Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நாட்டின் இருப்புக்கு பாதுகாப்புத் மூலோபாய திறன்கள் முக்கியமாகின்றது - ஜனாதிபதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டின் இருப்புக்கு பாதுகாப்புத் மூலோபாய திறன்கள் முக்கியமாகின்றது - ஜனாதிபதி

By T. SARANYA

12 NOV, 2022 | 03:43 PM
image

ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட போட்டித்தன்மையுடன் கூடிய பொருளாதாரமே இலங்கையின் ஒரே குறிக்கோளாக உள்ளது. எனவே முப்படைகளின் பாதுகாப்பு மற்றும் மூலோபாயத் திறன்களின் அவசியம் குறித்தும் அதற்கான ஒதுக்கீட்டை அதிகரிப்பதன் முக்கியத்துவம் தொடர்பிலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

HE-in-KDU-01.jpg

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான பட்டமளிப்பு விழாவில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

ஆயுதப் படைகள் மற்றும் 2030 பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் ஏன் இந்தளவு  கவனம் செலுத்துகிறது என சிலர் கேள்வி எழுப்பலாம். ஆனால் அவ்வாறு செய்யாவிட்டால் நாட்டுக்கு எதிர்காலம் இல்லை. 'நாம் பிறந்த காலத்தில் போலன்றி தற்போது வேறுபட்டதொரு உலகில் வாழ்கின்றோம். நாம் பிறந்த போது இந்து சமுத்திரத்தில் எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை. அப்போது இந்து சமுத்திரம் தொடர்பில் எவரும் கவனம் செலுத்தவில்லை.

HE-in-KDU-05.jpg

கப்பல் போக்குவரத்தை சுதந்திரமாக மேற்கொள்ள முடியாவிட்டால் ஏற்றுமதி பொருளாதாரத்தின் நோக்கங்களை பூர்த்தி செய்ய முடியாது. எனவே பொருட்களைக் கொண்டு செல்வதில் தடைகள் ஏற்பட்டால் என்ன நடக்கும். 2021 ஆம் ஆண்டு மக்கள் நாட்டை விட்டு வெளியேற முடியாமல் போனதையும், தரை அல்லது கடல் வழியாக பொருட்களை கொண்டு செல்ல முடியாத நிலை தோன்றிய அனுபவத்தை நினைவில் கொள்ளுங்கள்.

நாம் இருக்கும் சூழல் எங்கள் கட்டுப்பாட்டில் இல்லாமல் போனாலும், பொருட்களை கொண்டு செல்லும் திறனிலேயே நாட்டின் எதிர்காலம் தங்கியுள்ளது. ஏனைய தரப்பினரின் செயற்பாடுகள் இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். 

எனினும் அதன்போது, அரசியல் மற்றும் இராஜதந்திர திறன்களைப் போன்று இராணுவத் திறன்களையும் நாம் பயன்படுத்தி எமது குடிவரவு உரிமைகள் மற்றும் தரை மற்றும் கடல் மார்க்கமாக பயணிப்பதற்கான எமது உரிமைகள் என்பன எவ்வகையிலும் தடைபடாத வகையில் நாம் கவனமாக இருக்க வேண்டும்.  

HE-in-KDU-06.jpg

சாதாரணப் பல்கலைக்கழகத்தை விட சேர் ஜோன் கொத்தலாவல பல்கலைக்கழகத்தில் சேர்வதையே பலரும் விரும்புகின்றனர். அதற்காக பாராட்டைத் தெரிவித்ததோடு, சமூக பாடங்களுக்காக சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் மற்றுமொரு வளாகத்தை குருணாகலில் ஆரம்பிக்குமாறு நிதியமைச்சிற்கும் பாதுகாப்புச் செயலாளருக்கும் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/139820

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டின் இருப்புக்கு பாதுகாப்புத் மூலோபாய திறன்கள் முக்கியமாகின்றது - ஜனாதிபதி

 

சனாதிபதி அவர்களே...பாதுகாப்பு என்று...வீணாக காசை செலவழிக்காமல்...சம்பந்தர் ,சுமந்திரனை கோழி அமுக்குவதுபோல அமுக்கி..இரண்டு..அமைச்சுப்...பதவி கொடுங்கள்....அடுத்த நிமிடத்தில்..வன்னி உறுப்பினர்கள் பதவி கேட்டு..காலடியில்  நிற்பினம்...இத்துடன் தமிழரின் கதை  முடிந்தது....பாதுகாப்பு என்று காசை விரயம் செய்யாது..ஆமியை குடியும் குடித்தனமுமாய் வடக்கு கிழக்கில் குடியமர்த்தி...சந்தோசமாய் இருக்கலாம்...இதற்கான செலவு மிகவும் குறைவு..

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ஏராளன் said:

நாம் பிறந்த போது இந்து சமுத்திரத்தில் எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை. அப்போது இந்து சமுத்திரம் தொடர்பில் எவரும் கவனம் செலுத்தவில்லை.

இந்து சமுத்திரத்தில் பிரச்சனைகளை இழுத்து வந்தது யார் ஜனாதிபதியவர்களே?

14 hours ago, ஏராளன் said:

2021 ஆம் ஆண்டு மக்கள் நாட்டை விட்டு வெளியேற முடியாமல் போனதையும், தரை அல்லது கடல் வழியாக பொருட்களை கொண்டு செல்ல முடியாத நிலை தோன்றிய அனுபவத்தை நினைவில் கொள்ளுங்கள்.

இங்கு எதை குறிப்பிடுகிறார்? தெரிந்தவர்கள் விளக்கினால் நாமும் விளங்கிக்கொள்ளலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ஏராளன் said:

2021 ஆம் ஆண்டு மக்கள் நாட்டை விட்டு வெளியேற முடியாமல் போனதையும், தரை அல்லது கடல் வழியாக பொருட்களை கொண்டு செல்ல முடியாத நிலை தோன்றிய அனுபவத்தை நினைவில் கொள்ளுங்கள்.

 

1 hour ago, satan said:

இங்கு எதை குறிப்பிடுகிறார்? தெரிந்தவர்கள் விளக்கினால் நாமும் விளங்கிக்கொள்ளலாம்.

        200w.webp  200w.webp  200w.webp 

நரி... சந்தடி சாக்கிலை, "கொரோனாவை"  இழுத்து விட்டு இருக்கிறார் போலுள்ளது. 😂

  • கருத்துக்கள உறவுகள்
On 13/11/2022 at 02:18, ஏராளன் said:

ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட போட்டித்தன்மையுடன் கூடிய பொருளாதாரமே இலங்கையின் ஒரே குறிக்கோளாக உள்ளது. எனவே முப்படைகளின் பாதுகாப்பு மற்றும் மூலோபாயத் திறன்களின் அவசியம் குறித்தும் அதற்கான ஒதுக்கீட்டை அதிகரிப்பதன் முக்கியத்துவம் தொடர்பிலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

 

On 13/11/2022 at 02:18, ஏராளன் said:

எனினும் அதன்போது, அரசியல் மற்றும் இராஜதந்திர திறன்களைப் போன்று இராணுவத் திறன்களையும் நாம் பயன்படுத்தி எமது குடிவரவு உரிமைகள் மற்றும் தரை மற்றும் கடல் மார்க்கமாக பயணிப்பதற்கான எமது உரிமைகள் என்பன எவ்வகையிலும் தடைபடாத வகையில் நாம் கவனமாக இருக்க வேண்டும்.  

நான் நினைக்கிறேன்; நரி வரவுசெலவுத்திட்டத்தில் வழமைபோல பாதுகாப்பு, இராணுவத்துக்கு அதிக தொகையை ஒதுக்கப்போகுது, இப்பதானே போரில்லை எதற்காக இவ்வளவு தொகை பாதுகாப்புக்கு ஒதுக்கவேண்டும்? என கேள்வி எழுந்தாலும் அதை நிஞாயப்படுத்த நாசூக்கா பொருத்தமில்லாத தகவலை வெளியிடுது. கொரோனாவுக்கும் கடல், தரை போக்குவரத்துக்கும், பாதுகாப்புப்படைக்கும் என்ன தொடர்பு? பாதுகாப்புப்படை எப்படி தரை, கடல் பொருட்களை கொண்டுசெல்ல முடியும்? ம்ம் .... யாரும் எதிர்த்து கேள்வி கேட்கமாட்டார்கள் என்கிற துணிவில் எதை எதையோ சொல்லுகிறார். அப்படித்தானே ஒவ்வொரு அரசியல்வாதியும் தமது கருத்தை வெளியிட்டு வருகிறார்கள். போகட்டும் விடுங்கள் ......

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக வரவு செலவு திட்டத்தில் பாதுகாப்புக்கு அதிக பணம்  ஒதுக்கப்படும். அதற்கான  சப்பைக்கட்டே மேற்கூறப்பட்டது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.