சிபி ஒரு விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் சேர்த்தது. தொடக்கத்தில் வேகமாக பேட்டை சுழற்றிய கோலி 11 பந்துகளில் 23 ரன்கள் சேர்த்தார், அதன்பின், 32 பந்துகளில் கோலி 28 ரன்கள் மட்டுமே சேர்த்தார். ஜேக்ஸ் 6 ரன்னில் மார்க்கண்டே பந்துவீச்சில் ஆட்டமிழந்தபின் பட்டிதார் களமிறங்கினார். பட்டிதார் களத்துக்கு வந்தபின்புதான் ஆர்சிபியின் ஸ்கோர் எகிறத் தொடங்கியது. வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 125 ஸ்ட்ரைக்ரேட்டிலும், சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 197 ஸ்ட்ரைக் ரேட்டிலும் பட்டிதார் ஆடி ரன்களைச் சேர்த்தார். அதிலும் மார்க்கண்டே வீசிய 11-வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை விளாசிய பட்டிதார் 19 பந்துகளில் அரைசதம் அடித்தார். கேமரூன் நடுவரிசையில் களமிறங்கி தேவையான ஒரு கேமியோ ஆடி ஸ்கோரை உயர்த்தினார். குறிப்பாக கேப்டன் கம்மின்ஸ் பந்துவீச்சில் கேமரூன் 4 பவுண்டரிகளை விளாசி 20 பந்துகளில் 37ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த சீசனில் சிறப்பாக பேட் செய்து வரும் டிகே 11 ரன்னில் ஆட்டமிழந்தார். ஸ்வப்னில் சிங் 12 ரன்னில் விக்கெட்டை இழந்தார். https://www.bbc.com/tamil/articles/c80z102przro
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.