Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ்க்கட்சிகள் சேர்ந்திருந்து மக்களுக்கு என்ன செய்தார்கள்? - அம்மான் படையணியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கேள்வி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்க்கட்சிகள் சேர்ந்திருந்து மக்களுக்கு என்ன செய்தார்கள்? - அம்மான் படையணியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கேள்வி

By T. Saranya

12 Jan, 2023 | 10:49 AM
image

தமிழ்க்கட்சிகள் கடந்த 20 வருடமாக ஒன்றாக இருந்து தமிழ் மக்களுக்கு என்ன செய்தார்கள், தற்போது இவர்கள் பிரிந்துவிட்டால் எங்களுடைய வாழ்க்கை இழந்து போய்விட்டதாக பேசுகின்றார்கள் ஒன்றாக இருந்து தங்கள் தங்களுடைய குடும்பங்களையும், சொந்த பந்தங்களையும் வளர்த்ததைத்தவிர தமிழ் மக்களுக்கோ தமிழர்களுடைய பிரச்சினைகளுக்கோ என்ன நடைபெற்றுள்ளது என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் உப தலைவரும் அம்மான் படையணியின் தலைமை ஒருகிணைப்பாளருமான ஜெயா சரவணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்று (ஜன 11) வவுனியாவில் தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்துரைக்கையில், மாவீரர்தினம் வந்ததும் மண்வெட்டியை தூக்கி வைத்துக்கொண்டு வெளிநாடுகளிலிருந்து பணம் பெற்றுக்கொள்வதைத்தவிர வேறு என்னத்தை செய்தார்கள், இனியும் ஒன்றும் நடைபெறப்போவதில்லை பிரிந்து செல்வது நல்லது பிரிவதால் எமக்கு ஒரு கவலையும் இல்லை. அம்மான் படையணி என்பது சமூகச்சீரழிவுகளை தவிர்ப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட படையணி போதைவஸ்துக்கு எதிராக கடந்த மூன்று மாதங்களாக குரல் எழுப்பி பேராடி வருகின்றோம். எமது தலைவரிடமிருந்து அழைப்பு ஒன்று கிடைத்துள்ளது. எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுமாறு அதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்து கொண்டு வடமாகாணத்திற்கு தலைவரினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளேன். 

எமது சிறார்களை காப்பாற்ற நாங்கள் எடுத்த நடவடிக்கையினால் பல கிலோ போதைப் பொருட்களை கைப்பற்றி விசேட அதிரடிப்படையினரிடம் ஒப்படைத்திருக்கின்றோம். வடபகுதியில் எமது இளைஞர்களினால் பல கோடி பெறுமதியான போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டு வருகின்றது. அதேபோல பாடசாலைகளில் எமது படையணியின் இளைஞர்களினால் கைப்பற்றப்படும் போதைப் பொருட்கள் படையினரிடம் ஒப்படைத்துச் செயற்பட்டு கொண்டிருக்கின்றார்கள். இளைஞர் யுவதிகளுக்கு விழிப்புணர்வு செயற்பாடுகளையும் முன்னெடுத்து வருகின்றோம். இவை அனைத்தும் ஒரு மூன்று மாதகாலப்பகுதியில் இடம்பெற்று வருகின்றன.

இச் செயற்பாடுகளை நாங்கள் தொடர்ந்து மேற்கொள்ளும்போது பல இளைஞர்கள் எங்களுடன் இணைந்து செயற்படுவதால் அதன் தாக்கம் வீச்சு அதிகமாக இருக்கும். எதிர்வரும் தேர்தலில் நாங்கள் போட்டியிடவுள்ளதால் இளைஞர்கள், யுவதிகள், முன்னாள் போராளிகள் எங்களுடன் இணைந்து பணியாற்ற முன்வர வேண்டும்.

ஏனைய கட்சிகள் எங்களுக்கு அழைப்பு விட முடியாது. ஏனென்றால் நாங்கள் தனித்துவமாக போய் கொண்டு இருக்கின்றோம். அழைப்புக்கள் தலைமைக்கு வந்த வண்ணம் தான் உள்ளது. ஆனால் எங்களுடன் இணைந்து செயற்பட விரும்பினால் இலஞ்சம், ஊழல் தவிர்த்து வேலை செய்ய விரும்பினால் யாராக வேண்டுமானாலும் இணைந்து கொள்ளலாம்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தந்திரம் மிக்கவுள்ள ஒருவர். 70 வருட பிரச்சினையை 4 ஆம் திகதிக்குள் தீர்வு தருவதாக அறிவித்துவிட்டார். பின்னர் தமிழ் கட்சிகள் அனைத்தும் சேர்ந்திருந்தால் தான் தீர்வை கொடுக்க முடியும் என்பதை அறிவிப்பார்கள். அதற்காக தமிழ் கட்சிகளை உடைச்சாச்சு. முன்னர் புலியை உடைத்தார். இப்போது கூட்டமைப்பை உடைத்தார் அவ்வளவே என மேலும் தெரிவித்தார். 
 

 

https://www.virakesari.lk/article/145577

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

அதற்காக தமிழ் கட்சிகளை உடைச்சாச்சு. முன்னர் புலியை உடைத்தார். இப்போது கூட்டமைப்பை உடைத்தார் அவ்வளவே என மேலும் தெரிவித்தார். 

உடைக்க பாவிக்கப்பட்ட உளி பேசுது. இதுதானே முதல் பிரதேச வாதத்தின் தந்தை அது இங்க வரப்போகுதாம்.

2 hours ago, கிருபன் said:

ஏனைய கட்சிகள் எங்களுக்கு அழைப்பு விட முடியாது. ஏனென்றால் நாங்கள் தனித்துவமாக போய் கொண்டு இருக்கின்றோம். அழைப்புக்கள் தலைமைக்கு வந்த வண்ணம் தான் உள்ளது. ஆனால் எங்களுடன் இணைந்து செயற்பட விரும்பினால் இலஞ்சம், ஊழல் தவிர்த்து வேலை செய்ய விரும்பினால் யாராக வேண்டுமானாலும் இணைந்து கொள்ளலாம்.

வடக்கின் வசந்தம் ஒருபக்கம் புலம்பித்திரியுது போதாக்குறைக்கு கிழக்கின் விடிவெள்ளி தொடங்கிற்று.

2 hours ago, கிருபன் said:

பல கிலோ போதைப் பொருட்களை கைப்பற்றி விசேட அதிரடிப்படையினரிடம் ஒப்படைத்திருக்கின்றோம்.

அப்போ எதுக்கு அதிரடிப்படை? கைப்பற்றியிருந்தால் அதை அழிக்காமல் மீண்டும் வியாபாரத்துக்கு விடுகிறார்கள் போலுள்ளது.  வலையமைப்பு வியாபாரம். கிழக்கிலே வென்று முடிசூடி வடக்கிற்கு வருகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

அந்தப்படையணியும்

தனது  இயல்பை  இழக்கிறது

  • கருத்துக்கள உறவுகள்

இது எங்களுக்கு சம்பந்தமில்லாத செய்தி. பிடிக்கிறார்களாம், தடுக்கிறார்களாம், விளையுதாம். அரசியல் செய்ய மக்களை ஏமாற்ற ஒவ்வொன்றை உருவாக்குவதும் தடுப்பு நாடகமும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.