Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'தளபதி' ஸ்டைலில் ஒரு நட்பு கதை 'சக்கரவர்த்தி' ஆகும் ரஜினி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

'தளபதி' ஸ்டைலில் ஒரு நட்பு கதை

'சக்கரவர்த்தி' ஆகும் ரஜினி

‘இரண்டு துருவங்கள் மீண்டும் தமிழ்த் திரையில் இணைந்து நடிக்கப் போகின்றன. சினிமா ரசிகர்களுக்கு இது ஒரு கோலாகல திருவிழா தான்!’ &கோலிவுட்டில் லேட்டஸ்ட் பரபர இதுதான்!

‘இரு துருவங்களில் ஒன்று ரஜினி... மற்றொன்று கமல்’ என்று கோலிவுட் பட்சி ஒன்று நம்மிடம் சொல்ல ‘ஈஸ் இட் ட்ரூ?’ என ரஜினி பாணியிலேயே கேட்டுக்கொண்டு சூப்பர் ஸ்டாருக்கு நெருங்கிய தயாரிப்பாளர் ஒருவரிடம் இதுபற்றிக் கேட்டோம்.

‘‘ரஜினி எப்போதுமே யதார்த்தமான மனிதராகத்தான் இருப்பார். பொது நிகழ்ச்சிகளுக்கு வரும்போது இமேஜ் பற்றியெல்லாம் பெரிதாக அலட்டிக் கொள்ள மாட்டார். இப்போது நடிகர் ரஜினிகாந்த் எடுக்கும் முடிவுகளைவிட, யதார்த்தவாதி ரஜினி எடுக்கும் முடிவுகள்தான் நிறைய.

p42wm4.jpg

சில நாட்களுக்கு முன்பு தன் நெருங்கிய சினிமா நண்பர்களுடன் கேளம்பாக்கம் பண்ணை வீட்டில் நீண்ட நேரம் தனது அடுத்த படம் குறித்துக் கலந்து பேசியிருக்கிறார் ரஜினி. ‘இண்டஸ்ட்ரியில எனக்குக் கஷ்டகாலங்கள்ல கைகொடுத்த நாலு பேருக்கு அடுத் தடுத்துப் படம் பண்ணப் போறேன். இப்போ உடனடியா மணிரத்னத்துக்குப் படம் பண்ணலாம்னு இருக்கேன். உலக சினிமாவைக் கையில வெச்சிருக்கற அவர், தன்னோட தாகத்தைத் தீர்த்துக்க இந்திப் படங்கள் பண்ணிக்கிட்டு இருக்கார். எனக்குன்னு ஒரு தமிழ்ப்படம் பண்ணச் சொல்லி மணியை மீட் பண்ணப் போறேன்’ என்று நண்பர்களிடம் கூறியிருக்கிறார் ரஜினி.

சொன்னது போலவே எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் நேராக மணிரத்னத்தின் அலுவலகத்துக்குப் போயிருக்கிறார். ‘நான் ரெடி. நீங்க ரெடியா?’னு கேட்டு, முதல் சந்திப்பிலேயே எந்த மாதிரி கதையைத் தேர்ந்தெடுக்கலாம்னு பேச ஆரம்பிச்சிட்டார். ரஜினி திடுதிப்புனு கதை கேட்டாலும், சுதாரித்துக்கொண்ட மணி, தான் எடுத்த ‘தளபதி’ ஸ்டைல்ல ரெண்டு நண்பர்கள் பத்தின கதையோட அவுட் லைனைச் சொல்லியிருக்கிறார்.

ரஜினிக்கு அது பிடித்துப்போக, ‘இதையே பண்ணலாம் மணி’ என்று பச்சைக்கொடி காட்டிவிட்டாராம். ‘உங்க கேரக் டருக்கு இணையா உங்க நண்பர் கேரக்டரும் இருக்கும். உங்க இமேஜ் எதுவும் பாதிக்காதே’ என்று மணிரத்னம் கேட்டிருக்கிறார். ‘வித்தியாசமா வேணும்னுதானே உங்க கிட்ட வந்திருக்கேன்... இனி எனக்கு நீங்கதான் பாஸ்! நீங்க சொல்றதை கேமரா முன்னாடி செஞ்சு காட்டறது மட்டும்தான் என் வேலை’ என்று கிளம்பி

விட்டாராம் ரஜினி. புதுப் படத்துக்கு ‘சக்ரவர்த்தி’ என்ற பெயரை சூட்டிக் கொள்ளலாம் என்று இயக்குநர் மணிரத்னத்திடம் சொன்னாராம் ரஜினி!

அடுத்தகட்ட வேலைகளைவிட, படத்தில் ரஜினியின் நண்பராக நடிகப்போவது யார் என்பதுதான் கோடம் பாக்கத்தின் முக்கியமான அலசல் விஷயமாகி இருக்கிறது!

இதற்கும் பதில் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள், கோடம்பாக்கத்து விவர பார்ட்டிகள். ‘‘ரஜினி கூட நடிக்கப்போறவர் கமல்தான். இதைப் பத்தி மணிரத்னமும், ரஜினியும் கமலிடம் பேசி ஓகே வாங்கிட்டாங்க. கமலோட ரோல், படத்துல அரை மணி நேரம் வரும்படி திரைக் கதையைத் தயார் செய்யப் போகிறார்கள். கிட்டத்தட்ட இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் போலவே மாறிவிடவும் எண்ணியிருக்கிறாராம் ரஜினி.

இனிமேல் இளமையான கேரக்டர்களில் நடிப்பதை விட்டுவிட்டுத் தனது வயதையும் பறைசாற்றும் முக்கியத்துவம் உள்ள கேரக்டர்களைத் தேர்ந்தெடுத்து நடிக்கவும் தீர்மானித்திருக்கிறார் நம்ம ஊரு சூப்பர் ஸ்டார் ரஜினி!’’ என்கிறார்கள் ரஜினி தரப்பை நன்கு அறிந்தவர்கள்.

இதுபற்றி மணிரத்னம் என்ன சொல்கிறார் என்பதை அறிய முயன்றோம். மணிரத்னம் தரப்பில் அவருடைய நெருங்கிய நண்பர்கள் சிலர் நம்மிடம் பேச முன்வந்தார்கள்.

‘‘மணி தன்னோட அடுத்த திட்டமா அமீர்கானுக்காக ‘லஜ்ஜா’னு ஒரு படம் பண்ற வேலையில இருந்தாரு. பி.சி.ஸ்ரீராம், ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியுடன் படத்தோட திரைக்கதையைத் தயார் செஞ்சுட்டுப் படப்பிடிப்புக்குப் போகத் தயாரா இருந்தாரு. இந்த சமயத்துல அமீர்கான், ‘கஜினி’யோட இந்திப் பதிப்புல ரொம்ப பிஸியாகிட்டாரு. இந்த விஷயத்தை அவரே நேர்ல வந்து மணிகிட்ட சொல்லி, ‘அடுத்த வருஷம் ‘லஜ்ஜா’வை எடுக்கலாம்’னு சொன்னாரு. மணியும் எதுவும் சொல்லலை. இந்த சமயத்துலதான் ரஜினி மணியைத் தேடி வந்தாரு. அவங்க ரெண்டு பேரும் நிச்சயமா அடுத்த படம் பத்திதான் பேசினாங்க. மத்ததை யெல்லாம் இப்போதைக்கு விளக்கமாகச் சொல்ல முடியாது’’ என்றார்கள்.

மணிரத்னத்தின் படத்துக்குப் பிறகு பாலச்சந்தர், பஞ்சு அருணாசலம், தெலுங்கு இயக்குநர் கே.ராகவேந்திர ராவ் ஆகியோருக்குப் படம் நடித்துக் கொடுக்க ரஜினி ஒப்புக்கொண்டிருப்பதாக விவரமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், கடந்த 26&ம் தேதி சந்திரபாபு நாயுடுவின் மகன் திருமணத்துக்கு ஹைதராபாத் வந்த ரஜினி, இயக்குநர் ராகவேந்திர ராவுடன் நான்கு மணி நேரம் தனியாகப் பேசினார். ராகவேந்திர ராவ் தற்போது தெலுங்கில் ‘ரங்கா பாண்டு ரங்கா’ என்ற படத்தைத் தயாரித்து இயக்கிக் கொண்டிருக்கிறார். மனம்போன போக்கில் வாழ்க்கையை அனுபவிக்கும் ஒரு இளைஞர், பக்திமானாக மாறும் கதைதான் ‘ரங்கா பாண்டுரங்கா’.

இந்தப் படத்தில் என்.டி.ஆரின் மகன் பாலகிருஷ்ணா இரட்டை வேடத்தில் நடிக்கிறார். கிருஷ்ண பரமாத் மாவாகவும், கலர்ஃபுல் இளைஞராகவும் நடிக்கும் பாலகிருஷ்ணாவின் இந்தப் படத்துக்கு ஆந்திராவில் ஏக எதிர்பார்ப்பு. இதையே தமிழில் எடுக்க ராகவேந்திர ராவ் திட்டமிட்டு ரஜினியை அணுகியபோது அவர் ஓகே சொல்லியிருக்கிறாராம்.

புதுப்படங்களுக்காகத் தன்னைப் பொலிவாக்கிக் கொள்ள ரஜினி, திருவனந்தபுரத்துக்கு அருகில் சந்திரகிரி என்னும் இடத்தில் இருக்கும் ஆயுர்வேத வைத்திய சாலைக்குப் போய் வந்திருக்கிறாராம். அவருடன் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியும், விக்ரமும் போனார்களாம்.

இதற்கிடையில் இந்த விஷயம் லேசுபாசாக வெளியே கசிய, ரஜினியின் அடுத்த ‘பஞ்ச் டயலாக்’ என்னவாக இருக்கும் என்பதை யூகிக்க, எஃப்.எம். ரேடியோக்கள் தங்கள் நேயர்களுக்குப் போட்டி நடத்திப் பரிசுகளை அறிவிக்கும் ஆலோசனையில் இறங்கி விட்ட தாம்.

அப்படின்னா... ‘சிவாஜி’யைத் தொடர்ந்து ‘சக்ரவர்த்தி’ ஆவாரா ரஜினி?!

நன்றி - விகடன்.

ஓ அப்ப சக்கரவர்த்தி படம் அடுத்து வரப் போகுதா கறுப்பி அக்கா அட கட்டாயம் அந்த படமும் போய் பார்க்க வேண்டும்.........கறுப்பி அக்கா தகவலுக்கு மிக்க நன்றி...........அட சிவாஜி புறகணிப்பு என்ற மாதிரி சக்கரவர்த்தி புறகணிப்பு என்று ஒரு தலைப்பு தொடங்குறது தானே............வாசிக்கவும் இன்சரஸ்டா இருக்கும்......... வசம்பண்ணா வேற வருவார் சித்தன் அண்ணாவும் வருவார் நல்லா இருக்கும்.... :P :icon_mrgreen::lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஓ அப்ப சக்கரவர்த்தி படம் அடுத்து வரப் போகுதா கறுப்பி அக்கா அட கட்டாயம் அந்த படமும் போய் பார்க்க வேண்டும்.........கறுப்பி அக்கா தகவலுக்கு மிக்க நன்றி...........அட சிவாஜி புறகணிப்பு என்ற மாதிரி சக்கரவர்த்தி புறகணிப்பு என்று ஒரு தலைப்பு தொடங்குறது தானே............வாசிக்கவும் இன்சரஸ்டா இருக்கும்......... வசம்பண்ணா வேற வருவார் சித்தன் அண்ணாவும் வருவார் நல்லா இருக்கும்.... :P :lol::lol:

சிவாஜி புறக்கணிப்பு எண்டு களத்துல்ல தான் இருந்தது . ஊடகங்கள் புறக்கணிப்பு செய்ததாக இல்லையே. தொலைக்காட்சி மூலம் சிவாசி படம் வீட்டுக்குள்ளே வந்துவிட்டது . புறக்கணிக்க முடியல

சிவாஜி புறக்கணிப்பு எண்டு களத்துல்ல தான் இருந்தது . ஊடகங்கள் புறக்கணிப்பு செய்ததாக இல்லையே. தொலைக்காட்சி மூலம் சிவாசி படம் வீட்டுக்குள்ளே வந்துவிட்டது . புறக்கணிக்க முடியல

ஆமாம் கறுப்பி அக்கா ஒன்லி களத்தில மட்டும் தான் எல்லாரும் புறகணிப்பு நான் களத்தில் பார்பேன் என்று சொன்னேன் அவ்வாறே பார்தேன் அக்கா......... :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க வேறை. 4,5 தடவை தியேட்டரிலே பார்த்ததுகளை என்னவென்று சொல்ல.அகதிகளுக்கு ஒரு 50 டொலர் கேட்டு பாருங்கோ.வீட்டையே பூட்டிபோட்டு இருந்துவிடுவினம்.

நீங்க வேறை. 4,5 தடவை தியேட்டரிலே பார்த்ததுகளை என்னவென்று சொல்ல.அகதிகளுக்கு ஒரு 50 டொலர் கேட்டு பாருங்கோ.வீட்டையே பூட்டிபோட்டு இருந்துவிடுவினம்.

4,5 தரம் பார்த்த ஆட்களும் இருக்கீனமோ ஆனால் சிட்னியில நடந்த காட்சிகளிள் ஒரு தொகை பணம் தமிழர் புனர்வாழ்வு கழகதிற்கு என்று குறிபிட்ட சில நாட்கள் போனது அப்போதும் பலர் மீண்டும் சென்றார்கள் அதனை பிழை என்று சொல்ல முடியாது...........ஆனால் வீட்டை பூட்டி போட்டு இருந்து கொண்டு 4,5 தரம் போறவைய என்ன தான் சொல்ல.......... :lol: ;)

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மூன்று மொழிகளில் ரஜினி கமல் : மணிரத்னம் இயக்கத்தில் மாபெரும் தயாரிப்பு

ரஜினிகமல் இணைந்து நடிக்க மணிரத்னம் இயக்கும் புதிய படம் பற்றி தான் கோடம்பாக்கத்தில் பரபரப்பாக பேசப் பட்டு வருகிறது. கமல் தயாரிப்பதாக பேசப்படும் இப்படத்தில் இருவரும் சேர்ந்து நடிக்கவும் திட்டமிட்டிருப்பதால் பட்ஜெட் எகிறும். இப்படத்தை தமிழ், தெலுங்கு, இந்தியில் தயாரிக்க திட்டமிட்டிருப்பதாகவும் கமல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. நடிகர் ரஜினிகாந்த் "சிவாஜி' படத்திற்கு பிறகு அடுத்த படம் பற்றிய அறிவிப்பை அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். ரஜினி அடுத்ததாக மணிரத்தனம் இயக்கத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இயக்குனர் மணிரத்னம், அபிஷேக்பச்சன் ஐஸ்வர்யாராய் இருவரையும் வைத்து இந்தியில் "குரு' படத்தை எடுத்தார். இப்படம் தமிழிலும் வெளியிடப்பட்டது. இந்தியில் ஷாருக்கானை வைத்து மணிரத்னம் படம் எடுக்க உள்ளதாக மும்பை பாலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டது. ஆனால், மணிரத்னம் தமிழில் ரஜினி அல்லது கமலை வைத்து படம் எடுக்க கதை தயார் செய்து வருவதாக அவரது சென்னை வட்டாரத்தில் பேசப்பட்டது. இருந்தாலும் தனது இயக்கத்தில் நடிக்க ரஜினியையோ, கமலையோ மணிரத்னம் நேரில் சந்தித்து இன்னும் பேசவில்லை.

இந்நிலையில் கடந்த வாரம் ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல் வீட்டிற்கு திடீரென்று ரஜினி சென்றார். அங்கிருந்து இருவரும் ஒரே காரில் கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்திற்கு சென்றனர். அங்கு இருவரும் பேசும் போது கமல் தனது தயாரிப்பில் ரஜினியை நடிக்க வைக்கவும், படத்தை மணிரத்னம் இயக்கவும் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. இந்த சந்திப்பிற்கு பிறகு மணிரத்னமும், ரஜினியும் போனில் பேசியுள்ளனர். பிறகு இருவரும் அடையாறில் உள்ள நட்சத்திர ஓட்டலில் சந்தித்து புதிய படத்தின் கதை பற்றி பேசியுள்ளனர். இதன் பிறகு கமலிடம் மணிரத்னம் போனில் பேச, படத்தை ரஜினி, கமல் இருவரும் தயாரிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. கமல் ரஜினி இருவரும் இணைந்து நடிப்பதால் இதுவரை இந்தியாவில் தயாரிக்கப்பட்ட படங்களைவிட பட்ஜெட் அதிகமாக இருக்குமாம். இதனால் இப்படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் தயாரிக்கவும், கேரளாவில் தமிழிலிலேயே வெளியிடுவது என்றும் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் 1991ம் ஆண்டில் தளபதி படத்தில் ரஜினி நடித்தார். மணிரத்தினம் கமலை "நாயகன்' படத்திலும் இயக்கியிருக்கிறார். கமலும், ரஜினியும் "பதினாறு வயதினிலே' படத்தில் இணைந்து நடித்தனர். அதன் பிறகு "அபூர்வ ராகங்கள், மூன்று முடிச்சு, "நினைத் தாலே இனிக்கும், உட்பட பல படங்களில் நடித்தனர். அதன் பிறகு இருவரும் இணைந்து நடிக்கவில்லை. தற்போது மீண்டும் இருவரும் இணைந்து நடிக்க உள்ளதாக பேசப்படுவதால் கோடம்பாக்கத்தில் இப்படத்தின் பேச்சு தான் பரபரப்பாக இருந்து வருகிறது. மணி ரத்னம் திரைக்கதை அமைத்த பிறகு படம் பற்றிய முறையான அறிவிப்பு டிசம்பர் அல்லது ஜனவரியில் வெளியிடப்படும் என்று பேசப்படுகிறது. இந்த பட அறிவிப்புகள் பற்றி பரபரப்பாக பேசப்பட்டு வருவதால் இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க த்ரிஷா, நயன்தாரா, அசின், இலியானா விருப்புவதாகவும், இத்தகவல் கமல், ரஜினி மற்றும் இயக்குனர் மணிரத்னத்துக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் பரபரப்பாக பேசப்படுகிறது

dinamalar

கறுப்பி அக்காவிற்கு நடிக்க ஆசை இல்லையோ........ ;)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.