Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வர்த்தகர் ஒனேஷ் சுபசிங்க கொலை: விசாரணைகளை மேற்கொண்டு உடனடி அறிக்கைகோரும் நீதிமன்றம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வர்த்தகர் ஒனேஷ் சுபசிங்க கொலை: விசாரணைகளை மேற்கொண்டு உடனடி அறிக்கைகோரும் நீதிமன்றம்!

Published By: DIGITAL DESK 5

21 FEB, 2023 | 11:54 AM
image

ஒபெக்ஸ் ஹோல்டிங் குழுமத்தின் உரிமையாளர் ஒனேஷ் சுபசிங்க மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு, உடனடியாக நீதிமன்றுக்கு  அறிவிக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கொழும்பு பிரதான நீதிவான்  பிரசன்ன அல்விஸ் உத்தரவிட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக, உயிரிழந்த  ஒனேஷ் சுபசிங்கவின் சகோதரரான சுபாஷ் சுபசிங்க, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக திணைக்களம் நீதிமன்றில் அறிவித்தது.

விசாரணையின்போது, உயிரிழந்த ஒனேஷ் சுபசிங்கவின் வீட்டில் பணிபுரிந்த வேலையாட்கள் உட்பட ஐவரிடமும் வாக்குமூலங்கள்  பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும்  குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/148732

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் பரிதாபத்துக்குறிய சம்பவம். எவ்வளவு பணமிருந்தும் என்ன பயன்? சொந்த மனைவியினாலேயே கொலை செய்யப்பட்டுள்ளர். எப்படி ஒரு பிரேசிலியன் நாட்டு மாபியா பெண்ணிடம் மயக்கினாரோ தெரியவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரேசிலிற்கு செல்வதற்கு அனுமதிக்காவிட்டால் கொலை செய்துவிடுவேன் என கோடீஸ்வரர் சுபசிங்கவின் மனைவி மிரட்டினார் - சிஐடி தகவல்

Published By: RAJEEBAN

22 FEB, 2023 | 10:21 AM
image

இந்தோனேசியாவில் சடலமாக மீட்கப்பட்ட கோடீஸ்வர வர்த்தகர் ஒனேஸ் சுபசிங்கவின் பிரேசில் மனைவி தன்னை தனது நாட்டிற்கு செல்ல அனுமதிக்காவிட்டால் சுபசிங்கவை கொலை செய்துவிடப்போவதாக மிரட்டினார் என தகவல் வெளியாகியுள்ளது.

சுபசிங்கவின் வீட்டில் பணிபுரிந்த பணிப்பெண் இதனை தெரிவித்தார் என சிஐடியினர் நீதிமன்றத்தில்  தெரிவித்துள்ளனர்.

என்னால் இலங்கை உணவை உண்ண முடியாது என்னால் இங்கு வாழ முடியாது நான் எனது நாட்டிற்கு திரும்பி செல்லப்போகின்றேன் என்னை போவதற்கு அனுமதிக்காவிட்டால் நான் உன்னை கொலை செய்வேன் என சுபசிங்கவின் மனைவி தெரிவித்தார் என பணிப்பெண் குறிப்பிட்டதாக சிஐடியினர் தெரிவித்துள்ளனர்.

தனது சகோதரர் பிரேசிலை சேர்ந்த ரொசாலியா சில்வா என்பவரை மணம் முடித்தார் அவர்களிற்கு நான்கு வயதில் பிள்ளை உள்ளது என கொல்லப்பட்ட வர்த்தகரின் சகோதரர் தெரிவித்தார் என சிஐடியினர் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் ரோஸ்மீட் பிளேசில் உள்ள தொடர்மாடியில் வசித்து வந்தனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை சுபசிங்கவிற்கும் மனைவிக்கும் இடையில் அடிக்கடி மோதல் இடம்பெற்றது அவர் தனது மனைவியை விவகாரத்து செய்ய திட்டமிட்டிருந்தார் என உறவினர் ஒருவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

https://www.virakesari.lk/article/148813

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கோடீஸ்வர வர்த்தகர் ஒனேஷ் சுபசிங்கவின் மனைவி, உதவியாளரை கைது செய்ய பிரேஸில் பொலிஸாரின் உதவு கோரும் சிஐடி!

Published By: DIGITAL DESK 5

27 FEB, 2023 | 12:14 PM
image

ஓபெக்ஸ் ஹோல்டிங்ஸ் அதிபரும் கோடீஸ்வர வர்த்தகருமான ஒனேஷ் சுபசிங்கவின் மனைவி மற்றும் உதவியாளரைக் கைது செய்ய சர்வதேச பொலிஸாரின் ஊடாக பிரேஸில் பொலிஸாரின் உதவியை குற்றப் புலனாய்வு திணைக்களம் கோரியுள்ளது.

இது தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் உயர் அதிகாரி தெரிவிக்கையில், இந்தோனேஷியாவின் ஜகார்த்தா பொலிஸாரிடமும் பிரேஸில் பொலிஸாரிடமும் இவ்வாறான கோரிக்கையை முன்வைத்துள்ளதாக  தெரிவித்துள்ளார்.

ஒனேஷ் சுபசிங்கவின் பிரேஸில் மனைவியும் அவரது உதவியாளரும் தற்போது பிரேஸிலில் இருப்பதாக உறுதிப்படுத்தக்கூடிய தகவல்கள் கிடைத்துள்ளதால், பிரேஸில் பொலிஸாரிடம் இரகசியப் பொலிஸார் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளதாக அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பொலிஸ் மா அதிபர் விக்ரமரத்னவின் அறிவுறுத்தலின்பேரில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஆரம்பித்த விசாரணையில், ஒனேஷ் சுபசிங்கவின் சகோதரரான சுபாஷ் சுபசிங்க மற்றும் ஒனேஷின் வீட்டில் பணிப்பெண்களாக பணிபுரியும் ஐந்து பெண்களிடம் அதிகாரிகள் இதுவரை வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

https://www.virakesari.lk/article/149236

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.