Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மின்கட்டண அதிகரிப்பு : 31- 60 அலகிற்கான புதிய கட்டணம் 2,278 ரூபா - முழுமையான விபரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மின்கட்டண அதிகரிப்பு : 31- 60 அலகிற்கான புதிய கட்டணம் 2,278 ரூபா - முழுமையான விபரம்

Published By: T. SARANYA

16 FEB, 2023 | 05:52 PM
image

(இராஜதுரை ஹஷான்)

24 மணித்தியாலங்களும் தடையின்றி மின்சாரத்தை விநியோகிக்கவும், மின்னுற்பத்திக்கான செலவுகளை முகாமைத்துவம் செய்யவும் இலங்கை மின்சார சபை நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் மின்கட்டணத்தை  66 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது.

நிறைவடைந்த 5 மாத காலப்பகுதிக்குள் இரு தடவைகள் மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளன.

0-30 மின்னலகுக்கான கட்டணம் 753 ரூபாவாகவும்,31-60 அலகுக்கான புதிய கட்டணம் 2,278 ரூபாவாகவும், 90 மின்னலகுக்கான கட்டணம் 3,675 ரூபாவாகவும்,91-120 வரையான மின்னலகுகளுக்கான கட்டணம் 6,238 ரூபாவாகவும்,120-180 வரையான மின்னலகுகளுக்கான கட்டணம் 8,340 ரூபாவாகவும்,180 மின்னலகுகளுக்கான கட்டணம் 18,300 ரூபாவாக உயர்வடையும் என இலங்கை மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.

புதிய கட்டண திருத்தத்திற்கு அமைய முதல் 30 மின் அலகுகளுக்காக நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) வரை அறவிடப்பட்ட 8 ரூபா தற்போது 30 ரூபாவாக அதிரிக்கப்பட்டுள்ளது.

31 முதல் 60 முதலான மின்னலகுகளுக்கான அறவிடப்பட்ட 10 ரூபா தற்போது 31 ரூபாவாகவும், 61-90 வரையான மின்னலகுக்காக அறவிடப்பட்ட 16 ரூபா தற்போது 42 ரூபாவாக அதிகரிக்கபபட்டுள்ளன.

 91-120 மின்னலகு மற்றும் 121- 180  மற்றும் 181 இற்கு அதிகமான மின்னலகுக்காக அறவிடப்பட்ட 50 ரூபா தற்போது 75 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய ஆரம்ப 30 மின்னலகுக்கான நிலையான கட்டணம் 400 ரூபாவாகவும், மின்னலகு 31 தொடக்கம் 60 வரையான மின்னலகுக்கான நிலையான கட்டணம் 550 ரூபாவாகவும்,மின்னலகு 61 தொடக்கம் 90 வரையான மின்னலகுக்கான நிலையான கட்டணம் 650 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளன. அத்துடன் மின்னலகு 91 தொடக்கம் 120 வரையான மின்னலகுக்கான நிலையான கட்டணம், மின்னலகு 121 தொடக்கம் 180 மின்னலகுக்கான நிலையான கட்டணம 1500 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளன.

மத தலங்கள் மற்றும் ஏனைய வழிபாட்டு இடங்களின் மின்கட்டணங்களில் 30 மின்னலகுகளுக்காக அறிவிடப்பட்ட 8 ரூபா இனி 30 ரூபாவாகவும்,31-90 வரையான மின்னலகுகளுக்காக அறவிடப்பட்ட 15 ரூபா இனி 37 ரூபாவாகவும்,180 இற்கு அதிகமான மின்னலகுகளுக்கான அறவிடப்பட்ட 32 ரூபா இனி 50 ரூபாவாகவும் அறவிடப்படும்.

மத தலங்களிடமிருந்து 30 அலகுகளுக்காக அறவிடப்பட்ட 90 ரூபா நிலையான கட்டணம் 400 ரூபாவாகவும்,31-90 வரையான மின்னலகுகளுக்காக அறவிடப்பட்ட 120 ரூபா நிலையான கட்டணம் 550 ரூபாவாகவும்,180 இற்கும் அதிகமான மின்னலகுக்காக அறவிடப்பட்ட 1,500 ரூபா நிலையான கட்டணம் 2,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளன.

கைத்தொழில்சாலைகளில் ஆரம்ப 30 மின்னலகுகளுக்காக அறவிடப்பட்ட 20 ரூபா இனி 26 ரூபாவாக அறவிடப்படும் அத்துடன் 30 மின்னலகுகளுக்காக அறவிடப்பட்ட 960 ரூபா நிலையான கட்டணம் 1,200 ரூபாவாகவும்,30 இற்கும் அதிகமான மின்னலகுகளுக்காக அறவிடப்பட்ட 1,500 ரூபா நிலையான கட்டணம் 1,600 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் பொது சேவைகள்,ஹோட்டல்,மற்றும் அரச நிறுவனங்களின் முதல் 180 மின்னலகுகளுக்காக அறவிடப்பட்ட 360 ரூபா நிலையான கட்டணம் 1,000 ரூபாவாகவும்,180 மின்னலகுகளுக்கு அதிகமான மின்னலகுகளுக்காக அறவிடப்பட்ட 1,500 ரூபா நிலையான கட்டணம் 1,600 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

https://www.virakesari.lk/article/148379

  • கருத்துக்கள உறவுகள்

என்னவோ மின் வெட்டு முடிவுக்கு வந்துள்ளதாய் கூறுகின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

என்னவோ மின் வெட்டு முடிவுக்கு வந்துள்ளதாய் கூறுகின்றார்கள்.

இனி மின்சாரம் இருந்தும் சனம் இருட்டுக்குள் இருக்க போகுது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மின்கட்டண அதிகரிப்பு மக்களுக்கு மரண தாக்குதலாக அமையும் ; ஹர்த்தாலில் ஈடுபட அவதானம் - ரஞ்சன் ஜயலால்

Published By: T. SARANYA

16 FEB, 2023 | 05:39 PM
image

(இராஜதுரை ஹஷான்)

 

மின்கட்டண அதிகரிப்புக்கு எதிரான போராட்டத்தில் 74 இலட்ச மின்பாவனையாளர்கள் ஒன்றிணைய வேண்டும். நாடளாவிய ரீதியில் ஹர்த்தால் நடவடிக்கையில் ஈடுபட அவதானம் செலுத்தியுள்ளோம்.

மின்கட்டண அதிகரிப்பு நாட்டு மக்களுக்கு மரண தாக்குதலாக அமையும் என துறைமுகம்,பெற்றோலியம் மற்றும் மின்சாரம் ஆகிய துறைகளின் ஒன்றிணைந்த சேவை சங்கத்தின் தலைவர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்தார்.

மின்கட்டண அதிகரிப்பு தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள பின்னணியில் மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிப்பது நாட்டு மக்களுக்கு மரண தாக்குதலாக அமையும்.

இலங்கை மின்சாரம் தனது பல கால நட்டத்தை ஈடு செய்வதற்காக இவ்வருடத்தில் மேலதிகமாக 288 பில்லியன் ரூபாவை திரட்டிக் கொள்ள இலங்கை மின்சார சபை உத்தேசித்துள்ளது.

 கடந்த ஐந்து மாத காலத்திற்குள் இருமுறை மின்கட்டணம் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.தற்போது 66 சதவீதத்தால் மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மின்கட்டண அதிகரிப்புக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு இணக்கம் தெரிவித்துள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளமை அடிப்படையற்றது.

இலங்கை பொதுபயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க மின்கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ஆணைக்குழுவிற்குள் முரண்பாடுகளை ஏற்படுத்தி, அரசியல் அழுத்தங்களினால் பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்துள்ளார்கள்.

நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பில் அரசாங்கம் உணர்வுபூர்வமாக செயற்படுவதில்லை. தன்னிச்சையாக செயற்படும் அரசாங்கத்திற்கு எதிராக நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட வேண்டும்.தொழிற்சங்கங்களால் மாத்திரம் தனித்து செயற்பட முடியாது.

மின்கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து துறைமுகம்,பெற்றோலியம் மற்றும் மின்சாரம் ஆகிய துறைகளை ஒன்றிணைந்து நாடளாவிய ரீதியில் ஹர்த்தால் நடவடிக்கையில் ஈடுபட எதிர்பார்த்துள்ளோம்.தொழிற்சங்க போராட்டத்திற்கு நாட்டு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/148360

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.