Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர் தேசத்தவர்கள் நீங்கள் படித்த பாடசாலையில் உள்ள மாணவர்களுக்கு உதவுவதற்கு முன் வரவேண்டும் – ஆறு.திருமுருகன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் தேசத்தவர்கள் நீங்கள் படித்த பாடசாலையில் உள்ள மாணவர்களுக்கு உதவுவதற்கு முன் வரவேண்டும் – ஆறு.திருமுருகன்

புலம்பெயர் தேசத்தவர்கள் நீங்கள் படித்த பாடசாலையில் உள்ள மாணவர்களுக்கு உதவுவதற்கு முன் வரவேண்டும் – ஆறு.திருமுருகன்

அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவும் போது விபத்துக்களில் சிக்காமலும் வன்முறைகளில் ஈடுபடாமலும் இளைஞர்கள் இருக்க வேண்டுமென சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன் தெரிவித்தார்.

கனேடியத் தமிழர்கள் 10 மில்லியன் ரூபா பெறுமதியான உயிர்காக்கும் மருந்துகளை தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலைக்கு நன்கொடையாக வழங்கினர். இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுகிறது. இந்நிலையில் இளைஞர்கள் விபத்துக்களில் சிக்கல், வாள்வெட்டு வன்முறை சம்பவங்களிலும் ஈடுபடல் போன்றவற்றால் தேவையற்ற நெருக்கடி ஏற்படுகின்றது.

எதிர்வரும் காலங்களில் பாடசாலைகளில் காகித தட்டுப்பாடு ஏற்படும். இவ்வாறான நேரத்தில் புலம்பெயர் தேசத்தவர்கள் நீங்கள் படித்த பாடசாலையில் உள்ள மாணவர்களுக்கு உதவுவதற்கு முன் வரவேண்டும்.

குளிரூட்டி, நவீன சாதனங்கள் வழங்குவது என்பது ஒரு பக்கம் இருக்க அடிப்படை விடயமான கல்வியில் நாம் கரிசனை கொள்ள வேண்டும்.

இலவச பாட புத்தகங்களை அச்சிடுவதற்காக அரசாங்கம் திண்டாடும் போது அடிப்படை கல்விக்கான புத்தகங்கள் கொப்பிகளை வாங்குவதற்கு புலம்பெயர் தேசத்தவர்கள் உதவ வேண்டும் என்றார்.

https://athavannews.com/2022/1316697

  • கருத்துக்கள உறவுகள்

கனடாத் தமிழ் உறவுகளுக்கு கோடி புண்ணியம் கிடைக்கட்டும், நன்றியும் வாழ்த்துகளும்.
சமயப்பணிகளைத் தாண்டி சமூகப் பணிகளில் ஈடுபடும் ஐயா கலாநிதி ஆறு திருமுருகன் அவர்களுக்கும் நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

கனடிய உறவுகளுக்கு நன்றி. ஆறுதிருமுருகன் ஐயா இபபடிச்சொல்கிறார். ஆனால், அங்கால சில அரசியல்(?) ஆய்வுகளில் புலம்பெயர் அரசியல் வியாபாரிகளின் கடையென விளிக்கப்பட்டு ஒதுங்கியிருக்குமாறு உபதேசிக்கப்படுகிறதே. 

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் அந்நியப்படுத்தலை..நிறுத்தவேண்டும்....அது என்ன புலம்பெயர் தமிழர் என்ற சொல்...அதாவது அது ஒரு தனியினமா? உங்கள் நாட்டில் இருந்து வந்து உங்கள் நலனுக்காக பாடு பட்டுக்கொண்டிருக்கும் உறவுகள்தாம் நாம்...அப்படி பட்டவர்களை..புறம்புகாட்டும் நீங்கள் ..பணத்தேவை வந்தால் மட்டும் நாடுவதுஏன் ?>...புலம் பெயர் தமிழர் ஆகாயத்தில் இருந்து குதிக்கவில்லை....உதாரணம் ..கிளினொச்சியில் 2 யூரியூப் பொடியள்  கஸ்டப்பட்ட உறவுகளீன் உதவிக்கு கரம் நீட்டும்போது..எவ்வளவு சனம் உதவிக்கரம் நீட்டுகிறது...அதுவும் வயது வந்த ஆண் பெண்... முடியாநிலையிலும் உதவுகிறார்கள்...அதேநேரம் புலம் புயர்ந்தவர்களை நக்கல் அடித்துபடம் காட்டுகிறவையும் இருக்கினம்...முகப் புத்தகத்தில் பத்தி எழுதுகிற்வைக்கும் நாம் இழப்பம்...ஆயிரம் சொன்னாலும் தமிழினத்துக்கு புலப்பெயர்வு இல்லையென்றால் ..இவ்வளவு விரைவில் முன்னேறி இருக்க முடியாது என்பது எனது கருத்து...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.