Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மசகு எண்ணெய் கப்பலுக்கு செலுத்த 30 மில்லியன் டொலர் கூட அரசாங்கத்திடம் இல்லையா ? ஐக்கிய மக்கள் சக்தி கேள்வி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மசகு எண்ணெய் கப்பலுக்கு செலுத்த 30 மில்லியன் டொலர் கூட அரசாங்கத்திடம் இல்லையா ? ஐக்கிய மக்கள் சக்தி கேள்வி

By DIGITAL DESK 2

10 NOV, 2022 | 05:21 PM
image

(எம்.மனோசித்ரா)

கடலில் 50 நாட்களுக்கும் அதிக காலம் நங்கூரமிடப்பட்டுள்ள மசகு எண்ணெய் கப்பலுக்கு 7.3 மில்லியன் டொலர் தாமதக் கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த தொகையைக் கொண்டு எரிவாயு கப்பலொன்றை முற்பதிவு செய்திருக்க முடியும். மசகு எண்ணெய்யை இறக்குமதி செய்வதற்கு தேவையான 25 - 30 மில்லியன் டொலர் கூட அரசாங்கத்திடம் இல்லையா என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார கேள்வியெழுப்பினார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் வியாழக்கிழமை (நவ. 10) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சீனி வரி மோசடியால் அரசாங்கம் 1600 கோடி ரூபாவை இழந்துள்ளது. இழந்துள்ள இந்த தொகையை மீளப் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

9 ஆம் திகதி என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த திகதியாகும். நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கு இந்த திகதியிலேயே பல முக்கிய சம்பவங்கள் பதிவாகின.

அதற்கமையவே இம்மாதம் 9 ஆம் திகதியும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. எனினும் பொலிஸார் அடக்குமுறைகளை பிரயோகித்து ஆர்ப்பாட்டத்தைக் கலைப்பதற்கு நடவடிக்கை எடுத்தனர்.

சஜித்துக்கு வாய்ப்பளிக்காவிட்டால் அரசியலிலிருந்து விலகுவேன்: நளின் பண்டார  எச்சரிக்கை!!

தற்போது மக்களின் வாக்குகள் அற்றவர்களே நாட்டை ஆட்சி செய்து  கொண்டிருக்கின்றனர். இவ்வாறான நிலையிலேயே உள்ளுராட்சி மன்றத் தேர்தலை மீண்டும் காலம் தாழ்த்துவதற்கு முயற்சித்துக் கொண்டிருகின்றனர்.

தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தரப்பினருடன் எவ்வித நிபந்தனையும் இன்றி நாமும் இணைந்து குரல் கொடுப்போம்.

மாலைதீவின் சபாநாயகர் மொஹமட் நஷீட் விரைவில் இலங்கையின் அமைச்சரவையில் அமைச்சராக நியமிக்கப்பட்டாலும் , அதில் ஆச்சரியப்படுதற்கு ஒன்றும் இல்லை. உள்நாட்டில் மாத்திரமின்றி , சர்வதேசமும் இது தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் உள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி முதலாவது ஆண்டு நிறைவு இன்று!

கடந்த 52 நாட்களாக மசகு எண்ணெய் கப்பல் கடலில் நங்கூரமிடப்பட்டுள்ளது. இந்த கப்பலிலிருந்து மசகு எண்ணெண்யை தரையிரக்குவதற்கு 25 - 30 மில்லியன் டொலர்கள் மாத்திரமே தேவையாகும்.

ஆனால் இக்கப்பலுக்கு இதுவரையில் 7.3 மில்லியன் டொலர் தாமதக்கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு செலுத்தப்பட்டுள்ள தாமதக் கட்டணத்தைக் கொண்டு எரிவாயு கப்பலொன்றை முற்பதிவு செய்ய முடியும்.

இந்தியாவினால் ரஷ்யாவிடமிருந்து நேரடியாக எரிபொருளை பெற்றுக் கொள்ள முடியுமெனில் எம்மால் ஏன் முடியாது? இரண்டாம் தரப்பினர் ஊடாக இலங்கைக்கு ரஷ்யாவிலிருந்து எரிபொருள் இறக்குமதி செய்யப்படுகிறது. 

நாட்டில் தற்போது அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைத்துள்ளதாகக் காண்பிக்க அரசாங்கம் முயற்சிக்கிறது. ஆனால் இதுவரையில் எந்தவொரு பிரச்சினைக்கும் முழுமையான தீர்வு வழங்கப்படவில்லை என்றார்.

https://www.virakesari.lk/article/139662

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

மாலைதீவின் சபாநாயகர் மொஹமட் நஷீட் விரைவில் இலங்கையின் அமைச்சரவையில் அமைச்சராக நியமிக்கப்பட்டாலும் , அதில் ஆச்சரியப்படுதற்கு ஒன்றும் இல்லை. உள்நாட்டில் மாத்திரமின்றி , சர்வதேசமும் இது தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் உள்ளது.

ஆச்சரியமான இனம். இந்தோனிசிய மாநாட்டுக்கு சிறிலங்காவின் சார்பாக ரனிலுடன் மாலைதீவு சபாநாயகர் சென்றதற்கு அப்படி தகுதியான ஒருவர் சிறிலங்காவில் இல்லையா என ஜேவிபி கேள்வி எழுப்பியுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

உந்த நசீரு காக்காவும் கூடப்போனவர்...இவருதான் காத்தான்குடியில்  பொம்பிளைகளுக்கு தனி  பீச் அமைத்த ஜம்பாவான்....ஒரு சிலமாதம் எரிபொருள் அமச்சராக இருந்தபோது  சவூதி பெற்றோல் அமைச்சர் என்னுடன் கூடப்படித்தவன் ...இந்தாபார் பெற்றோல் கொண்டுவாறன் என்று போனவர்..வெறும் கான் கூட கொண்டுவரவில்லை.இப்ப நரியுடன் சேர்ந்து எகிப்தில் ..மாலைதீவு  சபாநாயகருடன் சேர்ந்து மரம் வெட்டி காடு பண்ணுகிரற கூட்டத்தில் நிற்கிறார்...இதுவும் ஒரு நரிதான்..

பெரிய நரி வந்ததும் வராததுமாய் வாற மாசிக்கு இடையில் தமிழருக்கு தீர்வாம் என்று சொல்லுது...இந்த இரண்டு நரியும் சேர்ந்து  பெரிய பொறிக்கிடங்கு வெட்டிப்போட்டுத்தன் வந்திருக்கினம் போல கிடக்கு...ஆர் விழுகினம் தெரியாது...

  • கருத்துக்கள உறவுகள்

தாமதக் கட்டணத்தால் நங்கூரமிடப்பட்டுள்ள மசகு எண்ணெய் கப்பல்

தாமதக் கட்டணத்தால் நங்கூரமிடப்பட்டுள்ள மசகு எண்ணெய் கப்பல்

மசகு எண்ணெய் தாங்கிய கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் நங்கூரமிட்டு நேற்றுடன் 53 நாட்களை கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு மசகு எண்ணெய்யை இறக்குமதி செய்ய வந்த கப்பலே இவ்வாறு காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும் இந்தக் கப்பலுக்காக 79 இலட்சம் டொலர்களுக்கு மேல் பணமாக செலுத்த வேண்டியுள்ளதாக பெற்றோலிய தொழிற்சங்கங்கள் சுட்டிகாட்டியுள்ளது.

மேலும் இந்தக் கப்பலானது செப்டம்பர் 20 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை அண்மித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1310111

  • கருத்துக்கள உறவுகள்
On 11/11/2022 at 08:09, alvayan said:

பெரிய நரி வந்ததும் வராததுமாய் வாற மாசிக்கு இடையில் தமிழருக்கு தீர்வாம் என்று சொல்லுது..

அதொன்றும் பெரிய ரகசியமில்லை. அடுத்தவருடம் தேர்தல் வரப்போகுது, இவரின் ஜனாதிபதி பதவி அற்ப ஆயுசில முடிந்துவிடும், அதற்கு தமிழரின் வாக்குகள் வேண்டும் நிரந்தரமாக குந்துவதற்கு, அதற்குத்தான் தமிழருக்கு தீர்வு என்று ஆசை வார்த்தை கூறுகிறார். எங்கட பெரியவர் பெருந்தன்மையான கருத்துச் சொல்லி, தேர்தலை தாமதியாமல் நடத்த வேண்டும் என்று கேட்டிருக்கிறார். கூட்டிக்கழிச்சு பாருங்கோ எங்கே இருந்து இந்த வாக்குறுதிகள், பொன்வாக்குகள், கரிசனைகள்,  எல்லாம் வருகின்றன என்று?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கப்பலிலிருந்து மசகு எண்ணெய் இறக்கும் பணிகள் ஆரம்பம் -காஞ்சன

13 NOV, 2022 | 12:09 PM
image

7 மில்லியன் டொலர்களைச்  செலுத்த முடியாமல் சுமார் 55 நாட்களாக இலங்கை கடற்பரப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மசகு எண்ணெய் கப்பலிலிருந்த  மசகு  எண்ணெய்யை இறக்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர 12 ஆம் திகதி சனிக்கிழமை இரவு தெரிவித்துள்ளார்.  

இந்த மசகு எண்ணெய் கப்பலின் விநியோகஸ்தருக்கு பணம் வழங்குவதற்கான புதிய முறைமை ஒப்புக் கொள்ளப்பட்டதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

https://www.virakesari.lk/article/139873

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.