Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் திகதியை அறிவித்தது தேர்தல்கள் ஆணைக்குழு !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் ஆணைக்குழு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் திகதியை அறிவித்தது தேர்தல்கள் ஆணைக்குழு !

உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் 21 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

340 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனு கோரும் அறிவித்தல் இன்று புதன்கிழமை மாவட்ட செயலாளர்களால் வெளியிடப்பட்டதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர்கள் மார்ச் 20 ஆம் திகதிக்குள் நியமிக்கப்பட வேண்டும், அதற்கான தேர்தல் மார்ச் 10 க்கு முன்னதாக நடைபெற வேண்டும்.

அதன்படி மார்ச் மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தலை நடத்துவதற்கு ஆணைக்குழு திட்டமிட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

https://athavannews.com/2023/1318597

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தலை ஓரிரு மாதங்களுக்கு ஒத்தி வைக்கவும் - அமைச்சர் மஹிந்த அமரவீர வலியுறுத்தல்

By DIGITAL DESK 2

04 JAN, 2023 | 03:30 PM
image

(எம்.மனோசித்ரா)

தேர்தலுக்காக ஒதுக்கப்படும் நிதியை விவசாயத்துறை அமைச்சிற்கு வழங்கினால், விவசாயிகளிடமிருந்து நியாயமான விலையில் நெல்லைக் கொள்வனவு செய்ய முடியும்.

எனவே தேர்தலை ஓரிரு மாதங்களுக்கு ஒத்தி வைத்து , விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு முன்னுரிமையளிக்குமாறு விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர வலியுறுத்தினார்.

புதன்கிழமை (ஜன.04) விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ள அவர் அதில் மேலும் குறிப்பிட்டதாவது:

இம்முறை பெரும்போகம் 7 இலட்சம் ஹெக்டயாரில் நெற் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த போகத்தில் 5 இலட்சம் ஹெக்டயாரில் நெற் செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இம்மாத்தில் அறுவடையை மேற்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் எமக்குள்ள பிரதான பிரச்சினை நிதியைப் பெற்றுக் கொள்வதாகும்.

கடந்த அறுவடையின் போது விவசாயிகளுக்கு வழங்கிய வாக்குறுதியை எமக்கு நிறைவேற்ற முடியாத நிலைமை ஏற்பட்டது. நிதி நெருக்கடியின் காரணமாக கடன் வழங்குவதற்கு வங்கிகள் மறுப்பு தெரிவித்தன.

எவ்வாறிருப்பினும் இம்முறை சிக்கல்கள் ஏற்படாத வகையில் விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

மத்திய வங்கி , நிதி அமைச்சு உள்ளிட்டவற்றுக்கு இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே எமக்கு நிதி கிடைக்கப் பெற்றவுடனேயே, நியாயமான விலையில் விவசாயிகளிடமிருந்து நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு நாம் தயாராகவுள்ளோம். இவ்வாறான நெருக்கடிகளுக்கு மத்திலேயே தேர்தலை நடத்துமாறு எதிர்க்கட்சிகள் வலியுறுத்திக் கொண்டிருக்கின்றன.

தேர்தல் ஆணைக்குழு தேர்தலுக்கு 10 பில்லியன் ரூபா செலவாகும் என மதிப்பிட்டுள்ளது. வேட்பாளர்களின் செலவுகளுடன் இந்த தொகை 40 பில்லியன் வரை அதிகரிக்கக் கூடும்.

இந்த நிதியை எமக்கு வழங்கினால் விவசாயிகளிடமிருந்து நியாயமான விலையில் எம்மால் நெல்லைக் கொள்வனவு செய்ய முடியும். எனவே தேர்தலை விட விவசாயிகள் உள்ளிட்ட சாதாரண மக்களின் நிலைமை தொடர்பில் எதிர்க்கட்சிகள் சிந்திக்க வேண்டும்.

நாம் தேர்தலை காலம் தாழ்த்தும் தரப்பினர் அல்ல. எனினும் உள்ளுராட்சிமன்றத் தேர்தல் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் தேர்தல் அல்ல. எனவே நெல் கொள்வனவிற்கு முன்னுரிமையளித்து , ஓரிரு மாதங்களுக்கு தேர்தலை காலம் தாழ்த்துவது காலத்திற்கு ஏற்ற தீர்மானமாகும். அரசியல் கட்சிகளே தேர்தலைக் கோருகின்றனவேயன்றி மக்கள் அதனைக் கோரவில்லை.

எனவே விவசாயிகளிடமிருந்து நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு முன்னுரிமையளிக்குமாறு ஜனாதிபதியிடமும் அமைச்சரவையிடமும் கோரிக்கை விடுத்திருக்கின்றேன் என்றார்.

https://www.virakesari.lk/article/144959

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் வாக்களிக்க இம்முறை 2 இலட்சம் பேர் முதன் முறையாக தகுதி

By DIGITAL DESK 5

06 JAN, 2023 | 02:00 PM
image

(இராஜதுரை ஹஷான்)

உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்கு 1 கோடியே  68 இலட்சம் பேர் தகுதி பெற்றுள்ளார்கள். இம்முறை 2 இலட்சம் பேர் முதன் முறையாக வாக்களிக்க தகுதி பெற்றுள்ளார்கள்.

எதிர்வரும் மார்ச் மாதம் 10 ஆம் திகதிக்குள் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உத்தேசித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு வேட்புமனுத்தாக்கலை எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை ஏற்றுக்கொள்வதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தபால் மூலமாக வாக்களிப்பதற்கான விண்ணப்பங்கள் வியாழக்கிழமை (05) முதல் கோரப்பட்டுள்ளன. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (22) நள்ளிரவுடன் தபால் மூல விண்ணப்பம் கோரல் நிறைவுப் பெறும்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தல் நேற்று முதல் ஆரம்பமாகின.ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன முதலாவதாக களுத்துறை தேர்தல் தொகுதிக்கான கட்டுப்பணத்தை செலுத்தியது.அத்துடன் இரு சுயேட்சை குழுக்கள் கண்டி மாவட்ட தேர்தல் தொகுதிக்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது.

அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்கள் எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் 221 ஆம் திகதி வரை தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.

2018 ஆம் ஆண்டு தேர்தல் இடாப்பு பெயர் பட்டியல் அடிப்படையில் இம்முறை ஒரு கோடியே 68 இலட்சம் பேர் வாக்களிக்க தகுதிப் பெற்றுள்ளார்கள்.இம்முறை 2 இலட்சம் பேர் முதன்முறையாக வாக்களிக்க தகுதிப் பெற்றுள்ளார்கள்.

மக்கள் விடுதலை முன்னணியை தவிர ஏனைய அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட அவதானம் செலுத்தியுள்ளன.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான  ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி,தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தலைமையிலான மேலவை இலங்கை கூட்டணி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகபெரும தலைமையிலான சுதந்திர மக்கள் சபை ஆகிய தரப்பினர் ஒன்றிணைந்து அரசியல் கூட்டணியை அமைக்க அவதானம் செலுத்தியுள்ளனர்.

மறுபுறம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியினர் பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் அரசியல் தரப்பினருடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அரசியல் கூட்டணி அமைத்து உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளது.மொட்டு சின்னத்தில் கூட்டணி அமைத்து போட்டியி கட்சி மட்டத்தில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டதாக பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இதுவரை உத்தியோகப்பூர்வமாக அறிவிப்பும் வெளியிடவில்லை.

https://www.virakesari.lk/article/145137

  • கருத்துக்கள உறவுகள்

பிளவுபட வேண்டாம் : அனைவரும் ஒரு நிலைப்பாட்டிற்கு வாருங்கள் - தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களிடம் ஜனாதிபதி

By T. SARANYA

06 JAN, 2023 | 05:10 PM
image

(இராஜதுரை ஹஷான்)

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில்  வெவ்வேறான  நான்கு நிலைப்பாடுகளை கொண்டிருக்காமல், பெரும்பான்மையான ஆதரவுடன் ஒரு நிலைப்பாட்டின் அடிப்படையில் செயற்படுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களிடம் வலியுறுத்தியுள்ளார்.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று (ஜன 05) மாலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

இந்த சந்திப்பில் பிரதமர் தினேஷ் குணவர்தன, சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்னம், மேலதிக சொலிசிடர் ஜெனரால் நரின் புள்ளே, தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க, உட்பட தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், உறுப்பினர்கள் கலந்துக் கொண்டனர்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் இச்சந்திப்பில் அவதானம் செலுத்தப்பட்ட போது ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் நான்கு நிலைப்பாடுகளை முன்வைத்துள்ளனர்.

தேர்தல் தொடர்பில் சுயாதீனமாக தீர்மானம் எடுக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளது. ஆகவே நான்கு நிலைப்பாடுகளை விடுத்து அனைவரும் பெரும்பான்மை தீர்மானத்திற்கு அமைய ஒரு நிலைப்பாட்டை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களிடம் வலியுறுத்தியுள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழு சுயாதீனமாக செயற்படுவதற்கு தடையேதும் கிடையாது. உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் ஆணைக்குழு சட்டமாதிபர் திணைக்களத்தில் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளலாம் என ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு இடையில் ஒருமித்த நிலைப்பாடு எட்டப்படாத நிலையில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தை நிறைவுப் பெற்றுள்ளதாக அறிய முடிகிறது.

உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்த சுமார் 10 பில்லியன் ரூபா செலவாகும் நிலையில் தற்போதைய நிதி நெருக்கடிக்கு மத்தியில் தேர்தலை நடத்தினால் பொருளாதார பாதிப்பு மேலும் தீவிரமடையும் என ஆளும் தரப்பினர் தொடர்ச்சியாக குறிப்பிட்டு வருகின்றனர்.

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் அரச செலவுகளுக்கா 7,900 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. ஆகவே உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்த 10 பில்லியன் ரூபாவை ஒதுக்குவது எவ்வித சிக்கலையும் ஏற்படுத்தாது என எதிர்க்கட்சிகள் குறிப்பிடுகின்றன.

தேர்தலை நடத்த நிதி ஒதுக்குவதில் சிக்கல் உள்ளது என திறைச்சேரி இதுவரை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கவில்லை என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான பின்னணியில் தேர்தலுக்கு செலவாகும் நிதியை நெல் கொள்வனவு செய்வதற்கு வழங்குமாறு விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் செய்யும் திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தலை நடத்தும் திகதி அறிவிப்பு தொடர்பில் ஆணைக்குழுவிற்குள் இருவேறுப்பட்ட நிலைப்பாடுகள் காணப்படுகின்றன. நிதி ஒதுக்கீடு தொடர்பில் நிதியமைச்சுடன் உத்தியோகப்பூர்வமான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டதன் பின்னர் தேர்தல் தொடர்பில் ஒரு தீர்மானத்தை எடுப்போம் என ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் ஒருசிலர் தமது நிலைப்பாடுகளை முன்வைத்துள்ள நிலையில் தேர்தல் தொடர்பில் ஆணைக்குழுவிற்குள் கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றனமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/145148

  • கருத்துக்கள உறவுகள்

இனி ஒருவருக்கொருவர் சேறடிப்பு, வாள் வெட்டு, வீடுடைத்து தாக்குதல் தாராளமாக அரங்கேறும், தரகர்மாருக்கும் வருமானம் சேரும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.