Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்தியாவின் ஆதரவு இல்லாவிட்டால் எங்கள் நாட்டிற்கு பெரும்பாதிப்பை ஏற்படுத்திவந்த பயங்கரவாத அமைப்பை தோற்கடித்திருக்க முடியாது- அலி சப்ரி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் ஆதரவு இல்லாவிட்டால் எங்கள் நாட்டிற்கு பெரும்பாதிப்பை ஏற்படுத்திவந்த பயங்கரவாத அமைப்பை தோற்கடித்திருக்க முடியாது- அலி சப்ரி

By RAJEEBAN

23 JAN, 2023 | 04:46 PM
image

இந்தியாவின் ஆதரவு இல்லாவிட்டால் 26 வருடங்களாக எங்கள் நாட்டிற்கு பெரும்பாதிப்பை ஏற்படுத்தி வந்த  பயங்கரவாத அமைப்பை நாங்கள் தோற்கடித்திருக்க மாட்டோம்,அதற்காக நாங்கள் நன்றியுடையவர்களாக உள்ளோம் என இலங்கை வெளிவிவகார அமைச்சர்அலிசப்ரி இந்திய ஊடகமொன்றிற்கான பேட்டியில் தெரிவித்துள்ளார்

இது குறித்து அவர் தெரிவித்துள்ளது

இந்தியாவுடனான உறவுகள் வரலாற்று ரீதியிலானவை,நாங்கள் ஒரு நாகரீகத்தை பகிர்ந்துகொள்கின்றோம்,

எங்கள் மத கலாச்சார பொருளாதார சமூக பாதுகாப்பு  கரிசனைகள் பொதுவானவை 

கருத்துவேறுபாடுகள் ஏற்பட்ட காலங்களும் உள்ளன,குடும்பங்களில் கூட அது சாத்தியம்,ஆனால் நாங்கள் எப்போதும் நல்ல நண்பர்களாக இருந்துள்ளோம்.

இந்தியா எப்போதும் இலங்கைக்கு ஆதரவாக இருந்துள்ளது,இந்தியாவின் ஆதரவு இல்லாவிட்டால் 26 வருடங்களாக எங்கள் நாட்டிற்கு பெரும்பாதிப்பை ஏற்படுத்தி வந்த  பயங்கரவாத அமைப்பை நாங்கள் தோற்கடித்திருக்க மாட்டோம்,அதற்காக நாங்கள் நன்றியுடையவர்களாக உள்ளோம்.

ஆனால் இறைமையுள்ள நாடு என்ற அடிப்படையில் நாங்கள் ஏனைய நாடுகளுடன் இணைந்து செயற்படவேண்டும்,உங்கள் நாட்டின் மிகப்பெரிய வர்த்தக பங்காளி உங்களிற்கு விருப்பமில்லாத நாடாகயிருக்கலாம்.ஆனால் நீங்கள் அவ்வாறே செயற்படவேண்டியுள்ளது உலகம் அவ்வாறே மாறிவருகின்றது.

ஆனால் இதன் அர்த்தம் நாங்கள் இந்தியாவின் நலன்களை அலட்சியப்படுத்துகின்றோம் அதற்கு பாதிப்பு ஏற்படுத்துகின்றோம் என்பதல்ல,நாங்கள் இந்த விவகாரத்தை வித்தியாசமாக கையாள்கின்றோம்.

இலங்கையை பொறுத்தவரை இந்தியாவுடனான உறவே மிகமுக்கியமானது.

ஆனால் முற்றிலும் ஒரு நாட்டையே நம்பியிருப்பது நியாயமற்றது இலங்கைக்கு ஏனைய நாடுகள் நியாயபூர்வமாக வந்து உதவி செய்வது முதலீடு செய்வது குறித்து எந்த பிரச்சினையும் இல்லை என ஜெய்சங்கரே தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு கரிசனைகள் உள்ளன ஆனால் நாங்கள் இந்தியாவின் நியாயபூர்வமான பாதுகாப்பு கரிசனைகளிற்கு யாரும் பாதிப்பு ஏற்படுத்த அனுமதிக்கமாட்டோம்,எவரும் அதனை செய்யமுயலவில்லை நாங்கள் இந்தியாவின் உணர்வுகளை புரிந்துகொண்டுள்ளோம்.

https://www.virakesari.lk/article/146522

  • கருத்துக்கள உறவுகள்

அதே இந்தியாவைத்தான்… தமிழ் அரசியல்வாதிகள் எல்லோரும்,
தமிழருக்கு உதவி செய்யும் என்று நம்பிக் கொண்டு இருக்கிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

இவன் கோத்தாவின் பிரத்தியேக வழக்கறிஞராக இருந்தவர். அதனாலேயே இவரைக் கோத்தாவும், இன்று ரணிலும் பதவியில் வைத்திருக்கிறார்கள். யாழ்ப்பாணத்திற்குச் சென்ற ஜனாதிபதிச் செயலணியில் இவரும் பீரிஸோடு இடம்பெற்றிருந்தார். காணமலாக்கப்பட்டவர்களின் பெற்றோர்களை விரட்டியடித்து ஏளனமாகப் பேசியவர் இவர். 

Edited by நியானி
ஒருமையில் விளித்தவை மாற்றப்பட்டுள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

பெரும் பாதிப்பை உண்டாக்கிய உள்ளூர் பயங்கரவாத அமைப்பினை ஒழித்தமை சரி. ஆனால் உங்கடை ஆட் கள் வெளியூர் பயங்கரவாத அமைப்பினை கொண்டு வந்து வெடியை போட, கோதாவையும் ஜனாதிபதி ஆக்கி, நீங்களும் அரைவேக்காடு வெளிநாட்டு அலுவல் அமைச்சராகி, நாட்டின் கதை நாறுதே.... 😎

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

இந்தியாவின் ஆதரவு இல்லாவிட்டால் 26 வருடங்களாக எங்கள் நாட்டிற்கு பெரும்பாதிப்பை ஏற்படுத்தி வந்த  பயங்கரவாத அமைப்பை நாங்கள் தோற்கடித்திருக்க மாட்டோம்,

இந்தியாவை தேவையில்லாமல் இலங்கையில்  மூக்கை நுழைக்க விடாமல் இருந்திருந்தால்; அடிக்கடி சொல்லும் சிங்கப்பூராய் மாறி எல்லோரும் ஓரளவுக்காகவாவது சமாதானத்தை அனுபவித்து, இவ்வளவு நெருக்கடியில்லாத நிலைக்கு இலங்கை மாறியிருக்கும். இந்தியா இலங்கையின் காலைச்சுற்றின பாம்பு.

3 hours ago, ஏராளன் said:

இலங்கையை பொறுத்தவரை இந்தியாவுடனான உறவே மிகமுக்கியமானது.

சொல்லிக்கொண்டே ஆப்பு இறுக்கப்போகிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.