Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிரீஸின் வடக்கு பகுதியில் இரண்டு ரயில்கள் மோதி விபத்து – இதுவரை 32 பேர் உயிரிழப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிரீஸின் வடக்கு பகுதியில் இரண்டு ரயில்கள் மோதி விபத்து – இதுவரை 32 பேர் உயிரிழப்பு!

கிரீஸின் வடக்கு பகுதியில் இரண்டு ரயில்கள் மோதி விபத்து – இதுவரை 32 பேர் உயிரிழப்பு!

கிரீஸின் வடக்கு பகுதியில் இரண்டு ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளதுடன், அதிகளவானவர்கள் காயமடைந்துள்ளனர்.

ஏதென்ஸிலிருந்து தெசலோனிகிக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில், தெசலோனிகியில் இருந்து லாரிசா நகர் நோக்கி வந்துகொண்டிருந்த சரக்கு ரயிலுடன் நேருக்கு நேர் மோதியுள்ளது.

இதில் ரயில் பெட்டிகள் ஒன்றோடொன்று தடம் புரண்டு தீ பற்றியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த விபத்தில் ரயிலில் பயணித்த 32 பேர் இதுவரை உயிரிழந்த நிலையில், ஏராளமானோர் காயமடைந்தனர்.

விபத்து நேரிட்ட இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர், ரயில் பெட்டிக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

https://athavannews.com/2023/1325986

  • கருத்துக்கள உறவுகள்

2 ரயில்கள் மோதியதில் 32 பேர் பலி; 85 பேர் படுகாயம்

இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் 32 பேர் உயிரிழந்துள்ளதுடன் 85 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம், கிரீஸில் நேற்று (28) இரவு இடம்பெற்றுள்ளது என கிரீஸ் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். 

image_38da4b0030.jpg

நகரங்களுக்கு இடையேயான எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயிலும் சரக்கு ரயிலும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.  

இந்த மோதலின் வீரியத்தால், பயணிகள் ரயிலின் நான்கு முன் பெட்டிகள் தடம் புரண்டதாகவும், முதல் இரண்டு பெட்டிகள் தீயில் எரிந்து நாசமானதாகவும் ஆளுநர் கான்ஸ்டான்டினோஸ் தெரிவித்துள்ளார்.

 சுமார் 250 பயணிகளை மீட்ட பின்னர், அவர்கள் பேருந்துகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டதாக நிவாரணப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தை ரயில் பயணிகள் நிலநடுக்கம் போல் உணர்ந்ததாக நிவாரணக் குழுவினரால் மீட்கப்பட்ட பயணி ஒருவர் தெரிவித்துள்ளார்

image_7541c2cd26.jpg

image_e3c54e97a8.jpg

 

 

https://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/2-ரயில்கள்-மோதியதில்-32-பேர்-பலி-85-பேர்-படுகாயம்/50-313265

  • கருத்துக்கள உறவுகள்

கிரீஸ் நாட்டில் ரயில் விபத்து: பதைபதைக்க வைக்கும் புகைப்படங்கள்

கிரீஸ், ரயில் விபத்து

பட மூலாதாரம்,REUTERS

 
படக்குறிப்பு,

விபத்திலிருந்து பிழைத்திருப்பவர்களை மீட்பதற்கு அதிகாரிகள் இரவு முழுவதும் தங்களது மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.

36 நிமிடங்களுக்கு முன்னர்

வடக்கு கிரீஸ் பகுதியில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதால் மிகவும் மோசமான வகையில் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் இதுவரை 36 பேர் வரை உயிரிழந்திருக்கின்றனர். மேலும் 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

செவ்வாய் கிழமை இரவு லரிசா நகரத்தின் அருகே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளுடன் வந்துக்கொண்டிருந்த பயணிகள் ரயில் ஒன்று, எதிர் திசையில் வந்துக்கொண்டிருந்த சரக்கு ரயிலுடன் நேருக்கு நேர் மோதியது.

சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து தற்போது புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அந்த புகைப்படங்கள் இந்த ரயில் விபத்தின் கோரத்தை வெளிப்படுத்துகிறது

கிரீஸ், ரயில் விபத்து

பட மூலாதாரம்,REUTERS

 
படக்குறிப்பு,

இந்த விபத்து குறித்த தகவல்கள் நள்ளிரவுக்கு சற்று முன்னதாக தங்களுக்கு கிடைத்தது என தீயணைப்புத் துறையினர் கூறியுள்ளனர்.

கிரீஸ், ரயில் விபத்து

பட மூலாதாரம்,REUTERS

 
படக்குறிப்பு,

அவர்கள் வந்து பார்த்தபோது பயணிகள் ரயிலின் முதல் இரண்டு பெட்டிகள் விபத்தினால் முற்றிலும் சேதமடைந்து காணப்பட்டுள்ளது

கிரீஸ், ரயில் விபத்து

பட மூலாதாரம்,REUTERS

 
படக்குறிப்பு,

ரயில் பெட்டிகளுக்குள் யாரேனும் சிக்கியிருக்கிறார்களா என்பதை அறிந்து கொள்ள தீயணைப்புத் துறையினரும், மீட்பு படையினரும் இரவு முழுவதும் தேடுதல் பணியை தொடர்ந்துள்ளனர்

ரயில் விபத்திலிருந்து பிழைத்துள்ளவர்களை தாங்கள் தேடும்போது பல சோகமான காட்சிகளை கண்டதாக மீட்பு படையினர் கூறுகின்றனர்.

”ரயில் பெட்டிகளுக்குள் இருந்து நாங்கள் சிலரை பிடித்து இழுக்கும்போது சிலர் பிழைத்திருந்தனர், சிலர் காயமடைந்திருந்தனர், இன்னும் சிலர் உயிரிழந்திருந்தனர்” என்று விபத்து மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த தன்னார்வலர் ஒருவர் அம்மாநில அரசு தொலைக்காட்சியிடம் தெரிவித்திருந்தார்.

கிரீஸ், ரயில் விபத்து

பட மூலாதாரம்,REUTERS

 
படக்குறிப்பு,

மிகவும் சோர்வடைந்திருந்த மீட்பு பணியாளர் ஒருவர் ஏ.ஃப்.பி.யிடம் (AFP) பேசியபோது, “இதுபோன்ற ஒரு மோசமான விபத்தை தான் இதுவரை பார்த்ததில்லை” என்று தெரிவித்தார்.

கிரீஸ், ரயில் விபத்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டு சென்ற ஒரு ரயில் பெட்டி தீக்கு இரையாகியிருந்தது

இந்த விபத்து எதனால் ஏற்பட்டது என்பது குறித்த எந்தவொரு தெளிவான தகவலும் இதுவரை கிடைக்கவில்லை.

கிரீஸ், ரயில் விபத்து

பட மூலாதாரம்,REUTERS

 
படக்குறிப்பு,

காயமடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்பு, சுமார் 85பேரை துணை மருத்துவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

கிரீஸ், ரயில் விபத்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

இன்னும் சில பயணிகள் தெசல்லோனிக்கி ரயில் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கிரீஸ், ரயில் விபத்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

”ரயில்கள் மோதிக்கொண்டதும் பெட்டிகளுக்குள்ளே இருந்த பயணிகளிடையே மிகவும் பதட்டமான நிலை உருவானது” என மீடகப்பட்டவர்கள் கூறுகின்றனர்.

கிரீஸ், ரயில் விபத்து

பட மூலாதாரம்,EPA

 
படக்குறிப்பு,

விபத்து நடந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளாதவர்கள் கூறும்போது,”விபத்து நடந்தபோது ரயில் பெட்டிகளின் கண்ணாடிகள் திடீரென வெடித்து சிதறியது” என தெரிவித்துள்ளனர்

கிரீஸ், ரயில் விபத்து

பட மூலாதாரம்,EPA

 
படக்குறிப்பு,

சுமார் 40 ஆம்புலன்ஸ்களோடு, 150 பேர் வரையிலான மீட்பு படையினர் சம்பவ இடத்தில் தங்களது பணியை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

https://www.bbc.com/tamil/articles/cd10p5l3rp4o

  • கருத்துக்கள உறவுகள்

இதுபோன்ற எதிர்பாராத விபத்துகளுக்கு என்னத்த சொல்லுவது .......!

இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.......!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கிரேக்க வரலாற்றில் ஏற்பட்ட மிக மோசமான ரயில் விபத்து: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 57ஆக உயர்வு!

கிரேக்க வரலாற்றில் ஏற்பட்ட மிக மோசமான ரயில் விபத்து: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 57ஆக உயர்வு!

தென்கிழக்கு ஐரோப்பிய நாடான கிரேக்கத்தில் சரக்கு ரயிலுடன், பயணிகள் ரயில் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 57ஆக உயர்வடைந்துள்ளது.

உள்ளூர் நேரப்படி கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 7.30 மணிக்கு, ஏதென்ஸிலிருந்து ஹெலெனிக் ட்ரெயின் நிறுவனத்தைச் சேர்ந்த பயணிகள் ரயில் தெஸாலோனிகி நகரிலிருந்து லரிஸா நகரை நோக்கி வந்த சரக்கு ரயிலுடன், டெம்பி ஊராட்சிப் பகுதியில் இரவு 11.24 மணிக்கு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

350 பயணிகளுடன் பயணித்த இந்த ரயிலில், விபத்தில் சிக்கி 85பேர் காயமடைந்த நிலையில், 50 முதல் 60 பேரை காணவில்லை என முதலில் கூறப்பட்டது.

ஆரம்பத்தில் 36பேர் சடலமாக கண்டெடுக்கப்பட்ட நிலையில், மீட்பு பணிகள் தொடர்ந்ததால் தற்போது உயிரிழப்பு எண்ணிக்கை 57ஆக உயர்வடைந்துள்ளது.

இந்த விபத்தில் பயணிகள் ரயிலின் முதல் 4 பெட்டிகள் தடம் புரண்டதாகவும், முதல் 2 பெட்டிகள் தீப்பிடித்து ஏறத்தாழ முற்றிலும் அழிந்துபோனதாகவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து தொடர்பாக லரிஸா நகருக்கு அருகே உள்ள ஒரு ரயில் நிலையத்தின் கட்டுப்பாட்டு அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விபத்துக்குப் பொறுப்பேற்று போக்குவரத்துத் துறை அமைச்சர் கோஸ்டாஸ் கரமான்லிஸ் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

ரயில் விபத்துக்கு ரயில்வே ஊழியர்களின் அலட்சியமே காரணம் எனக் கூறி ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன், அரசு புறக்கணிப்பைக் கண்டித்து ரயில் ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

https://athavannews.com/2023/1326225

  • கருத்துக்கள உறவுகள்

Train Accident CCTV Video: Greece நாட்டில் நடந்த பயங்கர ரயில் விபத்தின் பதைபதைக்கும் காட்சிகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.