Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

13 ஆவது திருத்த சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என்கின்றார் டக்ளஸ் தேவானந்தா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு கொரோனா தொற்று!!

13 ஆவது திருத்த சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என்கின்றார் டக்ளஸ் தேவானந்தா

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்த சட்டத்தினை முழுமையாக அமுல்படுத்துவதற்கு உரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.

முதற்கட்டமாக ஜனாதிபதியின் நிறைவேற்றதிகாரம், நிர்வாக ஏற்பாடுகளினூடாக காலத்திற்கு காலம் இல்லாமல் செய்யப்பட்ட அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு மீள கையளிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

மேலும் காணி விடுவிப்பு மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை போன்றவை நல்லெண்ணத்தினை வெளிப்படுத்துவதற்கான முயற்சிகளாக இருக்க வேண்டும் எனவும் கடற்றொழில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், அரசியல் அபிலாசைகளுக்கு தீர்வு காணும் வகையில் ஜனாதிபதிக்கும் தமிழ் தரப்புகளுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற கலந்துரையாடல்களின் தொடர்ச்சியாக இடம்பெற்ற சந்திப்பு தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்களின் விவகாரங்களை தீர்ப்பதற்கான அமைச்சரவை உப குழுவின் பிரதிநிதி மற்றும் தமிழ் அரசியல் கட்சித் தலைவர் என்ற வகையில், ஜனாதிபதியின் கலந்துரையாடல்களில் இரட்டை வகிபாகத்தினை கொண்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, 13 ஆவது திருத்த சட்டத்தினை முழுமையாக அமுல்படுத்துவதில் இருந்து ஆரம்பித்து முன்னோக்கி நகர்வதன் மூலம் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை ஈடேற்ற முடியும் எனவும் கூறியுள்ளார்.

https://athavannews.com/2023/1319115

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, தமிழ் சிறி said:

தமிழ் மக்களின் விவகாரங்களை தீர்ப்பதற்கான அமைச்சரவை உப குழுவின் பிரதிநிதி

இந்தபதவி எப்படி இவருக்கு, எதற்காக, யாரால் வழங்கப்பட்டது? இதுகளை காட்டி வாக்குப்பெற்று இவரே தமிழரின் பிரதிநிதி என்கிற மாயையை ஏற்படுத்தி, தமிழர் தேசம் என்பது இல்லாமலாக்கப்பட்டு ஒரு தேசம் அதற்குத்தான் மக்கள் வாக்களித்தார்கள் என்று தம் திட்டத்தை நிறைவேற்ற இந்த கழுதைப்புலியை சிங்களம் தயாரிக்குது.

15 minutes ago, தமிழ் சிறி said:

தமிழ் அரசியல் கட்சித் தலைவர் என்ற வகையில்,

அரசாங்கத்தரப்பில் இவரும் ஒருவராக தமிழ்கட்சிகளோடு பேச சென்றிருக்கிறார், எப்படி தமிழ் அரசியல் கட்சித்தலைவராவார்? தமிழ் பேசும் சிங்களக் கட்சியின் முகவரல்லவா இது?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, satan said:

இந்தபதவி எப்படி இவருக்கு, எதற்காக, யாரால் வழங்கப்பட்டது? இதுகளை காட்டி வாக்குப்பெற்று இவரே தமிழரின் பிரதிநிதி என்கிற மாயையை ஏற்படுத்தி, தமிழர் தேசம் என்பது இல்லாமலாக்கப்பட்டு ஒரு தேசம் அதற்குத்தான் மக்கள் வாக்களித்தார்கள் என்று தம் திட்டத்தை நிறைவேற்ற இந்த கழுதைப்புலியை சிங்களம் தயாரிக்குது.

அரசாங்கத்தரப்பில் இவரும் ஒருவராக தமிழ்கட்சிகளோடு பேச சென்றிருக்கிறார், எப்படி தமிழ் அரசியல் கட்சித்தலைவராவார்? தமிழ் பேசும் சிங்களக் கட்சியின் முகவரல்லவா இது?

என்ன செய்வது... எங்களை எல்லாம், பைத்தியக்காரனாக்கி கொண்டு இருக்கிறார்கள்.
ஒற்றுமை இல்லாத, தமிழ் இனத்தில்... இவை எல்லாம் நெஞ்சில் குத்தும் வேல்கள் போன்றவை. 😢

  • கருத்துக்கள உறவுகள்

பராவாயில்லை அரசோடு இருக்கும் தமிழ் தலைவர்களில் முதன்மையானவராக தெரிபவரே 13 முழுமையாக அமல் படுத்த வேண்டும் என கேட்பது நல்ல விசயம்தான்.

ஆகவே தமிழரின் ஆக குறைந்த நிலை (lowest possible position) இது என எடுத்தால் - தமிழ் தேசிய கட்சிகளுடன் பேரம் படிய 13 க்கு மேல்தான் போக வேண்டும்.

இந்த விடயத்தில் டக்கா இது வரைக்க்கும் தன் வகிபாகத்தை ஓரளவு பாத்திரம் அறிந்து செய்கிறார்.

இதை ஒரு உந்து நிலையாக கொண்டு 13 க்கு மேல் வேண்டும் என தமிழ் தேசிய கட்சிகள் அழுத்த வேண்டும்.

 

  • கருத்துக்கள உறவுகள்

தாடி வேஷம் போடுது வாக்குகளுக்காக, ஆனால் அதை நமது தமிழ்கட்சிகள் ஒன்று சேர்ந்து வலுவாக்கினால் இவர் ஒன்றும் செய்ய முடியாது, இது நமது கட்சிகளின் ஒற்றுமையிலும் திறமையான காய் நகர்த்தலிலும் இருக்கு. தாடியர் எந்தப்பக்கம் திரும்பினாலும் அவரை வைத்தே காய் நகர்த்த வேண்டும். ஆப்பிழுத்த குரங்குமாதிரி. அரசு அவரை காட்டி அலுவல் பாக்க அதை நமக்கு சாதகமாய் திருப்ப முயற்சிக்க வேண்டும், இதை செய்யக்கூடிய திறமை நம்மவரில் யாருக்குண்டு? தங்களுக்குள் அடிபடுவதை விட்டு இதில் கவனம் செலுத்த வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, satan said:

தாடி வேஷம் போடுது வாக்குகளுக்காக, ஆனால் அதை நமது தமிழ்கட்சிகள் ஒன்று சேர்ந்து வலுவாக்கினால் இவர் ஒன்றும் செய்ய முடியாது, இது நமது கட்சிகளின் ஒற்றுமையிலும் திறமையான காய் நகர்த்தலிலும் இருக்கு. தாடியர் எந்தப்பக்கம் திரும்பினாலும் அவரை வைத்தே காய் நகர்த்த வேண்டும். ஆப்பிழுத்த குரங்குமாதிரி. அரசு அவரை காட்டி அலுவல் பாக்க அதை நமக்கு சாதகமாய் திருப்ப முயற்சிக்க வேண்டும், இதை செய்யக்கூடிய திறமை நம்மவரில் யாருக்குண்டு? தங்களுக்குள் அடிபடுவதை விட்டு இதில் கவனம் செலுத்த வேண்டும்.

👏🏾 அருமையான கருத்து

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.