Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கோட்டாவிடம்; மூன்று மணிநேரம் பொலிஸார் விசாரணை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கோட்டாவிடம்; மூன்று மணிநேரம் பொலிஸார் விசாரணை

By RAJEEBAN

08 FEB, 2023 | 03:41 PM
image

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை திங்கட்கிழமை பொலிஸார் விசாரணைக்குட்படுத்தியுள்ளனர்.

கடந்த வருடம் ஜூலை மாதம் 9 ம் திகதி ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையை சூழ்ந்ததை தொடர்ந்து கோட்டாபய ராஜபக்ச அங்கிருந்து தப்பிவெளியேறிய பின்னர் அங்கு பெருந்தொகை பணம் மீட்கப்பட்டமை தொடர்பிலேயே பொலிஸார் அவரை விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.

நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அவரிடம் மூன்றுமணிநேரம் வாக்குமூலம் பெறப்பட்டது என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/147729

ஜனாதிபதி மாளிகையில் மீட்கப்பட்ட பணத்திற்கு உரிமை கோரினார் கோட்டா

By RAJEEBAN

08 FEB, 2023 | 03:12 PM
image

கடந்த வருடம் ஜூலை மாதம் ஒன்பது திகதி ஜனாதிபதி மாளிகையில் மீட்கப்பட்ட 17.85 மில்லியனிற்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச  உரிமைகோரியுள்ளார்.

தனது சட்டத்தரணி மூலம் அந்த பணத்திற்கு அவர் உரிமை கோரியுள்ளார்.

எனினும் பொலிஸ் விசாரணைகள் முடிவடையும் இதனை ஏற்க முடியாது என கொழும்பு கோட்டை நீதவான் திலினகமகே நிராகரித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/147722

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி செயலகத்தில் கைப்பற்றப்பட்ட பணம் வறிய மக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக வைக்கப்பட்டிருந்தது : சி.ஐ.டி நீதிமன்றில் தெரிவிப்பு

By T. SARANYA

09 FEB, 2023 | 04:45 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

போராட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலகத்தில் இருந்து கைப்பற்றிய பணம் வறிய மக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக வைக்கப்பட்டிருந்ததாக குற்றப்புலனாய்வு திணைக்களம் கொழும்பு கோட்டை நீதவான்  நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது. 

போராட்டக்காரர்கள் கொழும்பு ஜனாதிபதி செயலகத்தில் இருந்து கைப்பற்றிய 17,856,000 ரூபா பணம் தன்னுடையது என்றும் அதனை நாட்டின் வறிய மக்களுக்கு பகிர்ந்தளிக்க வைத்திருந்ததாகவும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்ததாக குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றுக்கு தெரிவித்தது.

குறித்த பணத்தை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கு மீண்டும் கையளிக்குமாறு அவர் சார்பில் மன்றில் ஆஜரான சட்டத்தரணி ஹரி குப்த சேனாதீர கோரிக்கை விடுத்தார்.

எனினும் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் மன்றில் ஆஜரான ஜனாதிபதி  சட்டத்தரணி ரியன்ஸி அரசகுலரத்ன இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்.

இந்த பணம் தொடர்பில் நிதி தூய்தாக்கல் சட்டத்தின் கீழ் அல்லது இலஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ் விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் கோட்டை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு குறித்த பணத்தினை  அமைச்சர் திரன் அலஸிடம் ஒப்படைக்குமாறு  மேல் மாகாணங்களுக்குப் பொறுப்பான  சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் அன்றைய தினம் தொலைபேசி அழைப்பொன்றை மேற்கொண்டுள்ளதாக பகுப்பாய்வு அறிக்கைகள் வெளிப்படுத்தியிருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

https://www.virakesari.lk/article/147830

  • 5 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கோட்டாபய இல்லத்தில் கண்டெடுக்கப்பட்ட 17.85 மில்லியன் ரூபா பற்றி இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கோட்டாவிடம் வாக்குமூலம் பெற ஏற்பாடு!

2022 ஜூலை 9 ஆம் திகதி ஜனாதிபதி மாளிகையில் இருந்து 17.85 மில்லியன் ரூபா கண்டெடுக்கப்பட்டமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் இருந்து ஜூலை 27 ஆம் திகதி வாக்குமூலம் பதிவு செய்ய எதிர்பார்ப்பதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

சிட்டிசன் பவர் அமைப்பு செய்த முறைப்பாட்டின் பிரகாரம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இந்த தொகை தொடர்பில் இலஞ்ச சட்டத்தின் கீழ் குற்றச் செயல்கள் இடம்பெற்றுள்ளதா என்பதை அறிய நீதிமன்றில் ஆஜராகுமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முன்னர் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நடத்தப்பட்ட விசாரணையின் போது, குறித்த பணம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் தொடர்புடைய வர்த்தகர்களால் வழங்கப்பட்டதாகவும், போராட்டக்காரர்களால் அழிக்கப்பட்ட வீடுகளின் உரிமையாளர்களுக்கு பணத்தை பகிர்ந்தளிக்க திட்டமிடப்பட்டிருந்ததாகவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், போராட்டக்காரர்கள் வளாகத்தை கைப்பற்றியதன் பின்னர் நிதி அறிக்கை தொடர்பான ஆவணங்கள் காணாமல் போனதால் பணத்தை வழங்கியவர்களின் பெயர்களை வெளியிட முடியவில்லை என முன்னாள் ஜனாதிபதி குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் தெரிவித்திருந்தார்.

இதேவேளை, பணமோசடிச் சட்டத்தின் கீழ் குற்றம் இழைக்கப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய அந்த விசாரணைகளின் பகுதிகள் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

மூலம் – மவ்றட்ட

https://thinakkural.lk/article/264308

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ஏராளன் said:

குறித்த பணம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் தொடர்புடைய வர்த்தகர்களால் வழங்கப்பட்டதாகவும், போராட்டக்காரர்களால் அழிக்கப்பட்ட வீடுகளின் உரிமையாளர்களுக்கு பணத்தை பகிர்ந்தளிக்க திட்டமிடப்பட்டிருந்ததாகவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

நகைப்புக்கிடமான விளக்கம். போராட்டம் நடந்தது எப்போது? வீடுகள்  அழிக்கப்பட்டது எப்போது? யார் யாரிடம் கொடுத்தார்கள்? எப்போது கொடுத்தார்கள்? அப்போ, வீடுகள் கொழுத்தப்படும் என முன்பே அறிந்திருந்தார்களா இவர்கள்? ஏன் தடுக்கவில்லை?

15 hours ago, ஏராளன் said:

போராட்டக்காரர்கள் வளாகத்தை கைப்பற்றியதன் பின்னர் நிதி அறிக்கை தொடர்பான ஆவணங்கள் காணாமல் போனதால் பணத்தை வழங்கியவர்களின் பெயர்களை வெளியிட முடியவில்லை என முன்னாள் ஜனாதிபதி குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் தெரிவித்திருந்தார்.

அதெப்படி வழங்கிய பணம் காணாமல் போகவில்லை, ஆவணம் மட்டும் காணாமல் போனது? சரி..... கொடுத்தவர்களை முன்னிலையாகும்படி அழைக்கலாமே? பணத்தை வங்கி மூலம் அனுப்பாமல் கையில கொடுத்தனரோ? சி. சி. கமராவை ஆதாரமாக காட்டலாமே? அதற்கு ஏன் படுக்கையறையில் வைத்தவர்? தொழில் நுட்பம் வளர்ந்து விட்ட காலத்திலிருந்து, அதன்மூலம் பரப்புரைகள் செய்து கொண்டு, ஆவணம் பற்றி கதையளக்கிறார். 

On 10/2/2023 at 00:37, ஏராளன் said:

போராட்டக்காரர்கள் கொழும்பு ஜனாதிபதி செயலகத்தில் இருந்து கைப்பற்றிய 17,856,000 ரூபா பணம் தன்னுடையது என்றும் அதனை நாட்டின் வறிய மக்களுக்கு பகிர்ந்தளிக்க வைத்திருந்ததாகவும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்ததாக குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றுக்கு தெரிவித்தது.

மக்களுக்கு வறுமையை ஏற்படுத்தியவர்களே இவர்கள்தான்! தெருவிலே மக்கள் அலைந்தபோது பகிர்ந்தளிக்காது பதுக்கி வைத்திருந்து விட்டு, எப்போ கொடுக்க ஆலோசித்திருப்பார்? அது மக்களிடம் இருந்து கொள்ளையடித்த பணம். அவரது சொந்தப்பணமானால் அது வங்கியிலல்லவா இருந்திருக்கும்? படுக்கையறைக்கு எப்படி வந்தது? முன்பும் மகிந்தாவின் புத்திரர்களின் பணமோசடி விசாரணையின் போது ஒரு பாட்டியை கூட்டி வந்து, அது அவருடைய பணம் என்றார்கள். அவருக்கு அந்தப்பணம் எப்படி வந்தது என விசாரிக்க, அவருக்கு மறதி நோய், அவரால் சரியாக பதில் சொல்ல முடியாத நிலையிலுள்ளார் என்று மழுப்பி விட்டார்கள்.  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.