Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பாணந்துறை பின்வத்த பகுதியில் ஜவரின் சடலங்கள் மீட்பு

Featured Replies

பாணந்துறை பின்வத்த பகுதியில் ஜவரின் சடலங்கள் மீட்பு

பாணந்துறை பின்வத்த பிரதேசத்தில இனம் தெரியாத ஜவரின் சடங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

சிறீலங்கா காவல்துறையினருக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை வழங்கிய தகவலின் பெயரிலேயே இச்சடங்களை சிறீலங்கா காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

கண்டெடுக்கப்பட்ட சடலங்கள் தென்னிலங்கையில் இயங்கும் இரு பாதாள உலகக் குழுவினருடையதாக இருக்கலாம் என சிறீலங்கா தேசிய பாதுகாப்பு ஊடக மையம் தெரிவித்துள்ளது.

http://www.pathivu.com/

2004 ஆம் ஆண்டு இசை நிகழ்ச்சியொன்றில் தொப்பியொன்றை அபகரித்தமைக்காகவே இன்று வரை 25 பேர் கொல்லப்பட்ட குழு வன்முறையின் ஒரு அத்தியாயமாகவே இந்தக் கொலைகள் இடம் பெற்றுள்ளன.

மேற்குலகில் தமிழ் இளைஞர்களின் வன்முறைகளை பிரசித்தம் செய்யும் சிங்கள ஊடகங்கள் இதனை அடக்கி வாசிக்கின்றன!

பானந்துறையில் ஐந்து இளைஞர்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர்

பானந்துறை தல்லுருவ கல்வெட்டி மோதர பன்சல வீதி மற்றும் பின்வத்த பிரதேசங்களைச் சேர்ந்த ஐந்து இளைஞர்கள் துப்பாக்கியால் சுடப்பட்டும், கூரிய ஆயுதங்களால் தாக்கியும் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று காலை இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

பானந்துறை தல்லுருவ திப்பெத்த வீதியின் கொலுகொட்டுவத்த ஓடைக்கு அருகாமையிலேயே இந்த கோரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவ இடத்தில் சடலங்கள் ஆங்காங்க காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அவர்கள் பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிள்களும், ஒரு சைக்கிள் வண்டியும் சம்பவ இடத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

மரண வீடொன்றுக்கு சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே இவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

பானந்துறை தல்லுருவ கல்வெட்டி மோதர பன்சல வீதியைச் சேர்ந்த மஹதுருகே ருக்ஷான் தனிது தாப்ரூ (21), அவருடைய சகோதரர் மஹதுருகே ருக்மால் சமீர தாப்ரூ (20) மற்றும் பானந்துறை பின்வத்த வீதியைச் சேர்ந்த தினேஷ் சமீர (19), ஹென்னதிக ரொஷான் இந்திக சொய்சா (19), பின்வத்த மீகாகொஹ_வெல வீதியைச் சேர்ந்த சமீர சதுரங்க (19) ஆகியோர இவ்வாறு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர்.

ஆகஸ்ட் 25ம் திகதி தல்லுருவ கல்கொட்டுவத்த பிரதேசத்தில் மரண வீடொன்றுக்கு சென்று வீடுதிரும்பிக் கொண்டிருக்கும் போதே இவர்கள் கொலைசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த படுகொலைச் சம்பவத்திற்கு எம்.9 ரக துப்பாக்கியொன்றும், கூரிய ஆயுதங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெளிவாகியுள்ளது.

பானந்துறை பின்வத்த மற்றும் மொரவின்ன பிரதேசங்களைச் சேர்ந்த இரு குழுக்களுக்கு இடையிலான கோஷ்டி மோதலே இந்த சம்பவத்திற்கு ஏதுவாக அமைந்திருக்கலாம் என பானந்துறை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

2004ம் ஆண்டு பானந்துறை மொரவின்ன பிரதேசத்தில் நடைபெற்ற இசை நிகழ்;ச்சியொன்றின் போது ஒரு தொப்பியை தட்டிப் பறித்தமையே இந்த சம்பவங்களுக்கு ஆரம்பம் எனத் பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவருகிறது.

இதன்போது, இடம்பெற்ற கொலைச் சம்பவத்தினால் இதுவரையில் இந்த இரண்டு கோஷ்டியினரதும் 25 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

கொலையுண்டவர்களில் சிலருக்கு எதிராக குற்றச் செயல்களில் ஈடுபட்டமைக்கான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றிருந்ததாகவும் பானந்துறை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பானந்துறை பிரதான நீதவான் ஜகத் ஏ கஹதகமகே அவர்கள் முன்னிலையில் சம்பவ இடத்தில் ஆரம்பக்கட்ட விசாரணைகள் நடைபெற்றதாகவும், சடலங்களை உறவினர்கள் அடையாளம் காட்டியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சடலங்கள் மரண பரிசோதணைக்காக பானந்துறை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

group.jpg

http://lankadissent.com/index.php?option=c...85&Itemid=2

Edited by சாணக்கியன்

  • கருத்துக்கள உறவுகள்

இரத்த வெறி

[29 - ஆஉகுச்ட் - 2007] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ]

கடந்த 2003 ஆம் ஆண்டில் பாணந்துறை பின்வத்த என்ற இடத்தில் நடைபெற்ற இசைவிழாவொன்றின்போது இளைஞரொருவரின் தலையிலிருந்த தொப்பியை இன்னொரு இளைஞன் கழற்றி வீசியதால் இரு குழுக்களுக்கிடையே மோதல் ஏற்பட்டு இதுவரையில் 26 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இப்படுகொலைச் சம்பவங்களின் ஒரு தொடர்ச்சியாக இரண்டு வாரங்களுக்கு முன்னர் களுத்துறை மாவட்டத்தில் அங்குருவா தோட்ட எனுமிடத்தில் ஒரு சிறுபிள்ளையும் கொலைசெய்யப்பட்டுள்ளதுடன், இவ்வாறு படுகொலைப் படலம் தொடர்ந்து கொண்டே போகின்றது. கடந்த ஞாயிற்றுக்கிழமை பாதாள உலகக் கோஷ்டி மோதலால் ஐவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். நாட்டில் தொடரும் படுகொலைக் கலாசாரம் முடிவிற்குக் கொண்டுவரப்பட முடியாத தொடர் கதையாகவே நீண்டுகொண்டு போகின்றது. மனிதப் படுகொலை என்பது இன்று நமது நாட்டில் சர்வசாதாரணமானதொன்றாகவே மாறிவிட்டது. மனித உயிர்களுக்கு பெறுமதி இல்லாத அவலம் இன்று உருவாகியுள்ளது.

கால் நூற்றாண்டுகாலமாக நீடிக்கும் உள்நாட்டுப் போரினால் மக்கள் அவல நிலைக்குள் தள்ளப்பட்டிருக்கின்றனர். இந்தப் போர் இன்று எமது சமுதாயத்தை குரூர மயப்படுத்தி விட்டதையே காணமுடிகிறது. அதன் விளைவுகளை நாம் தொடர்ந்து அனுபவித்துக்கொண்டிருக்கின்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.