Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரிவு கிழக்கில் தமிழர்களின் இருப்பை நிச்சயமாக கேள்விக் குறியாக்கும் – மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர் அமைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரிவு கிழக்கில் தமிழர்களின் இருப்பை நிச்சயமாக கேள்விக் குறியாக்கும் – மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர் அமைப்பு

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரிவு கிழக்கிலே தமிழர்களின் இருப்பை நிச்சயமாக கேள்விக் குறியாக்கும் எனவே இந்த தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தனித்து நின்று போட்டியிட்டால் அதற்கு எதிராக மக்களை தூண்டி இவர்களுக்கு வாக்களிக்காதீர்கள் என செயற்பட வேண்டிவரும் என மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கே.மோகான் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

2004 ஆம் ஆண்டு காலப்பகுதில் கூட இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அடித்தளமிடப்பட்டது கிழக்கில் இருந்துதான் எனவே இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரிவு கிழக்கிலே தமிழர்களின் இருப்பை நிச்சயமாக கேள்விக்குறியாக்கும்.

அதனைவிட கிழக்கிலே இருக்கின்ற சில தமிழ் உதிரி கட்சிகளுக்கு இது வாய்ப்பாக அமைந்திவிடக் கூடிய சூழல் அமையும் எனவே தமிழ் தேசிய கட்சிகள் ஒருங்கிணைந்து ஒரு குடையின் கீழ் பயணிக்க வேண்டிய தேவை இருக்கின்றது.

இதனை மறுத்து தனித்தனியாக தேர்தலில் போட்டியிட்டால் தமிழ் உணர்வாளர் அமைப்பு இவர்களுக்கு எதிராக மக்களை தூண்டி இவர்களுக்கு வாக்களிக்காதீர்கள் என செயற்பட வேண்டிவரும் எனவே அவசரமாகவும் அவசியமாகவும் தமிழ் தேசிய கட்சிகள் ஒருமித்த நிலைப்பாட்டில் முடிவை எடுக்க வேண்டியது எங்களது நிலைப்பாடு.

இது ஒரு ஆரம்ப பிரிவாக இருந்தால் கூட காலப்போக்கில் பாரிய பின்னடைவைச் சந்திக்க நேரிடும் தமிழ் தேசிய நீரோட்டத்திலே தமிழ் தேசிய கூட்டமைப்பின் எந்த பங்களிப்பும் இல்லாமல் தமிழ் தேசிய பிரச்சனைக்கு இப்போது தீர்வாக அமையாது எனவே வடகிழக்கு தமிழர்களின் நன்மைகருதி அதற்கு தமிழ் தேசிய கட்சிகள் ஒரு குடையின் கீழ் பயனிக்க வேண்டிய கட்டாய தேவை இருக்கின்றது.

நாங்கள் கூட தமிழ் தேசிய கூட்டமைப்புடன் முரன்பட்டகருத்தினை கொண்டிருந்த போதிலும் தமிழ் தேசியத்தை விசுவாசிபதன் காரணத்தினால் நாங்கள் இந்த முடிவை எடுத்திருக்கின்றோம்.இம்முறை நடைபெறுகின்ற இந்த தேர்தலிலே தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரிந்து நின்று தேர்தல் களத்தில் குதிக்குமாக இருந்தால் நாங்கள் இவர்களுக்கு எதிராக மக்களை திசை திருப்புவோம்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலிலே தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரிந்து நின்று தேர்தல் களத்தில் குதித்திருப்பது வடகிழக்கில் தமிழ் தேசியத்தை விரும்புகின்ற அனைவருக்கும் ஒரு பெரும் அதிர்ச்சியான செய்தி இருக்கின்றது என மட்டு செங்கலடியிலுள்ள தமிழ் உணர்வாளர் அமைப்பின் காரியாலயத்தில் இடம்பெற்ற விசேட ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.(15)
 

http://www.samakalam.com/தமிழ்-தேசிய-கூட்டமைப்பி-18/

  • கருத்துக்கள உறவுகள்

"அழிகுடி சொற்கேளாது சாகுடி மருந்து குடியாது." கட்சியை அழிக்கவென்றே ஒருவர் உள்நுழைந்தவர் தெரியாதோ உங்களுக்கு! 

  • கருத்துக்கள உறவுகள்

பரீட்சித்து பார்க்க போகிறார்களாம்.  சென்ற உள்ளூராட்சி தேர்தலிலேயே கூட்டாக நின்றே கோட்டை விட்டவர்கள் . இம்முறை மட்டும் தனித்து எதனை பரீட்சிக்க போகிறார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, கிருபன் said:

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரிவு கிழக்கிலே தமிழர்களின் இருப்பை நிச்சயமாக கேள்விக் குறியாக்கும்

அதைப்பற்றி அவர்களுக்கு கவலையில்லை. பிரிந்து போக நினைப்பவர்களை கட்டி இழுத்து எதை சாதிக்கப்போகிறீர்கள்? இன்று கட்டி வைத்தால் நாளைக்கு பிரிவார்கள், அவர்களது முடிவு பிரிவு. த .தே. கூட்டமைப்பை விட்டு வெளியேறுங்கள் என்று மற்றவர்களை விரட்டுவதும் அதை தாங்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதும் இதுவே தங்களுக்கு வாக்கு சேர்க்கும் பொன்வாத்து என அவர்கள் நம்புகிறார்கள். இதை வைத்து நோகாமல் மாங்காய் பிடுங்கலாமென நினைக்கிறார்கள். மக்களின் அபிலாஷை என்ன என்பதை மக்கள் தெரிவிக்க விடுங்கள். வேண்டாப்பெண்டாட்டியை வைத்து எத்தனை காலத்துக்கு குடும்பம் நடத்துவது? விட்டது சனியன் என்று முழுகி விட வேண்டியதுதான். அவர்களாகவே எடுத்த முடிவு அதன் பயனை பெறுவது தான் சரி.   

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.