Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வேலன் சுவாமி கைது -பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாக குற்றச்சாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
image

பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் வேலன் சுவாமிகள் யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

velan_1.jpg

கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய பொங்கல் விழாவில் ஜனாதிபதி கலந்து கொண்ட போது யாழ். பல்கலை கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற எதிர்ப்பு போராட்டத்தின் போது பொலிஸார் தடுப்புக்களை ஏற்படுத்தி இருந்தனர். அதன் போது பொலிஸாரின் தடுப்புக்களை தாண்டி செல்ல முற்பட்டனர். 

அதன் போது பொலிஸார் தண்ணீர் தாரை பிரயோகம் மேற்கொண்டர். அவ்வேளை பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தினர் என குற்றம் சாட்டி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.

இந்நிலையில் இன்றைய தினம் புதன் கிழமை யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.அதேவேளை யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்கள் உள்ளிட்ட பலரை கைது செய்வதற்கும்  பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வேலன் சுவாமி கைது -பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாக குற்றச்சாட்டு | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

பிணையில் விடுதலையானார் வேலன் சுவாமிகள்

18 Jan, 2023 | 09:14 PM

image

வேலன் சுவாமிகள் சற்றுமுன்னர் யாழ்ப்பாண நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பொலிசாரினால் இன்றைய தினம் கைது செய்யப்பட்ட வேலன் சுவாமிகள் யாழ்ப்பாண நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்.

வேலன் சுவாமிகள் சார்பில் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏசுமந்திரன், சட்டத்தரணி வி.மணிவண்ணன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

இந்நிலையில், வேலன் சுவாமிகள் யாழ்ப்பாண நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய பொங்கல் விழாவில் ஜனாதிபதி கலந்துகொண்ட போது யாழ். பல்கலை கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற எதிர்ப்பு போராட்டத்தின் போது பொலிஸார் தடுப்புக்களை ஏற்படுத்தி இருந்தனர். அதன் போது பொலிஸாரின் தடுப்புக்களை தாண்டி செல்ல முற்பட்டனர். 

அதன் போது பொலிஸார் தண்ணீர் தாரை பிரயோகம் மேற்கொண்டர். அவ்வேளை பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தினர் என குற்றம் சாட்டி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.

இந்நிலையில் இன்றைய தினம் புதன் கிழமை யாழ்ப்பாண பொலிஸாரினால் வேலன் சுவாமிகள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

https://www.virakesari.lk/article/146151

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரின் பண்டிகைக்காலத்தில் வந்து அவர்களுக்கு நிகழ்வுகளுக்கு  இடையூறு ஏற்படுத்தி அவர்களது கொண்டாட்ட மனநிலை, செயற்பாடுகளை குழப்பிய ஜனாதிபதி, அரச பயங்கரவாதிகளை யார் கைது செய்வது?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

'ரணில் அரசாங்கத்தில் நல்லிணக்கம் எதிர்மறையான பாதையில் செல்கின்றதா?' -வேலன் சுவாமிகளின் கைது குறித்து கடும் கண்டனம்

(நா.தனுஜா)

வேலன் சுவாமிகள் கைதுசெய்யப்பட்டமையைக் கடுமையாகக் கண்டித்திருக்கும் தமிழ் அரசியல் தலைவர்கள் மற்றும் சர்வதேச சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்தில் நல்லிணக்கம் எதிர்மறையான பாதையில் செல்கின்றதா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

பொலிஸாரின் கடமைக்கு இளையூறு விளைவித்தார் என்ற குற்றச்சாட்டில் 18 ஆம் திகதி புதன்கிழமை யாழ் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட வேலன் சுவாமிகள், அன்றைய தினமே பிணையில் விடுவிக்கப்பட்டார். 

இந்நிலையில் வேலன் சுவாமிகள் கைதுசெய்யப்பட்டமை குறித்து கடும் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ள உள்ளக மற்றும் சர்வதேச சிவில் சமூக மற்றும் அரசியல் பிரதிநிதிகள், தமிழ்க்கட்சிகளின் அரசியல் தலைவர்கள், கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரத்தை முடக்கும் அரசாங்கத்தின் செயற்பாடு அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையின்மையைத் தோற்றுவிக்கும் என்றும் எச்சரிக்கைவிடுத்துள்ளனர்.

சியோபைன் மெக்டொனாக்

'அண்மையில் ஜனாதிபதியின் யாழ் விஜயத்தின்போது அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் கலந்துகொண்டமைக்காக சிவில் சமூக செயற்பாட்டாளரும் இந்து மதத்தலைவருமான வேலன் சுவாமிகள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டமையைக் கடுமையாகக் கண்டிக்கின்றேன். அமைதியான முறையில் போராடுவதென்பது ஓர் அடிப்படை மனித உரிமையாகும்' என்று பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர் சியோபைன் மெக்டொனாக் தெரிவித்துள்ளார்.

கனேடிய தமிழர் தேசிய பேரவை

'அமைதிப்போராட்டத்தில் பங்கேற்றமைக்காக வேலன் சுவாமிகள் கைதுசெய்யப்பட்டமையைக் கடுமையாகக் கண்டிக்கின்றோம். இதற்கு எதிராக சர்வதேச சமூகம் குரலெழுப்பவேண்டுமென வலியுறுத்துகின்றேன். அவ்வாறு குரலெழுப்பாவிட்டால் மேலும் பலர் கைதுசெய்யப்படுவர்' என்று கனடாவைத் தளமாகக்கொண்டியங்கும் கனேடிய தமிழர் தேசிய பேரவை எச்சரித்துள்ளது.

இலங்கையில் சமத்துவம் மற்றும் விடுதலைக்கான மக்கள் அமைப்பு

 வேலன் சுவாமிகளின் கைது குறித்துக் கருத்து வெளியிட்டுள்ள இலங்கையில் சமத்துவம் மற்றும் விடுதலைக்கான மக்கள் அமைப்பு (பேர்ள்), 'அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற அமைதிப்போராட்டத்தில் கலந்துகொண்டமைக்கான வேலன் சுவாமிகள் கைதுசெய்யப்பட்டமை குறித்து மிகுந்த கரிசனையடைகின்றோம். அரச அடக்குமுறையை எதிர்க்கும் தமிழ் அமைப்புக்கள் தொடர்ச்சியாக பொலிஸாரின் அத்துமீறல்களுக்கு உள்ளாவதுடன் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்படுவர் என்ற அச்சுறுத்தலுக்கும் உள்ளாகின்றனர்' என்று சுட்டிக்காட்டியுள்ளது.

அமெரிக்க தமிழர் செயற்பாட்டு இயக்கம்

'இலங்கைப் பொலிஸாரால் தமிழ் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் வேலன் சுவாமிகள் கைதுசெய்யப்பட்டமையை அமெரிக்கத்தமிழர்களாகிய நாம் கடுமையாகக் கண்டிக்கின்றோம்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்தில் நல்லிணக்கம் எதிர்மறையான பாதையில் செல்கின்றதா?' என்று அமெரிக்காவைத் தளமாகக்கொண்டியங்கும் அமெரிக்க தமிழர் செயற்பாட்டு இயக்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன்

'அமைதிப்போராட்டத்தில் கலந்துகொண்டமைக்காகவும், தனது சர்வதேச ஜனநாயக உரிமையை செயற்படுத்தியமைக்காகவும் வேலன் சுவாமிகள் கைதுசெய்யப்பட்டமையானது, இலங்கையில் நிலவும் பிரச்சினைக்கு ஆணிவேராக அமைந்துள்ள விடயத்திற்குத் தீர்வுகாண்பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பெருமளவிற்கு நாட்டம் காண்பிக்கவில்லை என்பதையே வெளிப்படுத்துகின்றது. 

கருத்துவெளிப்பாட்டுச்சுதந்திரத்தை முடக்கும் வகையிலான அரசாங்கத்தின் செயற்பாடு அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையின்மையையே தோற்றுவிக்கும்' என்று தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் யாழ்மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

'வேலன் சுவாமிகளின் சட்டவிரோதக் கைது நடவடிக்கையைக் கடுமையாகக் கண்டனம் செய்யும் அதேவேளை, அதனை ஓர் பாசிஸ நடவடிக்கையாகவே கருதுகின்றோம். 

இது ஜனநாயகம், சுதந்திரம், கருத்துவெளிப்பாட்டுச்சுதந்திரம் ஆகிய சொற்பதங்களை மீளவும் கேள்விக்குட்படுத்தும் வகையிலானதோர் நடவடிக்கையாகும். 

75 வருடகாலத்தோல்விக்குப் பின்னரும்கூட எந்தவொரு பாடமும் கற்றுக்கொள்ளப்படவில்லை' என்று தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கவலை வெளியிட்டுள்ளார். 

'ரணில் அரசாங்கத்தில் நல்லிணக்கம் எதிர்மறையான பாதையில் செல்கின்றதா?' -வேலன் சுவாமிகளின் கைது குறித்து கடும் கண்டனம் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

அதெப்படி தெற்கு அல்லோல கல்லோலப் படும்போது வடக்குமட்டும் அமைதியாக பொங்கல் கொண்டாடலாம்? அவர்களையும் குழப்பி தனது அதிகாரத்தை காட்ட வேண்டாமோ தான் யாரென்பதை? நீங்களும் நாங்களும்  கேள்வி கேட்டு எதிர்ப்பை வெளியிட்டுக்கொண்டிருக்கிறோம் யார் கேட்டார்கள் இதுவரையில்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.