Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிபிசி இந்திய அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் ஆய்வு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிபிசி இந்திய அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் ஆய்வு

  • ஜார்ஜ் ரைட்
  • பிபிசி நியூஸ்
3 மணி நேரங்களுக்கு முன்னர்
பிபிசி வருமான வரித்துறை ரெய்டு

பட மூலாதாரம்,REUTERS

 

பெண் விளையாட்டு வீரர்களின் சக்திவாய்ந்த கதைகளைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

இந்திய தலைநகர் டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

இந்திய பிரதமர் நரேந்திர மோதியை விமர்சித்து பிரிட்டனில் பிபிசியின் ஆவணப்படம் ஒளிபரப்பான சில வாரங்களுக்குப் பிறகு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.

2002இல் குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையில் அப்போதைய முதல்வராக இருந்த நரேந்திர மோதியின் பங்கு தொடர்பாக பிபிசி ஆவணப்படத்தில் தகவல்கள் இடம்பெற்றிருந்தன. அதை இந்தியாவில் பகிரவும் சமூக ஊடகங்கள் வாயிலாக பார்க்க முடியாதவாறும் இந்திய அரசு முடக்கியது.

இந்த நிலையில், பிபிசியின் இந்திய அலுவலகங்களில் அதிகாரிகள் நடத்தி வரும் ஆய்வுக்கு "முழுமையாக ஒத்துழைப்பதாக" பிபிசி தெரிவித்திருக்கிறது.

 

"இந்த நிலைமை விரைவில் தீர்க்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்," என்று அறிக்கை மூலம் பிபிசி கூறியுள்ளது.

நடவடிக்கைக்கு எதிர்வினை

இந்திய எதிர்க்கட்சியான காங்கிரஸின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், "இந்த நடவடிக்கை, விரக்தியில் மூழ்கிய மோதி அரசு விமர்சனங்களுக்கு பயப்படுவதைக் காட்டுகிறது" என்று கூறியுள்ளார்.

"இத்தகைய மிரட்டல் தந்திரங்களை கடுமையான முறையில் நாங்கள் கண்டிக்கிறோம். இந்த ஜனநாயகமற்ற, சர்வாதிகார அணுகுமுறை இனியும் தொடர முடியாது" என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1
Twitter பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Twitter வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Twitter குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

ஏற்பு மற்றும் தொடரவும்

Twitter பதிவின் முடிவு, 1

இதேவேளை, மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் கௌரவ் பாட்டியா "உலகின் மிகவும் ஊழல் நிறைந்த அமைப்பு பிபிசி" என்று விமர்சித்துள்ளார்.

"நீங்கள் விஷத்தை கக்காத வரையில், ஒவ்வொரு அமைப்புக்கும் வாய்ப்பளிக்கும் நாடு இந்தியா" என்று அவர் கூறியுள்ளார்.

வருமான வரித்துறையினரின் ஆய்வு நடவடிக்கை சட்டபூர்வமானது என்றும் ஆய்வு நடக்கும் நேரத்துக்கும் அரசாங்கத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊடக சங்கங்கள் எதிர்ப்பு

இந்தியாவில் உள்ள முக்கிய ஊடகங்களின் ஆசிரியர்களை உறுப்பினர்களாகக் கொண்டுள்ள எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா, பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறை ஆய்வு நடவடிக்கைகள் குறித்து தமது "ஆழ்ந்த கவலையை" வெளிப்படுத்தியுள்ளது.

Twitter பதிவை கடந்து செல்ல, 2
Twitter பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Twitter வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Twitter குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

ஏற்பு மற்றும் தொடரவும்

Twitter பதிவின் முடிவு, 2

"அரசாங்கக் கொள்கைகள் அல்லது ஆளும் அமைப்பை விமர்சிக்கும் ஊடகங்களை மிரட்டுவதற்கும் துன்புறுத்துவதற்கும் அரசுத் துறைகளை பயன்படுத்தும் போக்கின் தொடர்ச்சி இவை " என்று எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா கூறியுள்ளது.

பிரஸ் கிளப் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில், பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறை "சர்வே" செய்வதை வன்மையாகக் கண்டிப்பதாக கூறியுள்ளது.

சமீப காலங்களில் தனக்கு எதிராகவும், ஆளும் அமைப்புக்கு எதிராகவும் உள்ள ஊடகங்களை விரோதமாக அரசாங்கம் கருதுகிறது. அதன் ஒரு பகுதியாக அத்தகைய ஊடகங்கள் மீது நடக்கும் தாக்குதலின் அங்கமாகவே இந்த ஆய்வு உள்ளது என்று இந்திய பத்திரிகையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் எதிர்ப்பு

ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் இந்திய பிரிவு, "ஆளும் பாரதிய ஜனதா கட்சி மீதான பிபிசியின் ஆழமான செய்திகள் தொடர்பாக அதை துன்புறுத்தவும் மிரட்டவும் முயற்சி நடக்கிறது," என்று குற்றம்சாட்டியுள்ளது.

"வருமான வரித் துறையின் பரந்த அதிகாரங்கள், எதிர்க்குரல்களை அமைதிப்படுத்த மீண்டும் ஆயுதமாக்கப்படுகின்றன" என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.

2002ஆம் ஆண்டில் நடந்த குஜராத் கலவரத்தின் போது மோதியின் நடவடிக்கைகள் குறித்து கேள்விகளை எழுப்பும், பிரிட்டன் வெளியுறவு அலுவலகத்திலிருந்து பிபிசி பெற்ற 'வெளியிடப்படாத அறிக்கையை' ஆவணப்படம் எடுத்துக்காட்டுகிறது.

இந்து யாத்ரீகர்கள் சென்ற ரயிலுக்கு தீ வைக்கப்பட்ட மறுநாள் கலவரம் தொடங்கியது. டஜன் கணக்கானோர் அதில் கொல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து நடந்த வன்முறையில் 1,000க்கும் மேற்பட்ட மக்களில் பெரும்பாலும் முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.

அந்த வன்முறையில் "தண்டனை கிடைக்காத சூழலுக்கு" மோதியே "நேரடி பொறுப்பு" என்று வெளியுறவு அலுவலக அறிக்கை கூறுகிறது.

2005ஆம் ஆண்டில், "மத சுதந்திரத்தின் கடுமையான மீறல்களுக்கு" பொறுப்பாகக் கருதப்படும் வெளிநாட்டு அதிகாரிகளின் நுழைவைத் தடுக்கும் சட்டத்தின் கீழ் மோதிக்கு அமெரிக்கா விசா மறுத்தது.

இந்த விவகாரத்தில் நரேந்திர மோதி நீண்ட காலமாகவே தன் மீதான குற்றச்சாட்டுகளை நிராகரித்து வந்ததுடன் கலவரத்திற்கும் அவர் மன்னிப்பு கேட்கவில்லை. 2013இல், உச்ச நீதிமன்ற குழுவும் அவர் மீது வழக்குத் தொடர போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறியது.

பிபிசி அழைப்பை நிராகரித்த அரசு

இந்த ஆவணப்படத்திற்கு பதிலளிக்க இந்திய அரசுக்கு உரிமை வழங்கப்பட்டதாகவும் ஆனால் அது நிராகரிக்கப்பட்டதாகவும் பிபிசி கடந்த மாதம் கூறியது.

"அந்த ஆவணப்படம் 'கடுமையாக ஆராயப்பட்டது' என்றும், 'பரந்த அளவிலான கருத்துக்கள், சாட்சிகள்' மற்றும் நிபுணர்கள் அதற்காக அணுகப்பட்டனர். பாஜகவில் உள்ளவர்களின் பதில்கள் உட்பட பல தரப்பினரின் கருத்துக்களை வழங்கியுள்ளோம்" என்றும் பிபிசி குறிப்பிட்டிருந்தது.

புதிய விஷயமல்ல

அரசாங்கத்தை விமர்சிக்கும் அமைப்புகளை குறி வைப்பது இந்தியாவில் அசாதாரணமான விஷயம் அல்ல.

2020ஆம் ஆண்டில், ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் அதன் இந்திய நடவடிக்கைகளை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்போது, மனித உரிமை அமைப்புகளுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாக அந்த அமைப்பு குற்றம்சாட்டியது.

மற்ற உள்ளூர் அரசு சாரா அமைப்புகளுடன் சேர்ந்து குழந்தைகள் கல்வி, பெண்ணுரிமைக்காக குரல் கொடுத்து வரும் ஆக்ஸ்பாம் அமைப்பின் அலுவலகத்திலும் கடந்த ஆண்டு சோதனை நடத்தப்பட்டது.

2021ஆம் ஆண்டில் அரசாங்கத்தைப் பற்றி எதிர்மறையான செய்திகளை வெளியிட்ட பின்னர், வருமான வருத்துறை அதிகாரிகள் நான்கு ஊடகங்களில் சோதனை நடத்தியதாக எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.

ரிப்போர்ட்டர்ஸ் வித்தவுட் பார்டர்ஸ் என்ற லாப நோக்கமற்ற குழுவின் கூற்றுப்படி, நரேந்திர மோதி மத்தியில் ஆட்சிக்கு வந்ததில் இருந்து பத்திரிகை சுதந்திரம் வீழ்ச்சியடைந்துள்ளது.

அந்த குழுவின் உலக பத்திரிகை சுதந்திர குறியீடு பட்டியலில் இடம்பிடித்துள்ள 180 நாடுகளில் இந்தியா 150வது இடத்தைப் பிடித்துள்ளது, இது 2014ஆம் ஆண்டில் இருந்து 10 இடங்கள் குறைந்த நிலையாகும்.

https://www.bbc.com/tamil/india-64635511

  • கருத்துக்கள உறவுகள்

பிபிசி அலுவலகத்தில் 2-வது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை

Published By: Rajeeban

15 Feb, 2023 | 12:43 PM
image

டெல்லியிலுள்ள பிபிசி அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் 2-வது  நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.  

கடந்த 2002ம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பான விசாரணையின் போது, அந்த மாநில முதலமைச்சராக இன்றைய பிரதமர் நரேந்திர மோடி இருந்தார். அப்போது முஸ்லிம்களின் நிலை குறித்து ”இந்தியா: மோடி மீதான கேள்வி” என்ற ஆவணப் படத்தை கடந்த ஜனவரி மாதம் 17-ம் தேதியும் பிபிசி நிறுவனம் லண்டனில் ஒளிபரப்பியது. இதன் இரண்டாம் பாகம் கடந்த 24ம் தேதி வெளியானது.

இந்த ஆவணப்படத்தை வெற்றுப் பிரசாரம் என்று மத்திய அரசு நிராகரித்தது. மேலும் தவறான கருத்துக்கள் பரப்படுவதாக கூறி இந்த ஆவணப்படத்தை தடை செய்தது. மேலும் தகவல் தொழில்நுட்ப விதிகள், 2021ன் கீழ் அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்தி பதிவுகளை அகற்றுவதற்கு தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம், யூடியூப் மற்றும் ட்விட்டர் ஆகிய நிறுவனங்களுக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில்,  டெல்லியில் உள்ள பிபிசி அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை 2வது நாளாக இன்றும் தொடர்ந்து நடந்து வருகிறது. இதேபோல் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகத்திலும் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.பிபிசி சம்பந்தப்பட்ட சர்வதேச வரிஏய்ப்பு மற்றும் பண பரிமாற்ற முறைகேடுகள் குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு  வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வருமான வரித்துறை சோதனைக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

 

 

https://www.virakesari.lk/article/148258

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறை ஆய்வு - இந்திய பத்திரிகைகள் கூறுவது என்ன?

2 மணி நேரங்களுக்கு முன்னர்
பிபிசி டெல்லி அலுவலகத்தில்

பட மூலாதாரம்,REUTERS

 
படக்குறிப்பு,

பிபிசி டெல்லி அலுவலகத்துக்கு வெளியே..

 

பெண் விளையாட்டு வீரர்களின் சக்திவாய்ந்த கதைகளைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

இந்திய தலைநகர் டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று, செவ்வாய்கிழமை ஆய்வு நடத்தினர். இதுகுறித்து, இந்திய நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் வெளியான செய்திகள் குறித்து இங்கே பார்ப்போம்.

"பழிவாங்கும் நடவடிக்கை"

பிபிசியின் டெல்லி மற்றும் மும்பை அலுவலகங்களில் இந்திய வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தியதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்திருப்பது குறித்து 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.

பிபிசி அலுவலகங்களில் "சர்வே" நடத்தியிருப்பது "பழிவாங்கும் நடவடிக்கை" என்றும் "ஊடக சுதந்திரம் மீதான தாக்குதல்" என்றும் எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளதை அச்செய்தி சுட்டிக்காட்டுகிறது.

 

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "மோதி ஆட்சியில் பத்திரிகை சுதந்திரத்தின் மீது மீண்டும் மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

விமர்சனக் குரல்களை நெரிப்பதற்காக வெட்கக்கேடான மற்றும் மன்னிக்க முடியாத பழிவாங்கலுடன் இது செய்யப்படுகிறது.

எதிர்க்கட்சிகள் மற்றும் ஊடகங்களை தாக்க அமைப்புகளைப் பயன்படுத்தினால் எந்த ஜனநாயகமும் வாழ முடியாது.

மக்கள் இதை எதிர்ப்பார்கள்" என தெரிவித்துள்ளது அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோன்று, ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி சஞ்சய் சிங், "மோதி சர்வாதிகாரத்தின் உச்சக்கட்டத்தை அடைந்திருப்பதாக" தெரிவித்திருப்பதும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, "முதலில் பிபிசி ஆவணப்படங்களுக்குத் தடை. அதானி நிறுவன முறைகேடுகளுக்கு விசாரணை இல்லை. தற்போது பிபிசி நிறுவன அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை. இந்தியா: ஜனநாயகத்தின் தாய்தானா?" என அவர் கேள்வி எழுப்பியுள்ளது அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"சர்வே தகவல்கள் வெளியிடப்படும்"

மும்பை பிபிசி அலுவலகத்தில்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

மும்பை பிபிசி அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் ஆய்வு

2002 குஜராத் கலவரம் குறித்த பிபிசியின் ஆவணப்படம் வெளியான சில வாரங்களில் பிபிசி அலுவலகங்களில் இந்த 'சர்வே' மேற்கொள்ளப்பட்டிருப்பதாக, 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.

வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் இந்த நிலைமை விரைவில் தீர்க்கப்படும் என்று தொடர்ந்து நம்புவதாகவும் பிபிசி வெளியிட்ட அறிக்கையும் அச்செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளது.

யாரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை என்றும், இந்த 'சர்வே' முடிந்தபிறகு அதுகுறித்த தகவல்கள் வெளியிடப்படும் எனவும், இந்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மு.க.ஸ்டாலின் கண்டனம்

மு.க.ஸ்டாலின்

பட மூலாதாரம்,FACEBOOK/M.K.STALIN

பிபிசி அலுவலகங்களில் நடத்தப்பட்ட ஆய்வு குறித்து செய்தி வெளியிட்டுள்ள 'இந்து தமிழ் திசை' நாளிதழ், ஆய்வின்போது அங்கு இருந்த பிபிசி செய்தியாளர்கள், ஊழியர்களின் செல்போன், மடிக்கணினிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து வைத்துக் கொண்டதாக தெரிவித்துள்ளது.

'இது சோதனை அல்ல. கணக்கு வழக்குகளை ஆய்வு மட்டுமே செய்துவருகிறோம்' என்றும் சோதனை குறித்து பிபிசிக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தன் ட்விட்டர் பக்கத்தில், "சமீபகாலமாக, அமலாக்கத் துறை, சிபிஐ, வருமானவரித் துறை உள்ளிட்ட இந்திய அரசின் அமைப்புகள், அரசியல் கருவிகளாக அரசியல் எதிரிகளை குறிவைத்து தாக்க அளவுகடந்து பயன்படுத்தப்படுகின்றன. இந்தப் பட்டியலில் பிபிசி நிறுவனத்தில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனையும் இணைந்துள்ளது.

நடப்பவை அனைத்தையும் மக்கள் அமைதியாக பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். எதிர்வரும் தேர்தலில் இதற்கான தக்க பாடத்தை அவர்கள் புகட்டுவார்கள்" என்று தெரிவித்திருப்பது அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"உண்மையின் கழுத்தை நெரிக்கும் முயற்சி"

பிபிசி

பட மூலாதாரம்,GETTY IMAGES

பிபிசி அலுவலகங்களில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை ஆய்வுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்திருப்பது குறித்து 'தினத்தந்தி' இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், "அதானி விவகாரத்தில் நாங்கள் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணையை கேட்டுக்கொண்டு இருக்கிறோம். ஆனால், அரசு பிபிசிக்கு எதிராக களமிறங்கி இருக்கிறது. அழிவு நெருங்கும்போது ஒருவரின் அறிவு அவரது நலனுக்கு எதிராக செயல்படும்" என அவர் தெரிவித்துள்ளதாக அச்செய்தி கூறுகிறது.

இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி. பினோய் விஸ்வம், "வருமான வரித்துறை சோதனை என்பது உண்மையின் கழுத்தை நெரிக்கும் முயற்சி" என தெரிவித்திருப்பதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் கொள்கைகள் அல்லது ஆளும் கட்சியை விமர்சிக்கும் பத்திரிகை நிறுவனங்களை மிரட்டுவதற்கும் துன்புறுத்துவதற்கும் அரசு நிறுவனங்களை பயன்படுத்தும் போக்கின் தொடர்ச்சியாக இந்த ஆய்வு உள்ளது என, எடிட்டர்ஸ் கில்ட் அமைப்பு தெரிவித்துள்ளது.

இதேவேளை, பாஜக செய்தித் தொடர்பாளர் கௌரவ் பாட்டியா "உலகின் மிகவும் ஊழல் நிறைந்த அமைப்பு பிபிசி" என்றும்

"நீங்கள் விஷத்தை கக்காத வரையில், ஒவ்வொரு அமைப்புக்கும் வாய்ப்பளிக்கும் நாடு இந்தியா" என்றும் கூறியிருப்பது அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா கூறுவது என்ன?

டெல்லியில் உள்ள பிபிசி அலுவலகத்தில் வருமான வரித்துறை நடத்திய ஆய்வு குறித்து அமெரிக்கா அறிந்திருப்பதாகவும், ஆனால் அதுகுறித்த தீர்ப்பு வழங்கும் நிலையில் தாங்கள் இல்லை என்றும் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் ஊடகங்களுக்கு தெரிவித்ததாக 'லைவ் மிண்ட்' இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

சுதந்திரமான பத்திரிகைத் துறை ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கு பங்களிக்கும் என்பதால் அது முக்கியத்துவம் வாய்ந்தது என்று அவர் மேலும் கூறினார். "உலகம் முழுவதும் சுதந்திரமான பத்திரிகையின் முக்கியத்துவத்தை நாங்கள் ஆதரிக்கிறோம். கருத்து சுதந்திரம் மற்றும் மதம் அல்லது நம்பிக்கை சுதந்திரம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை உலகெங்கிலும் உள்ள ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கு பங்களிக்கும் மனித உரிமைகளாக நாங்கள் தொடர்ந்து முன்னிலைப்படுத்துகிறோம். இது இந்நாட்டில் ஜனநாயகத்தை வலுப்படுத்தியுள்ளது. இது இந்தியாவின் ஜனநாயகத்தை வலுப்படுத்தியுள்ளது" என்று பிரைஸ் வலியுறுத்தினார்.

இந்நடவடிக்கை ஜனநாயகத்தின் சில மதிப்புக்கு எதிராக நடந்ததா என்று கேட்டதற்கு, "இந்த ஆய்வு தொடர்பான உண்மைகளை நாங்கள் அறிந்திருக்கிறோம், ஆனால் தீர்ப்பு வழங்கும் நிலையில் நான் இல்லை" என அவர் தெரிவித்ததாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://www.bbc.com/tamil/global-64646392

  • கருத்துக்கள உறவுகள்

காண்டாமிருகத்துடன் யானை தள்ளுப்படுகின்றது. நம்மால் விளங்கிக்கொள்ள முடியாத மோதல்கள் இவை 🤦‍♂️

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிபிசி இந்திய அலுவலகங்களில் 2வது நாளாக வருமான வரித்துறையினர் ஆய்வு

  • ஜார்ஜ் ரைட்
  • பிபிசி நியூஸ்
14 பிப்ரவரி 2023
புதுப்பிக்கப்பட்டது 25 நிமிடங்களுக்கு முன்னர்
பிபிசி வருமான வரித்துறை ரெய்டு

பட மூலாதாரம்,INDIA TODAY

 
படக்குறிப்பு,

பிபிசி அலுவலகம் அமைந்துள்ள ஹிந்துஸ்தான் டைம்ஸ் கட்டட பிரதான நுழைவு வாயில் பகுதியில் குவிக்கப்பட்டுள்ள மத்திய துணை ராணுவப்படையினர்

 

பெண் விளையாட்டு வீரர்களின் சக்திவாய்ந்த கதைகளைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

இந்திய தலைநகர் டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இரண்டாவது நாளாக புதன்கிழமை ஆய்வு நடத்தி வருகின்றனர்.

இந்திய பிரதமர் நரேந்திர மோதியை விமர்சித்து பிரிட்டனில் பிபிசியின் ஆவணப்படம் ஒளிபரப்பான சில வாரங்களுக்குப் பிறகு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.

2002இல் குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையில் அப்போதைய முதல்வராக இருந்த நரேந்திர மோதியின் பங்கு தொடர்பாக பிபிசி ஆவணப்படத்தில் தகவல்கள் இடம்பெற்றிருந்தன. அதை இந்தியாவில் பகிரவும் சமூக ஊடகங்கள் வாயிலாக பார்க்க முடியாதவாறும் இந்திய அரசு முடக்கியது.

பிபிசி அறிக்கை

இந்த நிலையில், பிபிசியின் இந்திய அலுவலகங்களில் அதிகாரிகள் நடத்தி வரும் ஆய்வு தொடர்பாக பிபிசி செவ்வாய்க்கிழமை இரவு வெளியிட்டுள்ள அறிக்கையில், "புதுடெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இருக்கிறார்கள். பல ஊழியர்கள் இப்போது அலுவலக கட்டடத்தை விட்டு புறப்பட்டுள்ளனர், ஆனால் சிலர் தொடர்ந்து இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். தொடர்ந்து நடைபெறும் விசாரணைக்கு அவர்கள் ஒத்துழைப்பு அளித்து வருகிறார்கள்," என்று கூறப்பட்டுள்ளது.

 

"இந்த நேரத்தில் நாங்கள் எங்கள் ஊழியர்களுக்கு ஆதரவளித்து வருகிறோம். மேலும் இந்த நிலைமை விரைவில் தீர்க்கப்படும் என்று தொடர்ந்து நம்புகிறோம்."

"எங்களது செய்தி மற்றும் ஊடக பணிகள் வழக்கம் போல் தொடர்கிறது, மேலும் இந்தியாவில் எமது பார்வையாளர்களுக்கு தொடர்ந்து சேவையாற்றுவதற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்," என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே, இந்து சேனா அமைப்பைச் சேர்ந்த சிலர், பிபிசி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த புதன்கிழமை நண்பகலில் வந்தனர். ஆனால், அவர்கள் கட்டடம் அருகே நுழைய முடியாதவாறு போலீஸார் தடுத்தனர்.

மேலும், பிபிசிக்கு எதிராக அவர்கள் வைத்திருந்த பேனர்கள் மற்றும் பதாகைகளை போலீஸார் கைப்பற்றினர். அப்போது போராட்டக்காரர்கள் "பிபிசி இந்தியாவை விட்டு வெளியேறு" என கோஷமிட்டனர். பிறகு போலீஸார் அவர்களை அந்த பகுதியில் இருந்து அப்புறப்படுத்தினர்.

நடவடிக்கைக்கு எதிர்வினை

பிபிசி வருமான வரித்துறை ரெய்டு

பட மூலாதாரம்,REUTERS

இந்திய எதிர்க்கட்சியான காங்கிரஸின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், "இந்த நடவடிக்கை, விரக்தியில் மூழ்கிய மோதி அரசு விமர்சனங்களுக்கு பயப்படுவதைக் காட்டுகிறது" என்று கூறியுள்ளார்.

"இத்தகைய மிரட்டல் தந்திரங்களை கடுமையான முறையில் நாங்கள் கண்டிக்கிறோம். இந்த ஜனநாயகமற்ற, சர்வாதிகார அணுகுமுறை இனியும் தொடர முடியாது" என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1
Twitter பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Twitter வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Twitter குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

ஏற்பு மற்றும் தொடரவும்

Twitter பதிவின் முடிவு, 1

இதேவேளை, மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் கௌரவ் பாட்டியா "உலகின் மிகவும் ஊழல் நிறைந்த அமைப்பு பிபிசி" என்று விமர்சித்துள்ளார்.

"நீங்கள் விஷத்தை கக்காத வரையில், ஒவ்வொரு அமைப்புக்கும் வாய்ப்பளிக்கும் நாடு இந்தியா" என்று அவர் கூறியுள்ளார்.

வருமான வரித்துறையினரின் ஆய்வு நடவடிக்கை சட்டபூர்வமானது என்றும் ஆய்வு நடக்கும் நேரத்துக்கும் அரசாங்கத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊடக சங்கங்கள் எதிர்ப்பு

இந்தியாவில் உள்ள முக்கிய ஊடகங்களின் ஆசிரியர்களை உறுப்பினர்களாகக் கொண்டுள்ள எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா, பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறை ஆய்வு நடவடிக்கைகள் குறித்து தமது "ஆழ்ந்த கவலையை" வெளிப்படுத்தியுள்ளது.

Twitter பதிவை கடந்து செல்ல, 2
Twitter பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Twitter வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Twitter குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

ஏற்பு மற்றும் தொடரவும்

Twitter பதிவின் முடிவு, 2

"அரசாங்கக் கொள்கைகள் அல்லது ஆளும் அமைப்பை விமர்சிக்கும் ஊடகங்களை மிரட்டுவதற்கும் துன்புறுத்துவதற்கும் அரசுத் துறைகளை பயன்படுத்தும் போக்கின் தொடர்ச்சி இவை " என்று எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா கூறியுள்ளது.

பிரஸ் கிளப் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில், பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறை "சர்வே" செய்வதை வன்மையாகக் கண்டிப்பதாக கூறியுள்ளது.

சமீப காலங்களில் தனக்கு எதிராகவும், ஆளும் அமைப்புக்கு எதிராகவும் உள்ள ஊடகங்களை விரோதமாக அரசாங்கம் கருதுகிறது. அதன் ஒரு பகுதியாக அத்தகைய ஊடகங்கள் மீது நடக்கும் தாக்குதலின் அங்கமாகவே இந்த ஆய்வு உள்ளது என்று இந்திய பத்திரிகையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் எதிர்ப்பு

ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் இந்திய பிரிவு, "ஆளும் பாரதிய ஜனதா கட்சி மீதான பிபிசியின் ஆழமான செய்திகள் தொடர்பாக அதை துன்புறுத்தவும் மிரட்டவும் முயற்சி நடக்கிறது," என்று குற்றம்சாட்டியுள்ளது.

"வருமான வரித் துறையின் பரந்த அதிகாரங்கள், எதிர்க்குரல்களை அமைதிப்படுத்த மீண்டும் ஆயுதமாக்கப்படுகின்றன" என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.

2002ஆம் ஆண்டில் நடந்த குஜராத் கலவரத்தின் போது மோதியின் நடவடிக்கைகள் குறித்து கேள்விகளை எழுப்பும், பிரிட்டன் வெளியுறவு அலுவலகத்திலிருந்து பிபிசி பெற்ற 'வெளியிடப்படாத அறிக்கையை' ஆவணப்படம் எடுத்துக்காட்டுகிறது.

இந்து யாத்ரீகர்கள் சென்ற ரயிலுக்கு தீ வைக்கப்பட்ட மறுநாள் கலவரம் தொடங்கியது. டஜன் கணக்கானோர் அதில் கொல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து நடந்த வன்முறையில் 1,000க்கும் மேற்பட்ட மக்களில் பெரும்பாலும் முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.

அந்த வன்முறையில் "தண்டனை கிடைக்காத சூழலுக்கு" மோதியே "நேரடி பொறுப்பு" என்று வெளியுறவு அலுவலக அறிக்கை கூறுகிறது.

2005ஆம் ஆண்டில், "மத சுதந்திரத்தின் கடுமையான மீறல்களுக்கு" பொறுப்பாகக் கருதப்படும் வெளிநாட்டு அதிகாரிகளின் நுழைவைத் தடுக்கும் சட்டத்தின் கீழ் மோதிக்கு அமெரிக்கா விசா மறுத்தது.

இந்த விவகாரத்தில் நரேந்திர மோதி நீண்ட காலமாகவே தன் மீதான குற்றச்சாட்டுகளை நிராகரித்து வந்ததுடன் கலவரத்திற்கும் அவர் மன்னிப்பு கேட்கவில்லை. 2013இல், உச்ச நீதிமன்ற குழுவும் அவர் மீது வழக்குத் தொடர போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறியது.

பிபிசி அழைப்பை நிராகரித்த அரசு

இந்த ஆவணப்படத்திற்கு பதிலளிக்க இந்திய அரசுக்கு உரிமை வழங்கப்பட்டதாகவும் ஆனால் அது நிராகரிக்கப்பட்டதாகவும் பிபிசி கடந்த மாதம் கூறியது.

"அந்த ஆவணப்படம் 'கடுமையாக ஆராயப்பட்டது' என்றும், 'பரந்த அளவிலான கருத்துக்கள், சாட்சிகள்' மற்றும் நிபுணர்கள் அதற்காக அணுகப்பட்டனர். பாஜகவில் உள்ளவர்களின் பதில்கள் உட்பட பல தரப்பினரின் கருத்துக்களை வழங்கியுள்ளோம்" என்றும் பிபிசி குறிப்பிட்டிருந்தது.

புதிய விஷயமல்ல

அரசாங்கத்தை விமர்சிக்கும் அமைப்புகளை குறி வைப்பது இந்தியாவில் அசாதாரணமான விஷயம் அல்ல.

2020ஆம் ஆண்டில், ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் அதன் இந்திய நடவடிக்கைகளை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்போது, மனித உரிமை அமைப்புகளுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாக அந்த அமைப்பு குற்றம்சாட்டியது.

மற்ற உள்ளூர் அரசு சாரா அமைப்புகளுடன் சேர்ந்து குழந்தைகள் கல்வி, பெண்ணுரிமைக்காக குரல் கொடுத்து வரும் ஆக்ஸ்பாம் அமைப்பின் அலுவலகத்திலும் கடந்த ஆண்டு சோதனை நடத்தப்பட்டது.

2021ஆம் ஆண்டில் அரசாங்கத்தைப் பற்றி எதிர்மறையான செய்திகளை வெளியிட்ட பின்னர், வருமான வருத்துறை அதிகாரிகள் நான்கு ஊடகங்களில் சோதனை நடத்தியதாக எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.

ரிப்போர்ட்டர்ஸ் வித்தவுட் பார்டர்ஸ் என்ற லாப நோக்கமற்ற குழுவின் கூற்றுப்படி, நரேந்திர மோதி மத்தியில் ஆட்சிக்கு வந்ததில் இருந்து பத்திரிகை சுதந்திரம் வீழ்ச்சியடைந்துள்ளது.

அந்த குழுவின் உலக பத்திரிகை சுதந்திர குறியீடு பட்டியலில் இடம்பிடித்துள்ள 180 நாடுகளில் இந்தியா 150வது இடத்தைப் பிடித்துள்ளது, இது 2014ஆம் ஆண்டில் இருந்து 10 இடங்கள் குறைந்த நிலையாகும்.

https://www.bbc.com/tamil/india-64635511

  • கருத்துக்கள உறவுகள்
On 14/2/2023 at 10:26, ஏராளன் said:

பிபிசி இந்திய அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் ஆய்வு

மோடிக்கு எதிரான காணொளியின் விழைச்சல்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

காண்டாமிருகத்துடன் யானை தள்ளுப்படுகின்றது. நம்மால் விளங்கிக்கொள்ள முடியாத மோதல்கள் இவை 🤦‍♂️

 

2 hours ago, ஈழப்பிரியன் said:

மோடிக்கு எதிரான காணொளியின் விழைச்சல்.

மோடியை விமர்சித்தமைக்கு.. கிடைத்த எதிர்வினை.
ஊடகங்களை அடக்கி வைத்து, தமது புகழை மட்டுமே பரப்ப வேண்டும் என்று அரசு எதிர்பார்க்கின்றது.
சர்வதேச ஊடகம் அதற்கு பணியுமா என்று, தெரியவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிபிசி இந்திய அலுவலகங்களில் 3வது நாளாக வருமான வரித்துறையினர் ஆய்வு

  • ஜார்ஜ் ரைட்
  • பிபிசி நியூஸ்
14 பிப்ரவரி 2023
புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்
பிபிசி வருமான வரித்துறை ரெய்டு

பட மூலாதாரம்,INDIA TODAY

 
படக்குறிப்பு,

பிபிசி அலுவலகம் அமைந்துள்ள ஹிந்துஸ்தான் டைம்ஸ் கட்டட வெளிப்புற பகுதியில் குவிக்கப்பட்டுள்ள மத்திய துணை ராணுவப்படையினர்

 

பெண் விளையாட்டு வீரர்களின் சக்திவாய்ந்த கதைகளைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

இந்திய தலைநகர் டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் மூன்றாவது நாளாக வியாழக்கிழமை ஆய்வு நடத்தி வருகின்றனர்.

இந்திய பிரதமர் நரேந்திர மோதியை விமர்சித்து பிரிட்டனில் பிபிசியின் ஆவணப்படம் ஒளிபரப்பான சில வாரங்களுக்குப் பிறகு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.

2002இல் குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையில் அப்போதைய முதல்வராக இருந்த நரேந்திர மோதியின் பங்கு தொடர்பாக பிபிசி ஆவணப்படத்தில் தகவல்கள் இடம்பெற்றிருந்தன. அதை இந்தியாவில் பகிரவும் சமூக ஊடகங்கள் வாயிலாக பார்க்க முடியாதவாறும் இந்திய அரசு முடக்கியது.

பிபிசி அறிக்கை

இந்த நிலையில், பிபிசியின் இந்திய அலுவலகங்களில் அதிகாரிகள் நடத்தி வரும் ஆய்வு தொடர்பாக பிபிசி செவ்வாய்க்கிழமை இரவு வெளியிட்டுள்ள அறிக்கையில், "புதுடெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இருக்கிறார்கள். பல ஊழியர்கள் இப்போது அலுவலக கட்டடத்தை விட்டு புறப்பட்டுள்ளனர், ஆனால் சிலர் தொடர்ந்து இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். தொடர்ந்து நடைபெறும் விசாரணைக்கு அவர்கள் ஒத்துழைப்பு அளித்து வருகிறார்கள்," என்று கூறப்பட்டுள்ளது.

 

"இந்த நேரத்தில் நாங்கள் எங்கள் ஊழியர்களுக்கு ஆதரவளித்து வருகிறோம். மேலும் இந்த நிலைமை விரைவில் தீர்க்கப்படும் என்று தொடர்ந்து நம்புகிறோம்."

"எங்களது செய்தி மற்றும் ஊடக பணிகள் வழக்கம் போல் தொடர்கிறது, மேலும் இந்தியாவில் எமது பார்வையாளர்களுக்கு தொடர்ந்து சேவையாற்றுவதற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்," என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே, இந்து சேனா அமைப்பைச் சேர்ந்த சிலர், பிபிசி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த புதன்கிழமை நண்பகலில் வந்தனர். ஆனால், அவர்கள் கட்டடம் அருகே நுழைய முடியாதவாறு போலீஸார் தடுத்தனர்.

மேலும், பிபிசிக்கு எதிராக அவர்கள் வைத்திருந்த பேனர்கள் மற்றும் பதாகைகளை போலீஸார் கைப்பற்றினர். அப்போது போராட்டக்காரர்கள் "பிபிசி இந்தியாவை விட்டு வெளியேறு" என கோஷமிட்டனர். பிறகு போலீஸார் அவர்களை அந்த பகுதியில் இருந்து அப்புறப்படுத்தினர்.

நடவடிக்கைக்கு எதிர்வினை

பிபிசி வருமான வரித்துறை ரெய்டு

பட மூலாதாரம்,REUTERS

இந்திய எதிர்க்கட்சியான காங்கிரஸின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், "இந்த நடவடிக்கை, விரக்தியில் மூழ்கிய மோதி அரசு விமர்சனங்களுக்கு பயப்படுவதைக் காட்டுகிறது" என்று கூறியுள்ளார்.

"இத்தகைய மிரட்டல் தந்திரங்களை கடுமையான முறையில் நாங்கள் கண்டிக்கிறோம். இந்த ஜனநாயகமற்ற, சர்வாதிகார அணுகுமுறை இனியும் தொடர முடியாது" என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1
Twitter பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Twitter வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Twitter குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

ஏற்பு மற்றும் தொடரவும்

Twitter பதிவின் முடிவு, 1

இதேவேளை, மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் கௌரவ் பாட்டியா "உலகின் மிகவும் ஊழல் நிறைந்த அமைப்பு பிபிசி" என்று விமர்சித்துள்ளார்.

"நீங்கள் விஷத்தை கக்காத வரையில், ஒவ்வொரு அமைப்புக்கும் வாய்ப்பளிக்கும் நாடு இந்தியா" என்று அவர் கூறியுள்ளார்.

வருமான வரித்துறையினரின் ஆய்வு நடவடிக்கை சட்டபூர்வமானது என்றும் ஆய்வு நடக்கும் நேரத்துக்கும் அரசாங்கத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊடக சங்கங்கள் எதிர்ப்பு

இந்தியாவில் உள்ள முக்கிய ஊடகங்களின் ஆசிரியர்களை உறுப்பினர்களாகக் கொண்டுள்ள எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா, பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறை ஆய்வு நடவடிக்கைகள் குறித்து தமது "ஆழ்ந்த கவலையை" வெளிப்படுத்தியுள்ளது.

Twitter பதிவை கடந்து செல்ல, 2
Twitter பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Twitter வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Twitter குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

ஏற்பு மற்றும் தொடரவும்

Twitter பதிவின் முடிவு, 2

"அரசாங்கக் கொள்கைகள் அல்லது ஆளும் அமைப்பை விமர்சிக்கும் ஊடகங்களை மிரட்டுவதற்கும் துன்புறுத்துவதற்கும் அரசுத் துறைகளை பயன்படுத்தும் போக்கின் தொடர்ச்சி இவை " என்று எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா கூறியுள்ளது.

பிரஸ் கிளப் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில், பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறை "சர்வே" செய்வதை வன்மையாகக் கண்டிப்பதாக கூறியுள்ளது.

சமீப காலங்களில் தனக்கு எதிராகவும், ஆளும் அமைப்புக்கு எதிராகவும் உள்ள ஊடகங்களை விரோதமாக அரசாங்கம் கருதுகிறது. அதன் ஒரு பகுதியாக அத்தகைய ஊடகங்கள் மீது நடக்கும் தாக்குதலின் அங்கமாகவே இந்த ஆய்வு உள்ளது என்று இந்திய பத்திரிகையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் எதிர்ப்பு

ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் இந்திய பிரிவு, "ஆளும் பாரதிய ஜனதா கட்சி மீதான பிபிசியின் ஆழமான செய்திகள் தொடர்பாக அதை துன்புறுத்தவும் மிரட்டவும் முயற்சி நடக்கிறது," என்று குற்றம்சாட்டியுள்ளது.

"வருமான வரித் துறையின் பரந்த அதிகாரங்கள், எதிர்க்குரல்களை அமைதிப்படுத்த மீண்டும் ஆயுதமாக்கப்படுகின்றன" என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.

2002ஆம் ஆண்டில் நடந்த குஜராத் கலவரத்தின் போது மோதியின் நடவடிக்கைகள் குறித்து கேள்விகளை எழுப்பும், பிரிட்டன் வெளியுறவு அலுவலகத்திலிருந்து பிபிசி பெற்ற 'வெளியிடப்படாத அறிக்கையை' ஆவணப்படம் எடுத்துக்காட்டுகிறது.

இந்து யாத்ரீகர்கள் சென்ற ரயிலுக்கு தீ வைக்கப்பட்ட மறுநாள் கலவரம் தொடங்கியது. டஜன் கணக்கானோர் அதில் கொல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து நடந்த வன்முறையில் 1,000க்கும் மேற்பட்ட மக்களில் பெரும்பாலும் முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.

அந்த வன்முறையில் "தண்டனை கிடைக்காத சூழலுக்கு" மோதியே "நேரடி பொறுப்பு" என்று வெளியுறவு அலுவலக அறிக்கை கூறுகிறது.

2005ஆம் ஆண்டில், "மத சுதந்திரத்தின் கடுமையான மீறல்களுக்கு" பொறுப்பாகக் கருதப்படும் வெளிநாட்டு அதிகாரிகளின் நுழைவைத் தடுக்கும் சட்டத்தின் கீழ் மோதிக்கு அமெரிக்கா விசா மறுத்தது.

இந்த விவகாரத்தில் நரேந்திர மோதி நீண்ட காலமாகவே தன் மீதான குற்றச்சாட்டுகளை நிராகரித்து வந்ததுடன் கலவரத்திற்கும் அவர் மன்னிப்பு கேட்கவில்லை. 2013இல், உச்ச நீதிமன்ற குழுவும் அவர் மீது வழக்குத் தொடர போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறியது.

பிபிசி அழைப்பை நிராகரித்த அரசு

இந்த ஆவணப்படத்திற்கு பதிலளிக்க இந்திய அரசுக்கு உரிமை வழங்கப்பட்டதாகவும் ஆனால் அது நிராகரிக்கப்பட்டதாகவும் பிபிசி கடந்த மாதம் கூறியது.

"அந்த ஆவணப்படம் 'கடுமையாக ஆராயப்பட்டது' என்றும், 'பரந்த அளவிலான கருத்துக்கள், சாட்சிகள்' மற்றும் நிபுணர்கள் அதற்காக அணுகப்பட்டனர். பாஜகவில் உள்ளவர்களின் பதில்கள் உட்பட பல தரப்பினரின் கருத்துக்களை வழங்கியுள்ளோம்" என்றும் பிபிசி குறிப்பிட்டிருந்தது.

புதிய விஷயமல்ல

அரசாங்கத்தை விமர்சிக்கும் அமைப்புகளை குறி வைப்பது இந்தியாவில் அசாதாரணமான விஷயம் அல்ல.

2020ஆம் ஆண்டில், ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் அதன் இந்திய நடவடிக்கைகளை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்போது, மனித உரிமை அமைப்புகளுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாக அந்த அமைப்பு குற்றம்சாட்டியது.

மற்ற உள்ளூர் அரசு சாரா அமைப்புகளுடன் சேர்ந்து குழந்தைகள் கல்வி, பெண்ணுரிமைக்காக குரல் கொடுத்து வரும் ஆக்ஸ்பாம் அமைப்பின் அலுவலகத்திலும் கடந்த ஆண்டு சோதனை நடத்தப்பட்டது.

2021ஆம் ஆண்டில் அரசாங்கத்தைப் பற்றி எதிர்மறையான செய்திகளை வெளியிட்ட பின்னர், வருமான வருத்துறை அதிகாரிகள் நான்கு ஊடகங்களில் சோதனை நடத்தியதாக எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.

ரிப்போர்ட்டர்ஸ் வித்தவுட் பார்டர்ஸ் என்ற லாப நோக்கமற்ற குழுவின் கூற்றுப்படி, நரேந்திர மோதி மத்தியில் ஆட்சிக்கு வந்ததில் இருந்து பத்திரிகை சுதந்திரம் வீழ்ச்சியடைந்துள்ளது.

அந்த குழுவின் உலக பத்திரிகை சுதந்திர குறியீடு பட்டியலில் இடம்பிடித்துள்ள 180 நாடுகளில் இந்தியா 150வது இடத்தைப் பிடித்துள்ளது, இது 2014ஆம் ஆண்டில் இருந்து 10 இடங்கள் குறைந்த நிலையாகும்.

https://www.bbc.com/tamil/india-64635511

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிபிசி பெயரை குறிப்பிடாமல் 'ஆய்வு' பற்றி அறிக்கை வெளியிட்ட வருமான வரித்துறை

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
பிபிசி அலுவலகம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

டெல்லி கஸ்தூரிபா காந்தி மார்கில் உள்ள பிபிசி அலுவலகம்

 

பெண் விளையாட்டு வீரர்களின் சக்திவாய்ந்த கதைகளைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

டெல்லி, மும்பை ஆகிய இரண்டு இடங்களில் உள்ள பிபிசி அலுவலகங்களில் இந்திய வருமான வரித்துறை, மூன்று நாட்களாக நடத்திய ஆய்வு தொடர்பாக செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதில் பிபிசி பெயரை குறிப்பிடாமல் ஆய்வு விவரத்தை வருமான வரித்துறை பகிர்ந்துள்ளது.

இந்திய நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள வருவாய் துறையின் கீழ் மத்திய நேரடி வரிகள் வாரியம் இயங்குகிறது. இதன் அங்கமாகத்தான் இந்திய வருமான வரித்துறை உள்ளது. அதன் குழுவினர், ஜனவரி 14 முதல் 16ஆம் தேதிவரை டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் 'ஆய்வு' என்ற பெயரில் நிதிப்பரிவர்த்தனை ஆவணங்களை பார்வையிடும் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின் அங்கமாக, முதல் நாளன்று பிபிசி டெல்லி, மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் அதிகாரிகள் குழு ஆய்வு நடத்தியது. பிபிசியின் நிதி, தொழில், கணக்குப்பிரிவு அலுவலர்கள், ஊழியர்களிடம் அவர்கள் விசாரணை நடத்தினர். பிபிசி அலுவலகங்களில் உள்ள கணிப்பொறிகள் உள்ளிட்ட சாதனங்களையும் அவர்கள் ஆய்வுக்கு உட்படுத்தினர். இந்த சோதனை நடவடிக்கை ஜனவரி 15,16ஆம் தேதி இரவு வரை நீடித்தது.

இந்த நிலையில், மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் (சிடிபிடீ) ஊடகம் மற்றும் தொழில்நுட்ப கொள்கைப்பிரிவின் முதன்மை ஆணையர் சுரபி அலுவாலியா வெள்ளிக்கிழமை மாலையில் ஒரு பக்க செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளார். அதில், தொழில் குழுமத்தின் அலுவலகங்களில் நடத்திய ஆய்வில் கண்டறிந்ததாக கூறப்படும் தகவல்களை அவர் பதிவு செய்துள்ளார்.

 

சிபிடிடி ஆணையர் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்

"பல்வேறு இந்திய மொழிகளில் (ஆங்கிலம் நீங்கலாக) நிகழ்ச்சிகள் கணிசமான அளவுக்கு நுகரப்பட்ட போதிலும், பல்வேறு குழும நிறுவனங்களால் காட்டப்படும் வருமானம்/லாபம், அக்குழுமத்தின் இந்திய செயல்பாடுகளின் அளவோடு ஒத்துப் போகவில்லை என்று ஆய்வு வெளிப்படுத்துகிறது," என்று கூறப்பட்டுள்ளது.

Twitter பதிவை கடந்து செல்ல, 1
Twitter பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Twitter வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Twitter குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

ஏற்பு மற்றும் தொடரவும்

Twitter பதிவின் முடிவு, 1

மேலும், "ஆய்வின் போது, தொழில் குழுமத்தின் செயல்பாடு தொடர்பான பல ஆதாரங்களை சேகரித்ததாகவும் அவற்றில் சில, வெளிநாட்டு நிறுவனங்களில் இருந்து இந்தியாவுக்கு வந்த தொகையை வருவாயாக வெளிப்படுத்தாமல் அதற்குரிய வரியும் செலுத்தப்படாமல் இருந்ததை காட்டுகிறது," என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

"... ஊழியர் அல்லாதோரிடம் இருந்து பெறப்பட்ட சேவைகளுக்காக செலவழித்த பணம் சம்பந்தப்பட்ட வெளிநாட்டு நிறுவனத்திற்கு இந்திய நிறுவனத்தால் திருப்பிச் செலுத்தப்பட்டது. அத்தகைய பணம் செலுத்துதல் முறையும் வரி செலுத்தலுக்கு உட்பட்டது. ஆனால், அவ்வாறு செய்யப்படவில்லை. மேலும், பரிமாற்ற விலை ஆவணங்கள் தொடர்பாக பல முரண்பாடுகள் உள்ளன," என்றும் அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Twitter பதிவை கடந்து செல்ல, 2
Twitter பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Twitter வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Twitter குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

ஏற்பு மற்றும் தொடரவும்

Twitter பதிவின் முடிவு, 2

"ஊழியர்களின் வாக்குமூலம், டிஜிட்டல் தடயங்கள் மற்றும் ஆவணங்கள் மூலம் முக்கிய ஆதாரங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவை சரியான நேரத்தில் மேலும் ஆய்வுக்கு உட்படுத்தப்படும். அக்குழுமத்தின் நிதி, நிகழ்ச்சி தயாரிப்பு மற்றும் பிற தயாரிப்பு செயல்பாடுகளுடன் தொடர்புடைய ஊழியர்களில் எவர் முக்கியமானவரோ அவர்களிடம் மட்டுமே வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன. வழக்கமான ஊடக செயல்பாடுகள் தொடருவதற்கான வசதிகள் செய்யப்பட்டன," என்று வருமான வரித்துறை முதன்மை ஆணையர் கூறியுள்ளார்.

இந்த செய்திக்குறிப்பில் பிபிசியின் பெயர் எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை என்றாலும், அதன் உட்கூறுகள், பிபிசியை மையப்படுத்திய தகவல்களாக உள்ளன என்று ராய்ட்டர்ஸ் உள்ளிட்ட செய்தி முகமைகள் தெரிவித்துள்ளன.

இந்த செய்திக்குறிப்புக்கு பிபிசி அதன் அதிகாரபூர்வ பதிலை வழங்கவில்லை.

வருமான வரித்துறை அதிகாரிகளிடமிருந்து பெறப்படும் எந்தவொரு நேரடி முறையான தகவல்களுக்கும் பிபிசி சரியான முறையில் பதிலளிக்கும்.

"அச்சம், சார்புத்தன்மையின்றி பணியாற்றுவோம்"

பிபிசி அறிக்கை

முன்னதாக, மூன்று நாட்களாக நடந்த ஆய்வு நிறைவடைந்ததையொட்டி பிபிசி சார்பில் அதன் செய்தித்தொடர்பாளர் வியாழக்கிழமை இரவு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், ``டெல்லி மற்றும் மும்பையில் உள்ள எமது அலுவலகங்களில் இருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் புறப்பட்டுச் சென்று விட்டார்கள். அதிகாரிகளுக்கு நாங்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குவோம். இந்த விவகாரம் மிக விரைவில் முடிவுக்கு வரும் என்று நம்புகிறோம்'' என அவர் கூறியுள்ளார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 3
Twitter பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Twitter வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Twitter குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

ஏற்பு மற்றும் தொடரவும்

Twitter பதிவின் முடிவு, 3

``எங்களது ஊழியர்களுக்கு நாங்கள் ஆதரவளித்து வருகிறோம். அவர்களில் சிலர் நீண்ட நேரம் விசாரணைக்கு உட்பட்டுத்தப்பட்டார்கள் அல்லது இரவு முழுவதும் அலுவலகத்திலேயே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அவர்களின் நலனுக்கு நாங்கள் முன்னுரிமை அளிக்கிறோம். எங்களது செய்தி வழங்கும் பணி இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது. இந்தியாவிலும் பிற நாடுகளிலும் உள்ள எங்களது நேயர்களுக்கு தொடர்ந்து செய்திகளை வழங்க கடமைப்பட்டிருக்கிறோம்'' என அவர் குறிப்பிட்டுள்ளார்.

``பிபிசி என்பது நம்பிக்கைக்குரிய, சுதந்திரமான ஊடக நிறுவனம். அச்சம் மற்றும் சார்புத்தன்மை இன்றி தொடர்ந்து பணியாற்றும் எங்களது ஊழியர்கள் மற்றும் செய்தியாளர்களுடன் என்றும் நாங்கள் துணை நிற்போம்'' என்றும் பிபிசி செய்தித்தொடர்பாளர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பிபிசி ஆவணம் வெளிவந்த சில வாரங்களில் நடவடிக்கை

இந்திய பிரதமர் நரேந்திர மோதியை விமர்சித்து பிரிட்டனில் பிபிசியின் ஆவணப்படம் ஒளிபரப்பான சில வாரங்களுக்குப் பிறகு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.

Twitter பதிவை கடந்து செல்ல, 4
Twitter பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Twitter வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Twitter குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

ஏற்பு மற்றும் தொடரவும்

Twitter பதிவின் முடிவு, 4

பிபிசி அலுவலகங்களில் நடத்தப்பட்ட ஆய்வு நடவடிக்கைக்கு ராஜஸ்தான், தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களின் முதல்வர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். பல்வேறு பத்திரிகை சங்கங்கள் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தன.

பிபிசி ஆவணப்படத்தில் என்ன இருந்தது?

2002ஆம் ஆண்டில் நடந்த குஜராத் கலவரத்தின் போது மோதியின் நடவடிக்கைகள் குறித்து கேள்விகளை எழுப்பும், பிரிட்டன் வெளியுறவு அலுவலகத்திலிருந்து பிபிசி பெற்ற 'வெளியிடப்படாத அறிக்கையை' ஆவணப்படம் எடுத்துக்காட்டுகிறது.

இந்து யாத்ரீகர்கள் சென்ற ரயிலுக்கு தீ வைக்கப்பட்ட மறுநாள் கலவரம் தொடங்கியது. டஜன் கணக்கானோர் அதில் கொல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து நடந்த வன்முறையில் 1,000க்கும் மேற்பட்ட மக்களில் பெரும்பாலும் முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.

அந்த வன்முறையில் "தண்டனை கிடைக்காத சூழலுக்கு" மோதியே "நேரடி பொறுப்பு" என்று வெளியுறவு அலுவலக அறிக்கை கூறுகிறது.

2005ஆம் ஆண்டில், "மத சுதந்திரத்தின் கடுமையான மீறல்களுக்கு" பொறுப்பாகக் கருதப்படும் வெளிநாட்டு அதிகாரிகளின் நுழைவைத் தடுக்கும் சட்டத்தின் கீழ் மோதிக்கு அமெரிக்கா விசா மறுத்தது.

இந்த விவகாரத்தில் நரேந்திர மோதி நீண்ட காலமாகவே தன் மீதான குற்றச்சாட்டுகளை நிராகரித்து வந்ததுடன் கலவரத்திற்கும் அவர் மன்னிப்பு கேட்கவில்லை. 2013இல், உச்ச நீதிமன்ற குழுவும் அவர் மீது வழக்குத் தொடர போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறியது.

பிபிசி அழைப்பை நிராகரித்த அரசு

இந்த ஆவணப்படத்திற்கு பதிலளிக்க இந்திய அரசுக்கு உரிமை வழங்கப்பட்டதாகவும் ஆனால் அது நிராகரிக்கப்பட்டதாகவும் பிபிசி கடந்த மாதம் கூறியது.

"அந்த ஆவணப்படம் 'கடுமையாக ஆராயப்பட்டது' என்றும், 'பரந்த அளவிலான கருத்துக்கள், சாட்சிகள்' மற்றும் நிபுணர்கள் அதற்காக அணுகப்பட்டனர். பாஜகவில் உள்ளவர்களின் பதில்கள் உட்பட பல தரப்பினரின் கருத்துக்களை வழங்கியுள்ளோம்" என்றும் பிபிசி குறிப்பிட்டிருந்தது.

இந்தியாவில் இது புதியது அல்ல

அரசாங்கத்தை விமர்சிக்கும் அமைப்புகளை குறி வைப்பது இந்தியாவில் அசாதாரணமான விஷயம் அல்ல.

2020ஆம் ஆண்டில், ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் அதன் இந்திய நடவடிக்கைகளை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்போது, மனித உரிமை அமைப்புகளுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாக அந்த அமைப்பு குற்றம்சாட்டியது.

மற்ற உள்ளூர் அரசு சாரா அமைப்புகளுடன் சேர்ந்து குழந்தைகள் கல்வி, பெண்ணுரிமைக்காக குரல் கொடுத்து வரும் ஆக்ஸ்பாம் அமைப்பின் அலுவலகத்திலும் கடந்த ஆண்டு சோதனை நடத்தப்பட்டது.

2021ஆம் ஆண்டில் அரசாங்கத்தைப் பற்றி எதிர்மறையான செய்திகளை வெளியிட்ட பின்னர், வருமான வருத்துறை அதிகாரிகள் நான்கு ஊடகங்களில் சோதனை நடத்தியதாக எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.

ரிப்போர்ட்டர்ஸ் வித்தவுட் பார்டர்ஸ் என்ற லாப நோக்கமற்ற குழுவின் கூற்றுப்படி, நரேந்திர மோதி மத்தியில் ஆட்சிக்கு வந்ததில் இருந்து பத்திரிகை சுதந்திரம் வீழ்ச்சியடைந்துள்ளது.

அந்த குழுவின் உலக பத்திரிகை சுதந்திர குறியீடு பட்டியலில் இடம்பிடித்துள்ள 180 நாடுகளில் இந்தியா 150வது இடத்தைப் பிடித்துள்ளது, இது 2014ஆம் ஆண்டில் இருந்து 10 இடங்கள் குறைந்த நிலையாகும்.

https://www.bbc.com/tamil/india-64676312

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிபிசி அலுவலகங்களில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை ஆய்வு குறித்து பிரிட்டன் நாடாளுமன்றத்தில் கேள்வி

BBC

பட மூலாதாரம்,GETTY IMAGES

4 மணி நேரங்களுக்கு முன்னர்

பிபிசியின் இந்திய அலுவலகங்கள் மீதான வருமான வரித்துறையின் நடவடிக்கை குறித்து பிரிட்டன் நாடாளுமன்றத்தில் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

கேள்விகளுக்கு பதிலளித்த பிரிட்டன் அமைச்சர் ஒருவர், இந்திய அரசாங்கத்துடன் தொடர்பில் இருப்பதாகவும், இந்த விஷயம் கவனத்தில் எடுக்கப்பட்டிருப்பதாகவும் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ஜனநாயக யூனியனிஸ்ட் கட்சியை சேர்ந்த பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் ஜிம் ஷனான் நாடாளுமன்றத்தின் பொது அவையில், பிபிசி அலுவலகங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை ஆய்வு குறித்து ‘அவசர கேள்வி’ ஒன்றை முன் வைத்தார்,

இந்த விவகாரத்தில் இந்திய தூதரக உயர் ஆணையருக்கு சம்மன் வழங்கப்படுமா என்று ஸ்ட்ராங்ஃபோர்ட் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஷனான் கேள்வி எழுப்பினார்.

 

இந்த விவகாரத்தை “உன்னிப்பாக” கவனித்து வருவதாக பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது.

‘இந்தியா: தி மோதி க்வெஸ்டின்’ என்று பெயரிடப்பட்ட நரேந்திர மோதியை விமர்சிக்கும் ஆவணப்படம் வெளியான பிறகு இந்த ஆய்வு நடவடிக்கை நடைபெற்றது குறித்து விமர்சகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

“நாட்டின் பிரதமரை விமர்சிக்கும் ஆவணப்படத்தை வெளியிட்ட பிறகு அச்சுறுத்துவதற்காக வேண்டுமென்றே மேற்கொண்ட நடவடிக்கை இது என்பது தெளிவாக தெரிகிறது” என்று ஷனான் தெரிவித்தார்.

“ஆவணப்படம் வெளியான பிறகு, அதை திரையிடுவதைத் தடுப்பதற்கு ஒருங்கிணைந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஊடக சுதந்திரம் மற்றும் பத்திரிகையாளர்கள் சுதந்திரம் ஒடுக்கப்பட்டுள்ளது”

“பல்வேறு பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர்கள் ஆவணப்படத்தை பல்கலைக்கழக வளாகத்தில் ஒளிபரப்ப முடிவு செய்தபோது பத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, இணைய வசதி பாதிக்கப்பட்டது”

“இது பத்திரிகையாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் மத சிறுபான்மையினரின் உரிமையை பறிக்கும் செயல். இந்த ஆய்வு நடவடிக்கை ஏழு நாட்களுக்கு முன்னதாக நடைபெற்றது. ஆனால் வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் வளர்ச்சி அலுவலகம் இது குறித்து எதுவும் பேசவில்லை. அரசும் இது குறித்து எந்த அறிக்கையும் வெளியிடவில்லை” என்று அவர் மேலும் பேசினார்.

“இந்த விவகாரம் தொடர்பாக இந்திய தூதரக உயர் ஆணையருக்கு சம்மன் வழங்கப்பட இருக்கிறதா, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சரிடம் விவகாரத்தை எழுப்பவுள்ளீர்களா என்பதை அமைச்சர் சொல்லமுடியுமா?” என்று ஷனான் வினவினார்.

லேபர் கட்சியைச் சேர்ந்த இந்திய வம்சாவளி உறுப்பினரான தன்மான்ஜித் சிங் தேசியும் இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினார்.

டேவிட் ரூட்லி

பட மூலாதாரம்,BRITISH PARLIAMENT TV

பின்னர் பேசிய வெளியுறவு அலுவலக அமைச்சர் டேவிட் ரூட்லி, “முழுமையான மூலோபாய கூட்டணி மற்றும் 2030க்கான இந்திய பிரிட்டன் எதிர்கால உறவு திட்டம் ஆகியவற்றின் வழிகாட்டுதல்களின்படி அமைந்திருக்கும் பரந்த ஆழமான இருதரப்பு உறவு பல்வேறு வகையான விவகாரங்களை பயனுள்ள வகையில் இந்திய அரசுடன் விவாதிக்க வழிவகுக்கிறது. இந்த விவகாரத்தை தொடர்ந்து நாங்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறோம்.” என தெரிவித்தார்.

“பிரிட்டனின் அரசாங்கத்தின் தலையீடு இல்லாமல் பிபிசி சுதந்திரமாக செயல்படக்கூடிய ஒரு நிறுவனம்” என்றும் அவர் தெரிவித்தார்.

“இந்தியாவின் வருமான வரித் துறையால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு குறித்து நான் எந்த கருத்தையும் தெரிவிக்க இயலாது. இந்திய அலுவலகங்களில் உள்ள தனது ஊழியர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு இந்த பிரச்னையை முடிந்தவரை விரைவில் தீர்ப்பதற்கு இந்திய அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வருவதாக பிபிசி தெரிவித்துள்ளது.

“ஜனநாயகத்தில் சட்டத்தை மதிப்பது என்பது முக்கியமான ஓர் அம்சமாகும். அதேபோலதான் ஊடக சுதந்திரமும் பேச்சு சுதந்திரமும். இது நாட்டை மேலும் வலுவாக மாற்றுகிறது.” என்றார் அவர்.

பிபிசி

நிழல் அமைச்சர் (எதிர்க்கட்சியை சேர்ந்த உறுப்பினர்) ஃபேபியன் ஹமில்டன், “உண்மையான ஊடக சுதந்திரத்தை கொண்ட ஜனநாயகத்தில், விமர்சனங்களை தேவையில்லாமல் ஒடுக்க முடியாது. பேச்சு சுதந்திரத்தை எந்த சூழ்நிலையிலும் காக்க வேண்டும்.” என்று தெரிவித்தார்.

மேலும்,”இந்த வருமான வரி நடவடிக்கை எதற்காக நடந்தது என அதிகாரிகள் கொடுத்த விளக்கத்தையும் தாண்டி இது கவலை அளிக்கும் ஒரு விஷயமாக உள்ளது,” என்று தெரிவித்தார்.

“பிபிசி சர்வதேச அளவில் உயர் தரத்தில் செயல்படக்கூடிய ஒரு மதிப்புமிக்க ஒளிபரப்பு சேவையாகவும் நம்பகமான செய்திகளை வழங்குவதற்காகவும் புகழ்பெற்றது. எந்த அச்சுறுத்தலும் இல்லாமல் பிபிசி தனது செய்திகளை வழங்க வேண்டும்” என்றார்.

வருமான வரித் துறை மற்றும் பிபிசி சொன்னது என்ன?

கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த சர் ஜூலியன் லெவிஸ், இந்த ஆய்வு நடவடிக்கை “மிகுந்த வருத்தமளிக்கும் ஒன்று” என தெரிவித்தார்.

கடந்த வாரம் டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களை ஐடி அதிகாரிகள் மூன்று நாட்களாக சோதனையிட்டனர்.

இந்தியாவின் மத்திய நேரடி வரிகள் வாரியம், “நிறுவனத்தின் செயல்பாடு குறித்து பல ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அதில் வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து பெற்ற நிதியை இந்தியாவில் வருமானமாக காட்டவில்லை, அதற்கு வரியும் கட்டவில்லை” என்று தெரிவித்தது.

“பல மாறுபட்ட மற்றும் முரண்பாடுகள் கண்டறியப்பட்டுள்ளது. ஊழியர்களின் வாக்குமூலம், டிஜிட்டல் தடயங்கள் மற்றும் ஆவணங்கள் மூலமாக சேகரிக்கப்பட்ட “முக்கிய ஆதாரம்” முழுமையாக ஆய்வு செய்யப்படும்”

அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி வருவதாக பிபிசி தெரிவித்தது.

பிபிசி

பிபிசி ஆவணப்படத்தில் என்ன இருந்தது?

2002ஆம் ஆண்டில் நடந்த குஜராத் கலவரத்தின் போது மோதியின் நடவடிக்கைகள் குறித்து கேள்விகளை எழுப்பும், பிரிட்டன் வெளியுறவு அலுவலகத்திலிருந்து பிபிசி பெற்ற 'வெளியிடப்படாத அறிக்கையை' ஆவணப்படம் எடுத்துக்காட்டுகிறது.

இந்து யாத்ரீகர்கள் சென்ற ரயிலுக்கு தீ வைக்கப்பட்ட மறுநாள் கலவரம் தொடங்கியது. டஜன் கணக்கானோர் அதில் கொல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து நடந்த வன்முறையில் 1,000க்கும் மேற்பட்ட மக்களில் பெரும்பாலும் முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.

அந்த வன்முறையில் "தண்டனை கிடைக்காத சூழலுக்கு" மோதியே "நேரடி பொறுப்பு" என்று வெளியுறவு அலுவலக அறிக்கை கூறுகிறது.

2005ஆம் ஆண்டில், "மத சுதந்திரத்தின் கடுமையான மீறல்களுக்கு" பொறுப்பாகக் கருதப்படும் வெளிநாட்டு அதிகாரிகளின் நுழைவைத் தடுக்கும் சட்டத்தின் கீழ் மோதிக்கு அமெரிக்கா விசா மறுத்தது.

இந்த விவகாரத்தில் நரேந்திர மோதி நீண்ட காலமாகவே தன் மீதான குற்றச்சாட்டுகளை நிராகரித்து வந்ததுடன் கலவரத்திற்கும் அவர் மன்னிப்பு கேட்கவில்லை. 2013இல், உச்ச நீதிமன்ற குழுவும் அவர் மீது வழக்குத் தொடர போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறியது.

https://www.bbc.com/tamil/articles/cz41ngej4jro

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிபிசி அலுவலகங்களில் நடந்த வரி ஆய்வு: இந்திய அமைச்சரிடம் கேள்வி எழுப்பிய பிரிட்டன் வெளியுறவு அமைச்சர்

பிபிசி

பட மூலாதாரம்,@DRSJAISHANKAR

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் ஜேம்ஸ் கிளெவர்லி டெல்லியில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை சந்தித்தபோது, பிபிசியின் மும்பை, டெல்லி அலுவலகங்களில் வருமான வரித்துறை நடத்திய ஆய்வு குறித்த பிரச்னையை எழுப்பியதாக ராய்ட்டரஸ் செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, "பிரிட்டன் அமைச்சரிடம் இந்தியாவில் செயல்படும் அனைத்து நிறுவனங்கள் நாட்டில் அமலில் உள்ள சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு முழுமையாக இணங்க வேண்டும் என்று உறுதிபட கூறப்பட்டது" என்று இந்திய அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை மேற்கோள்காட்டி ஏஎன்ஐ செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த மாதம், இந்தியாவின் வருமான வரித்துறை அதிகாரிகள் டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் ஆய்வு என்ற பெயரில் நிறுவனத்தின் பணப்பரிவர்த்தனை தகவல்களை பார்வையிட்டனர். இந்த நடவடிக்கையின் அங்கமாக சில மூத்த அலுவலர்களின் டிஜிட்டல் சாதனங்களில் உள்ள தரவை வருமான வரித்துறை அதிகாரிகள் குளோனிங் முறையில் நகல் எடுத்தனர்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 1

வரும் வியாக்கிழமை ஜி20 வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்துக்கு முன்னதாக இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை பிரிட்டன் அமைச்சர் ஜேம்ஸ் கிளெவர்லி சந்தித்துப் பேசினார். ஆனால், இந்திய அமைச்சருடன் பேசிய பிற விவரங்களை அவர் ஊடகங்களிடம் பகிர்ந்து கொள்ளவில்லை.

"இந்திய அமைச்சருடன் நான் பேசிய விஷயங்களை அவருடன் மட்டுமே வைத்திருப்பது சிறந்தது. அந்த விஷயத்தை (பிபிசி அலுவலகத்தில் ஆய்வு நடந்த விவகாரம்) அதை எழுப்பினேன்," என்று அவர் ராய்ட்டர்ஸுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

"ஜெய்சங்கருடன் இந்த அளவுக்கு வலுவான மற்றும் தொழில்முறை உறவை நான் கொண்டிருப்பதால் ஏற்படும் நன்மை எது எனக்கேட்டால், நான் அவரிடம் எழுப்பியதை போலவே சில நுட்பமான விஷயங்கள் குறித்து அவரும் என்னிடம் பேசினார். அந்த விஷயத்தையும் நான் அவரிடம் எழுப்பினேன்," என்று ஜேம்ஸ் கிளெவர்லி தெரிவித்தார்.

இரு தரப்பு எதிர்மறையான பணிகள் தொடர்பாகவே இந்த சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டதாக பிரிட்டன் அமைச்சர் மேலும் கூறினார்.

நேர்மறையான உறவின் தனிச்சிறப்பு பற்றி பேசிய அவர், "ஒரு நுட்பமான மற்றும் கடினமான பிரச்னை பற்றி விவாதிக்கும் அதே சமயம், அது எங்களின் உண்மையான, நேர்மறையான விஷயங்களை பற்றி பேசுவதிலிருந்து தடம் புரளச் செய்யாது" என்று அமைச்சர் ஜேம்ஸ் குறிப்பிட்டார்.

இந்தியாவில் சிவில் உரிமைகள் பற்றிய கவலைகள் உள்ளதா என்று கேட்டதற்கு, "இரு நாடுகளும் வலுவாக உணரும் மதிப்புகள் நிலைநாட்டப்படுவதை நாங்கள் உறுதிசெய்ய விரும்புகிறோம். அதாவது பல்வேறு பிரச்னைகளில் இணைந்து பணியாற்ற வேண்டும்," என்று அமைச்சர் ஜேம்ஸ் கிளெவர்லி பதிலளித்தார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 2
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 2

சமீபத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோதி தொடர்பான ஆவணப்படத்தை பிபிசி பிரிட்டனில் உள்ள பார்வையாளர்களுக்காக அந்நாட்டில் மட்டும் பார்க்கும் வகையில் ஒளிபரப்பியது.

இந்த ஆவணப்படத்தை பலர் அங்கீகரிக்கப்படாத முறையில் பதிவேற்றம் செய்து சமூக ஊடகங்கள் மூலம் பகிர்தனர். இதையடுத்து அந்த ஆவணப்படத்தை இந்தியாவில் பார்க்காமல் தடுக்க இந்திய அரசு முயற்சித்தது.

இது நடந்த சில வாரங்களுக்குப் பிறகு டெல்லி, மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களுக்கு வந்த வருமான வரித் துறையின் குழு, ஆய்வு என்ற பெயரில் பிபிசி பணப் பரிவர்த்தனை ஆவணங்களை பார்வையிட்டது. தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு இந்த ஆய்வை நடத்திய வருமான வரித்துறை, பிபிசியின் மூத்த அலுவலர்கள், பத்திரிகையாளர்களையும் விசாரித்தது.

இதைத்தொடர்ந்து இந்தியாவின் மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தங்களுடைய ஆய்வில் பிபிசி பரிவர்த்தனைகளில் ‘முரண்பாடுகள்’ இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக கூறியுள்ளது.

ஆனால், ஆய்வுக்குப் பின்பு பிபிசியிடம் விளக்கம் கேட்டு எந்தவொரு கடிதமோ நோட்டீஸோ அத்துறை அனுப்பவில்லை.

வருமான வரித் துறையிடம் இருந்து நேரடியாகப் பெறும் அதிகாரபூர்வ செய்திகளுக்குத் தகுந்த பதிலளிப்பதாக பிபிசி அப்போது கூறியிருந்தது.

இந்த விவகாரம் கடந்த மாதம் பிரிட்டன் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. பிபிசியின் இந்திய அலுவலகங்கள் மீதான வருமான வரித்துறையின் நடவடிக்கை கவலை அளிப்பதாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தெரிவித்தனர்.

Twitter பதிவை கடந்து செல்ல, 3
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 3

அப்போது அவையில் இருந்த பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர், இந்தியாவின் வருமான வரித் துறையின் குற்றச்சாட்டுகள் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை, ஆனால் இந்தியாவில் நடக்கும் விஷயங்களை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், பிபிசியின் சுயாதீன இதழியலுக்கு முழு ஆதரவளிப்பதாகவும் கூறினார்.

பிபிசி தலைமை இயக்குநர் மின்னஞ்சல்

பிபிசி
 
படக்குறிப்பு,

டிம் டேவி, தலைமை இயக்குநர் - பிபிசி

பிபிசி ஆய்வு நடந்த சில தினங்கள் கழித்து அதன் தலைமை இயக்குநர் டிம் டேவி தமது ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் "பிபிசி ஊழியர்களின் துணிச்சலுக்கு நன்றி தெரிவித்தார். பாரபட்சமின்றி செய்தி வழங்குவதை விட முக்கியமானது எதுவுமில்லை என்றும் அவர் அதில் குறிப்பிட்டிருந்தார்.

வருமான வரித்துறையின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கும் பிபிசி, சமீபத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோதியை விமர்சிக்கும் வகையிலான ஆவணப்படத்தை ஒளிபரப்பியது.

"உலகெங்கிலும் உள்ள நமது பார்வையாளர்களுக்கான நமது கடமை, சுதந்திரமான மற்றும் பாரபட்சமற்ற இதழியல் மூலம் உண்மைகளை தெரிவிப்பதும், அதை மிகச் சிறந்த ஆக்கபூர்வ உள்ளடக்கத்துடன் தயாரித்து விநியோகிப்பதும் ஆகும். அந்தப் பணியிலிருந்து நாம் விலகிப் போக மாட்டோம்."

"நான் தெளிவாக இதை தெரிவிக்க விரும்புகிறேன்: பிபிசிக்கு எந்த திட்டமும் இல்லை - நாம் ஒரு நோக்கத்துடன் இயக்கப்படுகிறோம். அதில் முதலாவது பொது நோக்கம், பாரபட்சமற்ற செய்திகளையும் தகவலையும் மக்கள் புரிந்து கொள்வதற்கும் அவர்கள் தங்களைச் சுற்றியுள்ள உலகத்துடன் தொடர்பில் இருக்கவும் உதவுவதாகும்," என்று டிம் டேவி குறிப்பிட்டிருந்தார்.

https://www.bbc.com/tamil/articles/cg3yp9y1ypyo

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.