Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கணவர் பிணத்துடன் 3 நாட்களாக வசித்த மனநலம் பாதித்த பெண்-துணைக்கு 7 பூனைகள், 3 நாய்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கணவர் பிணத்துடன் 3 நாட்களாக வசித்த மனநலம் பாதித்த பெண்-துணைக்கு 7 பூனைகள், 3 நாய்கள்!

சென்னை: கணவரின் இறந்த உடலுடன் 3 நாட்களாக தனியாக வசித்துள்ளார் மன நலம் பாதிக்கப்பட்ட வயதான பெண். அவர்கள் வளர்த்து வரும் 7 பூனைகளும், 3 நாய்களும் வெளியில் எங்கும் போகாமல் அந்த முதியவரின் உடலுக்கு அருகேயே அமர்ந்திருந்ததும் தெரிய வந்துள்ளது.

சென்னை அடையார், சர்தார் வல்லபாய் படேல் சாலையில் உள்ள ஒரு குடியிருப்பில் வசித்து வந்தவர் சத்யநாராயணன் (60). மத்திய அரசு நிறுவனம் ஒன்றில் இவர் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சசிகலா (45). இவர்களுக்கு குழந்தை கிடையாது. சசிகலாவுக்கு லேசான மன நல பாதிப்பு உண்டு.

குழந்தைகள் இல்லாத இந்தத் தம்பதியினர் 7 பூனைகளையும், 3 நாய்களையும் வளர்த்து வருகின்றனர். குழந்தைகள் போல இவற்றின் மீது பாசம் வைத்துள்ளனர்.

இந் நிலையில், சத்யநாராயணன் வீடு கடந்த 3 நாட்களாக உள் பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று வீட்டிலிருந்து துர்நாற்றம் வந்துள்ளது. இதையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், கோட்டூர்புரம் போலீஸுக்குத் தகவல் கொடுத்தனர்.

போலீஸார் வந்து கதவைத் தட்டினர். சசிகலா கதவைத் திறந்தார். அப்போது துர்நாற்றம் அதிகளவில் வந்தது. சசிகலாவிடம் பேசியபோது அவர் சரியாக பேசவில்லை. இதையடுத்து போலீஸார் வீட்டுக்குள் சென்று பார்த்தனர்.

ஒவ்வொரு அறையாக சென்ற அவர்கள் சமையல் அறைக்குப் போனபோது, அங்கு சத்தியநாராயணன் பிணமாகக் கிடந்தார். அவரது உடல் அழுகிப் போய்க் காணப்பட்டது.

அவரது உடலுக்கு அருகே அவர் வளர்த்து வந்த நாய்களும், பூனைகளும் அமைதியாக உட்கார்ந்திருந்தன.

பின்னர் சசிகலாவிடம் என்ன நடந்தது என்று போலீஸார் கேட்டபோது, எனது கணவர் தூங்கிக் கொண்டிருக்கிறார் என்றார். இதையடுத்து போலீஸார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அவர் சமையல் அறையில் வழுக்கி விழுந்து இறந்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். கணவர் இறந்தது கூடத் தெரியாமல், உடல் துர்நாற்றத்தைக் கூட உணர முடியாமல் அதைப் பொறுத்துக் கொண்டு சசிகலா வீட்டுக்குள்ளேயே இருந்துள்ளார்.

சத்தியநாராயணனின் உறவினர்கள் பெங்களூரில் உள்ளனராம். அவர்களுக்குப் போலீஸார் தகவல் கொடுத்துள்ளனர்.

-தட்ஸ் தமிழ்

அட அந்த துர்நாற்றம் கூட தெரியவில்லை அது சரி 7பூனைகளும்,3 நாய்களுக்குமா தெரியவில்லை துர்நாற்றம்...........என்ன கொடுமையப்பா................அது சரி மனிசனை கொன்று போட்டு சினிமாவில வாற மாதிரி நடிக்கவில்லை தானே கந்தப்பு தாத்தா....... :P :P

ஆஆ.... இப்படியுமா..... கவலையாயிருக்கு ... :D

கந்தப்பு இப்பிடி விசித்திரமான செய்திகளத்தான் இப்ப தேடிப்பிடிச்சு ஒட்டுறார். கொஞ்ச நாளைக்கு முன் வீடுகளில வேப்பிலை கட்டி வச்சு இருக்கு எண்டு ஏதோ செய்தியை கொண்டுவந்தார்... எல்லாரும் வாசிக்கும்போதும் உதுகள உடனடியா தேடிப்பிடிச்சு வாசிக்கிறீங்கள். நல்ல முன்னேற்றம் :D:D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.