Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈராக்கின் பஸ்ரா நகரிலிருந்து பிரிட்டிஷ் படைகள் விலக்கப்படுகின்றன

Featured Replies

ஈராக்கின் பஸ்ரா நகரிலுள்ள பிரிட்டிஷ் படைகள் முழுவதையும் அங்கிருந்து விலக்கிக் கொள்வதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக அங்கிருந்த முகாமொன்றிலிருந்த பிரிட்டிஷ் படைகள் வெளியேற்றப்பட்டுள்ளன.

இந் நகரில் பாரிய மோதல்கள் எதுவும் இடம்பெறாமையினால் இதனை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியுமென ஈராக்கிய படைகள் தெரிவித்ததைத் தொடர்ந்தே இந் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

இந்நகரிலுள்ள சதாம் ஹுசைனின் மாளிகையில் முகாம் அமைத்துள்ள ஏனைய 500 படையினரும் விலக்கிக் கொள்ளப்படவுள்ள அதேவேளை, எதிர்காலத்தில் பஸ்ரா நகருக்கு வெளியிலுள்ள படைத்தளத்திலேயே பிரிட்டிஷ் படைகளுக்கான முகாம் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ் விடயம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் ;

குறிப்பிட்ட தொகை பிரிட்டிஷ் படை வீரர்களே ஈராக்கிய பொலிஸாருக்கு ஒத்துழைப்பதற்காக இங்கு செயற்பட்டு வந்தனர்.

நகரின் பாதுகாப்பை ஈராக்கிய படைகளின் வசம் ஒப்படைப்பதென முன்னரே திட்டமிட்டதற்கிணங்க நேற்று முன்தினம் இரவு படையினர் இங்கிருந்து வெளியேறத் தொடங்கியுள்ளனர் எனக் குறிப்பிட்டுள்ளதுடன், பொலிஸ் தலைமையகத்தில் பொலிஸாருடன் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தவர்களே முதலில் வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பொலிஸ் தலைமையகம் தற்போது யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது என்பது தொடர்பில் ஒன்றுக்கொன்று முரண்பாடான அறிக்கைகள் வெளிவந்து கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரிட்டிஷ் படைகள் பொலிஸ் தலைமையகத்தை விட்டு வெளியேறிய பின்னர் மெஹ்தி இராணுவத்தினரின் ஸியா போராளிகள் அதனைக் கைப்பற்றியுள்ளதாக வெளியான அறிக்கையை பிரிட்டிஷ் இராணுவப் பேச்சாளர் நிராகரித்துள்ளார்.

ஆனால், போராளிகள் இம் முகாமிலிருந்து ஜெனரேட்டர்கள், கணினிகள், தளபாடங்கள் மற்றும் வாகனங்களை எடுத்துச் சென்றதை தாம் நேரில் கண்டதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

http://www.thinakkural.com/news/2007/8/28/...s_page34916.htm

பாஸ்ரா நகரின் கட்டுப்பாட்டை இராக்கியர்கள் வசம் அளித்தது பிரிட்டன்

பாஸ்ரா அரண்மனையில் இராக்கிய கொடி ஏற்றப்படுகிறது

இராக்கின் தெற்குப் பகுதியிலுள்ள பாஸ்ரா நகரின் ஒரு முக்கிய பிரிட்டிஷ் தளத்தின் கட்டுப்பாட்டை இராக்கியத் துருப்புக்கள் ஏற்றுள்ளன.

அங்குள்ள பாஸ்ரா அரண்மனை மீது அவர்கள் கருப்பு சிவப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களைக் கொண்ட இராக்கிய கொடியை ஏற்றியுள்ளனர்.

அந்த பாஸ்ரா அரண்மணையில் தற்போது தங்களது சகோதரர்கள்தான் இருக்கிறார்கள் என்றும், எனவே தாக்குதல்கள் எதையும் நடத்த வேண்டாம் என்றும் பாஸ்ராவிலுள்ள இராக்கியத் தளபதி கோரிக்கை விடுத்துள்ளார்.

பாஸ்ராவிலிருந்து பிரிட்டிஷ் படைகள் விலகியதை ஒரு தோல்வி என்று கூறப்படுவதை பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரவுண் மறுத்துள்ளார்.

இராக்கிய மக்களுக்கான கடமைகளிலிருந்து பிரிட்டன் பின்வாங்காது என்றும் அவர் கூறியுள்ளார்.

தற்போது இராக்கிலுள்ள கிட்டத்தட்ட ஐயாயிரத்து ஐநூறு பிரிட்டிஷ் துருப்புகள் அங்கேயே இருப்பார்கள் என்றும், தேவைப்படும் பட்சத்தில் குறிப்பிட்ட சில சந்தர்பங்களில் பாஸ்ரா பகுதிக்கும் அவர்கள் செல்வார்கள் என்றும் பிரிட்டிஷ் பிரதமர் தெரிவித்துள்ளார்.

http://www.bbc.co.uk/tamil/news/story/2004...sbulletin.shtml

இணைந்த இந்தியாவிற்குள் (இந்தியா - பாகிஸ்தான் - வங்காளதேசம்) இந்துக்களும் முஸ்லிம்களும் மோதி இறந்து கொண்டிருக்க அதைப் பற்றி எந்தக் கவலையுமின்றி மளமளவென்று தமது படைகளை வெளியேற்றிய பிரித்தானிய அரசு இப்போதும் ஈராக்கில் இரத்த ஆற்றை ஓட வைத்து விட்டு தாம் தப்பினோம் என்று வெளியேறத் தொடங்கி விட்டார்கள்.

மணி அண்ணா பயங்கரவாத்துக்கு எதிரான போர் என்னும் அமெரிக்க கூச்சலில் இருந்து பிரித்தானியா தன்னை விடுவித்து கொள்கிறது...

இங்கே பயங்கரவாத எண்றால் என்ன என்பதில் அமெரிக்கர்களுக்கோ இல்லை உலகத்தவர்களுகோ தெளிவில்லை என்பது ஒருபுறம் எண்டாலும்... அமெரிக்காவோடு சேர்ந்து குரல் கொடுக்கும் எங்கட சிறீலங்காவின் நிலைதான் உலக அரங்கில் இன்னும் மோசமாகப்போகிறது... வல்லரசுகளில் ஒண்றான பிரித்தானியாவின் நிலையே இப்படி எண்றால் இலங்கை எம்மாத்திரம்...?

பயங்கர வாதத்துக்கு எதிரான போர் என்னும் போரினால் மேற்கு நாடுகளுக்கு எதிரான கிளர்ச்சி அதிகமாகிக்கொண்டே போகிறது என்பதை பிரித்தானியர்கள் உணர தலைப்பட்டதின் விளைவுதான் இது.. அதாவது கிளர்ந்து எழும் மக்களை கட்டுக்குள் கொண்டுவர முடியாது என்பதை பிரித்தானியா உணர்ந்து கொண்டதின் விளைவு .....

Edited by தயா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.