Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிவராத்திரியை அனுஷ்டிக்க திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் 5 இலட்சம் பக்தர்களின் வருகை எதிர்பார்ப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ன்னாரில் அமைந்துள்ள பாடல் பெற்ற தளமான திருக்கேதீஸ்வரத்தில் எதிர்வரும் 18ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் சிவராத்திரி தினத்தை முன்னிட்டு இவ்வருடம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்ளவிருப்பதால் பல முக்கிய அம்சங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.

அதன்படி, பக்தர்கள் நீராடும் பாலாவி குளத்தில் முதலைகள் இருக்கலாம் என்ற அச்சம் காணப்படுவதால் இக்குளத்தை பரிசோதனை செய்து, பக்தர்கள் அச்சமின்றி நீராட வழிவகுக்குமாறு வனவிலங்கு பாதுகாப்பு இலாகா பகுதியினரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

சிவராத்திரி தினத்தன்று திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இடம்பெறவுள்ள நிகழ்வுகள் தொடர்பில் கலந்தாலோசிப்பதற்காக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. அ.ஸ்ரான்லி டிமெல் தலைமையில் திருக்கேதீஸ்வர ஆலய மண்டபத்தில் நேற்று (14) கூட்டமொன்று நடத்தப்பட்டது.

இக்கூட்டத்தில் திருக்கேதீஸ்வர ஆலய  செயலாளர் எஸ்.எஸ்.இராமகிருஷ்ணன் மற்றும் சம்பந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

கடந்த 2015ஆம் ஆண்டிலிருந்து ஏழு வருடங்களாக இந்த ஆலயத்தில் புனருத்தாரண வேலைகள் இடம்பெற்று வந்தமையால் இந்த கோவிலில் பாலாலயம் அமைத்து, சுவாமிகள் வழிபட்டு வந்த நிலையிலேயே இம்முறை சிவராத்திரி விழா இடம்பெறவுள்ளது.

இதனால் இவ்வருடம் வடக்கு பகுதியில் மட்டுமல்ல, இலங்கையின் நாலா பக்கங்களிலிருந்தும் திருக்கேதீஸ்வரம் ஆலயத்துக்கு சுமார் ஐந்து லட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் வருகை தரவிருப்பதாக எதிர்பார்க்கப்பட்ட நிலையிலேயே முன்னாயத்த   ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. 

இந்நிலையில் மாந்தை சந்தியிலிருந்து திருக்கேதீஸ்வரம் ஆலயம் வரை செல்லும் பிரதான வீதி சீரற்று காணப்படுவதால் அரசாங்க அதிபர் வட மாகாண ஆளுநருடன் தொடர்புகொண்டதைத் தொடர்ந்து அவ்வீதி விசேட நிதியுதவி மூலம் புனரமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

அத்துடன் பக்தர்கள் நீராடும் பாலாவி குளத்தில் முதலைகள் காணப்படக்கூடும் என்பதால் அக்குளம் தொடர்பில் வனவிலங்கு பாதுகாப்பு இலாகா பகுதியினர் கவனம் செலுத்தும்படி இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

போக்குவரத்து, சுகாதாரம், அன்னதானம், தாகசாந்தி நிலையம், குடிநீர் போன்ற முக்கிய விடயங்கள் ஆராயப்பட்டதுடன், அவை சார்ந்த  திணைக்களங்கள் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், எதிர்வரும் 17, 18, 19 ஆகிய திகதிகளில் ஆலய சூழலில் உள்ள நான்கு மடங்களிலும் அன்னதானம் வழங்குவதற்கான ஏற்பாடுகளும்  மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சிவராத்திரியை அனுஷ்டிக்க திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் 5 இலட்சம் பக்தர்களின் வருகை எதிர்பார்ப்பு | Virakesari.lk

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.